லக்னாதிபதியை வலுப்படுத்த எளிய பரிகாரங்கள்!

/idhalgal/balajothidam/simple-remedies-strengthen-lucknow

ண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது போல, ஒரு ஜாதகத்தில் லக்னம் மிக முக்கியம். லக்னமென்பது ஜாதகத் தில் முதல் கட்டமாகும். லக்னம் எனும் ஒன்றாம் பாவகம் ஜாதகரைப் பற்றிக் கூறுமிடம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரிவதுபோல ஜாதகரின் செயல்பாடுகள் லக்னத்தில் தெரியும். ஒருவரின் உயிர் ஸ்தானமாகிய லக்னத்தின்மூலம் அவரின் குணநலன், பிறவி இயல்பு, உடலின் அமைப்பு, நிறம், செல்வநிலை, ஆன்ம பலம், ஆயுள் பலம், மகிழ்ச்சி, துக்கம், கனவு ஆகியவற்றை அறியலாம்.

மேலும் லக்னம் ஜாதகரின் விதியைப் பற்றிக் கூறுமிடம். இந்த ஜென்மத்தில் ஒருவர் அனுபவிக்கும் விதிப் பயனைப் பற்றிக் கூறுமிடம். லக்னம் வலிமை பெற்றவர் கள் எதையும் எதிர்கொண்டு வெல்லும் வலிமை படைத்தவர்கள். லக்னம் வலிமை யிழந்தவர்களுக்கு சுய முடிவெடுக்கத் தெரியாது. பிறரின் ஆலோசனையையும் கேட்க மாட்டார்கள். இதைப் பேச்சுவழக்கில் "சுய புத்தியும் கிடையாது; சொல் புத்தியும் கிடையாது' என்பார்கள். பன்னிரு பாவகங் களின் மொத்தப் பலனை லக்னம் தெரிவிக்கும். இந்தக் கட்டுரையில் லக்னாதிபதி நின்ற நிலையின்படி ஏற்படும் பலன்களையும், பரிகாரங்களையும் காணலாம்.

லக்னாதிபதி 1-ல்

லக்னாதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவராக இருப்பார். தோல்வி பயம் இல்லாதவர். நல்ல உடற்கட்டு, புகழ், ஸ்திரபுத்தி உண்டு.

நீண்ட ஆயுள், நல்ல குணங்கள் உள்ளவ ராக இருப்பார். சுய முயற்சியில் முன்னேறக் கூடியவர். பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர். காம உணர்வு மிகுந்தவர். சுயநலம் உண்டு. தன்னைப்பற்றி உயர்வான சிந்தனை உண்டு. 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனைவியால் ஆதாயமும், மனைவி வந்த பின்னர் முன்னேற்றமும் உண்டாகும். சகல யோகங்களை அனுபவிக்கக் கூடியவராக இருப்பார். கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர்கொள்ளும் வல்லமை உள்ளவராக இருப்பார். எந்த தோஷமும் இவரைத் தாக்காது. கூட்டுத்தொழில் செய்யும் ஆர்வமுண்டு. பிறரின் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். நட்புக்கு மரியாதை தருபவர் கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.

லக்னத்தை மேலும் வலிமைப்படுத்த ஞாயிற்றுக்கிழமை சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

லக்னாதிபதி 2-ல்

லக்னாதிபதி தன ஸ்தானத்தில் நின்றால் செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர்கள். இவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டே குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். பேச்சுத்திறமை உள்ளவர்கள். இனிமையாகப்பேசி குடும்பத்தை

ண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது போல, ஒரு ஜாதகத்தில் லக்னம் மிக முக்கியம். லக்னமென்பது ஜாதகத் தில் முதல் கட்டமாகும். லக்னம் எனும் ஒன்றாம் பாவகம் ஜாதகரைப் பற்றிக் கூறுமிடம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரிவதுபோல ஜாதகரின் செயல்பாடுகள் லக்னத்தில் தெரியும். ஒருவரின் உயிர் ஸ்தானமாகிய லக்னத்தின்மூலம் அவரின் குணநலன், பிறவி இயல்பு, உடலின் அமைப்பு, நிறம், செல்வநிலை, ஆன்ம பலம், ஆயுள் பலம், மகிழ்ச்சி, துக்கம், கனவு ஆகியவற்றை அறியலாம்.

