சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள எனது ஜோதிட அலுவலகத்திற்கு சுமார் 38 வயதுடைய ஒரு பெண்ணும், 10 வயதுடைய அவரின் மகளும் வந்தார்கள். அந்தப் பெண், தனது கணவருக்கும், தனக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் விவாகரத்து செய்துவிட்டதாகவும், இனி மற்றொரு ஆணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இந்த திருமண வாழ்க்கையாவது, பிரச்சினைகள் ஏதுமில்லாமல், எனக்கு மகிழ்ச்சி யானதாக அமையுமா? என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன் என்றார்.
ஜீவநாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன். இந்தப் பெண் இளம் வயதிலேயே, மோக வெறிகொண்டு, ஒருவனிடம் பழக்கம்கொண்டு, தனது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி, வீட்டைவிட்டு வெளியேறி தான் விரும்பியவனையே, திருமணம் செய்துகொண்டாள். இவர்களுக்குப் பிறந்தவள்தான் இந்தப் பெண் குழந்தை. இந்தப் பெண் செய்த செயலால், பெற்றவர்களுக்கும், பிறந்த குடும்பத்திற்கும் தீராத அவமானத்தைத் தேடிவைத்தாள்.
இருவரும் ஒருவரையொருவர், விரும்பி பழகியபோது, இருந்த பாசமும், மகிழ்ச்சியும், ஐந்து வருடங்களில் மறைந்து
சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள எனது ஜோதிட அலுவலகத்திற்கு சுமார் 38 வயதுடைய ஒரு பெண்ணும், 10 வயதுடைய அவரின் மகளும் வந்தார்கள். அந்தப் பெண், தனது கணவருக்கும், தனக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் விவாகரத்து செய்துவிட்டதாகவும், இனி மற்றொரு ஆணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இந்த திருமண வாழ்க்கையாவது, பிரச்சினைகள் ஏதுமில்லாமல், எனக்கு மகிழ்ச்சி யானதாக அமையுமா? என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன் என்றார்.
ஜீவநாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன். இந்தப் பெண் இளம் வயதிலேயே, மோக வெறிகொண்டு, ஒருவனிடம் பழக்கம்கொண்டு, தனது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி, வீட்டைவிட்டு வெளியேறி தான் விரும்பியவனையே, திருமணம் செய்துகொண்டாள். இவர்களுக்குப் பிறந்தவள்தான் இந்தப் பெண் குழந்தை. இந்தப் பெண் செய்த செயலால், பெற்றவர்களுக்கும், பிறந்த குடும்பத்திற்கும் தீராத அவமானத்தைத் தேடிவைத்தாள்.
இருவரும் ஒருவரையொருவர், விரும்பி பழகியபோது, இருந்த பாசமும், மகிழ்ச்சியும், ஐந்து வருடங்களில் மறைந்துபோனது. கணவன்- மனைவிக்கிடையே, அன்யோன்யம் குறைந்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இப்போது விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.
இந்தப் பெண் கடந்த இரண்டு வருடமாக, வேறு ஒரு ஆண் மகனிடம் பழகிவருகின்றாள். அவனும் இன்றுவரை இவளை திருமணம் செய்துகொள்கின்றேன் என்று கூறி நம்பவைத்து, ஏமாற்றிவருகின்றான். அதனால்தான், தன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள அகத்தி யனை நாடி வந்துள்ளாள்.
இந்த மகளின் குடும்ப வாழ்க்கை, இதுபோன்று நிலைமாறி, திசைமாறி போனதற்கு ஒரு காரணம் உண்டு. இவரின் வம்ச முன்னோர்கள் காலத்தில் இவள் குடும்பத்தில், இவளைப் போன்று பிறந்த பெண் ஒருத்தி, குடும்ப பெரியவர்கள், பெற்றவர்கள் பேச்சை மதிக்காமல், தன் விருப்பம்போல், ஒருவனை மணந்து, அவனுடன் வீட்டைவிட்டு வெளியேறினாள். அவளின் செயலால், குடும்ப கௌரவம், மரியாதை குலைந்தது. பெற்றவர்கள் மனம் வெந்து தனிந்தது. அவமானத்திற்கு ஆளானார்கள்.
சில வருட வாழ்க்கையில், அவள் கணவன் இறந்து போனான் மணம் புரிந்தவன் மாண்டுபோனபின்பு, தன் தேவைகளுக்காக, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தன் மனம் போனபடி செயல்பட்டு வாழ்ந்தாள். பெற்றவர்கள் இவளின் செயலால் மனம் நொந்து வாழ்ந்து மறைந்தார்கள்.
