வாழ்க்கையில் உயர்பதவிகளில் இருப்போர், கோடிகளில் புரள்வோர், சொந்தத் தொழில்செய்து பல கோடி களில் லாபம் ஈட்டுவோர், உயர்ந்த செல்வக் குடும்பத்தில் மருமகளாகச் சென்ற ஏழைப்பெண், சுமாரான குடும்பத்தில் பிறந்து சுய முயற்சியில் வளர்ச்சி கண்ட பெண் என இவர் களைப் போன்றோரைப் பார்த்து "அவர் உடம்பில் அதிர்ஷ்ட மச்சம் இருக்குதப்பா; அதுதான் இப்படி வேலைசெய்கிறது' என்பார்கள்.
நான்கு ஆண் மகனைப் பெற்ற தாயைப் பார்த்து ஐந்துக்குமேல் பெண்களைப் பெற்றுவிட்ட, தாய்- தந்தையர், "அவருடைய தேகத்தில் அதிர்ஷ்ட மச்சம் உள்ளது' என்று விமர்சிப்பர்.
மேல்நாட்டு உடற்கூறு ஆராய்ச்சி யாளர்கள், "உடலில் தோன்றும் மச்சங்கள் ஒரு வகை பௌதிகவியல் மாற்றமே என்றாலும், ஒருவரது முன்னேற்றத்துக்கு அடையாள மாகவே இருக்கிறது என்பதை மறுப்பதற் கில்லை' என்கின்றனர்.
நம் நாட்டின் இந்து சாஸ்திர நூல்களில் ஒன்றான சாமுத்ரிகா சாஸ்திரம், பெண்களின் அதிர்ஷ்டம், அழகு மச்சங்கள் பற்றி எடுத்துக் கூறுவது. பூர்வீக காலத்தில் சமுத்திர ராஜனால் இயற்றப்பட்டதால் இந்த நூலின் பெயர் சாமுத்திரம், சாமுத்ரிகம், சாமுத்ரிகா லட்சணம் எனப்படுகிறது.
இதன் உட்கருத்து, ஒருவரின் உருவம், மச்சக்குறி அடையாளங்களைப் பொருத்தே அவரது குணநலன்கள், முன்னேற்றங் கள் அமைந்திருக்கும். வடமொழியில், "யதரரூபஸ் தத்த தகாகுண' என்று சொல்லப் படுகிறது. பாற்கடலிலிருந்து வெளிவந்த மகாலட்சுமியைப் பார்த்து மகாவிஷ்ணு, தேவியின் அழகு, உடலமைப்பு, மச்சங்களைக் கண்டே "அதிர்ஷ்டயோகம், இன்பங்கள் அனைத்துக்கும் ஆதாரமானவள்' என்று திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வை நேரில் கண்டதால் சமுத்திரராஜன் சாமுத்திரிகத்தை எழுதினார்.
ஆதிசங்கரர் வாக்கில் அம்பிக்கையில் அழகு வர்ணனையைத் தன் வாக்கினால் சௌந்தர்யலஹரியாக வெளிப்படுத்தும்போது, 69-ஆவது பாடலில், தேவியின் கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகளைப் பற்றிக் கூறுகிறார்.
"கலே ரேகாஸ் திஸ்ரோ
கதிகமக கீதைக நிபுணே
விவாஹ வ்யாநத்த ப்ரகுண
குண ஸங்க்யா ப்ரதிபுவ'
"இசை கீதம், சங்கீத ஜதி இவற்றில் திறமை யுடையவனே! உன் கழுத்து ரேகைகளும் மச்சங் களும் திருமணக் காலத்தில் பெண்ணுக்கு அணிவிக்கப்படும் மாங்கல்யம்போலத் தெரிகிறது' என்றார்.
உத்தமப் பெண்களுக் கும் புருஷர்களுக்கும் நெற்றி, கழுத்து, வயிறு ஆகிய மூன்று இடங்களில் புள்ளிகள், கோடுகள் இருக்கும் என சாமுத்திரிகமும் கூறுகிறது. மேலும் சக்திதேவியின் புருவ அமைப்பில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசன் ஆகியோர் நடுவில் அமர்ந்து, அன்னையின் பார்வை அசைவுக்குப் பணி கின்றனர் என்றும், மச்சங்கள்போல் உள்ள னர் என்றும 24-ஆம் துதியில் கூறுகிறார்.
