பெரும் பணவரவைத் தரப்போகும் சனி வகரகதி பலன்கள்! - பண்டிதர் பச்சை ராஜென்

/idhalgal/balajothidam/shani-vakarakati-benefits-will-give-you-huge-income-pandit-pacha-rajen

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் சனீஸ்வரர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்து வருகிறார்.

ஒன்பது கிரகங்களில் தொழில், வியாபாரம், வேலைக்கான ஆதிபத்தியம் பெற்ற கிரகம் சனி ஆகும்.

வான மண்டலத்தின் ஒரே ராஜா சூரியன் மட்டுமே. உலக அதிசயங்களிலேயே முதல் அதிசயம் சூரியன் மட்டுமே. காலையில் நிறைகிறார்; மாலையில் மறைகிறார்.

சூரியனுக்குள் எரிந்துகொண்டிருக்கும் மாயசக்திப் பொருள் எது?

இதை மட்டுமே பார்க்கிறோம் சற்று யோசித்துப் பாருங்கள்.

இந்த பூமி உருவானதிலிருந்து ஒரே மாதிரி எரிந்துகொண்டே இருக்கிறது. எந்த சக்தியால் எரிந்துகொண்டே இருக்கிறது? எதனால் அக்னியாக எரிந்துகொண்டே இருக்கிறது?

இதற்குள் அணையாத எரிபொருளாக அக்னியாக எரிந்துகொண்டே இருக்கும் பொருள் எது? அதுவும் சிறிதுகூட குறையாமல் அக்னியாக எரிந்துகொண்டே இருக்கும் மாய சக்திப் பொருள் எது?

இதற்கான விடை- பதில் கிடைக்குமா? இது சாதாரண அதிசயமா! ஏதோ எரிகிறதென்று, கடந்து போய்க்கொண்டு, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிக்கொண்டு, இன விருத்தி செய்துகொண்டு, மிருகங்கள் போல அல்லவா வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோம்.

நமது முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும், தங்களது மன தவத்தால், நாம் யார் நான் யார் என்று சிந்தீத்து, கடுமையான விரதம், தியான மிருந்து இதற்கான விடையைக் கண்டு பிடித்தே தீருவது என்ற உறுதியான மனதுடன் இருந்தே நமக்குப் பல ஓலைச் சுவடிகளைக் கொடுத்துச்சென்றுள் ளார்கள்.

ss

சூரிய அக்னியால் பாதிக்கப்படும் சனீஸ்வரர் அறிவுப்பூர்வமான ஆராட்சி பதில்கள்

கும்ப ராசியில் சனீஸ்வரர் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். கும்ப ராசியிலிருந்து ஐந்தாம் ராசியான மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும்போது சூரியனின் அக்னியின் வெப்பம் தாங்கமுடியாத நிலையில் சனீஸ்வரர் தனது சக்தியை, பலத்தை இழந்துவிடுகிறார். வான மண்டலத் தின் ஓட்டத்தால் சனீஸ்வரர் பின்தங்கி விடுகிறார். பின்னோக்கிச் செல்கிறார்.

இதனையே சனீஸ்வரர் வக்ரகதி என்கிறோம்.

சூரியன் மிதுன ராசிமுதல் ஐந்தாம் துலா ராசிக்கு வரும்வரையுள்ள 140 நாட்கள்- அதாவது சனீஸ்வரர் சஞ்சரிக்கும் கும்ப ராசியிலிருந்து ஐந்தாம் ராசியான மிதுனம் முதல் ஒன்பதாம் ராசியான துலா ராசிவரை சூரியன் சஞ்சாரம் செய்யும்வரை, சூரியனின் அக்னி வெப்பம் தாக்குவதால் சனீஸ்வரர் பலமிழக்கிறார். தன்நிலையில் கெட்டுப்போகிறார். தனது இயல்பான பலன்களை 12 ராசிகளுக்கும் கொடுக்க இயலாத நிலையில் பலமிழந்து விடுகிறார். வக்ரம் என்றால் கோபமாகும். அதாவது கோபத்தில் சனீஸ்வரர் இந்த 140 நாட்களும் 12 ராசிக்கான பலன்களைக் கொடுப்பார்.

கோபக்கார சனீஸ்வரர்

கோபக்காரனுக்கு புத்தி மட்டு என்று நமது முன்னோர்கள் சொல்லிவைத்து உள்ளார்கள்.

கோபக்கார சனீஸ்வரர் 12 ராசி களுக்கான பலன்களை எப்படி வழங்குவார் என்பதனைப் பார்ப்போம்.

இதனைப் படித்து முடித்தவுடன் உங்களுக்குப் புரியும். சனீஸ்வரரின் வக்ரகதிப் பலன்கள் எவ்வளவு முக்கியமானது என்று!

வானத்து நிகழ்வையும் நமது முன்னோர் கள், சித்தர்கள் எப்படி எதனை வைத்து கண்டுபிடித்தார்கள்? கண்களை மூடி அவர்களை பிரார்த்தனை செய்வது ஒன்றே நம்மால் முடியும்.

மேஷம்

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் கும்ப ராசியில் சனீஸ்வரர் வக்ரகதி நிலையை அடைகிறார்.

மேஷ ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆமிடம் கும்ப ராசி பாதக ஸ்தானமாகும். கும்ப ராசி ஆதிபதி சனீஸ்வரர் பாதகாதிபதி ஆவார்.

இதனால் நீங்கள் பிறக்கும் ஜாதகத்தில் மேஷ ராசிக்கு எத்தனையாவது ஸ்தானத்தில் இருக்கிறாரோ, அந்த ஸ்தானத் தின் ஆதிபத்தியத்தைக் கெடுத்துவிடுவார்.

கிரகங்கள் வக்ரம் என்பது கோபம் கொள்வதாகும். கோபம் உள்ளவருக்கு புத்தி குழப்பமாகி பலமிழந்து விடுவார்கள்.