மேலும் லக்னம் ஜாதகரின் விதியைப் பற்றிக் கூறுமிடம். இந்த ஜென்மத்தில் ஒருவர் அனுபவிக்கும் விதிப் பயனைப் பற்றிக் கூறுமிடம். லக்னம் வலிமை பெற்றவர் கள் எதையும் எதிர்கொண்டு வெல்லும் வலிமை படைத்தவர்கள். லக்னம் வலிமை யிழந்தவர்களுக்கு சுய முடிவெடுக்கத் தெரியாது. பிறரின் ஆலோசனையையும் கேட்க மாட்டார்கள். இதைப் பேச்சுவழக்கில் "சுய புத்தியும் கிடையாது; சொல் புத்தியும் கிடையாது' என்பார்கள். பன்னிரு பாவகங் களின் மொத்தப் பலனை லக்னம் தெரிவிக்கும். இந்தக் கட்டுரையில் லக்னாதிபதி நின்ற நிலையின்படி ஏற்படும் பலன்களையும், பரிகாரங்களையும் காணலாம்.

லக்னாதிபதி 1-ல்

லக்னாதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவராக இருப்பார். தோல்வி பயம் இல்லாதவர். நல்ல உடற்கட்டு, புகழ், ஸ்திரபுத்தி உண்டு.

நீண்ட ஆயுள், நல்ல குணங்கள் உள்ளவ ராக இருப்பார். சுய முயற்சியில் முன்னேறக் கூடியவர். பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர். காம உணர்வு மிகுந்தவர். சுயநலம் உண்டு. தன்னைப்பற்றி உயர்வான சிந்தனை உண்டு. 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனைவியால் ஆதாயமும், மனைவி வந்த பின்னர் முன்னேற்றமும் உண்டாகும். சகல யோகங்களை அனுபவிக்கக் கூடியவராக இருப்பார். கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர்கொள்ளும் வல்லமை உள்ளவராக இருப்பார். எந்த தோஷமும் இவரைத் தாக்காது. கூட்டுத்தொழில் செய்யும் ஆர்வமுண்டு. பிறரின் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். நட்புக்கு மரியாதை தருபவர் கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.

லக்னத்தை மேலும் வலிமைப்படுத்த ஞாயிற்றுக்கிழமை சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

லக்னாதிபதி 2-ல்

லக்னாதிபதி தன ஸ்தானத்தில் நின்றால் செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர்கள். இவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டே குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். பேச்சுத்திறமை உள்ளவர்கள். இனிமையாகப்பேசி குடும்பத்தை திறம்பட நிர்வகித்துச் செல்வார் கள். நல்ல குடும்பம் அமையும். வாக்குவண்மை யால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்கள். பொருளீட்டுவதிலும், சேர்ப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். சுவையான உணவு சாப்பிடு வதில் ஆர்வம் அதிகம். ஆயுள் தீர்க்கம்.

2-ஆம் பாவகம் அசுபத்தன்மையுடன் செயல்பட்டால் சுபப் பலன்கள் மட்டுப்படும். பேச்சில் கவனம் தேவை.

லக்னாதிபதி இரண்டாமிடத் திற்கு சம்பந்தம்பெற்றால் அடிக்கடி உணவு தானம் செய்வது நல்லது.

லக்னாதிபதி 3-ல்

லக்னாதிபதி 3-ஆமிடமான சகாய ஸ்தானத்தில் நின்றால் வீரம், விவேகம், நிறைந்த செல்வம் உடையவர்கள். சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். கடினமான விடாமுயற்சி உள்ளவர் கள். சுயநலவாதியாக இருப்பார்கள். பிறர் கூறும் கருத்தை ஏற்காமல் தான் சொல்வதே சரியென்று வாதம் செய்பவர்கள். தைரியம் உள்ள வராகவும் துணிச்சல் மிக்கவராகவும் இருப்பார்கள். பல நேரங்களில் அசட்டு தைரியத்தில் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்பவராகவும் இருப்பார்கள். கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகம். ஆன்மிக நாட்டம் அதிகம். சகோதர, சகோதரிவழி ஆதாயமும், ஆதரவும் உண்டு. காம எண்ணம் உள்ளவராக இருப்பார். பிறந்த ஊர் சிறப்பில்லை.

