வாஸ்து தோஷங்கள் தீர வைக்கும் எளிய பரிகாரம்! -ஜோதிட கலையரசி M.தனம்

/idhalgal/balajothidam/simple-remedy-remove-vastu-defects-astrologer-m-thanam

ல்லோருடைய வாழ்க்கையிலும் சில அடிப்படை தேவைகளில் ஒன்று வீடு. எந்த ஒரு ஜீவராசியும் தங்களுக்கென்று ஒரு வசிப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றது. தூக்கணாங்குருவிகூட தங்களுக்கென்று ஒரு கூட்டை தொங்க விட்டுக் கொள்கின்றது. எனவே ஆறறிவு படைத்த மனிதனுக்கு வீடு என்பது அத்தியாவசியமான ஒன்று. "எலி வலையானாலும் தனி வலையாக இருக்கவேண்டும்' என்பது பழமொழி. எந்த ஒரு மனிதனுக்கும் தம் வாழ்நாளில் மாடமாளிகையும் கூட கோபுரமும் கட்டாவிட்டாலும் தனக்கென்று ஒரு சொந்த வீட்டை கட்டி அதில் வாழவேண்டும் என்பது லட்சியமாகவே இருக்கும். எல்லாருக்கும் நல்ல வீடு, மனை அமைந்துவிடுகிறதா என்றால் கேள்விக் குறிதான். ஒருவருடைய ஜாதகத்தில் நாலாம் பாவமும் நாலாம் அதிபதியும் நான்காம் கிரகமும் சுபமாக இருந்தால் அவர்களுக்கு நல்ல வீடு அமையும். சுக்கிரன், செவ்வாய், சந்திரன் இந்த கிரகங்கள் அவர்களுக்கு பலமாக இருந்தாலும். அதனுடைய தசாபுக்தி நடக்கும் போது அவர்களுக்கு நல்ல வசதி

ல்லோருடைய வாழ்க்கையிலும் சில அடிப்படை தேவைகளில் ஒன்று வீடு. எந்த ஒரு ஜீவராசியும் தங்களுக்கென்று ஒரு வசிப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றது. தூக்கணாங்குருவிகூட தங்களுக்கென்று ஒரு கூட்டை தொங்க விட்டுக் கொள்கின்றது. எனவே ஆறறிவு படைத்த மனிதனுக்கு வீடு என்பது அத்தியாவசியமான ஒன்று. "எலி வலையானாலும் தனி வலையாக இருக்கவேண்டும்' என்பது பழமொழி. எந்த ஒரு மனிதனுக்கும் தம் வாழ்நாளில் மாடமாளிகையும் கூட கோபுரமும் கட்டாவிட்டாலும் தனக்கென்று ஒரு சொந்த வீட்டை கட்டி அதில் வாழவேண்டும் என்பது லட்சியமாகவே இருக்கும். எல்லாருக்கும் நல்ல வீடு, மனை அமைந்துவிடுகிறதா என்றால் கேள்விக் குறிதான். ஒருவருடைய ஜாதகத்தில் நாலாம் பாவமும் நாலாம் அதிபதியும் நான்காம் கிரகமும் சுபமாக இருந்தால் அவர்களுக்கு நல்ல வீடு அமையும். சுக்கிரன், செவ்வாய், சந்திரன் இந்த கிரகங்கள் அவர்களுக்கு பலமாக இருந்தாலும். அதனுடைய தசாபுக்தி நடக்கும் போது அவர்களுக்கு நல்ல வசதியான, சொகுசான வீடு அமையும். நாலாம் பாவம் ஒருவருக்கு கெடும்பட்சத்தில் அவருக்கு மனை அமைவதிலும் வீடு கட்டுவதிலும் தடைகள் ஏற்படும். சொந்த வீடு எளிதில் அமையாது. ஒவ்வொரு முயற்சியிலும் தடைகள் ஏற்படும்.

ஜோதிடமும் வாஸ்துவும் இரண்டும் இரு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கும். இரண்டும் ஒன்று போல்தான் செயல்படும்.

ss

வாஸ்து தோஷத்தால் ஏற்படும் விளைவுகள்

ப் குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை இருக்காது

ப் வீட்டில் சுகம் என்பது இருக்காது. அடிக்கடி நோய் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ப் சரியான தூக்கம் இருக்காது. படுத்தால் பலவித சிந்தனைகளும் வந்து தூக்கமின்றி புரள வைக்கும். தூக்கம் வந்தால் தூக்கத்தில் கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தும்.

ப் உழைப்புக்கேற்ற லாபம் இருக்காது. பற்றாக்குறையான சம்பளமாக இருக்கும். நம்மை மீறி கடன் ஏற்படும். அதனால் தொல்லைகளும் ஏற்படும்.