இதன்படி சனீஸ்வரர் பலமிழந்து விடுகிறார்.

இதனால் இந்த 140 நாட்களில் முதல் 51 நாட்கள் மிகவும் சிறப்பான நாட்களாகும். அதாவது 29-6-2024 முதல் 18-8-2024 வரையுள்ள நாட்களில் நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி வெற்றி பெறலாம்.

மிகவும் முக்கியமாக வீடு, மனை, சுகம், சொத்து சம்பந்தப்பட்ட கடன் பிரச்சினைகளும், உடலில் நோய் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வரும் அத்தனை பிரச்சினைகளும் திடீரென்று மாயமந்திரம்போல, அதிரடியாக நல்லது எல்லாம் நடக்கப்போகிறது. சனீஸ்வரருக்கும், குருபகவானுக்கும் தொடர்ந்து அபிஷேகம் செய்து மாலை அணிவித்து நேசித்து விரதமிருந்து, தொல்லை கொடுத்து வரும் அத்தனை கடன் பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, வீடு, மனை, சம்பந்த கோர்ட் வழக்கு பிரச்சினையிலிருந்து முழுமையாக வெளியே வாருங்கள்.

இரண்டுமுறை திருப்பதி சென்று ஒருநாள் முழுவதும் தங்கியிருந்து பெருமாளிடம் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை இந்த 51 நாட்களில் மாற்றம் ஆகியே தீரும்.

வரும் 18-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள், வீடு, வேலை, வெளிநாடு, வெளியூர், வியாபாரம் என்று அனைத்திலும் விரயம், மாற்றம் ஏற்படும் கிரகநிலை உள்ளதால், இந்த நாட்களில் புதிய ஆரம்பம், புதிய தொழில், புதிய இடமாற்றத்தை தள்ளித் தள்ளிப்போடுவது சிறப்பைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு சனீஸ்வரர் யோககாரர் ஆவார்; பாக்கியராதிபதி, தொழிலதிபதி ஆவார்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் வக்ரம் என்ற வெறுப்பு மற்றும் கோபத்திற்கு ஆளாகி, ஆத்திரக்காரனாக்கு புத்தி மட்டு என்ற நிலையில், பாவமிழந்த நிலையில் பின்நோக்கிச்சென்று பலன்களைக் கொடுக்க இருக

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் சனீஸ்வரர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்து வருகிறார்.

ஒன்பது கிரகங்களில் தொழில், வியாபாரம், வேலைக்கான ஆதிபத்தியம் பெற்ற கிரகம் சனி ஆகும்.

வான மண்டலத்தின் ஒரே ராஜா சூரியன் மட்டுமே. உலக அதிசயங்களிலேயே முதல் அதிசயம் சூரியன் மட்டுமே. காலையில் நிறைகிறார்; மாலையில் மறைகிறார்.

சூரியனுக்குள் எரிந்துகொண்டிருக்கும் மாயசக்திப் பொருள் எது?

இதை மட்டுமே பார்க்கிறோம் சற்று யோசித்துப் பாருங்கள்.

இந்த பூமி உருவானதிலிருந்து ஒரே மாதிரி எரிந்துகொண்டே இருக்கிறது. எந்த சக்தியால் எரிந்துகொண்டே இருக்கிறது? எதனால் அக்னியாக எரிந்துகொண்டே இருக்கிறது?

இதற்குள் அணையாத எரிபொருளாக அக்னியாக எரிந்துகொண்டே இருக்கும் பொருள் எது? அதுவும் சிறிதுகூட குறையாமல் அக்னியாக எரிந்துகொண்டே இருக்கும் மாய சக்திப் பொருள் எது?

இதற்கான விடை- பதில் கிடைக்குமா? இது சாதாரண அதிசயமா! ஏதோ எரிகிறதென்று, கடந்து போய்க்கொண்டு, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிக்கொண்டு, இன விருத்தி செய்துகொண்டு, மிருகங்கள் போல அல்லவா வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோம்.

நமது முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும், தங்களது மன தவத்தால், நாம் யார் நான் யார் என்று சிந்தீத்து, கடுமையான விரதம், தியான மிருந்து இதற்கான விடையைக் கண்டு பிடித்தே தீருவது என்ற உறுதியான மனதுடன் இருந்தே நமக்குப் பல ஓலைச் சுவடிகளைக் கொடுத்துச்சென்றுள் ளார்கள்.

ss

சூரிய அக்னியால் பாதிக்கப்படும் சனீஸ்வரர் அறிவுப்பூர்வமான ஆராட்சி பதில்கள்

கும்ப ராசியில் சனீஸ்வரர் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். கும்ப ராசியிலிருந்து ஐந்தாம் ராசியான மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும்போது சூரியனின் அக்னியின் வெப்பம் தாங்கமுடியாத நிலையில் சனீஸ்வரர் தனது சக்தியை, பலத்தை இழந்துவிடுகிறார். வான மண்டலத் தின் ஓட்டத்தால் சனீஸ்வரர் பின்தங்கி விடுகிறார். பின்னோக்கிச் செல்கிறார்.

இதனையே சனீஸ்வரர் வக்ரகதி என்கிறோம்.

சூரியன் மிதுன ராசிமுதல் ஐந்தாம் துலா ராசிக்கு வரும்வரையுள்ள 140 நாட்கள்- அதாவது சனீஸ்வரர் சஞ்சரிக்கும் கும்ப ராசியிலிருந்து ஐந்தாம் ராசியான மிதுனம் முதல் ஒன்பதாம் ராசியான துலா ராசிவரை சூரியன் சஞ்சாரம் செய்யும்வரை, சூரியனின் அக்னி வெப்பம் தாக்குவதால் சனீஸ்வரர் பலமிழக்கிறார். தன்நிலையில் கெட்டுப்போகிறார். தனது இயல்பான பலன்களை 12 ராசிகளுக்கும் கொடுக்க இயலாத நிலையில் பலமிழந்து விடுகிறார். வக்ரம் என்றால் கோபமாகும். அதாவது கோபத்தில் சனீஸ்வரர் இந்த 140 நாட்களும் 12 ராசிக்கான பலன்களைக் கொடுப்பார்.

