குப்பையில் இருந்தவனையும் கோடீஸ்வரனாக்கப் போகும் சனி -ராகு பரிவர்த்தனை! - நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/shani-rahu-exchange-will-make-person-who-was-garbage-millionaire-satirical

னி ராகுவின்

நட்சத்திரமான சதயத்திலும்,

ராகு சனியின்

நட்சத்திரமான உத்திரட்டாதியிலும்

நட்சத்திரப் பரிவர்த்தனை ஆகி

பல குடும்பத்தை படுத்தப்போகிறார்...

"நீ சொல்ற நல்லது

பலிக்குதோ இல்லையோ...

100 சதவிகிதம் கெட்டது பலிக்குதய்யா...

உன் திருவாய மூடுங்க

நையாண்டிச் சித்தரே...

ஏற்கெனவே

குத்துயிரும்

கொலையுயிருமா கெடக்கேன்...

ஏன் சாமி...?

எரியுற நெருப்பில

எண்ணெய்ய ஊத்திவிடுறீங்க...'

ss

அடே... நான்

பாசிட்டிவ்வாகப் பேசும்

தன்னம்பிக்கைப் பேச்சாளர் அல்ல...

நல்வாக்கு கொடுக்கும்

சாமியாடியும் அல்ல...

உன் சோகத்தைக் கேட்டு

ஆறுதல் சொல்லும்

நண்பனும் நானல்லவே...!

மருத்துவரிடம் செல்வது

நோயைக் கண்டறிந்து

மருத்துவம் பார்த்து

குணமடையதானே!

ஜோசியரிடம் கெட்ட நேரம்

தெரிந்துகொண்டால்தான்

னி ராகுவின்

நட்சத்திரமான சதயத்திலும்,

ராகு சனியின்

நட்சத்திரமான உத்திரட்டாதியிலும்

நட்சத்திரப் பரிவர்த்தனை ஆகி

பல குடும்பத்தை படுத்தப்போகிறார்...

"நீ சொல்ற நல்லது

பலிக்குதோ இல்லையோ...

100 சதவிகிதம் கெட்டது பலிக்குதய்யா...

உன் திருவாய மூடுங்க

நையாண்டிச் சித்தரே...

ஏற்கெனவே

குத்துயிரும்

கொலையுயிருமா கெடக்கேன்...

ஏன் சாமி...?

எரியுற நெருப்பில

எண்ணெய்ய ஊத்திவிடுறீங்க...'

ss

அடே... நான்

பாசிட்டிவ்வாகப் பேசும்

தன்னம்பிக்கைப் பேச்சாளர் அல்ல...

நல்வாக்கு கொடுக்கும்

சாமியாடியும் அல்ல...

உன் சோகத்தைக் கேட்டு

ஆறுதல் சொல்லும்

நண்பனும் நானல்லவே...!

மருத்துவரிடம் செல்வது

நோயைக் கண்டறிந்து

மருத்துவம் பார்த்து

குணமடையதானே!

ஜோசியரிடம் கெட்ட நேரம்

தெரிந்துகொண்டால்தான்

நீ தப்பிக்கமுடியும்.

நான் வாக்கு கொடுக்கும் பித்தனல்ல

உன்னை வாழவைக்க நினைக்கும்

நையாண்டிச் சித்தனடா...

நன்றாகக் கேள்...

காலமறித்து செயல்பட்டால்தான்

காலத்தைக் கடந்து வாழமுடியும்

கெட்ட நேரம் என்றவுடன்

பிறந்ததிலிருந்து

இப்படியேதான் சொல்றீங்கன்னு

சலிக்காதடா...

கஷ்டமில்லா

கவலையில்லா மனிதன்

இங்கே இன்னும்

படைக்கப்படவில்லையடா...

இனி எந்த முடிவும் எடுக்காத...

எந்த முடிவுக்கும் வராத...

வேகமா போன மச்சான்

திரும்பி வந்த கதையாகிடும்...

அக்டோபர் 3 முதல்

சதயச் சனி டிசம்பர் 27 வரை...

எல்லாம் இழுபறியா போகுமடா...

வக்ர சனியால் நவம்பர் 14 வரை v ஒரே விஷயத்தை

ஒன்பது முறை செய்யவேண்டி வரும்...

