இராமாயணம் கூறும் பாவ-சாப உண்மைகள்! (13) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/sin-curse-facts-ramayana-13

ராமரின் வம்ச முன்னோர் வழியில், மகாவிஷ்ணு தனது முதல் அவதாரமாக புரஞ்சய மன்னனாகப் பிறந்தார். புரஞ்சயனுக் குப்பிறகு பல மன்னர்கள் தோன்றினர். இந்த வம்சத்தில் "யுவனாசுவன்' என்னும் மன்னனுக்கு "மாந்தாதா' என்ற மகன் பிறந்தான். இவனுக்குப்பிறகு இந்த வம்சத்தார் "மாந்தாதா வம்சத்தினர்' எனப்பட்டனர். மாந்தாதா மன்னனின் மகன் அம்பரீஷன் என்பவன்.

அந்த சமயத்தில் பாதாள உலகில் வசித்த மவுனேயர் என்னும் கந்தர்வர்களுக்கும், நாகர் குலத்தவர்களுக்கும் போர் மூண்டது. நாகர்கள் மகாவிஷ்ணுவை நாடி தங்களுக்கு உதவுமாறு கோரினர். அதற்கு அவர், "மாந்தாதாவின் மகன் அம்பரீஷன் எனது அம்சம் கொண்டவன். நானும் அவனும் ஒருவரே. எனவே அவன் உதவிபெற்று போரில் வெற்றிபெறுங்கள்'' என கூறி அனுப்பினார். ஆக, இந்த வம்சத்தில் மகாவிஷ்ணுவின் இரண்டாவது பிறப்பு அம்பரீஷன்.

அம்பரீஷனின் மகன் திரசதஸ்யு என்பவன். இவன் மகன் அநரண்யன். இராவணன் தேவர்களை வ

ராமரின் வம்ச முன்னோர் வழியில், மகாவிஷ்ணு தனது முதல் அவதாரமாக புரஞ்சய மன்னனாகப் பிறந்தார். புரஞ்சயனுக் குப்பிறகு பல மன்னர்கள் தோன்றினர். இந்த வம்சத்தில் "யுவனாசுவன்' என்னும் மன்னனுக்கு "மாந்தாதா' என்ற மகன் பிறந்தான். இவனுக்குப்பிறகு இந்த வம்சத்தார் "மாந்தாதா வம்சத்தினர்' எனப்பட்டனர். மாந்தாதா மன்னனின் மகன் அம்பரீஷன் என்பவன்.

அந்த சமயத்தில் பாதாள உலகில் வசித்த மவுனேயர் என்னும் கந்தர்வர்களுக்கும், நாகர் குலத்தவர்களுக்கும் போர் மூண்டது. நாகர்கள் மகாவிஷ்ணுவை நாடி தங்களுக்கு உதவுமாறு கோரினர். அதற்கு அவர், "மாந்தாதாவின் மகன் அம்பரீஷன் எனது அம்சம் கொண்டவன். நானும் அவனும் ஒருவரே. எனவே அவன் உதவிபெற்று போரில் வெற்றிபெறுங்கள்'' என கூறி அனுப்பினார். ஆக, இந்த வம்சத்தில் மகாவிஷ்ணுவின் இரண்டாவது பிறப்பு அம்பரீஷன்.

அம்பரீஷனின் மகன் திரசதஸ்யு என்பவன். இவன் மகன் அநரண்யன். இராவணன் தேவர்களை வென்று அனைத்துலகையும் ஆட்சிபுரிந்த நிலையில் திக்விஜயம் செய்து வரும்போது, அநரண்யன் இராவணனை எதிர்த்துப் போர்புரிந்தான். அவனை இராவணன் கொன்றான். இராமன் பிறப்பதற்கு பல தலைமுறைகளுக்கு முன்பே இராவணன் வாழ்ந்துள்ளான் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது.

rar

இந்த வம்சத்தில் அம்பரீஷனுக்குப் பிறகு பலர் பிறந்தனர். இதில் திரையருணி என்பவனுக்குப் பிறந்தவன் திரிசங்கு எனப் படும் சத்தியவிரதன் ஆவான். இவன் மகனே அரிச்சந்திரன். இவன் வம்சத்தில் சகரன் என்பவன் பிறந்தான். இதற்குப்பிறகு இந்த வம்சம் "சகரவம்சம்' என அழைக்கப்பட்டது. இவனது பேரன்தான் கங்கைநதியை பூமிக்குக் கொண்டுவந்தான் என்பர்.

