பலர் குழந்தைச் செல்வம் இன்றி தவிக்கின்றனர். பலர் மருத்துவச் சிகிச்சை எடுத்தும் குழந்தை செல்வம் கிடைக்காது வாடுகின்றனர். ஆனால் விஞ்ஞானம் தோன்றுவதற்கு முன்பாகவே ஒருவருக்கு பிறக் கின்ற குழந்தைகள் எத்தனை? எத்தகையது? குழந்தைச் செல்வம் உண்டா? இல்லையா? தத்து எடுக்கத்தான் வேண்டுமா? ஏன் நவீன விஞ்ஞானத்தின்மூலம் விந்தணு தானம் பெற்று குழந்தை பேற்றைப் பெறுகின்ற தம்பதியர் யார்? அதற்கான ஜாதக அமைப்பு, இவற்றையெல்லாம் அன்றே அறிந்துகொள்ள ஜோதிட சூத்திரங்களை ஜோதிடநூல்கள் வகுத்துள்ளன. .அவ்வாறே குழந்தைச் செல்வம் கிடைக்க பரிகாரங்களையும், பரிகாரங்களை வரையறை செய்ய ஜோதிட கணிதங் களையும் கூறுகின்றனே ஜோதிட நூல்கள். அவை துல்லியமானதும், மிக்க பயன் தரத்தக்கது மாகும். இதனை பிரசன்ன மார்க்கம், ஜாதகா தேசம், பல தீபிகை, பிரச்சன அனுஷ்டான பத்ததி, பராசர ஹோரை போன்ற நூல்கள் கூறுகின்றன. ஆனால் இத்தகைய கணிதங்கள் ஒன்றும் இல்லாமல் மிக எளிமையாக, சந்தான பிரசன்ன கணிதங்களை கணக்கிடாமலும், அனைத்து விதமான சந்தான தோஷங்களையும் விலக்கும் எளிய சில பரிகாரங்களை ஜீவ நாத ஜோதிடர் என்பவர் தனது பாவ குதூபலம் என்னும் ஜோதிடநூலில் கூறுகின்றார். அதனைக் குறித்து இங்கு காண்போம்.
புதசுக்ர கிர்தே தோஷ ஸுதாப்தி சிவ பூஜனால் குரு சந்திர கிர்தே தோஷ யந்திர மந்திர ஷதி பலால் ஒருவர் ஜாதகத்தில் குழந்தைச் செல்வம்பெற தடையாகவுள்ள கிரகம் புதன் மற்றும் சுக்கிரனாக அமைந்தால் அதற்குப் பரிகாரமாக சிவ பூஜை செய்வதன்மூலமாக குழந்தைச் செல்வம் கிடைக்கும் என அறியலாம். மேலும் குழந்தைச் செல்வம் கிடைக்க தடையாக காணப்படும் கிரகம் குரு, சந்திரனாக இருக்க, மருத்துவச் சிகிச்சையாலும் யந்திர, மந்திர பூஜைகளாலும் தடை விலகி குழந்தைச் செல்வம் கிடைக்கும் என கூறலாம். மேலும் ஐந்தில் ராகு அமர ஐந்தாம் வீட்டோனோடு ராகு இருக்க கன்னி காதானம் செய்வதாலும், சூரியன் மூலம் ஏற்படும் குழந்தை இன்மை விலக, விஷ்ணு கீர்த்தனம் செய்வ தாலும், அதாவது விஷ்ணு பகவானை மனமுருகி பாடுவதாலும், கேதுவால் ஏற்படும் புத்திர தோஷத்திற்கு பசு தானமும், சனி, செவ்வாய் இவரால் ஏற்படும் புத்திர தோஷத்திற்கு பரிகாரமாக ருத்ர அபிஷேகம் செய்வதன்மூலமாகவும், கடிகா ஸ்னானம் செய்வதன் மூலமாகவும், குழந்தைச் செல்வத்தைப்பெறமுடியும் என்று அந்த நூல் கூறுகின்றது. இதோ அதற்கான சுலோகம் ராஹுணா கன்னிகாதானம் பானு னா ஹரி கீர்த்தனம் சிகினா கபிலா தானம் மந்தாரா ப்யாம் ஷடங்க கம் மேலும் அனைத்துவிதமான புத்திர தோஷங்களையும் விலக்கி குழந்தை குழந்தைச் செல்வம் பெறுவதற்குக் கீழ்வரும் பரிகாரத்தை கூறுகின்றார்
ஸர்வதோச நாசாய ஸந்தான ஹரீம் பூஜனம்
குர்யால் பௌம விரதஞ்ச காமதேவவிர்தம் நர:
சந்தான கோபால பூஜை செய்வதும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதும் காம தேவ விரதம் கடைப்பிடிப்ப தும் இவையாவும் அனைத்துவிதமான சந்தான தோஷங் களையும் விலக்கி குழந்தைச் செல்வத்தை தருகின்ற அற்புதமான பரிகாரம் என்று பாவ குதூபலம் நூல் கூறுகின்றது. எனவே குழந்தைச் செல்வமின்றி வாடுகின்ற தம்பதிகள் செவ்வாய்க்கிழமை தக்க ஆச்சாரியனிடம் உபதேசம்பெற்று செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதும், சந்தானகோபால பூஜை தனது சக்திக்கு ஏற்ற வண்ணம் செய்துக் குழந்தைச் செல்வம் பெற்றுக் கொள்ளுங்கள்.
செல்: 94438 08596