Advertisment

கனவுகளின் ரகசியங்கள்!

/idhalgal/balajothidam/secrets-dreams

னிதனின் மனம் ஒன்றுதான் என்றாலும், அதைப் புரிந்துகொள்ள மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. உணர்வு மனம்

Advertisment

நாம் செய்யும் வேலைக்கு ஏற்றாற்போல் உணர்வை மாற்றிக்கொள்வது உணர்வு மனம். உதாரணமாக, புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் மனம் படிக்கும் உணர்வுக்கு மாறுவது.

2. அடி மனம்

ஒருவரின் இயல்பான மனதைக் குறிப் பிடுவது. இதை ஒருவரின் உண்மையான சொரூபம் என்றும் சொல்லலாம். ஒருவரின் அடிமனதின் குணங்கள், உணர்வு மனதோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வைக்கும்.

3. ஆழ்மனம்

ஒருவரின் உண்மையான பலம் என்ன என்பதை ஆழ்மனமே தெரிவிக்கும். ஆழ்மனதை உணர்வு மனமும், அடி மனமும் சாதாரண நேரத்தில் செயல்பட விடாது. ஒருவர் ஆழ்மனதை செயல்படுத்தும்போது மட்டுமே நாம் யார்? ஏன் பிறந்தோம்? எதற்காகப் பிறந்தோம்? என்ன செய்கிறோம்? எதை நோக்கிப் போக வேண்டும் போன்ற அனைத்துக் கேள்விக்கும் விடைபெற முடியும். ஒருவரது சஞ்சித கர்மாவின் நிலையை இந்த ஆழ்மனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

இந்த மூன்றுநிலை மனித உணர்வுகளே கனவுகளாக வருகின்றன. கனவு என்பது நமக்குக் கிடைக்காத, நம்மால் செயல்படுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடு. கனவில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் இனி நடக்கப் போவது, முன்னால் நடந்தது என்ற இரண்டு வகையாகவே இருக்கும். சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளும் வரும். சிலர் தமது எதிர்காலம் பற்றி பகல் கனவு காண்பார்கள். சிலர் ஆழ்மன உணர்ச்சியை தியானம், யோக போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தி "நாம் யார்' என்ற கேள்விக்கு "இறைவனின் பரிணாம்மே நாம்' என்ற விடையறிந்து, தங்களுக்கு வேண்டிய நல்ல பலன்களை சஞ்சித கர்மாவாக மாற்றிப் பிறவிப் பயனை அனுபவிக்கிறார் கள். இது ஒருபுறம் இருக்க, மருத்துவரீதியாக சீரான தூக்கம் இல்லாதவர்களை, கனவு என்பது மன அழுத்தம், மனநோயில் ஆழ்த்திவிடுகிறது. இரவில் தூங்கச் செல்லும்போது என்ன சிந்தனையில் இருக் கிறோமோ அதுதொடர் பான கனவே வரும். மிகக் குறிப்பாக இக்காலத்தில் டிவி சீரியல்களே கனவு களுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

dreams

கனவுகள் பலருக்கு மனபாரத்தைக் குறைக்கும் வடிகாலாகவும் இருக

னிதனின் மனம் ஒன்றுதான் என்றாலும், அதைப் புரிந்துகொள்ள மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. உணர்வு மனம்

Advertisment

நாம் செய்யும் வேலைக்கு ஏற்றாற்போல் உணர்வை மாற்றிக்கொள்வது உணர்வு மனம். உதாரணமாக, புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் மனம் படிக்கும் உணர்வுக்கு மாறுவது.

2. அடி மனம்

ஒருவரின் இயல்பான மனதைக் குறிப் பிடுவது. இதை ஒருவரின் உண்மையான சொரூபம் என்றும் சொல்லலாம். ஒருவரின் அடிமனதின் குணங்கள், உணர்வு மனதோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வைக்கும்.

3. ஆழ்மனம்

ஒருவரின் உண்மையான பலம் என்ன என்பதை ஆழ்மனமே தெரிவிக்கும். ஆழ்மனதை உணர்வு மனமும், அடி மனமும் சாதாரண நேரத்தில் செயல்பட விடாது. ஒருவர் ஆழ்மனதை செயல்படுத்தும்போது மட்டுமே நாம் யார்? ஏன் பிறந்தோம்? எதற்காகப் பிறந்தோம்? என்ன செய்கிறோம்? எதை நோக்கிப் போக வேண்டும் போன்ற அனைத்துக் கேள்விக்கும் விடைபெற முடியும். ஒருவரது சஞ்சித கர்மாவின் நிலையை இந்த ஆழ்மனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