கோபக்கார சனீஸ்வரர்

கோபக்காரனுக்கு புத்தி மட்டு என்று நமது முன்னோர்கள் சொல்லிவைத்து உள்ளார்கள்.

கோபக்கார சனீஸ்வரர் 12 ராசி களுக்கான பலன்களை எப்படி வழங்குவார் என்பதனைப் பார்ப்போம்.

இதனைப் படித்து முடித்தவுடன் உங்களுக்குப் புரியும். சனீஸ்வரரின் வக்ரகதிப் பலன்கள் எவ்வளவு முக்கியமானது என்று!

வானத்து நிகழ்வையும் நமது முன்னோர் கள், சித்தர்கள் எப்படி எதனை வைத்து கண்டுபிடித்தார்கள்? கண்களை மூடி அவர்களை பிரார்த்தனை செய்வது ஒன்றே நம்மால் முடியும்.

மேஷம்

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் கும்ப ராசியில் சனீஸ்வரர் வக்ரகதி நிலையை அடைகிறார்.

மேஷ ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆமிடம் கும்ப ராசி பாதக ஸ்தானமாகும். கும்ப ராசி ஆதிபதி சனீஸ்வரர் பாதகாதிபதி ஆவார்.

இதனால் நீங்கள் பிறக்கும் ஜாதகத்தில் மேஷ ராசிக்கு எத்தனையாவது ஸ்தானத்தில் இருக்கிறாரோ, அந்த ஸ்தானத் தின் ஆதிபத்தியத்தைக் கெடுத்துவிடுவார்.

கிரகங்கள் வக்ரம் என்பது கோபம் கொள்வதாகும். கோபம் உள்ளவருக்கு புத்தி குழப்பமாகி பலமிழந்து விடுவார்கள்.

இதன்படி சனீஸ்வரர் பலமிழந்து விடுகிறார்.

இதனால் இந்த 140 நாட்களில் முதல் 51 நாட்கள் மிகவும் சிறப்பான நாட்களாகும். அதாவது 29-6-2024 முதல் 18-8-2024 வரையுள்ள நாட்களில் நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி வெற்றி பெறலாம்.

மிகவும் முக்கியமாக வீடு, மனை, சுகம், சொத்து சம்பந்தப்பட்ட கடன் பிரச்சினைகளும், உடலில் நோய் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வரும் அத்தனை பிரச்சினைகளும் திடீரென்று மாயமந்திரம்போல, அதிரடியாக நல்லது எல்லாம் நடக்கப்போகிறது. சனீஸ்வரருக்கும், குருபகவானுக்கும் தொடர்ந்து அபிஷேகம் செய்து மாலை அணிவித்து நேசித்து விரதமிருந்து, தொல்லை கொடுத்து வரும் அத்தனை கடன் பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, வீடு, மனை, சம்பந்த கோர்ட் வழக்கு பிரச்சினையிலிருந்து முழுமையாக வெளியே வாருங்கள்.

இரண்டுமுறை திருப்பதி சென்று ஒருநாள் முழுவதும் தங்கியிருந்து பெருமாளிடம் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை இந்த 51 நாட்களில் மாற்றம் ஆகியே தீரும்.

வரும் 18-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள், வீடு, வேலை, வெளிநாடு, வெளியூர், வியாபாரம் என்று அனைத்திலும் விரயம், மாற்றம் ஏற்படும் கிரகநிலை உள்ளதால், இந்த நாட்களில் புதிய ஆரம்பம், புதிய தொழில், புதிய இடமாற்றத்தை தள்ளித் தள்ளிப்போடுவது சிறப்பைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு சனீஸ்வரர் யோககாரர் ஆவார்; பாக்கியராதிபதி, தொழிலதிபதி ஆவார்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் வக்ரம் என்ற வெறுப்பு மற்றும் கோபத்திற்கு ஆளாகி, ஆத்திரக்காரனாக்கு புத்தி மட்டு என்ற நிலையில், பாவமிழந்த நிலையில் பின்நோக்கிச்சென்று பலன்களைக் கொடுக்க இருக்கிறார்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கிய பலன்களை 51 நாட்களுக்குப் பிறகுதான் வழங்கவார். அதாவது வரும் 18-8-2024 வரை இயல்பாக, எளிதாக நடந்துவந்த தொழில், வியாபாரம், வேலைகளில் புரிந்துகொள்ளமுடியாத வகைகளில் தடை, தாமதம் உண்டாகி, பண வருமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் வேலையை சனீஸ்வரர் தனது வக்ரகதி புத்தியால் செய்வார்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதே செய்ய வேண்டியவர்களே பகைபோல பேசுவார்கள். நண்பர்கள், மேலதிகாரிகள், பணியாட்கள், கணவர்- மனைவிக்குள்ளும் எதிர்பாராத வெறுப்பு, பேச்சு, கோபம், அவமானத்தை கிரகநிலை ஏற்படுத்தும். இது அவர்கள் செய்யவில்லை; அவர்களை சனீஸ்வரர் வக்ரகதியால் அப்படி பேச வைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும்.

இந்த காலங்களில் மிகவும் வேண்டியவர்கள் மற்றும் கணவன்- மனைவிக்குள் பேச்சுக்குப் பேச்சு என்று பேசும் நிலையைக் கடந்து, மௌன சாமி நிலையில் நீங்கள் இருந்து வாருங்கள். இதுவும் 51 நாட்களில் கடந்து போகும் என்பதை உணருங்கள்.

