கையில் பணம் தங்க எளிய பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/simple-remedies-keep-money-hand-prasanna-astrologer-i-anandhi

ருநாள் பொழுது புலர்ந்ததுமுதல் அந்தநாள் முடிவதற்குமுன்பு பலவிதமான சிறியபெரிய செலவுகளை சந்திக்க வேண்டிய நிலையில் மனிதர்கள் வாழ்க்கை உள்ளது. கையில் தாராளமாக பணப் புழக்கம் உள்ள நிலையில் வாழ்க்கை குதுகலமாக இருக் கும். அடிப்படைத் தேவைக்கு பணம் இல்லாத கால கட்டத்தில் வாழ்க்கை மிக வெறுப்பாக இருக்கும். சிலருக்கு அவசரத் தேவைக்கு கடன் பணம்கூடக் கிடைக் காது. இத்தகைய சூழ்நிலை யைச் சந்திப்பவர்களின் மனம் வாழ்க்கையின் விளிம்பை நாடும். ஜோதிடரீதியாக இது போன்ற சூழ்நிலை ஏற்படும் காலம் எது? அதிலிருந்து மீள்வது எப்படி போன்ற வற்றை காணலாம்.

பொதுவாக தாராளப் பணப்புழக்கத்தை 2 விதமான காரணிகளே நிர்ணயம் செய்கின்றன.

1. தசா புக்திரீதியான காரணங்தள்

2. கோட்சாரரீதியான காரணங்கள்.

தசாபுக்தி ரீதியான காரணங் கள்

1. ஆறாம் அதிபதி தசை

ஆறாமிடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். ஆறில் நின்ற கிரக தசை அல்லது ஆறாம் அதிபதி தசை புக்தி காலங்களில் கடன் வாங்கி தொழில் துவங்கும் எண்ணம் அல்லது தொழில் விரிக்க எண்ணம் அல்லது ஜாமின் போட்டு ஏமாற்றம், கொடுத்த பணம் திரும்ப வராமல் போகுதல், கடன் பெற்று சொத்து அமைத்துக்கொள்ளுதல், குடும்ப சுப தேவைகளுக்காக கடன் படுதல் போன்ற பலன்கள் நடக்கும். தொழில், உத்தியோக சிந்தனையைவிட வருமானம் ஈட்டும் ஆர்வத்தைவிட பணத்தை செலவு செய்யும் ஆர்வம் கூடுதலாக இருக்கும். ஆறாமிடம

ருநாள் பொழுது புலர்ந்ததுமுதல் அந்தநாள் முடிவதற்குமுன்பு பலவிதமான சிறியபெரிய செலவுகளை சந்திக்க வேண்டிய நிலையில் மனிதர்கள் வாழ்க்கை உள்ளது. கையில் தாராளமாக பணப் புழக்கம் உள்ள நிலையில் வாழ்க்கை குதுகலமாக இருக் கும். அடிப்படைத் தேவைக்கு பணம் இல்லாத கால கட்டத்தில் வாழ்க்கை மிக வெறுப்பாக இருக்கும். சிலருக்கு அவசரத் தேவைக்கு கடன் பணம்கூடக் கிடைக் காது. இத்தகைய சூழ்நிலை யைச் சந்திப்பவர்களின் மனம் வாழ்க்கையின் விளிம்பை நாடும். ஜோதிடரீதியாக இது போன்ற சூழ்நிலை ஏற்படும் காலம் எது? அதிலிருந்து மீள்வது எப்படி போன்ற வற்றை காணலாம்.

பொதுவாக தாராளப் பணப்புழக்கத்தை 2 விதமான காரணிகளே நிர்ணயம் செய்கின்றன.

1. தசா புக்திரீதியான காரணங்தள்

2. கோட்சாரரீதியான காரணங்கள்.