இந்த மூன்றுநிலை மனித உணர்வுகளே கனவுகளாக வருகின்றன. கனவு என்பது நமக்குக் கிடைக்காத, நம்மால் செயல்படுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடு. கனவில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் இனி நடக்கப் போவது, முன்னால் நடந்தது என்ற இரண்டு வகையாகவே இருக்கும். சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளும் வரும். சிலர் தமது எதிர்காலம் பற்றி பகல் கனவு காண்பார்கள். சிலர் ஆழ்மன உணர்ச்சியை தியானம், யோக போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தி "நாம் யார்' என்ற கேள்விக்கு "இறைவனின் பரிணாம்மே நாம்' என்ற விடையறிந்து, தங்களுக்கு வேண்டிய நல்ல பலன்களை சஞ்சித கர்மாவாக மாற்றிப் பிறவிப் பயனை அனுபவிக்கிறார் கள். இது ஒருபுறம் இருக்க, மருத்துவரீதியாக சீரான தூக்கம் இல்லாதவர்களை, கனவு என்பது மன அழுத்தம், மனநோயில் ஆழ்த்திவிடுகிறது. இரவில் தூங்கச் செல்லும்போது என்ன சிந்தனையில் இருக் கிறோமோ அதுதொடர் பான கனவே வரும். மிகக் குறிப்பாக இக்காலத்தில் டிவி சீரியல்களே கனவு களுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

dreams

கனவுகள் பலருக்கு மனபாரத்தைக் குறைக்கும் வடிகாலாகவும் இருக்கின்றன. கனவுகள் மனிதனை ஒரு தனி உலகிற்கு அழைத்துச் செல்கின்றன. இதனைப் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் மட்டுமே பின்னால் நடக்கவிருப்பதை முன்னரே உணர்த்தும். குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ந்ததைப்போலவே வாழ்வில் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால், பின்னால் நடக்கப் போவதை முன்னரே கனவுமூலம் அறியும் சக்தி படைத்தவர்கள். பலமுறை சிந்தனை செய்தும், முயற்சி செய்தும் கிடைக்காத புதிர்களுக்கான விடைகள் சிலருக்கு கனவில் விடையாகக் கிடைக்கும். இன்னும் சிலருக்கு அவர்கள் செய்த தவறுகள் கனவில் வந்து தவறை உணரவைக்கும்.

அதீத நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையும்கூட இரவில் கனவுகளாக வந்து தொல்லை தரும். கனவில் மனிதன் தன்னை பெரிய வெற்றிவீரனாக நினைத்துக்கொள்வதால் அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது. அவன் நினைத்ததைப் போல எல்லாமே நடக்கிறது. இதனால் அக்கனவில் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவு களை வரவழைக்கும். எனவே மனதிற்குள் எதை விதைக் கிறோமோ அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.

ஒருவர் படுத்தவுடன் எந்த பிரச்சினையுமின்றி நிம்மதியாகத் தூங்குகிறார் என்றால் 12-ஆம் இடமான அயன சயன ஸ்தானத்தில் சுபகிரக சம்பந்தம் மட்டும் இருக்கும். தானும் மகிழ்ச்சியாக இருப் பதுடன் மற்றவர்களையும் சந்தோஷப் படுத்துவார். கவலைகள் இவரை பாதிக்காது. நிம்மதியாக உறங்கக்கூடியவர்.

கனவுக்கான ஜோதிடக் காரணங்கள்

கனவு என்பது அயன சயன ஸ்தானமான 12-ஆம் இடமும், மனோ காரகனாகிய சந்திரனின் சம்பந்தமும் சேர்ந்தது. ஒருவரின் கனவு, மனம் சார்ந்த நல்லது- கெட்டது அனைத் திற்கும் சந்திரனே காரணம். அச்சந்திரன் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைக் கொண்டும், சந்திரனுடன் சேர்க்கை பெற்ற மற்ற கிரகங்களைக்கொண்டும், சந்திரனைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் ஒருவரது மனம் எவ்வாறு இருக்கும்? அவருக்கு கனவுப் பிரச்சினை உள்ளதா? தூக்கமின்மையால் அவதிப்படுகிறாரா என்று எளிதில் சொல்லமுடியும்.

சந்திரன் பாவகர்த்தாரி தோஷம் பெற்றால் அசுபக் கனவும், சுப கர்த்தாரி யோகம் பெற்றால் சுபக்கனவுகளும் இருந்துகொண்டே இருக்கும். சந்திரன் ராகு- கேதுவோடு சம்பந்தம் மற்றும் 6, 8, 12-ல் மறைபவர்களுக்கும் கனவு வரும்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் 12-ஆம் அதிபதி இருந்தாலும் அல்லது லக்னாதிபதி 3, 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானங் களில் இருந்தாலும் அவர்களுக்கு கனவுகள் வரும். அத்துடன் லக் னாதிபதி அஸ்தங்கம், நீசம், வக்ரம் பெற்று கோட்சார, தசாபுக்தி நாதனும் சம்பந்தம் பெறும்போது அதிக கனவுகள் வரும். அதனால் நோய்த்தாக்கம், தூக்கமின்மையும் வரும். இவர்களுக்குச் செய்யும் மருத்துவ சோத னையில் எந்தக் குறையும் இருக்காது. ஆனால் ஜாதகர் நோய்த் தாக்கத்தில் இருப்பார்.