லக்னாதிபதி 3-ல் இருப்பவர்கள் கண், காது போன்ற உறுப்புகளுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு மருத்துவ உதவிசெய்வது நல்லது.

dd

லக்னாதிபதி 4-ல்

லக்னாதிபதி சுக ஸ்தானத்தில் நின்றால் தாய், தாய்வழி ஆதாயம் மிகுந்தவர்கள். சுகவாசியாக இருப் பார்கள். சொத்து சுக சேர்க்கை மிகுதியாக உள்ளவர்கள். நல்ல கல்வியறிவு உண்டு. உயிரின வளர்ப்பு, விவசாய நாட்டம் அதிகம். உடல் நலத்தைப் பேணிக் காப்பதிலும், தன்னை அழகு படுத்திக்கொள்வதிலும் தனி கவனம் செலுத்துவார்கள். பிறரால் விரும்பப்படக் கூடியவராக இருப்பார்கள். சமயோசித புத்தியும், சாதுர்யமும் உள்ளவர்கள். 10-ஆமிடமான தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் சுய தொழிலில் மேன்மையுண்டு. அர சாங்க உத்தியோகம் உண்டு.

மேலும் சுபப் பலனை அதிகரிக்க பசு மாட்டிற்கு புல், அகக்திக்கீரை வழங்கவேண்டும்.

லக்னாதிபதி 5-ல்

லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டம் நிரம்பியவர் கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள். இரக்க குணமுண்டு. தானதர்மம் செய்வதில் ஆர்வமுள்ள வர்கள். ஆன்மிக நாட்டம் இருக்கும். குணத்தில் பணிவும் அடக்கமும் இருக்கும். ஜாதகரிடம் இயல்பாகவே நற்குணங்கள் இருக்கும். குலதெய்வ அருள் நிரம்பியவர்கள். தாத்தாவின் உருவ ஒற்றுமை இருக்கும். குழந்தைகள்மேல் அதிக பற்றிருக்கும். நல்ல புத்திரபாக்கியம் உள்ளவராக இருப்பார்கள். புத்திரர்களால் பெயரும் புகழும் கிடைக்கும். குழந்தை பிறந்தபிறகு முன்னேற்றம் உண்டாகும். முன்னோர்களின் பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கும் பாக்கியம் உள்ளவராக இருப்பார்கள். அரசுவழி ஆதாயம் உள்ளவர்கள். தன்னுடைய குலத்தை யும், கௌரவத்தையும் காப்பாற்றக் கூடியவ ராக இருப்பார்கள். முன்னோர்களின் பரம்பரை குலத்தொழிலைச் செய்வார்கள். உயர்ந்த பதவி வகிப்பவர்கள். உழைக்காத வருமானமுண்டு. பங்குச் சந்தை ஆதாய முண்டு. ஜோதிட ஆர்வமிருக்கும். நெருங்கிய உறவில் திருமணம் அல்லது காதல் திருமணம் நடக்கும்.

மேலும் சுபப் பலனை அதிகரிக்க குலதெய்வ வழிபாடு சிறப்பு.