இராமனின் முன்னோர்களில் தீர்க்கப்பாகு என்பவனுக்குப் பிறந்தவன் ரகு என்பவன். இவனுக்குப்பிறகு இந்த வம்சம் "ரகு வம்சம்' எனப்பட்டது. இவன் மகன் அஜ மகாராஜன். அவன் மகன் தசரதன். தசரதனுக்கு இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன் என்னும் நான்கு மகன்கள் என்று புராணங்களில் கூறப் பட்டுள்ளது. இதே வம்சத்தில் மகாவிஷ்ணு இராமனாக மூன்றாவது முறையாக அவதாரம் செய்தார்.

மகாவிஷ்ணு புரஞ்சயன் என்னும் பெயரில் பிறந்து தனக்கு சம்பந்தமே இல்லாத அசுரர்களை, தேவர்களுக்கு உதவியாக இருந்து போரிட்டுக் கொன்றார். இதன்மூலம் அசுரர்களுக்கும் இராமரின் வம்ச முன்னோர் களுக்கும் பகை ஆரம்பித்தது. மகாவிஷ்ணு மீண்டும் இதே வம்சத்தில் அம்பரீஷன் என்னும் பெயரில் பிறந்து, நாகர்களுக்குத் துணையாக மவுனேயர் என்னும் கந்தர்வர்களை அழித்தார். உண்மையில் கந்தர்வர்களுக்கும் அம்பரீஷனக் கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மகாவிஷ்ணு தசாவதாரங்களில் மட்டு மல்லாது, இராமனின் முன்னோர்கள் காலத்திலும் அந்த வம்சத்தில் பிறந்து, தனக்கு சம்பந்தமில்லாத பலரை அழித்துள்ளார். இவ்வாறு அவர் ஒவ்வொரு பிறவியிலும் செய்த செயல்கள், இராமாவதாரத்தில் அவரை நாடிழந்து, உறவுகளை இழந்து, ஆட்சி அதிகாரத்தை இழந்து, மன்னனாக வாழவேண்டியவரை மரவுரி தரித்து காட்டில் அலையவைத்தது.

தசரத மன்னனுக்குப் பிறந்த நால்வரில் இராமனைத் தவிர மற்ற மூன்று மகன்களும் பெற்றவர்களால் புறக்கணிக்கப்படவில்லை. வம்ச சாபம் அவர்களை பாதிக்கவில்லை. ஆனால் மகாவிஷ்ணுவின் அம்சமாகப் பிறந்த இராமனை மட்டுமே பாதித்தது.

இன்றைய நாளிலும் ஒரு தாய்- தந்தைக்குப் பல குழந்தைகள் பிறந்திருந்தாலும், அதில் சிலர் வசதியுடன் வாழ்கின்றனர்; சிலர் வறுமை, சிரமம் என வாழ்கின்றனர். முற்பிறவிகளில் பாவம் செய்தவர்கள் இந்த பிறவியில் துன்பத்தையும், புண்ணியம் செய்தவர்கள் சுகவாழ்வையும் அனுபவிப்பார்கள் என்பதே உண்மையான காரணம். இதனை இராமரின் வாழ்வின்மூலம் புரிந்துகொள்ளலாம்.

கடவுளேயானாலும் தன் கர்மவினைகளை அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்துத் தீர்க்கவேண்டும். இது இராமனின் குலகுரு வசிஷ்டருக்கு நன்கு தெரிந்ததால்தான், முற்பிறவி வினையைத் தீர்த்துமுடிக்க, இராமனைக் காட்டிற்கு அனுப்பும்போது தடை செய்யவில்லை.

இஷ்வாகு குலத்தில் மகாவிஷ்ணு மூன்றுமுறை பிறந்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திலும் அந்த வம்சத்து முன்னோர் களே தந்தை, மகன், மகள், பேரன், பேத்தி என தன் பாவ- புண்ணியம் தீரும்வரை திரும்பத் திரும்ப வந்து பிறப்பார்கள். நமது பாட்டன் நமக்கு மகனாகப் பிறப்பதும், பாட்டி, தாய், அத்தை போன்றவர்கள் சகோதரியாக- மகளாக வந்து பிறப்பதும் உண்டு. இந்த உண்மையை இராமாயண காவியம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

"வம்ச முன்னோர்களில் யாரோ செய்த தவறுக்கு நாங்கள் ஏன் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்?' என்னும் கேள்விக்கு காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் வேறு- உங்கள் முன்னோர்கள் வேறல்ல. நீங்கள்தான் அவர்கள்; அவர்கள்தான் நீங்கள். முற்பிறவி யில் பாட்டனாகப் பிறந்து செய்த தவறுக்கு இப்போது பேரனாகப் பிறந்து அனுபவிக் கிறீர்கள் என்பதே உண்மை!

(தொடரும்)

செல்: 99441 13267

bala080422
இதையும் படியுங்கள்
Subscribe