சனீஸ்வரர் கோவிலில் வெண்ணெய் சாற்றி 18 நிமிடம் கண்களை மூடி நன்றி சொல்லி வாருங்கள். இந்த 51 நாளும் யோகமாக மாறும்.

89 நாட்கள் மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம் சிறப்பு

வரும் 18-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு யோகமான காலமாகும். வேலையில், வியாபாரத்தில், சுயதொழிலிருந்து வந்த தடைகள், தாமதங்கள் எல்லாம் விலகும்.

ஒரு சிலருக்கு கடல் கடந்து வெளிநாடுகளிலிருந்து வேலை, வியாபாரம், தொழில் வாய்ப்புகள் தேடிவரும். ஒரு சிலருக்கு செய்துவரும் வேலையில், தொழிலில் வியாபாரத்தில் இடமாற்றம், பதவி மாற்றம், வெளியூர் மாற்றத் திற்கான கிரகநிலைகள் உள்ளது. கடனுக்காக வீடு, மனையை விற்க நினைத்தும் விற்காமல் இருந்து வந்தது. இந்த 89 நாட்களில் முயற்சி செய்தால் தகுந்த விலைக்கு விற்று மன நிம்மதி பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்கியாதிபதியும் யோகாதிபதியும் சனீஸ்வரர் ஆவார். நல்லதே செய்ய கடமைப்பட்டவர்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் சனீஸ்வரர் பலமிழந்து கோபமாகி வக்ரநிலையில் பின்நோக்கிச் செல்கிறார்.

வரும் 18-8-2024 வரையுள்ள 51 நாட்கள் குருபகவானின் நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்வதால், தாமதமாகிக் கொண்டே இருந்துவரும் திருமணம் மங்களகரமான முடிவுக்கு வந்துசேரும்.

வீடு, கட்டடம் சம்பந்த கடை, வியாபாரம், தொழில், ரியல் எஸ்டேட் செய்து வருபவர்களுக்கு இந்த 51 நாட்கள் எதிர்பாராத பெரிய பண வருமானத்தைக் கொடுக்கும்.

பூமி சம்பந்த விவசாயம், மணல், கல், மலை, தோட்டம், தொழில் செய்வருபவர்களுக்கும், அரசாங்கம், அரசியல் சம்பந்த வேலை, தொழில், வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கும், பெரும் வாய்ப்புகள் தேடிவந்து பண வருமானத்தைப் பெருக்கும்.

அப்பா தொழிலை, சொத்துகளை மகன் நடத்தும் கிரகநிலை

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள், சனீஸ்வரர் வக்ரகதியில் இருந்தாலும், மிதுன ராசிக்காரர்களுக்கு யோகத்தை மட்டுமே கொடுக்க கடமைப்பட்டவர்.

இந்த 89 நாட்களில், மிகவும் தாமதமாகி, தள்ளித்தள்ளிப் போய் கடைசியில் பெரும் அதிர்ஷ்ட பணவரவைக் கொடுப்பார்.

சனீஸ்வரர் ராகுபகவானின் நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராகு நீர் ராசியான மீன ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

பாக்கிய ஸ்தானாதிபதி, கர்ம ஸ்தானாதிபதி சஞ்சார சாரத்தில் சஞ்சரிப்பதால்- மிதுன ராசிக்காரர்களில் ஒருசிலர் தகப்பனார் சிறப்பான ஆலை, தொழில், வியாபாரம், விவசாயம் செய்தாலும், தான் அப்பாவைவிட வேறு தொழிலில் சாதித்தே தீருவேன். என்று, இதுவரை இருந்து வந்தவர்களை இந்த 89 நாட்களில் வக்ர சனீஸ்வரர் இனி முழுமையாக அப்பா செய்து வந்த தொழிலை, வியாபாரத்தை தொழிற்சாலையை, அரசாங்கம், அரசியலை சிறப்பாக்கித் தருவார்.

கடக ராசிக்கு சனீஸ்வரர் தான் கணவன்- மனைவி என்ற களஸ்திர ஸ்தானாதி பதியும் அவரே. அஷ்ட ஸ்தானம் என்ற கஷ்டம, நஷ்டம ஸ்தானத்திற்கும் அவர்தான் அதிபதி.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனீஸ்வரர் நல்லவரா, கெட்டவரா? கூட இருந்தே குறைகளைத் திருத்தும் பாசமானவர். குறைகளை சொல்லி நம்மைத் திருத்துவதால் அவருக்கு, கெட்டவர் என்று பெயர் கொடுத்து விடுகிறோம்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் வானத்து சுற்றுப்புற சூழ்நிலையால் பலமிழந்து கோபமாகி பின்னோக்கிச் செல்கிறார்.

இதனால், கடக ராசிக்கு கெட்டவர் என்று பெயர் வைத்து உள்ளவர், பலமிழந்து கெட்டுப் போய்விடுகிறார். இதனால் உங்களுக்கு யோகம்தானே.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதிப்படி யோகங்கள் வந்துசேரும். வியாபாரத்தில், தொழிலில் பெரிய அளவில் பணவரவை, பெரும் வாய்ப்புகள் மூலம் பெறப்போகிறீர்கள்.

முதல் 59 நாட்கள் யோகம்!

சென்ற 29-6-2024 முதல் வரும் 18-8-2024 வரையுள்ள 51 நாட்கள், இதுவரை இல்லாத புதிய புதிய வாய்ப்புகள், வசதிகள், பதவிகள், பெருமைகள் உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக தேடிவந்த படிப்பு, வேலையில் பதவி உயர்வு, அரசாங்கத்தில் சலுகை, வியாபாரத்தில் இருந்து வந்த மோசமான கடன் தொல்லை, வேலைக்கு ஆள் இல்லாத நிலை, செய்து வந்த தொழிற்சாலையை, விவசாயத்தை கட்டடத் தொழிலை செய்யலாமா வேண்டாமா என்று இருந்துவரும் மனநிலை வரும் 18-8-2024-க்குள் மாறப்போகிறது. துவண்டுபோய் இருந்துவர்கள் துள்ளி குதித்து வேலையை, வியாபாரத்தை, தொழிலை செய்யப்போகிறீர்கள்.