ஒரு ஜாதகத்தின் 1, 5, 9-ஆம் பாவங்கள் வலிமை பெற்று 12-ஆம் பாவ சம்பந்தம் பெறும்போது சுபக் கனவுகளும், 3, 6, 8, 12-ஆம் பாவகம், அதிபதிகள் தசை நடத்தும்போது ரோகம், இழப்பு, மரணம் தொடர்பான கனவு களும் வரும். மிகக்குறிப்பாக சந்திர தசை, சனிபுக்தி அல்லது சனி தசை, சந்திரபுத்தி நடக்கும்போது மன சஞ்சலமான கனவுகள் மிகுதியாக இருக்கும். இந்த காலகட்டங்களில் வரும் கனவு தூங்கி எழும்போது மறந்துவிடும் அல்லது அரைகுறையாக நினைவிருக்கும். 4-ஆம் இடமான சுகஸ்தானம் 12-க்கு திரிகோணம் என்பதால், சுகஸ்தானத்தை கோட்சாரத்தில் அசுப கிரகம் தொடர்பு பெறும்போது (3-க்கு 2) தூக்கமின்மை மற்றும் குடியிருக்கும் வீட்டில் பிரச்சினை போன்ற காரணத்தால் அசுபக் கனவு வரும். சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற பெண் கிரக சம்பந்தம் ஏற்படும்போது பெண்கள் தொடர்பான கனவுகள் அதிகம் வரும்.

சனி, ராகு, கேது போன்ற கர்மவினையை வெளிப்படுத்தும் கிரகங்கள் 6, 12-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் பெற்று செவ்வாய் சம்பந்தமும் பெற்றால் அடிதடி, சண்டைக் கனவு வரும். 6, 12-ல் ராகு, சனி சம்பந்தம் பெறும்போது இறந்த முன்னோர்களின் கனவு வரும். 6, 12-ல் செவ்வாய், ராகு சம்பந்தம் பெறும்போது மிருகங்கள் கனவு வரும். உடலில் கபம், வாதம், பித்தம், வாயு தொடர்பான பிரச்சினை, அஜீரணக் கோளாறு தந்து கனவை உருவாக்கும்.

ஒரு குடும்பத்தில் சாதாரண மரணமோ அல்லது திடீர் மரணமோ ஏற்பட்டிருந்தால், அதற்கான கர்மங்களைத் தொடர்ந்து 12 நாட்கள் செய்வார்கள். ஏராளமான பணத்தை செலவுசெய்தும், கடுமையான நியமங்களைக் கடைப்பிடித்தும் 12 நாட்கள் செய்யப்பட்ட இறுதிக் கர்மக் காரியங்களால் அந்த ஆத்மா நற்கதியை அடைந்தாரா? இல்லையா என்பதை சில கனவுகள்மூலம் அறிந்துகொள்ளலாம்.

நல்ல கனவு வந்தால் ஆத்மா நற்கதி பெற்றது என்றும், தீய கனவு வந்தால் நற்கதி அடைவதில் சிக்கல் இருக்கிறது என்றும் அறிந்துகொள்ள வேண்டும். நல்ல கனவு களென்றால் பழுத்த பழங்களுடன் மரம், காளை, கருடன், மயில், தேவர்கள், அவர்களின் வாகனங்கள் கனவில் தோன்றுவது. கர்மா நடைபெற்ற வருடத்தில் கர்மா செய்தவரின் மகன் அல்லது மகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது சுபப் பலன்.

ஓரிடத்தில் படுத்திருக்கும் நபர் காலை எழும்போது இடம் மாறி எழுவது, தனது குடும்ப நபர்கள் தன்னைவிட்டோ, தன் குடும் பத்தைவிட்டோ வெளியேறுவது, யாரோ ஒருவர் தன்னைத் தூக்கிச்செல்வது, உண்ணும் உணவை மற்றவர் அபகரித்துச் செல்வது போன்ற கனவுகள் அசுபமாகும்.

இதுபோன்ற கனவுகள் வந்தால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, இறந்தவருக்கு நற்கதி ஏற்படவேண்டும் என சங்கல்பம் செய்து, ஏழை எளியவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தானமாகக் கொடுக்கலாம்.

