சுமார் 60 வயதுடைய அம்மையார் ஒருவர், 32 வயதுடைய தன் மகளுடன் நாடியில் பலன் கேட்க வந்தார்.
"இவள் எனது மகள். மூன்று வருடங்களுக்கு முன்பு, என் கணவர் இறந்துவிட்டார். இவளைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. இவள் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது. நிறைய வரன்கள் வந்து பெண் பார்த்துச் சென்றனர்.
எதுவும் சரியாக அமையவில்லை. இவள் திருமணத் தடைக்குக் காரணத்தையும், யார் மாப்பிள்ளை, எப்போது திருமணம் நடைபெறும் என்பதையும் அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.
"இந்த மகளின் திருமணத் தடைக்கு பாவ- சாபமோ, கிரகங்களோ காரண மில்லை. இந்த தாயின் ஆச்சார, அனுஷ் டான, சாஸ்திரக் கொள்கைகளும், குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவமும் தான் காரணம். இவளின் ஆச்சாரம்
சுமார் 60 வயதுடைய அம்மையார் ஒருவர், 32 வயதுடைய தன் மகளுடன் நாடியில் பலன் கேட்க வந்தார்.
"இவள் எனது மகள். மூன்று வருடங்களுக்கு முன்பு, என் கணவர் இறந்துவிட்டார். இவளைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. இவள் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது. நிறைய வரன்கள் வந்து பெண் பார்த்துச் சென்றனர்.
எதுவும் சரியாக அமையவில்லை. இவள் திருமணத் தடைக்குக் காரணத்தையும், யார் மாப்பிள்ளை, எப்போது திருமணம் நடைபெறும் என்பதையும் அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.
"இந்த மகளின் திருமணத் தடைக்கு பாவ- சாபமோ, கிரகங்களோ காரண மில்லை. இந்த தாயின் ஆச்சார, அனுஷ் டான, சாஸ்திரக் கொள்கைகளும், குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவமும் தான் காரணம். இவளின் ஆச்சாரம் வந்த வரனையெல்லாம் தடுத்தது. மேலும் இவள் குடும்பத்தினைச் சேர்ந்த ஒருவரின் எண்ணமும், ஆசையும்தான் காரணம். விவரமாகக் கூறுகிறேன்; மகளின் விதியை அறிந்து திருமணத்தை செய்யச் சொல்.
இந்த தாயுடன் பிறந்த அண்ணன்கள் இரண்டுபேர். இவள் குடும்பத்தினர் ஆச்சாரம், அனுஷ்டானங்களை முறையாகக் கடைப்பிடித்து வாழவேண்டும்; எந்தச் சூழ்நிலையிலும், இதிலிருந்து தவறக்கூடாதென்று கட்டுப்பாடுடன் வாழ்பவர்கள். இவளின் மூத்த சகோதரனால், குடும்பத்தில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்தது.
மூத்த சகோதரன் நன்கு படித்து, அரசாங்கத் தில் உயர்ந்த பதவி வகித்தான். அவன் தன்னுடன் பணிபுரிந்த வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். இதனால் இவன் குடும்பத்தினர், "குடும்ப கௌரவமும், கடைப்பிடித்த ஆச்சார மும், பாதித்தது; பாவம் செய்துவிட்டான்' என்று கூறி, அவனுடன் எந்த உறவும், தொடர்பும் இல்லையென்று கூறி ஒதுக்கி வைத்துவிட்டார்கள். அவன் திருமணம் செய்த ஒருவருட காலத்தில் வெளிநாட்டில் வேலை கிடைத்து, குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டான். அவனுடன் முழுமையாக குடும்ப உறவு அறுந்துவிட்டது. இந்த தலைமகன் தன் பெற்றவர்கள் மரணத்திற்குக்கூட வரவில்லை.
இவள் அண்ணனின் மனைவி, "தன்னைத் திருமணம் செய்துகொண்டதால்தான் கணவன் தனது குடும்பத்தையும், உறவுகளையும் பிரிந்து வாழ்கிறான். மறுபடியும் கணவனை அவன் குடும்பத்து உறவுகளுடன் சேர்த்துவைக்க வேண்டும்; இதற்கு சரியான வழி தன் மகளுக்கு கணவனின் உறவிலேயே பெண் பார்த்துத் திருமணம் செய்து வைப்பதுதான்' என்றெண்ணி, இதனைத் தன் கணவனிடம் கூறி அவன் சம்மதத்தையும் பெற்றுவிட்டாள்.
37 வயதான தன் மகனுக்கு, உயர்ந்த பதவி, அந்தஸ்திலுள்ள எத்தனையோ பெரிய மனிதர்கள் பெண் கொடுக்கிறேன் என்று வரன் கேட்டுவந்தபோதும் அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் எண்ணம் நிறைவேறும் என்று உறுதியாக உள்ளாள்.
இந்தப் பிறவியில் இவள் மகளுக்கு, இவளின் அண்ணன் மகன்தான் கணவனாக அமைய வேண்டும் என்பது விதி. மதம், சாதிவெறியை விட்டு, மனித நேயத்துடனும், ஆச்சார, சாஸ்திர கொள்கையைவிட்டு, அன்புடன், அனைவரையும் நேசிக்கும் குணத்தையும்கொண்டு வாழ்வில் செயல்படச் சொல். அண்ணன் மகனுக்கு, மகளைத் திருமணம் செய்துவைத்து, மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளச் சொல். இல்லையெல் இவள் மகள் கன்னியாகவே வாழ்ந்து முடிக்கவேண்டும். இவள் மகள் வாழ்க்கையை இவளே தீர்மானிக்கட்டும்.''
"அண்ணன் குடும்பத்துடன் உறவு அறுந்து, எவ்வளவோ வருடங் களாகிவிட்டன. இப்போது அவர்களை எங்கே சென்று சந்திப்பேன்?'' என்றார் அந்த அம்மையார்.
"அண்ணனுடன் இவள் குடும்பத்தினருக்கு உறவில்லாவிட்டாலும், இவளின் உறவினர்களில் பலரும், நண்பர்களும் அவனுடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறார்கள். இவளின் முக்கியமான உறவினர் ஒருவர் வீட்டில், விரைவில் ஒரு திருமணம் நடைபெறவுள்ளது.
அந்த திருமணத்திற்கு இவள் அண்ணன் தன் குடும்பத்தினருடன் வருவான். அந்தத் திருமணத்திற்கு இவளையும் தன் மகளுடன் போகச்சொல்.
அண்ணன் மனைவியும், அண்ணனும் இவளைத் தேடிவந்து பேசுவார்கள். மகளின் திருமணம் அங்கேயே நிச்சயமாகும். பிரிந்த குடும்ப உறவுகள் இணையும்'' என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.
அந்த அம்மையார், "அகத்தியர் கூறியபடியே. அனைத்தையும் செய்து மகள் திருமணத்தை நடத்தி முடிக்கிறேன்'' என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
சாதி, மதம், ஆச்சாரம், அனுஷ்டா னம் போன்றவற்றால் விதியைத் தடுக்கமுடியாது. ஒருவரின் வாழ்வில் எது எப்படி நடக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அது மாற்றமில்லாமல், நடக்கவேண்டிய முறையில் நடந்தே தீரும் என்பதை நானும் புரிந்து கொண்டேன்.
செல்: 99441 13267