அடுத்த 89 நாட்கள் நிதானம்தான் சிறப்பு!

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். இடமாற்றம், வெளியூர், வெளிநாடு, வியாபாரம், தொழில், வேலை மாற்ற சிந்தனை வரும் நாட்கள். புதிதாக எதையும் செய்யாமல், ஆரம்பிக்காமல் தள்ளித் தள்ளிப் போட்டு வருவதே சிறந்த புத்திப் பரிகாரமாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு கணவர்- மனைவி ஸ்தானம் என்ற களத்திர ஸ்தானாதிபதியும் சனீஸ்வரர்தான். கடன், பகை, நோய் என்ற சத்ரு ஸ்தானாதிபதியும் சனீஸ்வரர்தான்.

சிம்ம ராசிக்கு சனீஸ்வரர் நல்லவரா! கெட்டவரா! உங்கள்மீது மிகுந்த அக்கறை யுள்ள கணவனும் அவர்தான்; மனைவி யும் அவர்தான். ஒருவர்மீது அக்கறை, பாசம் இருப்பதால் அவர்களைத் திருத்தி அடுத்த நிலைக்கு உங்களைக் கொண்டுபோவதற்காக, உங்களிட மிருந்து எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லத மனநிலையில், உங்களிடம் உள்ள குறைகளைச் சொல்லி, உங்கள் கூடவே இருந்துகொண்டு உங்களைத் திருத்தப் பார்ப்பார்கள்.

நாமோ, சிங்கம் காட்டுக்கே ராஜா; குறை சொன்னாலே நமக்கு கோபம் வரும்! அதனால் நமது குறையைச் சொல்லிக்காட்டுபவர் பகைதானே, எதிரிதானே, கெட்டவர்தானே!

சிம்ம ராசிக்கு கெட்டவரான சனீஸ்வரர் சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 ஆகிய 140 நாட்கள் பலமிழந்து வக்ரகதி நிலையில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

கணவர் அல்லது மனைவிக்கு மருத்துவச் செலவுகள், கடன் பிரச்சினைகள்

சென்ற 29-6-2024 முதல் வரும் 18-8-2024 வரையுள்ள 51 நாட்கள் மிகுந்த யோகமான நாட்களாகும். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சொத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் பிரச்சினை, வேலையில் பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, வியாபாரத்தில் பிரச்சினை, சொந்த தொழில் பிரச்சினை, பகையால் கோர்டில் வம்பு வழக்கு, பிள்ளைகளால் மன வேதனை, தாமதமாகி வரும் திருமணம், வெளியூர், வெளிநாடு வாய்ப்புகள் என்று கடந்த இரண்டு வருடங்களாக தள்ளித்தள்ளிப் போய் மனவேதனையை- மனக்கவலையை ஏற்படுத்திய அத்தனையும், இந்த 51 நாட்களில் யோகமான மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது.

நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கப் போகிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். தானாக எதுவும் நடக்காது. முயற்சிகளை இந்த 51 நாட்களில் முழுமையாக செய்யுங்கள்.

கொடுத்த பணம் வரவே வராது என்று முடிவு செய்த பணமும் உங்களிடம் வந்து சேரும். சலுகை பணமும், சொத்துகள்மூலம் வரவேண்டிய பணமும் வந்துசேரும். சனீஸ்வரர் கோவிலுக்கு ஒன்பது நாட்கள் பணிந்து சாமி கும்பிட்டு வாருங்கள்.

அடுத்து வரும் 19-8-2024 முதல் 15-11-2024 ஆகிய 89 நாட்கள் புதிதாக எந்த ஆரம்ப, தொடக்கம் செய்வதைத் தள்ளிப்போடுங்கள். எந்த சூழ்நிலையிலும் பொறுமையாக, நிதானமான செயல்படுங்கள். யோகமாக மாறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனீஸ்வரர் யோகக்காரர் ஆவார். பூர்வபுண்ணிய, புத்தி, புத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியும் இவர்தான்.

அதே நேரத்தில், பகை, கடன், நோயை அழிக்க புதிய புதிய முயற்சிகளைக் கொடுக்கும் சத்ரு ஸ்தானாதிபதியும் இவரே!

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் சனீஸ்வரர் பலமிழந்து கோபமாகி வக்ரகதி நிலைக்கு ஆளாகிறார்.

கோபக்கரனுக்கு புத்தி மட்டு என்பது நமது முன்னோர்கள் பழமொழி. இந்த நிலை சனீஸ்வரருக்கு வரும் 15-11-2024 வரை நடந்துவருகிறது.

இதனால் தற்போது கன்னி ராசிக்காரர் களுக்கு கடந்த 29-6-2024 முதலே காரணம் இல்லாமலேயே புத்தியில் கோபம் கோபமாக வருவதைப் பார்ப்பீர்கள்.

கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் பொறுமையானவர்கள், அவர்களுக்கும் இந்த 140 நாட்கள் கோபம் கோபமாக வரும்.

மகன், மகளுக்கு சிறிய சிறிய மருத்துவச் செலவுகள்

இந்த காலங்களில் மகன் அல்லது மகளின் மனநிலைகளில் சிந்தனைகளை கிரகநிலைகள் கொடுக்கும்.

வெளிப்படையாகப் பேசி வந்த மகன், மகள்கூட மௌன சாமியார்போல் பேசுவார்கள். ஒரு சிலரின் மகன் அல்லது மகளுக்கு ரத்தம் சம்பந்த குறைபாட்டால் மருத்துவச்செலவுகள் வந்து விலகும். வரும் 18-8-2024 வரையுள்ள 51 நாட்கள் மகன், மகளுக்கு தகுந்தபடியே பேசி வருவது என்று புத்திப் பரிகாரம் செய்வது சிறப்பு.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை குரு தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று 24 நிமிடம் கண்களைமூடி கிழக்கு நோக்கி அமர்ந்து பிரச்சினைகள் முடிவுக்கு வந்தது போல பாவனையாக நினைத்து, ஆனந்தமாக இறைவனுக்கு நன்றி சொல்லி வாருங்கள். அனைத்தும் அதிசயமாக மாறி வருவதை உணர்வீர்கள்.