தசாபுக்தி ரீதியான காரணங் கள்

1. ஆறாம் அதிபதி தசை

ஆறாமிடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். ஆறில் நின்ற கிரக தசை அல்லது ஆறாம் அதிபதி தசை புக்தி காலங்களில் கடன் வாங்கி தொழில் துவங்கும் எண்ணம் அல்லது தொழில் விரிக்க எண்ணம் அல்லது ஜாமின் போட்டு ஏமாற்றம், கொடுத்த பணம் திரும்ப வராமல் போகுதல், கடன் பெற்று சொத்து அமைத்துக்கொள்ளுதல், குடும்ப சுப தேவைகளுக்காக கடன் படுதல் போன்ற பலன்கள் நடக்கும். தொழில், உத்தியோக சிந்தனையைவிட வருமானம் ஈட்டும் ஆர்வத்தைவிட பணத்தை செலவு செய்யும் ஆர்வம் கூடுதலாக இருக்கும். ஆறாமிடம் என்பது உத்தியோகத்தைப் பற்றியும் கூறுமிடம். ஆறாம் அதிபதி தசை அசுபத் தன்மையுடன் செயல்பட்டால் நல்ல உத்தியோகத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கும் சிலர் அதிக சம்பளம் அல்லது பதவி உயர்விற்கு ஆசைப்பட்டு நல்ல வேலையிலிருந்து விடுபடுவார்கள். சிலர் புதிய வேலைக்கான பணி நியமன ஆணை பெறுவதற்குமுன்பு வேலையை விட்டு விடுவார்கள். அல்லது தகுதி குறைவு காரண மாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள், சிலர் புதிய கம்பெனிக்கு மாறி வேலைக்கு சென்றபிறகு கம்பெனி நிர்வாகத்துடன் ஒத்துப் போகமுடியாத சூழல் உண்டாகும். வேலையை ராஜினாமா செய்வார்கள் அல்லது கம்பெனி நிர்வாகம் டார்ச்சர் செய்து வேலையிலிருந்து துரத்தும். கையில் பணப் புழக்கம் உள்ளவரை பாதிப்பின் சுவடு தெரியாது. சேமிப்பு குறைந்தவுடன் அடிப்படைத் தேவையைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலை உண்டாகும்.

பரிகாரம்

ஆறாமிடத்துடன் எந்த கிரகம் சம்பந்தப் பட்டு தசை நடத்தினாலும் கால புரு‘ 6-ஆம் அதிபதியான புதனின் அம்சமான சக்கரத் தாழ்வாரை வழிபட காலச் சக்கரம் வேகமாக சுழன்று கஷ்ட காலம் விலகும். எளிதில் நல்ல உத்தியோகம் கிடைக்கும் அல்லது கடன் அடைக்கும் மார்க்கம் தென்படும்.

அஷ்டமாதிபதி தசை

லக்னத்திலிருந்து எட்டாமிடமான அஷ்டம ஸ்தான அதிபதி அஷ்டமத்தில் நிற்கும் கிரகத்தின் தசை புக்தி காலத்தில் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் கையில் பையில் பணம் தங்காத நிலை ஏற்படும். 8-ல் நின்று ஒரு கிரகம் தசை நடத்தும்போது 2-ஆம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கும். தன ஸ்தானத்தை பார்ப்பதால் ஏதாவது ஒருவிதத்தில் பணம் வரும். ஆனால் தேவையற்ற வாக்குப் பிரயோகத்தால் குடும்ப வழக்கை சந்தித்து வருமானத்திற்கு மீறிய செலவால் மிகுதியான பண நெருக்கடியை சந்திப்பார்கள். தவறான உணவுப் பழக்கத்தால் தீராத அல்லது நீண்ட நாட்களுக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டிய நோய்க்கான சிகிச்சையில் அடிப்படைத் தேவைக்கு திணரும் சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு சர்ஜரி செய்து தொடர்ந்து தொழில், உத்தியோகத்திற்குச் செல்லமுடியாத சூழல் நிலவும். சிலர் குடும்ப உறவுகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய வருமானத்திற்கு மீறிய செலவில் மாட்டி அவதிப்படுவார்கள்.

பரிகாரம்

காலத்தால் ஏற்படும் அனைத்து பொருளா தாரப் குற்றத்திற்கும் தீர்வு கொடுக்கும் வலிமை காலபைரவருக்கு உள்ளது. தர்மபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந் திருக்கிறது தட்சிண காசி காலபைரவர் திருக்கோவில். தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் அதியமான் கோட்டைக்குச் செல்கிறது. பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே கோவில் அமைந்திருக்கிறது. இங்குசென்று வழிபட அஷ்டம தசை புக்தியால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி விபரீத ராஜயோகமாக மாறும்.

dd

விரயாதிபதி தசை

12-ஆம் அதிபதி அல்லது 12-ல் நிற்கும் கிரகம் மனிதனை அதிகமாக 3 விதமான பிரச்சினைகளில் மட்டுமே கொண்டு செல்கிறது.

