"லால் கிதாப்' என்பது பண்டைய காலத்து, மிகவும் சக்திவாய்ந்த ஜோதிடப் பரிகார வழிமுறையாகும். இந்த பரிகாரம் செய்வதால் ஏற்படும் பலனின் முடிவுகளை, அது செய்யப்படும் 43 நாட்களில், ஒவ்வொரு நாளும் உணரமுடியும். இது இராவண னால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஹோமங்கள் போன்ற மத சம்பிரதாயங் களை விரும்பாத இராவணன், தனது குடி மக்களின் கஷ்டங்களைக் கண்டு, அவர்கள் செய்யும் பரிகார பூஜைகள் சாதாரணமான தாகவும், உடனடியாக நடத்தக்கூடிய தாகவும் இருக்கவேண்டுமென எண்ணினார்.
அதன் பலனே இந்த எளியமுறை பரிகாரங்கள்.
1930-ஆம் வருடத்தில், பஞ்சாபில், முதன்முதலாக இராணுவ அதிகாரி ஒருவரால் லால் கிதாப் கண்டுபிடிக்கப் பட்டது. பரிகாரத்துக்கான புத்தகம் என்ற பொருளில் "டோட்காஸ்' என அழைக்கப்பட் டது. அதில் அடங்கியுள்ள விஞ்ஞானப் பூர்வமான விஷயங்களை அறிந்து, லால் கிதாப் என பெயரிடப்பட்டது. "லால்' என்றால் சிவப்பு; "கிதாப்' என்றால் புத்தகம் என்பதாகும்.
ரத்தத்தின் நிறம் சிவப்பு, நமது முன் ஜென்ம வினைகளுக்கும், முன்னோர்களின் செயல்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துவது ரத்தம்தானே? தற்போது மருத்துவத் துறை யிலும் நோயைக் கண்டுபிடிக்க முத-ல் பரிசோதிக்கப்படுவதும் ரத்தமே. எனவே, அதன் நிறமே இந்த நூலுக்கு வைக்கப் பட்டுள்ளது. இந்த பரிகாரங்கள் ஒரு குறிப் பிட்ட காலத்துக்கு மட்டுமே செய்யப் பட்டு, பலன் கிடைத்தவுடன் நிறுத்தப்பட வேண்டும்.
"லால் கிதாப்' பரிகாரங்களில் ஒன்பது கிரகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த முறையின் முக்கியக் குறிக்கோளே பலன் சொல்வதைவிட, பரிகாரம் உரைப்பதுதான்.
லால் கிதாப்பில் வேறு மாய மந்திரங்களோ, தந்திரங்களோ, தாயத்தோ, எந்திரங்களோ, தெய்வ விக்ரகப் பரிகாரங் களோ கிடையாது. அதில் சொல்லப்பட்டுள் ளவை மிக எளிமையான, வீட்டி-ருக்கும் பொருட்களை வைத்தே செய்யும் பரிகாரகங்களாகும்.
அதில், பொய் சொல்லாதே; கடவுளிடம் நம்பிக்கை வை; முழுமையான அர்ப்பணிப் புடன் தெய்வத்திடம் பக்தி செலுத்து ஆகிய சீரிய கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மது குடிக்காதே; மாமிசம் உண் ணாதே (அசைவப் பழக்கம் இருந்தாலன்றி); கூட்டுக் குடும்பத்தில் வாழ முற்படு; மூக்கையும், காதுகளையும் கூர்மையாக வை; பெண் குழந்தைகளை வழிபடு; பெண்கள், விதவைகளுக்குரிய மரியாதை கொடு; அவர் களுக்கு வேண்டியதை தானமாகக் கொடு; எவரிடமிருந்தும் இலவசமாக எதையும் பெற விரும்பாதே; பசுக்கள், காக்கை மற்றும் நாய்களுக்கு உணவளித்துப் பேணு; பற்களை சுத்தமாக வைத்துக்கொள் என்று தற்கால உலக வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற நல்ல அறிவுரைகளைச் சொல்கிறது. லால் கிதாப் முறைப்படி, தொடக்கத்தில் ஜாதகம் அமைப்பதில் சிறு குழப்பங்கள் எழுந்தாலும், இது வேத ஜோதிடத்தைவிட எளிமை யானதே. லால் கிதாப் ஜாதகம் நமது கையிலுள்ள ரேகைகளை வைத்து எழுதப்படுவதாகும். உள்ளங் கையிலுள்ள ரேகைகள், மேடுகள், சதுரங்கள், விடுபட்ட வரிகள், விரல் மேடுகள் அனைத்தும் ஒவ்வொரு கிரகங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு கிரகத்துக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையறிந்து அவற்றின் நிலைகளை வைத்து சரியான முறையில் ஜாதகம் எழுதப்படவேண்டும். இதில் குழப்பங்களைத் தவிர்க்க, ஜாதக ரின் ஜாதகத்திலேயே சில மாறுதல்களை கைரேகைப்படி செய்துகொள்ள லாம்.