ப் வருமானம் எவ்வளவு வந்தா லும் வந்தவுடனே செலவாகிவிடும். வீட்டில் பணம் தங்காது.

ப் வீட்டிற்கு ஆன்மிகப் பெரியவர்கள், தெய்வீக உபாசகர் கள், சாதுக்கள் போன்றவர்கள் விரும்பி வரமாட்டார்கள். ஒரு வேளை வந்தாலும் அவர்களிட மிருந்து நல்வாழ்த்துகள் கிடைக் காது.

ப் வீட்டில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற பிராணிகள் நன்றாக வளராது. அடிக்கடி இறந்து போய்விடும் அல்லது காணாமல் போய்விடும்.

ப் குடும்ப உறவில் அடிக்கடி கர்ம காரியங்கள் ஏற்படுவது.

ப் வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லாதது போல கலை இழந்து இருக்கும்.

ப் தொழிலில் தடை, வளர்ச்சி, லாபம் இல்லாமல் இருப்பது தொழில் முடங்கி போவது. இதுபோன்ற சில அறிகுறிகள் கொண்டே வாஸ்து தோஷத்தை உறுதி செய்துவிடலாம்.

வாஸ்து தோஷத்திற்கான சில விதிகள்

ப் பாதகாதிபதி நாலாம் வீட்டில் இருந்தாலும் அல்லது நாலாம் அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும் வாஸ்து தோஷ முண்டு. குலதெய்வமும் அவர்கள் வீட்டில் இருக்காது.

ப் நான்காம் பாவத்தில் ஒரு கிரகம் நீசமாக இருந்தாலும் வக்ர கிரகம் இருந்தாலும் வாஸ்து தோஷமுண்டு.

ப் நாலாம் அதிபதி நீசம் பெற்றிருந்தாலும் பாவ கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந் தாலும் வாஸ்து தோஷம் ஏற்படும்.

ப் நாலாம் பாவத்தில் ராகு, கேது, சனி, மாந்தி போன்ற பாவ கிரகங்கள் இருக்கும் போது வீடு, மனை அமைவதிலும் பிரச்சினைகள் உண்டு.

ப் வீடு, மனை தொடர்பான பத்திரங் களால் பிரச்சினை ஏற்படும்.

ப் நாலாம் பாவத்தை சுக்கிரன், செவ்வாய், சந்திரன் போன்ற கிரகங்கள் பார்த்தாலும் சுப கிரகமான குரு பகவானின் பார்வை இருந்தாலும் இந்த தோஷத்தின் அளவு குறையும்.

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்

திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்ச நல்லூரில் அமைந்திருக்கும் பூமிநாதர் திருக்கோவில்தான் வாஸ்து தோஷம் நீங்க சக்திவாய்ந்த பரிகார ஸ்தலமாகும். பூமியிலுள்ள 16 வகையான பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய கோவில். வாஸ்து பிரச்சினை, சொத்து பிரச்சினை, மனன தோஷம் போன்றவற்றையும் சரிசெய்யும் ஸ்தலம் ஆகும்.

வாஸ்து தோஷமுள்ள மனையில் வடகிழக்கு மூலையிலுள்ள மண்ணை மூன்று பிடி கைப்பிடி அளவுக்கு எடுத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி கோவிலில் வைத்து பூஜை செய்து வீட்டிற்கு எடுத்து வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துவிடவேண்டும்.

ஐந்து நாட்கள் தொடர்ந்து நீங்கள் வீட்டில் பூஜை செய்துபிறகு அந்த மண்ணை எடுத்த இடத்திலேயே போட்டுவிட வேண்டும். எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவி அந்த இடத்தில் பிழிந்து விட்டு புதைத்து விடவேண்டும். பின்பு சூடம் ஏற்றி வழிபாடு செய்து, மஞ்சள் துணியில் உங்களால் முடிந்த காணிக்கையை கட்டி வைத்து உங்கள் பூஜையறையில் வைத்து வழிபாடு செய்து வரவும்.

உங்களுடைய வாஸ்து பிரச்சினைகள் அல்லது வீடு கட்டும் கோரிக்கை நடந்தபிறகு அந்த காணிக்கையை எடுத்து கோவிலில் அபிஷேகத்துக்கு கொடுத்துவிட வேண்டும்.

வாஸ்து தோஷங்களை நீக்கிக்கொள்ள, இதுபோன்ற வழிபாடுகளை நாமும் செய்யலாம்.

பேச: 90802 73877

bala270625
இதையும் படியுங்கள்
Subscribe