1. கடுமையான மீள முடியாத தொடர் இழப்பு

12-ல் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருத்தல் அல்லது 12-ஆம் அதிபதியின் சாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருக்கும்போது 12-ஆம் அதிபதியின் தசைகாலங்களில் ஏற்படும் இழப்பு ஜாதகரை மீளமுடியாத தொடர் இழப்பில் ஜாதகரை கொண்டுவிடுகிறது. அடுத்த அடியெடுத்து வைக்கமுடியாத நிலையில் ஜோதிடரை அணுகிறார்கள். இவர்கள் ஜோதிடரை சந்திக்கபோது கடன் வாங்குவதைத் தவிர வேறு பேச்சே பேசுவதில்லை. ஒரு கடனில் இருந்து தப்பிக்க இன்னொரு கடன் வாங்கியே கடனை வளர்த்துவிடுவார்கள்.

2. வெளிநாட்டிற்கு சென்று திரும்ப முடியாத நிலை

12-ஆம் அதிபதி ஸ்திர ராசியாக இருந்தால் வெளிநாடு சென்றவர்கள் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கும் நிலை ஏற்படும். தாய் மண்ணை மிதிக்க முடியாமல் ஏதாவது ஒரு பிரச்சினை தடுத்து கொண்டே இருக் கிறது. அப்படி கிரகங் களின் தாக்கம் மனி தனை படுத்துகிறது. 12-ல் தனித்த கிரகமோ, கூட்டு கிரகமோ இருந்து 12-ஆமிடம் உபய ராசியாக. இருந்தால் சொந்த ஊரை விட்டு அருகிலுள்ள ஊர் அல்லது மாநிலத்தில் வாழும் நிலை இருக்கும்.

3. தலை மறைவாகும் நிலை

12-ஆம் அதிபதி, 12-ல் நின்ற கிரகம் அல்லது 12-ஆம் அதிபதியின் சாரநாதன் கோட்சாரத்திலோ தசா புக்தியிலோ சம்பந்தம் பெறும்போது சிலர் மன உளைச்சல் காரணமாக தலைமறைவாகு கிறார்கள். இருக்கும் இடம் தெரிந்து கூப் பிட்டாலும் வர தயங்குகிறார்கள். ஏனைய கிரகத்தால் பாதிப்பு இருந்து சுப வலிமை பெற்றால் குறுகிய காலத்தில் திரும்பி விடுகிறார்கள். 12-ஆம் இடத்திற்கு குரு அல்லது லக்ன சுபரின் பார்வை இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு குடும்பத்தை விட்டு வெளியே தங்கும் நிலை ஏற்படுகிறது. கையில் தாராள பணப் புழக்கம் உள்ள மனிதனுக்கு கடன் வாங்கி கடன் அடைக்கும் நிலை வராது. வாழ்வாதாரத்திற்கு வெளிநாட்டிற்கு சென்று சிரமப்பட மாட்டார்கள். குடும்பம் பிரிந்து தலைமறைவாக வாழமாட்டார்கள்.

பரிகாரம்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் பாயசம் படைத்து வழிபட 12-ஆமிட குற்றத்தால் ஏற்படும் பொருள் குற்றம் அகலும். கோட்சார கிரகங்களால் ஏற்படும் பொருள் குறைபாடு, கோட்சாரத்தில் அஷ்டம எழரைச்சனி காலங்களில் குரு கேது, சனி, ராகு, கேது சம்பந்தம் பெறும் காலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும். அன்றாட தேவையை சமாளிக்க தேவையான பொருளாதாரம் வளர தினமும் பசுவிற்கு இயன்ற உணவு தானம் வழங்கவேண்டும்.

ஜோதிடரை சந்திக்கும் பலர் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையிலே தங்க மாட் டேங்கிறது என்ற கேள்வியுடனே ஜோதிடரை சந்திக்க வருகின்றனர். பணத்தட்டுப்பாடு உள்ளவர்கள் மேலே கூறிய பரிகாரத்தை பயன்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகள்.

செல்: 98652 20406

bala151223
இதையும் படியுங்கள்
Subscribe