பிரபஞ்சத்தையாளும் ஈஸ்வரனின் கட்டளையை ஏற்று நடக்கும் கிரகங்கள், மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்தக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. செவ்வாய்- பூமி சம்பந்தமானவற்றையும்; சுக்கிரன்- பொருள்; குரு- பக்தி மார்க்கம்; புதன்- திறந்த மனம், பரந்த மனப்பான்மை, காடுகள்; சனி- இருட்டு; ராகு- கேதுக்கள் சனியின் காரிய தரிசிகளாகவும் செயல்படுகிறார்கள். இந்த கிரகங்களே நமது விதியை நிர்ணயிக்கும் முக்கிய குறிகாட்டிகளாக அமைகின்றன.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பதன் காரணமாக, அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த பாவங்களே தோஷங்களாக, ஒரு ஜாதகருக்கு தற்கா-க விதியாக அமைந்துவிடுகின்றன. இந்த தோஷமானது, முற்பிறவியில் அவரால் செய்யப்படாத வினை யாகக்கூட இருக்கலாம். இதை ஜாதகத்தின்மூலமாக அறிந்து கொள்ளலாம்.
"நிச்சய கர்மா' எனப்படும் நிலையான விதி, ஜாதகரால் முன் ஜென்மத்தில் நிகழ்த்தப்பட்ட தாகும். இதை எவராலும் மாற் றவோ திருத்தவோ முடியாது. ஒரு ஜாதகத்தில் இவற்றை ஆராயும் போது, விதிப்படி எவ்வகை வினைகள் செய்யப்பட்டுள்ளன- அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பரிந்துரைக்கலாம்.
லால் கிதாப் முறையில், ஜாதகத் திலுள்ள பாவங்களே பிரதான இடம்பெறுகின்றன; ராசிகள் அல்ல. எந்த லக்னமானாலும் மேஷ லக்ன பாவம் என்று மட்டுமே அழைக்கப்படும். மேஷ ராசி எனக் கூறக்கூடாது.
உதாரணத்துக்கு, 20-12-1978 அன்று இரவு 10.00 மணியள வில் பிறந்த ஜாதக ரின் ஜாதகம் இங்கு கொடுக்கப் பட்டுள் ளது. இதில் இரண்டாமிடத்தில் சந்திரன், ராகு, சனி இணைவு பெற்று அமர்ந்துள்ளனர். பொதுவாக, காலபுருஷனுக்கு 2 மற்றும் 7-ஆமதிபதி எப்போதுமே சுக்கிரனாகும். அவர் லக்னத்துக்கு 4-ஆம் பாவத்தில் உள்ளார். சனி சுக்கிரனைப் பார்க்கிறார். 2-ஆம் பாவத்தில் சுக்கிரனுக்குப் பகைவர்களான ராகு, சந்திரன் ஆகியோர் உள்ளனர். காலபுருஷனுக்கு 4-ஆமதிபதி சந்திரன் லக்னத்துக்கு 2-ல் அமர்ந்து ராகு, சனியால் பாதிப்படைவதால், இரு பெண் கிரகங்களின் பாதிப்புநிலையானது பெண்ணால் ஏற்பட்ட தோஷத்தை குறிகாட்டு கிறது என உறுதிசெய்யலாம்.
லால் கிதாப்பில் சுக்கிரன்- திறந்த வெளி, ரொக்கம், தினசரி உபயோகப்படுத்தும் பொருட் கள், பசு மேலும் பல பொருட்களுக்குக் காரகராகி றார். எனவே, இவருக்குப் பெண் தொடர்பான, விவசாய நிலம் தொடர்பான பிரச்சினைகள், குடும்பத்தில் நகைகள், சொத்துகள் இழப்பு ஆகியவை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. விசாரித்தபோது ஜாதகருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி திருமணம் நின்றுவிட்டதாகவும், விவசாய நிலத்தை விலைபேசி அதிலும் நண்பனால் ஏமாற்றப் பட்டு பணத்தை இழந்ததாகவும் கூறினார். மேலும், 4-ஆம் பாவம், சந்திரன், சுக்கிரன் பாதிப்படைந்ததால், இவருக்கு முறையாகப் பிரிவினையால் வரவேண்டிய சொத்திலும் சமமான பங்கு கிடைக்கவில்லை. இவ்வாறாக, ஜாதகத்தின்மூலமாக துல்-ய நிகழ்வுகளைக் கண்டறிய முடிந்தது.