வருடப் பெயர்ச்சி கிரகங்களான

குரு, சனி, ராகு வக்ரத்தில்

உக்ர பலனாய் சுழன்று

நம்மை சுழற்றிவிடப் போகிறார்கள்..

மூவர் கூட்டணி அமைத்து

மூச்சுமுட்டச் செய்வார்கள்!

சுழலில் மாட்டி

காணாமல் போய்விடாதே...

எல்லாதையும் சுருட்டி வையடா

சுதந்திரமாய் வாழடா...

கமிட்மென்டுக்குள் சென்றால்

கதறி அழுவாய்...

தை பிறந்தால் வழி பிறக்கும்...

கரும்பு கிடைக்கப் போகிறது...

அதற்குள் அவசரப்பட்டு

இரும்பு அடிவாங்காதே...

நீதிமன்றம் போனாலும்

நீதி கிடைக்காதடா...

அநீதியே வெல்லும்

அற்ப காலமடா...

குரு, மிருகசீரிஷமான

செவ்வாய் நட்சத்திரம் போனால்

செவ்வாய், புனர்பூசம் குரு நட்சத்திரப்

பரிவர்த்தனை ஆகிறார்...

குரு, செவ்வாய் யோகியான

லக்னக்காரனுக்கு லக்கோ லக்கு...

பாதகாதிபதி, மாரகாதிபதி,

ஆறு, எட்டு அதிபதியாய்

குருவும், செவ்வாயும் ஆகி

பரிவர்த்தனைப் பெற்று பலமான

லக்னக்காரன் பலவீனமாவான்...

அக்டோபர் 29 முதல்

நவம்பர் 14 வரை...

செவ்வாய் பூசத்திற்கு வரும் நேரம்

நம்ம எல்லாருக்கும் பூஜைதான்டி...

குரு செவ்வாய் சாரம்

செவ்வாய் சனி சாரம்

சனி ராகு சாரம்

ராகு சனி சாரம்

குருவும் சனியும் வக்ரமாய்

அசுபப் பார்வை பெற்று

அசுபப் பலனைக் கொட்டுவார்கள்...

கெட்டது நடந்தால் புத்தி வரும்னு

சொல்லும் புத்திசாலியைக்கூட

முட்டாளாக்கப் போகிறார்கள்...

செவ்வாய் பூசத்திலே வந்து வக்ரம்

டிசம்பர் 7 முதல் ஜனவரி 12 வரை...

தலைதீபாவளி வெடிச்சதுபோல

தலைப் பொங்கலும் கசக்கும்..

கவலைப்படாதே கண்ணா...

கல்யாணம் பண்ணவே கஷ்டபட்டவனுக்கு...

இனிப்பு பட்டாசும் சாதனைப் பொங்கலும்

இந்த வருடம்தான்... ஜமாய் ஜமாய்...

சூரியனும் ஐப்பசி, கார்த்திகையில்...

சித்திரைச் செவ்வாய்,

சுவாதி ராகு,

விசாக குரு,

அனுஷ சனி

அத்தனையும் அசுபப் பார்வை...

வக்ரத்தில் ஒண்ணோடு ஒண்ணு கலந்து

கும்மாளம்போட்டு குப்புறக் கவுத்தப் போறாங்க...v உசாரய்யா... உசாரு...

பிறந்த ஜாதகத்தில்

கன்னி, மீனம் வீட்டில்

குரு, செவ்வாய்,

சனி, ராகு, கேது இருப்பவன்

அடுத்து என்ன

செய்யலாம்னு தெரியாமல்

செக்கு மாடா சுத்திவருவான்...

குரு, செவ்வாய், சனி, ராகுவின்

கலந்த தசாபுக்தி நடப்பவனுக்கு...

அதாவது செவ்வாய் தசை சனி புக்தி

சனி தசை ராகு புக்தி என

பாவர் கலப்பு தசாபுக்தியானால்...

கோபுரத்தில் இருப்பவனையும்

குப்பைக்குக் கொண்டு வரும்...

சுய ஜாதகத்தில் பாவகிரகம்

வக்ரம்பெற்று தசாபுக்தி நடந்தால்

குடிசையில் இப்பவனையும்

கோடீஸ்வரனாக்குமப்பா...

திடீர் அதிர்ஷ்டத்தால்

திக்குமுக்காடப் போற...

செல்: 9600353748

bala111024
இதையும் படியுங்கள்
Subscribe