பதவி உயர்வு, திருமண முடிவு, பணவரவு

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள் சனீஸ்வரர், ராகு பகவான் நட்சத்திர சாரத்தில் நீர் ராசியான மீனத்தில் சஞ்சாரம் செய்கிறார்.

இந்த நாட்களில் செய்துவரும் வேலை, தொழில், வியாபாரம், குடும்பம், கடன் பிரச்சினைகள் அனைத்தும் யோகமாக மாறும். இடமாற்றம், பதவி மாற்றம், வீடு மாற்றம் ஏற்படும்.

துலாம்

சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற துலா ராசிக்கு சனீஸ்வரர் நண்பன்; யோகக்காரர் ஆவார்.

சொத்து சுக ஸ்தானாதிபதியும் இவரே! பூர்வபுண்ணியம், புத்தி, புத்திரன், புத்திரிக்கும் இவரே ஆதிபத்தியம்.

ஐந்தாம் இடமான கும்ப ராசியில் சனீஸ்வரர், கடந்த 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் வானத்தில் ஏற்படும் சுற்றுப்புற நிலையில் சனீஸ்வரர் பலமிழந்து, கோபம் அதிகமாகி, பின்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

"கோபக்கானுக்கு புக்தி மட்டு' என்பார்கள்.

உங்களின் துலா ராசிக்கு சுகம், சொத்து ஸ்தானத்தில் சனீஸ்வரர் பலமிழப்பதால், வரும் 18-8-2024 வரை படபடவென்று பணம் வந்தது கூட, கடந்த 29-6-2024 முதல் தடை தாமதங்களைப் பெற்று வருவீர்கள்.

புத்தி, புத்திர, புத்திரி ஸ்தானத்தில்- அதாவது சனீஸ்வரர் நடத்தி வருவதால் துலா ராசிக்காரர்களில் ஒரு சிலரின் மகன் அல்லது மகளின் மனமாற்றத்தால், மனவேதனை, கவலைகள் வந்து சேர்ந்திருக்கும். இதற்கு வக்ரகதி சனீஸ்வரர்தான் காரணம் என்பதனை உணருங்கள்.

மகன் அல்லது மகள் குணமறிந்து, அவர்களுக்கு மனநிலை அறிந்து வழிகாட்டுங் கள், இந்த காலங்களில் அவர்களின் பேச்சுக்குப் பேச்சு, நீதிக்கு நீதி என்பதைச் செய்யாதீர்கள்.

மகன் அல்லது மகளை தொடர்ந்து குடும்பத்துடன் ஐந்து வெள்ளிக்கிழமை சிவன்- அம்மன் கோவிலுக்குச் சென்று மனம் விட்டுப் பேசி வாருங்கள். குலதெய்வம் உங்களுடன் இருந்து நல்லவைகளையே நடத்துவார்.

வரும் 89 நாட்கள் யோகம்

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரை உள்ள 89 நாட்கள் சனீஸ்வரர் நீர் ராசியான மீன ராசியில் சஞ்சாரம் செய்யும்- ராகுபகவான் நட்சத்திர ஸ்தானத் தில் சஞ்சரிக்க போவதால். மகன் அல்லது மகள் சம்பந்த படிப்பு, வேலை, திருமணம் சம்பந்த முயற்சிகளில் இருந்து வருபவர்களுக்கு நீங்கள் நினைத்துபடியே, வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை, வியாபாரம், திருமண யோகம் வந்துசேரும். 10 சனிக்கிழமைகளில் நாகராஜா வுக்கு பாலாபிஷேகம் செய்து வாருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனீஸ்வரர் கெட்டவர் என்று உடனே சொல்லிவிட முடியாது. ஏனென்றால், சுகத்தைக் கொடுத்து மனதுக்கு ஆனந்தத்தைக் கொடுக்க கடமைப்பட்டவரும் அவரேதான்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்களுக்கு சனீஸ்வரர் கும்ப ராசியில் பலமிழந்து கோபமாகி, வக்ரகதி நிலையில் சஞ்சாரம் செய்து வருகிறார்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 18-8-2024 வரையுள்ள 51 நாட்கள் சொத்து, சுகம், வீடு, மனை மற்றும் குடல், மூட்டு, முதுகுத் தண்டு வரை சம்பந்தமாக இருந்துவரும் பிரச்சினைகளுக்கு, தெளிவான தீர்வு, நிவர்த்தி கிடைக்கக்கூடிய நாட்களாகும். வீடு, மனைமீது உள்ள கடனால் விற்கமுடியாமல் இருந்து வருபவர்கள் இந்த 51 நாட்களில் முழுமையான முயற்சிகளைச் செய்தால் நல்ல விலைக்கு விற்று முழு கடனிலிருந்து நிம்மதி பெறுவீர்கள்.

மகன் அல்லது மகளின் மனமாற்றத்தால்...

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள் சனீஸ்வரர், ராகுபகவானின் நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராகுபகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார்.

இதனால் விருச்சிக ராசிக்காரர்களின் மகன் அல்லது மகளின் வெளிநாட்டுப் படிப்பு, வேலைக்காக முயற்சிகளைச் செய்துவருபவர்கள் வரும் 15-11-2024-க்குப் பிறகு முயற்சிகள் செய்வது சிறப்பைத் தரும்.

