சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/siddhardasan-sunderji-jeevanadi-corruption-study-astrologer

தொழிலதிபர் ஒருவர், நாடியில் பலன் கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து. "என்ன காரியமாக பலன் கேட்க வந்துள்ளீர்கள்' என்று கேட்டேன்.

ஐயா, "நான், உணவு, மாவுப்பொருள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றேன். என்னிடம் சுமார் 30 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். சிறிய அளவில் ஆரம்பித்த தொழில், படிப்படியாக உயர்வடைந்தது. கடந்த இரண்டு வருடமாக தொழிலில் நஷ்டம், வருமானம் குறைந்தது. மூலப்பொருள் வாங்க முடியவில்லை. வேலையாட்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியவில்லை. கடன் வாங்கி தொழிலில் போட்டு, கடனும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் இருந்து மீண்டு மறுபடியும் என் தொழில் லாபகரமாக செயல்பட அகத்தியரிடம் வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.

ஜீவநாடி ஒலையை படிக்கத் தொடங்கினேன். ஒலையில் எழுத்து வடிவமாக தோன்றிய அகத்தியர், இவன் வாழ்க்கை தொடக்க நிலையில் இருந்து கூறத் தொடங்கினார்.

aa

இவன் அன்றாடம் சோற்றுக்கே வழி இல்லாத ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். 1

தொழிலதிபர் ஒருவர், நாடியில் பலன் கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து. "என்ன காரியமாக பலன் கேட்க வந்துள்ளீர்கள்' என்று கேட்டேன்.

ஐயா, "நான், உணவு, மாவுப்பொருள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றேன். என்னிடம் சுமார் 30 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். சிறிய அளவில் ஆரம்பித்த தொழில், படிப்படியாக உயர்வடைந்தது. கடந்த இரண்டு வருடமாக தொழிலில் நஷ்டம், வருமானம் குறைந்தது. மூலப்பொருள் வாங்க முடியவில்லை. வேலையாட்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியவில்லை. கடன் வாங்கி தொழிலில் போட்டு, கடனும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் இருந்து மீண்டு மறுபடியும் என் தொழில் லாபகரமாக செயல்பட அகத்தியரிடம் வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.

ஜீவநாடி ஒலையை படிக்கத் தொடங்கினேன். ஒலையில் எழுத்து வடிவமாக தோன்றிய அகத்தியர், இவன் வாழ்க்கை தொடக்க நிலையில் இருந்து கூறத் தொடங்கினார்.

aa

இவன் அன்றாடம் சோற்றுக்கே வழி இல்லாத ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். 12 வயதில் இவன் உறவி னர் ஒருவன், இவனை ஓரிடத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டான். நன்கு உழைத்தான். தொழிலையும், அதில் உள்ள சூட்சுமத்தையும் நன்கு தெரிந்து கொண்டான. தன்னுடைய 30 வயதில் திருமணம் செய்துகொண்டான்.

இவன் மனைவியின் உறவினர் ஒருவருடன் கூட்டுசேர்ந்து, சிறிய அளவில் தனியாக தொழில் செய்யத் தொடங்கினான்.

இவனின் உழைப்பினாலும், தொழில் அனுபவத்தாலும், மனைவியின் அதிர்ஷ்டத்தால் தொழில் வளர்ந்தது. உயர்ந்த நிலையை வாழ்வில் அடைந்தான்.

தொழில் விருத்தி அடைந்து, பணம் சேர்ந்ததும், பணத்திமிரும் வந்தது. புதிது, புதிதாக நண்பர்கள் சேர்ந்தார்கள். நண்பர்களுடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்றுவந்தான். இவன் செலவில்தான். தொழிலைக் கவனிக்கத் தவறினான். வருமானம் குறையத் தொடங்கியது.

தொழிலில் உண்டான நஷ்டம் தீர, கடவுள் வழிபாடு, பூஜை, யாகம், தானம், தர்மம் செய்தால், இந்த நிலை நீங்கி, மறுபடியும் தொழில் மேன்மை அடையும். வருமானம் கூடும் என்று ஜோதிடர்கள் சொன்னதைக்கேட்டு கையில் கிடைக்கும் பணத்துடன், கடன் வாங்கி, கோவில் திருப்பணி, குருமடம், பீடம் இவற்றுக்கு பலவிதமான தானம், தர்மங்களை செய்தான்.

