சிம்ம லக்னம் தசா புக்திப் பரிகாரங்கள்! (5)

/idhalgal/balajothidam/simha-lagna-dasa-enlightenment-remedies-5

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே. உங்கள் ராசியின் அதிபதி ராஜகிரகமாகிய சூரியன் என்பதால், ராஜபோகத்துடன் இருக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எந்தக் காரணத்தைக்கொண்டும் அதை மாற்றிக்கொள்வது என்பது முடியாத காரியம். சிந்தனை, சொல், செயல் என்று அனைத் திலும் வேகம் காட்டும் நீங்கள் அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் ராசி அதிபதி சிங்கம் என்பதால் துயரங்கள் எதுவானாலும் தாங்கும் மனம் படைத்தவர். துரோகத்தை விரும்பாதவர். சொல்லாலும் செயலாலும் ஒன்றாக இருப்பவர். தன் இஷ்டப்படி நடந்துகொண்டு அனைவரும் உங்களை பின்பற்றவேண்டும் என விரும்புவீர்கள். பணி விசயத்தில் எச்சரிக்கையான நீங்கள் யாரிடமும் ஏமாறாதவர்.

குற்றங்களை உடனே தட்டி கேட்பவர். எந்த செயலை செய்வதற்கு பிறரை எதிர்பார்க்காது நீங்களே முன்னின்று திறமையாகச் செயல்படுபவர். ககந்திர உணர்வு சற்று அதிகமாக இருப்பதால் யாருக்கும் அடிபணிய மாட்டீர்கள். சூடான, சுவையான உணவு பொருள்களை விரும்புபவர். இனி உங்கள் லக்னத்திற்கான தசா புக்தி பலன்கள் மற்றும் பரிகாரங்களைக் காணலாம்.

ss

சூரிய தசை

லக்னாதிபதி சூரியன். இவர் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் கூடும். ஸ்திரபுத்தியுடன் ஜாதகர் எதையும் சமாளிக்கும் நிர்வாகத்திறன் உள்ளவராக இருப்பார். தோல்வி பயம் இல்லாதவர்.

அதேசமயம் கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர் கொள்ளும் வல்லமை உள்ளவர். எந்த திருஷ்டி தோஷமும் உங்களைத் தாக்காது. ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ஒரு கூட்டத்தை வழி நடத்தக்கூடிய நல்ல தகுதிகள் உள்ளவராக இருப்பீர்கள். சுயமுயற்சியில் முன்னேறுவீர்கள். அரசியல், ஆன்மிகம் போன்ற பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார். சுயநலம் குறைவு. தன்னைப்பற்றி உயர்வான சிந்தனை அதிகரிக்கும். மனைவியால் ஆதாயமும் முன்னேற்றமும் உண்டாகும். சகல யோகங்களை அனுபவிக்க கூடியவர். கூட்டுத்தொழில் செய்யும் ஆர்வம் ஏற்படும். பிறரின் புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள். நட்புக்கு மரியாதை தருபவர்கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே. உங்கள் ராசியின் அதிபதி ராஜகிரகமாகிய சூரியன் என்பதால், ராஜபோகத்துடன் இருக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எந்தக் காரணத்தைக்கொண்டும் அதை மாற்றிக்கொள்வது என்பது முடியாத காரியம். சிந்தனை, சொல், செயல் என்று அனைத் திலும் வேகம் காட்டும் நீங்கள் அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் ராசி அதிபதி சிங்கம் என்பதால் துயரங்கள் எதுவானாலும் தாங்கும் மனம் படைத்தவர். துரோகத்தை விரும்பாதவர். சொல்லாலும் செயலாலும் ஒன்றாக இருப்பவர். தன் இஷ்டப்படி நடந்துகொண்டு அனைவரும் உங்களை பின்பற்றவேண்டும் என விரும்புவீர்கள். பணி விசயத்தில் எச்சரிக்கையான நீங்கள் யாரிடமும் ஏமாறாதவர்.