கடவுள் படைத்த ஒவ்வொரு கிரகமுமே அதிக தூரத்தில் இருந்தபோதும், அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் ஏதாவ தொரு கிரகத்துக்குரியதாகப் படைக்கப் பட்டுள்ளன. இவற்றிலேயே லால் கிதாப்பின் பரிகார ரகசியங்கள் அடங்கியுள்ளன.
லால் கிதாப்பை உருவாக்கிய ஆசிரியர், அப் பொருட்கள் ஒவ்வொன்றையும் கிரகவாரி யாக பல குழுக்களாகப் பிரித்து எழுதியுள்ளார். உதாரணமாக, அரிசி, பால், உணவி லுள்ள நீர் சத்துகள், தாய், பாட்டி ஆகிய சொந்தங்களையும், தாவரங்களில் ரசமுள்ள பழங்களையும், மாமரத்தையும், விலங்குகளில் குதிரை, முயல் ஆகியவற்றையும், கடவுளில் ஈஸ்வரனையும், விலைமதிப்புமிக்க உலோகங்களில் வெள்ளியையும், நீர்நிலைகளில் ஓடுகின்ற நீரையும், ஏரி, குளத்தையும், உட-ல் மனம், இதயம் ஆகியவற்றையும் சந்திரனுக்குப் பிரித்தார்.
சந்திரனால் ஏற்பட்ட தோஷத்திற்கு இந்த பொருட்களையே பரிகாரத்துக்குப் பரிந்துரைக்கலாம். தாயின் சாபத்துக்கு வெள்ளிப் பொருட்கள், அரிசி, பால் ஆகியவற்றை உறவுகளிடமிருந்து சேகரித்து, ஓடும் நீரில் சில காலங்கள் விடவேண்டும். இதன்காரணமாக தாயின் சாபம், தோஷம் நிரந்தரமாக நீங்கிவிடும். இதுவரை அவர் அனுபவித்த துன்பங்கள் நீங்கி, சுகம் பெருகும்.
சந்திரனால் ஏற்பட்ட தோஷம், அவருக்குகந்த பொருட்களை நம் கைகளால் தூக்கி எறியும் போதே நம் உடலைவிட்டு நீங்கிவிடுகிறது. பொதுவாக சாபத்திற்கான பரிகாரங்கள் ஒருசில முறை மட்டுமே செய்யப்பட வேண்டும். மற்ற பரிகாரங்கள் 43 நாட்கள் செய்யப்பட வேண்டும். நடுவிலேயே நல்லபலன் தெரிந் தாலும் முழுமையாக 43 நாட்கள் இப் பரிகாரங் களைச் செய்வதே உசிதமாகும். அப்போதுதான் நிரந்தரமாக தோஷ பாதிப்புகள் மறையும்.
சந்திர தோஷத்துக்கான எளிமையான பரிகாரம் தாயை தினமும் வணங்கி ஆசிபெறுதல், தாயால் கொடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்திருத்தல், வெள்ளியினாலான காப்பு அல்லது மோதிரத்தைக் கையில் அணிந்து, அதை 43 நாட்களுக்குத் தொடரவேண்டும். இதற்குப் பின்னுள்ள விஞ்ஞான நிகழ்வு என்னவெனில், இந்தப் பொருட்களை நதியில் விடும்போது நமது உட-ல் சந்திரனால் ஏற்பட்ட கர்மாக்களின் பாவங்கள் நதியோடு கரைந்துவிடுகின்றன என்பதே. அதன்காரண மாக குறிப்பிட்ட கிரக பாதிப்பால் ஏற்பட்ட தோஷங்களும் சாபங்களும் நிரந்தரமாக மறைந்துவிடுகின்றன.
லால் கிதாப்பில் வாஸ்து தொடர்பான திருத்தங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திசைக்கும் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களுக்குரிய பொருட்களை மட்டும் அந்தப் பகுதியில் வைப்பதன்மூலமாகவே வாஸ்து திருத்தங்கள் செய்துகொள்ளலாம். உதாரணமாக, சந்திரனுக்குரிய திசையான வடகிழக்குப் பகுதியில், அவருக்குரிய பால், வெள்ளி, அரிசி ஆகிய பொருட்களை வைக்கவேண்டும். அதைவிடுத்து அதற்குப் பகை கிரகங்களின் பொருட்களான இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை வைத்தால் குடும்ப வாழ்க்கையில் வீழ்ச்சி ஏற்படலாம்.
லால் கிதாப் பரிகாரங்களை இரவில் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டா லொழிய, பக-ல்தான் செய்யப்பட வேண்டும். பகல் நேரத்தில் சூரியன் காரியங்களை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் செய்துமுடிக்க வைக்கிறார்.