வரும் 19-8-2024-க்குப் பிறகு 89 நாட்கள் விருச்சிக ராசிக்காரர்கள் மனதில், பெருமையும், அறியாமையும் நிறையும். இதனால் பேச்சில் வெறுப்பும் கோபமும் இருந்துவரும்.

இந்த நாட்களில் தினமும் இருவேளை களில் நெய்தீபத்தைப் பார்த்தப்படி 18 நிமிடங்கள் கண்களைத் திறந்தபடி தியானத் தில் இருந்து வருவது சிறப்பைத் தரும்.

விருச்சிக ராசியில் ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம், வெளியூர், வெளிநாடு மாற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகளிலிருந்து வருபவர்கள் கீரை வகைகள் சாப்பிட்டு வருவது மருத்துவச் செலவுகளைக் குறைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு தனம், வாக்கு, குடும்பத்தைக் கொடுக்க கடமைப்பட்டவரே சனீஸ்வரர்தான். மனதை தள்ளித் தள்ளிப் போடவைத்து சோம்பேறி குணத்தைக் கொடுப்பவரும் அவரேதான். நல்ல நண்பரே பகையுமாகி விடுகிறார்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் சனீஸ்வரர் கும்ப ராசியில் பலமிழந்து, வக்ரகதியில் சஞ்சாரம் செய்து வருகிறார்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 18-8-2024 வரையுள்ள 5 நாட்கள் மிகமிக சிறப்பான வாய்ப்புகளையும், மாற்றங்களையும் ஏற்றங் களையும் கொடுக்க இருக்கிறார்.

கிரகநிலை சாதகமாக இருப்பதையறிந்து புதிய புதிய முயற்சிகளை இந்த 51 நாட்களில் செய்யுங்கள், கைமேல் பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். யோகமான 51 நாட்கள். மனம் என்ற மூன்றாம் ஸ்தானத்திலிருந்து சனீஸ்வரர். குருபகவானின் நட்சத்திர சாரத்தில் நடத்தி வருவதால்- தனுசு ராசிக்காரர்களின் மனநிலை, கடந்த இருபது நாட்களாக மனபாரம் குறைந்து சிறிது சுதந்திரமாக, தைரியமாக இருப்பதை உணர்ந்து வருவீர்கள்.

கடன்காரரா- பார்த்துக்கொள்ளலாம்; கோர்ட், வழக்கா- பார்த்துக்கொள்ளாம் என்ற அளவில் மனதில் ஓர் தெளிவு, துணிவு, தெனாவட்டு வந்திருக்கும்.

இந்த 51 நாட்களும் நீங்கள் கணிப்பது எல்லாம் சரியாகவே இருக்கும். குழப்பம், பயம் வேண்டாம். படிப்பு, தொழில், வேலை, வியாபாரம், வீடு, மனை, வாகனம், திருமணம் என்று தள்ளித் தள்ளிப் போட்டு வந்து அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு செயல்படுங்கள். புதிய புதிய முயற்சிகள் இந்த காலங்களில் துணிந்து செய்யுங்கள். யோகமான காலம்.

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள் புதிய புதிய முயற்சிகள், தொடங்குங்கள் செய்வதை தள்ளித் தள்ளிப்போட்டு 15-11-2024-க்குப் பிறகு செயல்படுங்கள்; சிறப்பைத் தரும்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனீஸ்வரர்; நீதி நேர்மைக்கும் ஆதிபத்தியம் அவரே! புழு, பூச்சி களை உருவாக்கும் சாக்கடைத் தொழிலுக்கும் அவரே ஆதிபத்தி யம். மகர ராசிக்காரர்களிடம் இதுவே குணமாக அமைந்திருப் பதைக் காணமுடியும்.

மகர ராசிக்காரர்கள் பிளாட் பாரத்தில் படுத்திருப்பதையும் பஞ்சு மெத்தையில் படுத்திருப்பதையும் ஒரே மாதிரி நினைக்கும் பிரம்மஞானிகள் ஆவார்கள்.

கிரகங்கள் குணங்களாக மாற்றமாகி மனித வாழ்க்கையை நடத்துகிறது.

இது எனது 30 வருட ஜோதிட ஆராய்ச்சியில் நான் உணர்ந்தறிந்த ஜோதிடப் படிப்பாகும்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் சனீஸ்வரர் பலமிழந்து, அதனால் ஏற்பட்ட கோபத்தால், வக்ரகதிக்குத் தள்ளப்பட்டு, மற்ற கிரகங்களின் ஓடும் போட்டியில் பின்நோக்கி தளர்ந்து சஞ்சாரம் செய்கிறார்.

முதல் 51 நாட்களில் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுங்கள்

சென்ற 29-6-2024 முதல் வரும் 18-8-2024 வரையுள்ள 51 நாட்கள் மகர ராசியில் மகன் அல்லது மகள், பயணம், வீடு மாற்றம், வெளியூர் மாற்றம், வெளிநாடு மாற்றம், பதவி மாற்றம், வீடு, நிலம் விற்பனை, அரசாங்கப் பதவி, சலுகைகளில் பிரச்சினை என்று இருந்துவரும் கிரகநிலை சஞ்சாரம் ஆகும்.

ஒரு சிலரின் மகன் அல்லது மகள் மனதில் தேவையில்லாத வேண்டாதவர் களின் சகவாசம் வந்துசேரும். வெளிப்படைத் தன்மை குறையும்.

கடல் கடந்த பயணம்

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள், மகர ராசிக்காரர் களுக்கு சுற்றுலா பயணமோ, தெய்வீகப் பயணமோ, படிப்பு, வேலைக்கான பயணமோ, சொந்த ஊர், சொந்த நாடு பயணமோ நடந்தே தீரும் கிரகநிலை உள்ளது.