பெற்றவர்கள் மனம் நோகச்செய்த பாவம், இவளின் அடுத்தடுத்தப் பிறவிகளில் தொடர்ந்து, இவளின் இல்லற வாழ்க்கையை சீரழித்துக் கொண்டுவருகின்றது. இவளின் ஆத்மாவிற்கு இது மூன்றாவது பிறவி. மூன்று பிறவிகளுக்குமுன்பு, இவளின் செயலால், இவள் தனக்குத்தானே தேடிக்கொண்ட பெற்றவர்கள் சாபம்.
இவள் தன் முற்பிறவியில் செய்த பாவத்திற்குரிய, நிவர்த்தியை, இப்பிறவியில் செய்து, தன் பாவ- சாபத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும். நிவர்த்தி வழியைக் கூறுகின்றேன். இப்பிறவியில் இவள் விரும்பு வனை மணம்புரியாமல், இவள் பெற்றோர் பார்த்து முடிவுசெய்யும், மாப்பிள்ளையை மணம்புரிந்து, இவளின் தாய், தந்தை, குடும் பத்து உறவுகளை மனம் மகிழச் செய்தால், இவளின் இப்பிறவி குடும்ப வாழ்க்கை ஆயுள்வரை, எவ்வித பிரச்சினையும் இன்றி இன்பமானதாக அமையும்.
பெற்றவர்களை மதித்து, அவர்கள் பேச்சைக் கேட்காமல், ஆணவம், அகங்கார குணம்கொண்டு, இவள் விரும்பப்படி ஒருவனை திருமணம் செய்துகொண்டால், இந்த திருமண பந்தமும் நிலைக்காது. இல்லறத்தில் நிம்மதி இராது. அகத்தியன் யான், இவளுக்கு அறிவுறை கூறவில்லை, முற்பிறவி பாவம் தீர்வதற்கு வழிமுறைதான் கூறினேன்.
இவள் திருமணம் செய்துகொள்ள விரும்புபவனைப் பற்றிக் கூறுகின்றேன். இவன் பொய்சொல்வான். ஏமாற்று வேலை களையெல்லாம் செய்வான். ஆனால் பார்ப் பதற்கு மிகச் சாது போன்று இருப்பான். வஞ்சகன். பொதுவாக இவன் நல்லவன் இல்லை.
இவன் இதற்குமுன்பு, இரண்டு பெண் களிடம், திருமணம் செய்துகொள்கின்றேன் என்று வாக்குதந்து, அவர்களை நம்பவைத்து, சுகம் அனுபவித்துவிட்டு, அவர்களை திருமணம் செய்யாமல், ஏமாற்றிவிட்டான். இப்போது இவளிடம், நாடகமாடி, நம்பவைத்துவிட்டான். இவனைத் திருமணம் செய்தால், இவளின் இந்த மணவாழ்வும் பிரிந்துவிடும்.
இவள் தான் விரும்புபவனை விலக்கி விட்டு, இவள் தாய், தந்தை விருப்பப் படி அவர்கள் கூறுபவனை மணந்து, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளட்டும் என்று கூறிவிட்டு, மேலும் அவளுக்கு கணவனாக வரப்போகின்றவனைப் பற்றிய விவரங்களைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
இன்றைநாளில் விவாகரத்து செய்து விட்டு, பிரியும் தம்பதிகளில் பெரும் பாலோனோர், தங்கள் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல், தங்கள் விருப்பம்போல் திருமணம் செய்துகொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். பெற்றோர்கள், கூறியவனை மணந்துகொண்டவர்களில் சிலர்தான் வாழ்க்கையில் பிரிந்துவிடுகின்றார் கள் என்பதை நாடியில் பலன்காண வந்தவர்கள்மூலம் நான் அறிந்துகொண்ட உண்மை. பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும் திருமணங்கள், கணவன்- மனைவி பிரிவினை தடுக்கும்.
பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் தங்கள் விருப்பம்போல் திருமணம்செய்து கொண்டவர்கள் வாழ்வில் கணவன், மனைவி, இழப்பு, பிரிவு, கருத்து வேறுபாடு, தாம்பத்தியக் குறைவு, அன்யோன்யம் குறைவு, ஒரேவீட்டில் வசித்தாலும் கணவன், மனைவி, அவரவர் இஷ்டம்போல் வாழ்வது போன்று, இதில் ஏதாவது ஒரு பலனை தங்கள் வாழ்வில் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
இருவரின் ஜாதகத்தை தமிழ் ஜோதிட முறையில், கிரக அமைப் பினைக்கொண்டு, அவனின் குணம், செயலை, அவளுக்கு விளக்கமாகக் கூறி அனுப்பிவைத்தேன்.
செல்: 99441 13267