குற்றங்களை உடனே தட்டி கேட்பவர். எந்த செயலை செய்வதற்கு பிறரை எதிர்பார்க்காது நீங்களே முன்னின்று திறமையாகச் செயல்படுபவர். ககந்திர உணர்வு சற்று அதிகமாக இருப்பதால் யாருக்கும் அடிபணிய மாட்டீர்கள். சூடான, சுவையான உணவு பொருள்களை விரும்புபவர். இனி உங்கள் லக்னத்திற்கான தசா புக்தி பலன்கள் மற்றும் பரிகாரங்களைக் காணலாம்.

ss

சூரிய தசை

லக்னாதிபதி சூரியன். இவர் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் கூடும். ஸ்திரபுத்தியுடன் ஜாதகர் எதையும் சமாளிக்கும் நிர்வாகத்திறன் உள்ளவராக இருப்பார். தோல்வி பயம் இல்லாதவர்.

அதேசமயம் கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர் கொள்ளும் வல்லமை உள்ளவர். எந்த திருஷ்டி தோஷமும் உங்களைத் தாக்காது. ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ஒரு கூட்டத்தை வழி நடத்தக்கூடிய நல்ல தகுதிகள் உள்ளவராக இருப்பீர்கள். சுயமுயற்சியில் முன்னேறுவீர்கள். அரசியல், ஆன்மிகம் போன்ற பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார். சுயநலம் குறைவு. தன்னைப்பற்றி உயர்வான சிந்தனை அதிகரிக்கும். மனைவியால் ஆதாயமும் முன்னேற்றமும் உண்டாகும். சகல யோகங்களை அனுபவிக்க கூடியவர். கூட்டுத்தொழில் செய்யும் ஆர்வம் ஏற்படும். பிறரின் புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள். நட்புக்கு மரியாதை தருபவர்கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். சூரியன் பலம் குறைந்து தசை நடத்தினால் கண் பாதிப்பு, தலை சார்ந்த வியாதி உண்டாகும். புகழ், கௌரவம், நிர்வாகத் திறன் மட்டுப்படும்.

பரிகாரம்

லக்னத்தை மேலும் வலிமைப்படுத்த ஞாயிற்றுக்கிழமை சிவ வழிபாடு, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

புதன் தசை

புதன் சிம்ம லக்னத்திற்கு 2, 11-ஆம் அதிபதி. தனம் மற்றும் லாப ஸ்தானாதிபதி. சிம்ம லக்னத் தினருக்கு சூரியன் லக்னாதி பதி. புதன் தன, லாபாதிபதி. சூரியனும், புதனும் இணைந்து நின்றால் நல்ல கல்வி, கேள்வி ஞானம் உண்டு. ஆசிரியர் வகுப்பில் நடத்தும்பொழுதே மனதில் குறிப்பு எடுத்து மூளையில் சேமித்து விடுவார்கள். தூங்கும்பொழுது எழுப்பி கேட்டாலும் சொல்லும் வகையில் ஞாபகம் இருக்கும். புதன் சுப வலுப்பெற்றுத் தசை நடத்தினால் குடும்ப அமைதியும், மகிழச்சியும் நிறைந்தாக இருக்கும். புதன் தன, லாபாதிபதி என்பதால் புதன் எந்த நிலையில் இருந்தாலும் சாதகமான பலன் உண்டு. மறைந்த புதன் நிறைந்த பலன்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும்.வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு புதன் தசை காலங்களில் சுப பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்பவர்கள்கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. உடன்பிறந்தவர்களால் ஆதாயம், அதிர்ஷ்ட பொருள் வரவு உள்ளவர்கள். செல்வாக்கு, சொல்வாக்கு படைத்தவர்கள். கற்ற கல்விமூலம் நிறைந்த வருமானமும் திரண்ட சொத்துகளும் சேரும். சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். இருதார யோகம் நிறைந்தவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பம் அமையும். புதனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தாலும் ஓரளவேனும் சுப பலன்கள் நடக்கும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சூரிய நாராயணரை வழிபடவும்.