மச்சங்கள் எப்படித் தோன்றுகின்றன?
முன்ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் தான் அதிர்ஷ்ட யோகங்களை அள்ளிக் கொடுக்கிற மச்சங்களாக உருவெடுக்கின்றன என்று ஜோதிட ஆசிரியர்களும், கிரக ஆய்வர் களும் கருத்து கூறினர். இதைப் பிறவிக்குறிகள் என அழைக்கின்றனர்.
ஆங்கில மொழியில் நீவஸ் (சங்ஸ்ன்ள்). மோல் (ஙர்ப்ங்) என்ற சொல்லால் குறிப்பிட்டனர். இந்த மச்சத்தை தாய்வழிச்சுவடு அல்லது அச்சு என்ற லத்தீன் சொல்லிலிருந்து எடுத்துக் கையாண்டனர்.
அம்மா+அச்சு= மச்சம் ஆயிற்று.
மச்சங்கள் சிலருக்குப் பிறவியிலேயே தோன்றக்கூடும். சுமார் 45 முதல் 55 வயதுவரை பிறவி மச்சங்கள் தோன்றலாம். நம் உடலிலுள்ள நிறமிச் செல்களிலிருந்து உருவாகி, கருமை நிறத்தில் தோலுக்கு உள்ளே ஒரு பிளாஸ்மா (கண்ணாடிபோல) மூடியிருக்க, வெளியில் தெரியும் மச்சங்கள் கருமையாக மட்டுமின்றி சிவப்பு, பெரிய உருண்டை போன்று, அடர்த்தியான முடிகள் நிறைந்த திட்டுகள் போலவும், நகங்களுக்கு அடியில் ஒரு கோடாகவும் தோன்றும்.
Skin coloured moles- தோல் நிற மச்சங்கள்.
White moles-- நிறமற்ற வெண்ணிற மச்சங்கள்.
Anjiomatous- அருவருக்கத்தக்க வளர்ச்சி கொண்ட மச்சங்கள்.
Nevoid Hypertrichosis முடிவளர்ந்த திட்டுகள் போன்ற மச்சங்கள்.
Longitudinal Meleongsia- நகங்களுக்கு அடியில் வளர்பவை.
சில மச்சங்கள் குழந்தை பிறந்ததிலிருந்து எட்டு ஆண்டுகள் வரை கண்களின் தென்பட்டு தானாகவே மறைந்துவிடும். இவை குருதி நாளங்களிலிருந்து நேரடியாகத் தோன்றுபவை. ஹீமாஞ்சியோமஸ் (Hemanjiomas) எனப் படுகின்றன.
மேல்தோல் மச்சங் கள் (Epidermal Nevi):
மேல்தோலில் தோன்று பவை. சற்று அரிதாகத் தோன்றுவதால் அருவருப்பைக்கூட உண்டாக்கலாம்.
அடித்தோல் மச்சங்கள் (Dermal Nevi): தோலுக்குள், தசைப்பகுதியில் சேர்ந்தவாறு காணப்படுபவை.
முழுத்தோல் மச்சங்கள் (Compound Nevi): நிறமிச் செல்களிலிருந்து தோன்றி, பாதகம் செய்யாதவையாக அதிர்ஷ்ட மச்சங் களாக நிரந்தரமாக இருப்பவை.
ஐரோப்பிய நாடுகளில் வெள்ளைநிற மனிதர் கள் அதிர்ஷ்ட மச்சங்களை கருமை நிறத்தில் Skin Craft முறையில் வைத்துக்கொள்கின்றனர். இவை உடலுக்கு ஆபத்தை உருவாக்கக்கூடும். அதிர்ஷ்டம் தரும் மச்சங்கள் தானாகவே உருவாகவேண்டும். நாமே செயற்கை முறையில் இதய மாற்று அறுவை, சிறுநீரக மாற்று போல வைத்துக்கொள்ள முடியாது. காரட், சத்துள்ள பழங்கள், காய்கனிகளை உணவாகக் கொண்டால் 18 வயதிலிருந்து அதிர்ஷ்ட யோக மச்சங்கள் உடலின் சில பாகங்களில், நட்சத்திரங்கள் வானத்தில் தோன்றுவதுபோன்று உருவாகும்.