தொழிலை கவனித்து செய்யாததால், மூலப்பொருள் தந்த விவசாயிகளுக்கு, பணம் தரமுடியவில்லை. இதனால் மூலப்பொருள் யாரும் தரவில்லை. வேலைக்காரர்களுக்கு சம்பளம் தராததால், அவர்கள் வேலைக்கு வராமல் நின்றுவிட்டார்கள். கூடா நட்பு இவனுக்கு கேடாய் முடிந்தது, கடவுளை நம்பி கையிலுள்ள காசு, பணம், சொத்து, தொழில் என அனைத்தையும் இழந்த நிலையில், என்னை நாடி, தேடிவந்துள்ளான். அகத்தியன் யான் கூறிய அனைத்தும் உண்மைதானா? என்று இவனைக்கேள்.

உங்கள் இளம் வயதுமுதல், இன்றுவரை, உங்கள் வாழ்க்கையைப் பற்றி அகத்தியர், கூறினாரே இவையெல்லாம் உண்மையா? என்று கேட்டேன். "ஆமாம் ஐயா, உண்மைதான். சோற்றுக்கே வழி இல்லாமல் இருந்தேன். என் உழைப்பால் உயர்ந்தேன். அவ்வப்போது, என் மனைவி கூறிய அறிவுரையையும் அலட்சியம் செய்தúன். மடாதிபதிகள், ஜோதிடர்கள், மற்ற நண்பர்கள் பேச்சைக்கேட்டு, கடவுளை நம்பி அலைந்தேன். இன்று அனைத்தையும் இழந்தேன். என் தொழில் வீழ்ச்சி அடைந்ததற் கும், நான் கடனாளியாக இருப்பதற்கும், உண்டான காரணத்தை அறிந்துகொண்டேன். இனி அகத்தியர் கூறும் வழியை கடைபிடித்து வாழ்வேன்'' என்றார்.

ஓலையை தொடர்ந்து படித்தேன். இவன் தன் வாழ்வில் உயர்வடைந்ததற்கும் வீழ்ச்சியடைந்ததற்கும், உண்மையான காரணத்தை, தன் சுய அறிவால் சிந்தித்து, தெரிந்து, தெளிவடைந்துவிட்டான். தன்னையும் அறிந்து கொண்டான். இனிவரும் வாழ்வில், நான் சொல்வதைப்போல், நடைமுறை வாழ்வில் தொழிலிலும், குடும்பத்திலும் கடைபிடித்து வாழச்சொல். மறுபடியும் தொழிலில் உயர்வை அடைவான், இழந்த செல்வத்தை திரும்பப் பெறுவான்.

இவன் மறுபடியும் தொழில் செய்ய பணம் தேவை. இவன் மனைவி இவனுக்கே தெரியாமல் பணம் சேமித்து வைத்துள்ளாள். அவளிடம் அந்தப் பணத்தை வாங்கி தொழிலுக்கு அவளை முதலாளியாக்கி, நிர்வாகத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, இவனை தொழிலாளியாக உழைக்கச் சொல். மனைவியின யோகம் மறுபடியும் செயல்படும். செல்வம் சேரும். தொழில் உயர்வை அடைவதற்கு இன்னும் பல வழிமுறைகளை கூறினார்.

இந்த பூமியில் ஒரு சொத்து, பணம் இவற்றை யார் அனுபவிக்க வேண்டும் என்று விதி உள்ளதோ, அவர்கள் அனுபவித்தால், அந்த சொத்து, பணம் குறையாது; அழியாது. அனுபவிக்க வேண்டியவர் அனுபவிக்காமல், அந்த பணத்தை பிறர் அனுபவித்தால் சொத்து, பணம் அழியும்; விருத்தி உண்டாகாது. இவன் சம்பாதிக்கும் பணத்தை இவன் மனைவி குழந்தைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்பதுதான் விதி. மற்றவர்கள், ஆன்மிக செயல்கள், தானம், தர்மம் செய்தால் மறுபடியும் செல்வம் அழியும். புரிந்துகொள்ளச் சொல் என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியதைக் கேட்ட அவர், இனி அகத்தியர் கூறிய வழிமுறைகளை கடைபிடித்து வாழ்வேன் என்று கூறிவிட்டு, மனக்கலகத்துடன் வந்தவர் மனக் களிப்புடன் என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.

செல்: 99441 13267

bala010923
இதையும் படியுங்கள்
Subscribe