சுபக் கனவுகள்

ஆலய தரிசனம், கடவுளுக்கு அபிஷேக ஆராதனை, புனித நீராடுதல், நீர் நிலைகளைக் கடந்து செல்லுதல், புத்தாடை, புது ஆபரணம் அணிவது, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, விருந்துணவு சாப்பிடுதல், ஒளியுடன் கூடிய பிரகாசமான பொருள்களைக் காண்பது, மலைமேல் ஏறிச்செல்வது, மழை பெய்தலைக் காணுதல், பயிர்களைக் காணுதல், கடவுள் சிலைகள், படங்கள், உயிருடன் இருக்கும் தாயார்- தகப்பனார், மனைவி- குழந்தைகள், கன்னிப் பெண், பறவை, சிகப்பு, வெண்மை, மஞ்சள் நிற மலர்கள், அலங்காரம் செய்த பெண், பசு, காளை, கண்ணாடி, பலாமரம், தாமரைப்பூ, பால், கோழி, அன்னம், கொக்கு, பிராமணர், தேர், சப்பரம், திருவிழா, கோபுரம் ஆகியவை சுபக் கனவுகளாகும். இதனால் நன்மை ஏற்படும்.

அசுபக் கனவுகள்

பொருட்கள் உடைதல், கட்டடம் இடிந்து விழல், மரம் சாய்தல், மலைசரிதல், வெள்ளம் பெருகி அடித்துச்செல்லுதல், விபத்துகள், விலங்குகள் கடித்து சண்டையிடுதல், மனிதர்கள் தகாத வார்த்தை கூறி சண்டையிடுதல், படங்கள் உடைதல், சிலைகள் உடைதல், இடறிவிழுதல், மொட்டைத் தலை, மரம் ஏறுதல், மரம் அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், தலைவிரிக்கோலமாக ஒப்பாரி வைக்கும் பெண், புற்று, நெசவுத்தறி, எண்ணெய், இரும்பு, பருத்தி, குரங்கு, கழுதை, சர்ப்பம், விலங்குகள் துரத்துதல், ரத்தக் கரையுள்ள ஆடை, பாம்பு விரட்டுதல், பாம்பு, விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அடித்துக் கொல்லுதல், காவல்நிலையம், நீதிமன்றத்திற்கு செல்லுதல், இடுகாடு, துர்தேவதை, சாத்தான் பூஜை செய்தல், மாந்திரீக வேலை செய்தல், விலங்குகள் தோலுரித்தல், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல், இறந்தவர்கள் கனவில் வருவது, காலி மனை, வறண்ட நிலம் ஆகிவை தீய கனவுகள். இவை கனவில் வந்தால் ஏதேனும் சம்பவங்கள் நிகழக்கூடும்.

இரவு 12.00 மணிமுதல் 4.00 மணிவரை பின்னிரவுக் காலமாகும். 12.00 மணிமுதல் 2.00 மணிவரை காணும் கனவுகள் ஒருவருட கால அளவிலும், பின்னிரவு 2.00 மணிமுதல் அதி காலை 4.00 மணிவரை காணும் கனவுகள் ஆறு மாதங்களுக்குள்ளும், அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை காணும் கனவுகள் உடனேயும் பலிதமாகும்.

பலவீனமான உடல்நிலை மற்றும் மன நிலையும் கனவுகளுக்குக் காரணம் என்பதால் உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும், மனதிற்கு இதம் தரும் யோகா, மூச்சுப்பயிற்சி, நடைப் பயிற்சி செய்தும் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டால் தூக்கத்தில் கனவுகள் வந்து தொல்லை தருவதில்லை. சாத்வீக உணவுகளை உண்டு வாத, பித்த மற்றும் சிலேத்தும நாடி களை சரியாகப் பேணிக் காக்கவேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ராம நாமம் மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு செய்ய வேண்டும். இரவில் துங்கும்முன் சித்தர்களை வணங்கி தியானம் செய்து வேண்டியத்தைக் கேட்க கனவில் அல்லது காலையில் பதில் கிடைக்கும். மரணம் தொடர்பான கனவுகண் டால் மகாமிருத்யுஞ்ஜய மந்திரப் பாராயணம் செய்தால் மனம் லகுவாகும்.

மகாமிருத்யுஞ்ஜய மந்திரம்

"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீ ய மாம்ருதாத்.'’

இதற்கும்மேல் மனபாரம் இருந்தால் "சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்' என்று வாய்விட்டுச் சொன்னால் கிருஷ்ணன் பார்த்துக் கொள்வார். சிவன் கோவிலில் நெய்தீபம் ஏற்றினாலும் நற்பலன் தரும். படுக்கையறையின் வடகிழக்குப் பகுதியில் ஒரு பாத்திர நீரில் உப்பிட்டு வைக்கவும். தினமும் தண்ணீர், உப்பை மாற்றவேண்டும்.

செல்: 98652 20406

bala261018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe