கடன் இல்லாத வாழ்க்கையை நாமும் வாழத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் என்னசெய்வது, அக்கடன் வாங்கக்கூடாது என்று நினைத்தால் கூட தவிர்க்கமுடியாத சில பணத்தேவைகளுக்காக கடன் வாங்கிவிடுகிறோம்.
கடன் வாங்கியபிறகு அதனை அடைக்கமுடியாமல் அவதிப்படுகிறோம். மேலும், சில வீடுகளில் கடன் குறையாமல் அதிகரித்துகொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் என்பதே இருக்காது. எனவே, கடனை தீர்க்கக்கூடிய பல
கடன் இல்லாத வாழ்க்கையை நாமும் வாழத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் என்னசெய்வது, அக்கடன் வாங்கக்கூடாது என்று நினைத்தால் கூட தவிர்க்கமுடியாத சில பணத்தேவைகளுக்காக கடன் வாங்கிவிடுகிறோம்.
கடன் வாங்கியபிறகு அதனை அடைக்கமுடியாமல் அவதிப்படுகிறோம். மேலும், சில வீடுகளில் கடன் குறையாமல் அதிகரித்துகொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் என்பதே இருக்காது. எனவே, கடனை தீர்க்கக்கூடிய பல பரிகாரங்கள் ஆன்மிகத்தில் உள்ளது. அவற்றில் ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
வீட்டில் கடன் பிரச்சினை தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக திருச்செந்தூர் சென்று முருக பெருமானை வழிபட்டு வரவேண்டும். ஏனெற்றால் கலிகாலத்தில் கண்கண்ட தெய்வம் முருகபெருமான். இவரை நாம் வழிபடும்போது நம் வீட்டில் இருக்கும்போது அணைத்து பிரச்சினைகளும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடன் பிரச்சினையை தீர்க்கும் முருகப்பெருமானை வழிபடக்கூடிய ஒரு பரிகாரம் ஒன்றினை பற்றி பார்க்கலாம். இப்பரிகாரம் செய்ய தேவையான முக்கியமான பொருள் செவ்வரளி பூ. இந்த பூவினை வாங்கி உங்கள் கையால் மாலையாக கட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப் பெருமானின் படத்திற்கு போட்டு வழிபட வேண்டும்.
கழுத்தை நெறிக்கும் கடனும் எளிதில் காணாமல் போய்விடும். இந்த பரிகாரத்தை செய்தால்..
அதாவது, பூஜையறையிலுள்ள முருகப்பெருமானின் உருவப்படத்திற்கு செவ்வரளி மாலை போட்டு மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினை அனைத்தும் எளிதில் நீங்கவேண்டும் என்று பிராத்தனை செய்யவேண்டும்.
அதோடுவிடாமல், கடனை அடைப்பதற்கான வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பரிகாரத்தை தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை செய்துவர வேண்டும். முக்கியமாக காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் இந்தப் பரிகாரத்தை செய்து முடிக்கவேண்டும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டிலுள்ள மற்றவர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை இந்தப் பரிகாரத்தை செய்துவருவதன்மூலம் உங்கள் கடன் பிரச்சினை குறைந்துவருவதை நீங்களே பார்க்கலாம்.
வீட்டில் பண மழை பொழிய வேண்டுமா..? அப்போ இந்த ஒரு மரத்தை மட்டும் நட்டு வையுங்கள்..!
செல்: 9842550844