லக்னாதிபதி 6-ல்

ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு லக்னாதி பதி சம்பந்தம் இருந்தால் கடன், நோய், வம்பு வழக்குகள் என ஏதேனும் ஒன்றிருக்கும். எல்லாரிடமும் பகையையும், வெறுப்பையும் காட்டக்கூடியவராக இருப்பார்கள். நோயும் ஜாதகரும் இரட்டைப் பிறவிகளாக வாழ்வார்கள். உடலில் ஏதாவது நோய்த் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். பிறர் மீது குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் பிறர் பொருளின்மீது ஆசைப்படுவது போன்ற குணங்கள் இருக்கும். எதிலும் திருப்தி யடையாதவராக இருப்பார்கள். அனைத் திலும் குறைபட்டுக்கொள்வார்கள். பணம் சம்பாதிப்பதைவிட எதிரிகளை அதிகம் சம்பா திப்பார்கள். சமயோசித புத்தி இருக்காது. சுயதொழில் சிறப்பில்லை. தங்கள் தோல்விக்கு தாங்களே காரணமாக இருப்பார்கள். முதலீடு இல்லாத தொழில் அல்லது அடிமை உத்தியோகமே சிறப்பு. ஆகமொத்தம் கடனாளியாக, நோயாளியாக எதிரிகள் மத்தி யில் வாழ்வார்கள்.

தினமும் மாலை வேளையில் நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.

லக்னாதிபதி 7-ல்

லக்னாதிபதி களத்திர ஸ்தானத்தில் நின் றால் வாழ்க்கைத் துணையால் வளர்ச்சியுண்டு. சமுதாய மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. திருமணத்திற்குப் பின்னர் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அர வணைப்பும் உண்டு. ஜாதகரின் முன்னேற் றத்திற்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும் ஆதாயமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும். இரண்டாவது குழந்தையின்மேல் பற்று மிகுதி.

இவர்கள் ஏழை, எளியவர்களின் திருமணத் திற்கு உதவவேண்டும்.

லக்னாதிபதி 8-ல்

அஷ்டம ஸ்தானத்தில் லக்னாதிபதி நின் றால் நித்திய கண்டம், பூரண ஆயுள் என வாழ்க் கையே போராட்டமாக இருக்கும். ஆயுள் பயம் இருந்துகொண்டே இருக்கும். தாழ்வு மனப்பான்மை மிகுந்தவர்கள். விரக்தி அதிகமிருக்கும். வாழ்க்கை அவமானம், கேவலம், துக்கம், நிறைந்ததாக இருக்கும். இனம் காணமுடியாத நோய் இருக்கும். அங்கஹீனம், திருட்டுத்தனம் உண்டு. இழப்புகள் அதிகமிருக்கும். சட்டத்திற்குப் புறம்பான சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். அடிக்கடி விபத்துகளில் சிக்குவார்கள். சொத்திற்காக கோர்ட் கேஸ் என்று அலைந்து கொண்டிருப்பார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்வைத் தொலைப்பார்கள். வெளி நாட்டு வாழ்க்கை சிறப்பு. சிலருக்கு பினாமி சொத்து அல்லது உயில் சொத்து கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

லக்னாதிபதி 9-ல்

பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத் திற்கு லக்னாதிபதி சம்பந்தம் இருந்தால் குடும்பத்தில் மூத்த வாரிசாக இருப்பார்கள். தர்ம ஸ்தாபனம் நடத்துவர்கள். ஆன்மிக நாட்டம் மிகுந்தவர்கள். கோவில் விழாக்களில் முன்நின்று தலைமை தாங்குபவர்கள். ஆன்மிக குருமார்களின் ஆசியுண்டு. புனித யாத்திரை செல்லும் பாக்கியமுண்டு. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்வார்கள். அழியாப்புகழ் கிடைக்கும். வேதங்கள் கற்பவர்கள். ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பார்கள். சுய ஒழுக்கம் உள்ளவர் கள். வெளிநாட்டு வருமானமுண்டு. தந்தை, தந்தைவழி முன்னோர்களின் நல்லாசி யுண்டு. பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வமுண்டு. நீத்தார் கடனை முறையாக செலுத்துபவர்கள். குல கௌரவம், மரியாதை உள்ளவர்கள். சித்தர்கள் ஜீவசமாதியை வழிபடவும்.