ஒரு சிலருக்கு, ஆனந்தமாக குடும்பத்தினருடன், தெய்வீகப் பயணம், கடல் கடந்த நாடுகளுக்கு மகிழ்ச்சியாக அமைந்தே தீரும். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த 81 நாட்களில் பணமும் பல வழிகளில் வந்துசேரும். செய்துவரும் வேலை, வியாபாரம், தொழிலில் மன நிம்மதியுடன் ஈடுபடும் கிரகநிலையை வக்ர சனீஸ்வரர் கொடுத்தே தீருவார்.

கும்பம்

நிறைகுடமான கும்ப ராசிக்காரர்களுக்கு சனீஸ்வரர்தான் ராசியின் அதிபதி. எதிலும் நிறைவே காணும் மனநிலை, எதிலும் சாதனைக்காரராக வாழவேண்டும் என்ற பிடிவாதம், உழைப்பு, முயற்சி சனீஸ்வரர் குணமாகும்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள் சனீஸ்வரர் தன் பலமிழந்து, கோபமாகி வக்ரகதிக்கு ஆளாகி பின்னோக்கி சஞ்சாரம் செய்யகிறார். இந்த 140 நாட்களும் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகுந்த யோகமான காலமாகும். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சென்ற 29-6-2024 முதல் 18-8-2024 வரையுள்ள 51 நாட்கள் வீடு, மனை, சொத்து, உடல் ஆரோக்கியம், சுகம், சொந்தம் ஆகியவற்றில் இருந்து வரும்- இரண்டு வருடமாக முடிவுக்கு வராமல் இருந்துவந்த கடன் பிரச்சினை, வீடு, மனை விற்கும் பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, வேலையில் பிரச்சினை, வியாபாரம், தொழிலில் பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும்.

ஒரு சிலருக்கு தெய்வத்தின் அருளால் அதிசயம் நடந்ததுபோல எதிர்பாராத ஓர் புதிய நபரின் அறிமுகத்தால், தீர்வும் தெளிவும் பெற்றே தீருவீர்கள்.

பயணம், இடமாற்றம், பணவரவு

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும் யோகத்தைக் கொடுக்கும் காலமாகும்.

ஜென்மச் சனியின் பாதிப்பி-ருந்து கும்ப ராசிக்காரர்கள் இந்த 89 நாட்கள் முழுமையாக விடுதலை பெற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நீர் ராசியான மீன ராசியில் சஞ்சரித்து வரும் ராகு நட்சத்திர சாரத்தில் 89 நாட்கள் கும்ப ராசி அதிபதி சனீஸ்வரர் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வரும் கடன் தொல்லை விலகும். செய்துவரும் வேலையில் பதவி உயர்வு, வெளியூர், வெளிநாடு மாற்றம், வியாபாரத்தில் மாற்றம், செய்துவரும் தொழிலில் இருந்து வந்த சிக்கல், வேலையாட்கள் பிரச்சினை விலகும்; பணம் பெருகும்.

மீனம்

மீன ராசிக்கு சனீஸ்வரர் லாபத்தைக் கொடுக்க வேண்டியவரும் அவரே; விரயத்தைக் கொடுக்கவேண்டியவரும் அவரே! மீன ராசிக்கு நல்ல நண்பர்.

சென்ற 29-6-2024 முதல் வரும் 15-11-2024 வரையுள்ள 140 நாட்கள், சனீஸ்வரர் பலம் குறைந்து பலவீனமாகி, இதனால் கோபமாடைந்து, வக்ரகதி நிலைக்கு ஆளாகி பின்னோக்கிச் செல்கிறார்.

விரய ஸ்தானமான கும்ப ராசியிலேயே 140 நாட்கள் வக்ரகதி நிலையை அடைவதால், மீன ராசிக்காரர்களுக்கு முதல் 51 நாட்கள் சுபவிரயங்களையே முழுமையாகக் கொடுப்பார். அதாவது சென்ற 29-6-2024 முதல் வரும் 18-8-2024 வரையுள்ள 51 நாட்கள், குரு மங்கள யோகத்தில் சனியின் சஞ்சாரம் அமைகிறது.

மீன ராசிக்காரர்களுக்கு வீடு மாற்றம், வீடு கட்டுவது, வீடு வாங்குவது மனை வாங்குவது, போன்ற பூமி சம்பந்தமான யோகமான மாற்றங்கள் நடக்க இருக்கிறது. இளைய சகோதரர் உதவியால் பூர்வீக சொத்து வந்துசேரும்.

வியாபாரம் பெருகும்; வேலையில் வெளிநாடு!

வரும் 19-8-2024 முதல் 15-11-2024 வரையுள்ள 89 நாட்கள் தொழில், வேலை, வியாபாரம், மார்க்கெட்டிங், சுயதொழில், ரியல் எஸ்டேட், கலை, சினிமா, பத்திரிகை போன்ற பணவரவுத் தொழில்கள் மூலமும், அரசியல், அரசாங்கம், வெளிநாடு தொடர்புடைய பெரும் நிறுவனங் களில் வேலையில் இருப்போருக்கும்- இந்த 89 நாட்கள் சிறப்பான வாய்ப்புகளையும் பெருத்த பணவரவையும் கொடுக்கப்போகும் பொன்னான, காலமாகும்.

மீன ராசிக்காரர்களில் பெரும்பாலோர், கடல் கடந்த வெளிநாட்டுத் தொடர்புடைய வேலை, வியாபாரம், தொழில், மார்க்கெட்டிங் அமைந்தவர்களாக இருப்பீர்கள். வெளிநாட்டுப் பணமே பெரும் மாத வருமானமாக வந்து சேரும்.

ஒரு சிலருக்கு லாட்டரியில் பணம் கிடைத்ததுபோல, உழைக்காத பணவரவு இந்த 89 நாட்களில் ராகு பகவான் கொடுத்ú தீருவார்.

மீன ராசிக்காரர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகளும், புதிய பெரிய பதவிகளுக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணமும் கிடைத்து பெரும் பணவரவையும் நிறைவாகப் பெறுவீர்கள்.

bala020824
இதையும் படியுங்கள்
Subscribe