சுக்கிர தசை

சிம்ம லக்னத்திற்கு சுக்கிரன் 3, 10-ஆம் அதிபதி. சுக்கிரன் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் தொழில் உத்தியோகத்திற்காக இடம்பெறுவார்கள். இடப்பெயர்ச்சியால் நன்மையும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத் தில் செல்வம் சேரும். கவர்ச்சியான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன்பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். சுக்கிரன் ஆட்சி, உச்சம்பெற்று சுபத்தன்மை பெற்று லக்னம் மற்றும் பத்தாமிடத்தோடு தொடர்புகொள்ள அரசியல், அரசுத் துறையில் பணியாற்றமுடியும். பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சேர்க்கை மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்யும். பத்திரிகை, ஊடகங்கள்மூலம் உலகப்புகழ்பெறுவார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் தகுதி, திறமைக்கு தகுந்த நிரந்தர தொழில், உத்தியோகம் அமையாது. சிலர் உடன்பிறப்பிற்காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளிகள்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை சுக்கிர ஓரையில் கோதுமை தானம் வழங்கவேண்டும்.

செவ்வாய் தசை

சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் 4, 9-ஆம் அதிபதி. செவ்வாய் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் ஜாதகர் தாயிற் சிறந்த கோவில் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்தோடு வாழ்வார்கள். தாயை தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்ப்பார்கள். தந்தை, தந்தைவழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு, மனை யோகம் உண்டு. சிலர் தாய், தந்தையின் வழி குலத்தொழில் நடத்தி ஆதாயம் அடைவார்கள். பண்ணைத் தொழில், ரியல் எஸ்டேட்மூலம் நல்ல வருமானம் உண்டு. நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகசாலியாக இருப் பார்கள். பள்ளி, கல்லூரி நடத்தும் பாக்கியவான் கள். தாய், தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். தன்னை சார்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழி நடத்துபவர்கள். பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குபவர்கள். தன்னுடைய சுய சம்பாத்தியத்தை விட தந்தைவழி சம்பாத்தியத்தையும், சுகபோகத்தையும் அனுபவித்து சுகவாசியாக இருப்பார்கள். ஒரு டிகிரி படித்தபிறகு உயர் கல்விக்கு வெளியூர், வெளிநாடு செல்வார்கள். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். பதவி, புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வராக வாழ்வார்கள். உயர் கல்வி யோகம் உண்டு. செவ்வாய் சிம்மத்திற்கு பாதகாதிபதி என்றாலும் ஏக யோகாதிபதி என்பதால் நின்ற நிலைக்கு ஏற்ப சில பாதகத்தையும் செய்யத் தவறுவதில்லை. இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் தாய், தந்தை மற்றும் தாய், தந்தை வழி உறவுகளின் ஆதரவு, ஆதாயம் குறைவுபடும். பள்ளி, கல்லூரி படிப்பில் தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். சுய ஒழுக்கம் குறையும். குடும்ப கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவார்கள். தந்தை, தந்தைவழி முன்னோர்களுக்கு முறையாக பித்ரு கடன் நீக்காதவர்கள். வில்லங்க சொத்து பங்காளி பகை உண்டு. தாய், தந்தைக்கு நோய் பாதிப்பு உண்டு. கற்ற கல்வியால் பயன் இருக்காது.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை சிவப்புத் திரியினால் நெய் தீபமேற்றி சிவனை வழிபடவும்.

குரு தசை

சிம்ம லக்னத்திற்கு குரு 5, 8-ஆம் அதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. குருவும் 5, 8-ஆமிடமும் பலம் பெற்றால் பிள்ளைகளால் பெருமை பாராட்டு உண்டு. மந்திர உபதேசம், குருவின் நல்லாசிகள் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானம் உண்டு. குருவும் 5, 8-ஆமிடம் பலம் குறைந்தால் கற்ற வித்தை பலன் தராது. பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு, கடன் தொல்லை, தாங்க முடியாமல் தாலியை கழட்டி வீசுகிறார்கள் அல்லது தாலியை அடமானம் வைக்கிறார்கள். அல்லது விபத்து, கண்டம், சர்ஜரி, செய்வினை போன்ற பாதிப்புகள் உண்டாகும். சிலர் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனு பவிப்பார்கள்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை குரு ஓரையில் சித்தர்களை ஜீவசமாதியில் வழிபட வேண்டும்.