லக்னாதிபதி 10-ல்

பத்தாமிடமான தொழில் ஸ்தானம் லக்னாதிபதி சம்பந்தம் பெற்றால் ஜாதகர் சுயதொழில் செய்பவராக இருப்பார் அல்லது கௌரவப் பதவியில் இருப்பார். சிலர் பரம்பரை குலத்தொழிலை நடத்துவார்கள். தொழில், வியாபாரத்தில் தனி முத்திரை பதிப்பவர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சி யும் புகழும் கிடைக்கும். அடிமைத் தொழிலை விரும்பாத கடினமான உழைப்பாளியாக இருப்பார்கள். தாய், தாய்வழி உறவுகளுடன் தொழில் தொடர்புண்டு. உழைப்பை நம்புபவராகவும் இருப்பர். தொழிலில் நேர்மையைக் கடைப்பிடிப்பர். சுய கௌரவம் உள்ளவராக இருப்பார்கள். நல்ல கல்வி அறிவுண்டு. படித்த படிப்பிற்கு சம்பந்தமான தொழில், உத்தியோகம் உண்டு.

சுபப் பலனை அதிகரிக்க சனிப் பிரதோஷத்தன்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும்.

லக்னாதிபதி 11-ல்

லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத் திற்கு லக்னாதிபதி சம்பந்தம் இருந்தால் ஜாதகர் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயமும் அனு கூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கைத் துணை அமையும். 7-ஆமதிபதி பலம் குறைந்திருந்தால் இருதார தோஷத்தைக் கொடுக்கும். பூர்வீகச் சொத்துகளால் லாபமும் ஆதாயமும் கிடைக் கும். 10-ஆமதிபதியின் தொடர்பிருந்தால் பல தொழில் செய்து லாபம் சம்பாதிப்பார்கள். கூட்டுத் தொழிலில் வெற்றி, வழக்குகளில் வெற்றியுண்டு.

ஏகாதசி திதியில் மகாவிஷ்ணுவை வழிபடவும்.

லக்னாதிபதி 12-ல்

2-ஆமிடமான அயன, சயன, விரய ஸ்தானத் திற்கு லக்னாதிபதி சம்பந்தமிருந்தால் ஜாதகர் நிறைய விரயங்களை சந்திப்பார். தனது செயல்பாடுகளால் நிறைய விரயங்களை உண் டாக்குவார். வரவுக்குமீறி செலவுசெய்வார். கட்டுக்கடங்காத விரயம் இருந்துகொண்டே இருக்கும். சேமிக்கும் பழக்கம் இருக்காது. கடன் பெற்றும் வீண்செலவு செய்யத் தயங்க மாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன் சொந்த ஊரைவிட்டு அடிக்கடி நீண்டதூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார்கள். பிறர்மீது நம்பிக்கை இல்லாதவர்கள். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களைத் தாங்களே உருவாக்குவர். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள். கடுமையான திருமணத்தடையைத் தரும். திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்கிறார்கள். இறுதிக் காலம்வரை தீய பழக்கங்கள் இருக்கும். சிலர் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனமாக அடுத்தவரை நம்பியே பிழைக்கிறார்கள்.

சதுர்த்தசி திதியில் சாதுக்களுக்கு உணவு வழங்கவும்.

பொதுவாக ஜாதகத்தில் லக்னம், லக்னாதி பதிக்கு அசுப கிரக சம்பந்தம் இருக்கக்கூடாது. லக்னம் சுத்தமாக இருப்பது நலம். லக்னத் தையும் லக்னாதிபதியையும் எந்த கிரகமும் பார்க்கக்கூடாது. லக்னம், லக்னாதிபதிக்கு அதிக கிரகங்களின் சம்பந்தமிருந்தால் அனுபவிக்கவேண்டிய வினைப் பதிவு மிகையாக இருக்கும்.

லக்னம் வலிமை குறைந்து அனைத்து முயற்சியிலும் தோல்வியை சந்திப்பார்கள். அதேபோல் லக்னாதிபதி பகை, நீசம், வக்ரம், அஸ்தமனம் அடைந்தாலும் சுபத்தன்மை மட்டுப்படும்.

செல்: 98652 20406

bala100622
இதையும் படியுங்கள்
Subscribe