சனி கிரகத்தின் பாதிப்பி-ருந்து தப்பிக்க சித்தர் ஒருவர் கூறிய எளிய பரிகாரத்தை இங்கு காணலாம்.
பச்சரிசியை நன்கு பொடிசெய்து அதை ஒரு கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, பின்னர் விநாயகரை வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும். அதன் பின் கையிலுள்ள அரிசியைத் தரை யில் போடவேண்டும். அதை எறும்பு கள் எடுத்துச் செல்லும். அப்படி எடுத்துச் சென்றால் நமது பாவங் களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவிலென்றால் அது கூடுதல் சிறப்பு. சனிக்கிழமைகளில் இதைச் செய்யவேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் மழைக்காலத்துக்காக சேமித்து வைத்துக்கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கொருமுறை சனி கிரக நிலை மாறும்.
அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உண வாகப் போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட் டால் 108 ஏழை கள் சாப்பிட்ட தற்கு சமம். இதன்மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையி-ருந்து தப்பிக்கலாம்.
ஒருவருக்கு சனிதசை வந்துவிட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்திவிடுவார். யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டார் கள். அஷ்டமத்துச் சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மைச் சேர்ந்த உறவினர் கள்மூலம் பிரச்சினைகளை உருவாக்கிவிடும். இதற்கு செய்யவேண்டிய பரிகாரம் வருமாறு:
தேவையில்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். சுவையான உணவுகளைத் தவிர்க்கவேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்கவேண்டும். எது நடந்தாலும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும். சனிக் கிழமைகளில் எள்ளெண் ணெய் தீபமேற்றுவது அவசி யம். மனநலம் குன்றியவர் களுக்கு உதவுவது நன்று. பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது.
சனி தசை நடக்கும்போது எந்த செயலும் தாமத மாகும். அதற்காகக் கோபப் படக் கூடாது. பொறுமை யாக இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும். இப்படி நம்மை மாற்றிக்கொண்டால் சனி பாதிப்பி-ருந்து சற்று தப்பிக்கலாம்.
தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு அகல்விளக்கில் நல்லெண்ணையில் தீபமேற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்துவரலாம்.
வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வழிபடவும்.
சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
தினமும் விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடலாம்.
அனுமன் வழிபாடு சனிபகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் காலபைரவரை வணங்கி வரலாம். தேய்விறை அஷ்டமி நாளில் காலபைரவரை வணங்கலாம்.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம். கோமாதா பூஜை நன்று.
ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். சனிப் பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. அன்னதானத் திற்கு உதவி செய்யலாம்.
சித்தர்களின் ஜீவசமாதி பீடங்களுக்குச் சென்று வழிபடலாம்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்கவேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகிவிடும்.
பிரதோஷ காலத்தில் சிவ பெருமானுக்கு வில்வ இலை சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
தினமும் ராமநாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிருந்து தப்பிக்கலாம்.
லக்னத்தில் சனி அமர்ந்து உட-ல் அபரி மிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்குப் பரிகாரமாக சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இலவசமாகக் கொடுக்கலாம்.
சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள்ளெண்ணெய் தேய்த்தல் கூடாது.
சனி மூன்றில் இருந்தால்- வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணிகளை இருக்கச் செய்யவும்.
சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு ( தானியம்) தானம் செய்யலாம்.
சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில் செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
சனி 6-ல் இருந்தால்- 40-க்குமேல் 48 வயதிற்குட்பட்ட காலத்தில் வீடுகட்டுதல் கூடாது.
சனி 7-ல் இருந்தால்- கருப்புநிறப் பசுவுக்குப் புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாச-ல் பூமியினுள் மூடிவைப்பதுவும் போதுமானது.
சனி 8-ல் இருந்தால்- கல்-ல் அல்லது மரப் பலகை நாற்கா-யில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாலைக் கலந்து குளித்தல் சிறப் பானது.
சனி 9-ல் இருந்தால்- வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
சனி 10-ல் இருந்தால்-பார்வையில்லாதோர் பத்து பேருக்கு உங்களால் இயன்ற தானம் செய்யலாம்.
சனி 11-ல் இருந்தால்- வீட்டை நீண்டநாள் பூட்டிச்செல்லும்போது வீட்டு வாசலில், சிறு குடத்தில் தண்ணீரை வைத்துச்செல்வது தீமையை அகற்றும்.
சனி 12-ல் இருந்தால்- வீட்டின் கடைசி இருட்டறையில் பன்னிரண்டு பாதாம் பருப்பை கறுப்புத் துணியில் முடிந்து வைப்பது நன்மைதரும்.
ஏழரைச்சனி நீங்கும்போது அந்த ராசிக் காரர்கள் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டிலுள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணையைத் தலையில் வைத்துக் குளிப்பது சிறப்பு.
குலதெய்வ வழிபாடு செய்தபின்பு சிவதரிசனம் செய்யவேண்டும். இயன்றவர்கள் நவகிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
பசுவுக்கு அகத்திக்கீரை தருவது மிகவும் சிறப்பு.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர் களையும், தெரிந்தே பாவங்கள் செய்பவர்களை யும், அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் தண்டிக்காமல் விட மாட்டார். சிலசமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும்பொழுது, "சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்' என்று புலம்புவதுண்டு. அது கடந்த ஜென்மத்துப் பாவங்களின் தொடர்ச்சி யாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்தால் சனியின் தாக்கம் குறையுமென்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழு தும் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார், அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை எவராலும் தாங்கமுடியா தென்பதால்தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டிருக் கிறார் என்பது ஐதீகம்.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனி, ஜாதகத்தில் சனிதசை நடக்கும்போது கெடுபலன்கள் நடக்க வாய்ப்புண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்கவேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனியன்றும் ஆஞ்சனேயர் கோவிலுக்குச் சென்று நெய்தீபமேற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ வைத்துத் தூங்கி, விடிந்தபின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்கவேண்டும். சனிபகவான் கால் ஊனமுற்றவர் ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிரன்னம் அளிப்பது மிகவும் நல்லது.
கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
செல்: 98425 50844