லால் கிதாப் பரிகாரங்களை கூடியமட்டும் சம்பந்தப்பட்ட ஜாதகர் மட்டுமே செய்யவேண்டும். ஆயினும், ஜாதகர் வெளிநாட்டில் இருந் தாலோ அல்லது உடல்நலக் குறைவு காரணமாகவோ செய்ய முடியவில்லை எனில், அவரின் தாயார் அவருக்காக சங்கல்பம் செய்தபின் செய்யலாம்.
திருமண தாமதம்
உதாரண ஜாதகம் 2-ல் குறிப் பிடப்பட்ட பெண்ணுக்குத் திருமணம் தாமதமானது. சில இடங்கள் பேசிமுடித்துத் தடையானது. மேலும், இந்த பெண்ணே தன் இஷ்டப்படி தனக்குத் தெரிந்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள நினைத் தாள். அதற்கு குடும்பத்தார் சம்மதிக்க வில்லை.
வந்த ஏழெட்டு சம்பந்தங்களும் தோல்வி யடைந்தன. லால் கிதாப்பில், திருமணத்திற்கு 2 மற்றும் 7-ஆம் வீடுகள் ஆராயப்பட வேண்டும்.
சுக்கிரன் 2 மற்றும் 7-ஆம் வீட்டுக்கான அதிபதியாவார். 2-ஆம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு அமர்ந்துள்ளனர். மேற்சொன்ன பாவங்களில் சுக்கிரனுக்குப் பகை கிரகங்கள் அமர்ந்ததால், இந்தக் குடும்பத்தில் பிறப் பெடுத்ததால் பெண்சாபம் அல்லது தோஷம் ஏற்பட்டது. 2-ஆம் பாவம் குடும்பத்தைக் குறிப்ப தல்லவா? எனவே, இந்தப் பெண்ணுக்கு, பெண் மூதாதையர்களின் சாபம் ஏற்பட்டுள்ளது. ராகுவின் பார்வை சுக்கிரன்மேல் இருப்பதால், இந்தப் பெண்ணுக்கு காதல் ஏற்பட்டது. மேலும் பாதிப்புக்குக் காரணம் 2-ல் உள்ள செவ்வாயே ஆகும்.
இந்தப் பெண்ணுக்கு, பெண்சாபம் நிவர்த்தியாகப் பரிகாரமாக, நூறு பசுக்களுக்கு வெள்ளிக்கிழமையில் இரண்டு வேளை உணவளிக்கவும் (வெள்ளைப் பசுவைத் தவிர), அதன்பிறகு அமாவாசையன்று ஆஞ்சனேயரை வழிபடவும், அடிக்கடி அருகிலுள்ள விதவைப் பெண்களிடம் ஆசிர்வாதம் வாங்கவும், ஊனமுற்ற பசுவுக்கு வெள்ளிக்கிழமைகளில தீவனம் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதை அந்தப் பெண் 43 நாட்களுக்கு செய்தபிறகு, சிறிதுசிறிதாக அவள் மனம் மாறி, அறுபது நாட்களில் வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் திருமணம் நடந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்துவருகிறாள்.
சில லால் கிதாப் பரிகாரங்கள்
முன்னேற்றத்துக்கும், மகிழ்ச்சியான வாழ்க் கைக்குமான பொதுவான பரிகாரகங்கள்:
* தினமும் சாப்பிடும்முன் சிறிது உணவினை மூன்று பங்குகளாகத் தனியே எடுத்துவைத்து, சாப்பிட்டபின் பசு, நாய் மற்றும் காக்கைக்கு வைக்கவும்.
* திடீர் அதிர்ச்சிகள், வீண் செலவுகள் போன்ற ராகுவின் பாதிப்பை முழுவதுமாகக் கட்டுப்படுத்த, எப்போதும் சமையலறையிலேயே உணவருந்துதல் வேண்டும்.
* ஒவ்வொரு மாதமும், வீட்டிலுள்ள நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மூன்று அல்லது நான்கு பங்கு அதிகமான இனிப்புப் பலகாரங்களைத் தயாரித்து, அதை பசு, எருது அல்லது ஏதேனுமொரு மிருகத்துக்கு அளிக்கவும்.
* இரவு தூங்கும்போது ஒரு குவளையில் நீர் அல்லது பாலை தலைக்கருகே வைத்து, காலையில் எழுந்ததும் அதை மரம், செடிகளுக்கு ஊற்றினால், வீட்டில் சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள், விபத்துகள், அவமானங்கள், ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
நோய் பாதிப்புகள் குறைய அல்லது தவிர்ப்பதற்கான லால் கிதாப் பரிகாரங்கள்:
* ஒவ்வொரு வருடமும் சிவப்புப் பூசணிக்காயை கோவிலுக்கு தானமாக வழங்கவும்.
* இரவு படுக்கும்போது சில காசுகளைத் தலையணைக்கு அடியில் வைத்து, காலையில் ஏழைகளுக்கு வழங்கவும்.
செல்: 63836 25384