பொதுவாக வலது உள்ளங்கையில் மச்சம் தோன்றினால் பணம் அதிகமாக வரும் என்பது மக்கள் சொல் வழக்கம். அதே கையால் தானதர்மமும் செய்தால், பணவரவு கூடும். இச்செய்தி நமது வேதங்களும், அமெரிக்க மனோதத்துவத் தந்தையான வில்லியம் ஜேம்ஸும் "ஐஸ்வர்யத்தின் ரகசியங்கள்' என்று கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.
உச்சத்தைத் தரும் மச்சங்கள்
தங்கள் உடலில் சாமுத் ரிகா லட்சணம் காட்டிய படி மச்சங்கள் அமைந்து விடாதா? அதன்மூலம் பெரும் பணக்கார யோகமும் ஐஸ்வர்யமான வாழ்க்கை யும் அமைந்துவிடாதா என்று ஏங்கியவாறு, பல பச்சிலை மூலிகைகளைத் தேய்த்துக்கொண்டு ஏமாறு கின்றனர். நல்ல தர்ம சிந்தனை, இறைவழிபாடு, வீட்டை தெய்வீகமாக வைத்திருந்து, நறுமணப் புகையிடல் என செய்தாலே அதிர்ஷ்ட மச்சங்கள் தோன்றும்.
ஆண்களுக்கான மச்சமும் பலன்களும்
நெற்றிப்பொறி- திடீரென பெருகும் பண பலம்.
புருவம்- செல்வ யோக மனைவி கிடைப்பாள்.
கன்னம்- மத்திய தரமான செல்வந்தர்.
காது- கௌரவ வாழ்க்கை, தொடர் பணவரவு.
மூக்கு- சொற்களால் வெற்றியும் சாதனையும்.
உதடுகள்- வார்த்தைகளால் சுகபோக வாழ்க்கை.
முகவாய் இருபுறம்- பொருளாதார பலத்தை நடுவயதில் ஈட்டி புகழடைவார்.
கழுத்து- உறவினர்களால் உதவிபெற்று தனலாபம் அடைவார்.
வயிறு கீழ்ப்பகுதி- உணவுப்பிரியன்; உணவுப் பண்டங்களை விற்று தனலாபம் பெறுவார்.
வலது தோள்- வீரமானவர்; சாதிக்கும் குணம்.
வலதுகால் முட்டி- திறம்பெற்ற மனைவியை அடைந்து தனவளம் பெறுவார்.
பெண்களுக்கான மச்சமும் பலன்களும்
நெற்றிப்பொறி- நல்ல குணவதியாகப் பொருள் ஈட்டுவாள்.
புருவமத்தி- மகாராணிபோல் வசதியான வாழ்க்கை.
கன்னம்- கலைகளால் பணபலம் கூடும்.
கண் இமை- நடுத்தரப் பணவரவில் ஜீவனம்.
மூக்கு- செயல்களில் எளிமையாக வெற்றிபெறுவர்.
உதடுகள், முகவாய்- கோடீஸ்வரியாக வாழ்பவர்.
தாடை- அழகுடையவள்; அழகு சாதனத்தால் தனவளம், வெற்றி.
மார்பு- சகல சம்பத்தும் வித்யா பலமும் வரும்.
பாதங்கள்- தெய்வபக்தி உள்ளவள்; தானதர்மம் செய்பவள்.
கைகள்- பல கலைகளில் தேர்ச்சி உடையவள்.
தோள்கள்- பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்; அவர்கள்மூலம்; வளமான வாழ்வு.
நெஞ்சகம்- சுகபோக வாழ்க்கை, நல்ல பெண் நட்பு கூடும்.
சித்தர்கள் அருளிய மச்சக்குறி சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரத்தில் ஓர் அங்கமாக வரும் மச்சக்குறிப் பலன்கள்போலவே, சித்தர்களும் தங்களது செய்யுள்களில் ஆண்- பெண் இருபாலரின் மச்சக்குறிகள் பற்றி வியத்தகு பலன்களைக் கொடுத்துள்ளனர்.
ஆண்களில் முயல்ஜாதி ஆடவன், காளை ஜாதி ஆடவன், குதிரைஜாதி ஆடவன் என்று மூன்று வகையாகப் பிரித்தனர் சித்த யோகிகள்.