சனி தசை

சனி சிம்ம லக்னத்திற்கு 6, 7-ஆம் அதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி மற்றும் மாரகாதிபதி. சிம்ம லக்னத் திற்கு சனி எந்த நிலையில் இருந்தாலும் சிற்பான பலன் தருவதில்லை. சனி, ஆட்சி, உச்சம் பெறாதவரை சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது பழமொழியாக இருந்தாலும் சிம்ம லக்னத் தினர் சனி தசையால் அனுபவிக்கும் இன்னல்கள் அளப்பறியது. லக்னாதிபதி சூரியனுக்கும் தசை, புக்திநாதன் சனிக்கும் சம்பந்தம் உள்ளவர்கள் அனுபவிக்கும் சங்கடங்களை சொல்லி மாளாது. லக்ன வலிமைபெற்ற வெகுசிலர் சினிமா ஹீரோவைப்போல் எதிரிகளை வைத்தே முன்னேறுவார்கள். ஆறாம், ஏழாம் அதிபதி சம்பந்தம் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியால் வஞ்சிக்கப்படுதல் அல்லது மனைவி மற்றும் தாய்மாமன்மூலம் பொருள் இழப்பால் கடன் அவதி இருக்கும். மேலும் திருமணத்தடை, திருமணத்திற்குபிறகு பிரிவு, பிரச்சினை, களத்திர நஷ்டம், நோய், கடன் உள்ள களத்திரம் என மனநிம்மதியற்ற திருமண வாழ்க்கை அமையும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமையும் பிரதோஷமும் இணைந்தநாளில் சிவனுக்கு நல்லெண் ணெயில் 6 மண் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.

சந்திர தசை

சிம்ம லக்னத்திற்கு சந்திரன் விரயாதிபதி என்பதால் வலுக்கக்கூடாது. சந்திரன் பலம் பெற்றால் தேவையற்ற விரயங்கள், வைத்தியச் செலவு இருக்கும். சந்திரன், சனி சம்பந்தம், குரு, சந்திரன் சம்பந்தம் மிகக்கொடூரமான அமைப்பாகும். ஆறாம், எட்டாம் அதிபதி சம்மந்தம் தவறான ஷேர் முதலீடு, அதிர்ஷ்டத்தை வரவழைக்க மாந்தரீகம், சூதாட்டம், கோர்ட் கேஸ் பிரச்சினை, அதிக வட்டிக்கு பணம் வாங்குவதால், வட்டிக்கு வட்டி கட்டி கட்டி தன்னையே மாய்த்துகொள்ளுதல், கடனால் அவமானம், வம்பு, வழக்கு, சிறை தண்டனை போன்ற சூழலை ஏற்படுத்தும். வருமானம் உயர, உயர சுகம் தேடுவதில் அதிக சிந்தனை இருப்பதால் பெரும் முதலீடுள்ள தொழிலில் இருப்பவர்கள் கடுமையான தோல்வியை சந்திக்கிறார்கள். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும்கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றிபெற முடியும். மன சஞ்சலத்தால் இவர்களுக்கு ஆரோக்கிய கேடு அதிகமாகும். பூர்வீகத்தைவிட்டு வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு சற்று குறையும்.

பரிகாரம்

கண் சிகிச்சைக்கு உதவுவது மிகச் சிறப் பாகும். ராகு தசை நடப்பவர்கள் திருவக்கரை வக்ர காளியம்மனை வழிபடவேண்டும். கேது தசை நடப்பவர்கள் ராஜகணபதியை வழிபடவேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406

bala140723
இதையும் படியுங்கள்
Subscribe