முகவாயில் மச்சமிருக்க அதன் அளவுப்படி பெரிய வசதி படைத்தவராக வாழ்வார். வலது புருவ மச்சம் இவருக்கு தனவளத்தைத் தரும். இடது புருவத்தில் இருந்தால் சுகமில்லை. இடது கன்னத்தில் இருந்தால் பெண்களிடம் நட்பு கொள்வார். எல்லாரிடமும் நட்பாக பழகி காரியங்களை சாதித்துக்கொள்வார்.
முதுகுப்புறம் ஓரத்தில் மச்சம் காணப்பட் டால் எதற்கும் பயப்பட்டு, ஒரு செயலில் துணிந்து இறங்காதவராக உலாவருவார். நாக்கி னுள் இருந்தால் கலைகள் கற்று பேச்சாளராக வளர்வார். அதன் அடியில் இருப்பின் துறவி போல், யோகியாக வாழ்வார்.
வலது கண்ணில் இருந்தால் சகல வசதிகளும் பெற்று ஆனந்த மயமாக வாழ்ந்து தெய்வபக்தியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். (கண் எனில் இமையின் மேல்பகுதி).
நெற்றியில் மச்சம் வர, பெரும் அரசு, அரசியல் புகழோடு வளமாக வாழ்வார். சுட்டுவிரல், சுண்டுவிரலில் இருக்க தொழில், வியாபாரத்தில் அபரித லாபம். வலது பாதத்தில்லி திருத்தல பயணம்; முழுங்காலில் இருக்க பிறவி அதிர்ஷ்டசாலி.
பெண்களின் மச்சக்குறிகளைப் பற்றிக் கூறிய சித்தர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கையாண்டுள்ளனர். பத்மினி, அத்தினி, சங்கினி, சித்தினி என்று நான்கு வகையாகப் பிரித்துக் கூறினர்.
வலது தொடையில் மச்சமிருக்க நல்ல குணவதியாக, வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருப்பாள். வரிசையாகக் காணும்போது...
பெண் குறி- வலது புறம் மச்சமிருக்க உயர் குலத்தில் பட்டத்து ராணியாகப் பிறப்பாள். இவளது மகன் நாடாளும் அரசனாவான்.
வலது ஸ்தனத்தில் இருக்க வசதியான வாழ்க்கை; தெய்வ பக்தியுடன் இருப்பாள். மேவாய்க் கட்டு- நல்ல கணவன் அமைவான்.
செல்வக்குடியில் பிறந்து சுகபோக வாழ்வடை வான். நாக்கின்மேல்- கலைகள் பலகற்று அரசி போல் வாழ்வாள். தெய்வபக்தியுடன் சொத்து சுகமுண்டு. நெற்றி நடுவே- அரசியாவாள்; நெற்றிப்புருவம்- தேவையான வசதியுடன் மிளிர்வாள். உள்ளங்கையில் இருந்தால்- புகழ் பெற்ற பாடகியாகி உலகம் சுற்றுவாள். இடது தொடை- ஊர்சுற்றி அதிக செலவு செய்பவள். வலது தனத்தில் இருக்க, கர்வத்துடன் நடந்து கொள்வாள்; கணவனை மதியாது, பிறரையும் இகழ்ந்து பேசுவாள். வலது அக்குளில் மச்சமிருக்க வாழ்நாள் முழுவதும் துயரம், ஏழ்மை நிலை. வலது தோளில் இருக்க ஆண் சுபாவம் கொண்டு கெட்டவள் என்று பெயர் பெறுவதற்கு வாய்ப்புண்டு. இதேபோல் ஆண்களுக்கு சுப- அசுபப் பலன்களைத் தங்கள் பாடல்கள் மூலமாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
256 மச்சக்குறி பலன்கள் வருகின்றன.
மச்சங்கள் ஒருவரது உடல் பாகத்தில் எங்கு வந்துள்ளதோ அதைக் கண்டு அச்சப்படாமல் நல்ல இடத்தில் வளர தெய்வப் பிரார்த்தனை செய்து, கைவிரல்களில் பொன் மோதிரம் அணிந்து வாழ்க்கையின் உச்சத்திற்குச் சென்று ஐஸ்வர்யமான வாழ்வை எட்டலாம்.
செல்: 95511 84326