தொல்லைகள் பல போக்கும் பிள்ளையார் பிரசன்ன ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/secret-pillaiyars-presence-many-harassments-go-away-k-kumara-sivacharya

னிதர்களாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் அவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவ- புண்ணியங்களுக்கு ஏற்பவே இப்பிறவியில் இன்ப- துன்பங்கள் வருகின் றன என்று ஜோதிட விதிகள் கூறுகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாம் கடன் பிரச்சினை, எதிரிகளால் பிரச்சினை, உறவினர்கள்மூலம் வரும் பிரச்சினை, தொழில் செய்யுமிடங்களில் ஏற்படும் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை என தினமும் பலவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

"திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' என்ற விதிப்படி நாம் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பல தெய்வ வழிபாடு களைச் செய்கிறோம். கி.பி. ஆறாம் நூற்றாண் டில் ஜப்பானில் பல நிறுவனங்களுக்கு வெள்ளத்தால் சோதனை வந்தபோது, கோபா தெய்சி என்பவர் இடர் களையும் பிள்ளையார் என்னும் சிலையை நிறுவி அனைவரையும் வழிபடச் செய்தபோது, அவர் களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் தீர்ந்ததாக செய்தியுண்டு.

உலகம் முழுவதும் பரவியுள்ள பிள்ளையார் சிந்தனையால், நாம் வழிபடும் விநாயகப் பெருமானை சனாதனதர்மக் கடவுள் என்று போற்றுகிறோம். பிள்ளையாரை வழிபட்டால் தொல்லைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று பல மகான்கள் பாடி யிருக்கிறார்கள்.

விநாயகர் அகவல், விநாயகர் நான்மணி மாலை, விநாயகர் வெற்றிமாலை போன்ற சிறப்புடைய அருட்பாக்கள் உள்ளன. இதே வரிசையில், அவரது தம்பிக்கு "கந்த சஷ்டிக் கவசம்' இருப்பதுபோல, மக்களைக் காக்கும் சக்தி வாய்ந்த கவசமாக "பிள்ளையார் பிரசன்னம்' என்னும் துதி ஒன்று உள்ளது பலருக்கும் தெரியாத ரகசியம்.

pillaiyar

பிள்ளையார் பிரசன்னம் என்பது...

பிரசன்னமாதல் எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டதுதான் பிரசன் னம் என்னும் சிறப்புச் சொல். பிரசன்னம் என்றால் இறைவனை வெளிப்படுத்த பாடப்படும் பாடல் என்று பொருள். அதாவது இந்தப் பாடலைப் பாடினால் இறைவன் வெளிப்பட்டு நமது தலையாய பிரச்சினைகளுக்குத் தீர்வுதருவார் என்னும் நம்பிக்கை நிலவுகிறது.

பெருமாளைத் துயிலெழுப்புவதற்காக ஆழ்வார்கள் திருப்பள்ளி எழுச்சி பாடினார் கள். அதன்பிறகு அனைத்து பக்தர்களுக் கும் எழுந்தருளினார் என்பது வர

னிதர்களாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் அவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவ- புண்ணியங்களுக்கு ஏற்பவே இப்பிறவியில் இன்ப- துன்பங்கள் வருகின் றன என்று ஜோதிட விதிகள் கூறுகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாம் கடன் பிரச்சினை, எதிரிகளால் பிரச்சினை, உறவினர்கள்மூலம் வரும் பிரச்சினை, தொழில் செய்யுமிடங்களில் ஏற்படும் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை என தினமும் பலவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

"திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' என்ற விதிப்படி நாம் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பல தெய்வ வழிபாடு களைச் செய்கிறோம். கி.பி. ஆறாம் நூற்றாண் டில் ஜப்பானில் பல நிறுவனங்களுக்கு வெள்ளத்தால் சோதனை வந்தபோது, கோபா தெய்சி என்பவர் இடர் களையும் பிள்ளையார் என்னும் சிலையை நிறுவி அனைவரையும் வழிபடச் செய்தபோது, அவர் களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் தீர்ந்ததாக செய்தியுண்டு.

உலகம் முழுவதும் பரவியுள்ள பிள்ளையார் சிந்தனையால், நாம் வழிபடும் விநாயகப் பெருமானை சனாதனதர்மக் கடவுள் என்று போற்றுகிறோம். பிள்ளையாரை வழிபட்டால் தொல்லைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று பல மகான்கள் பாடி யிருக்கிறார்கள்.

விநாயகர் அகவல், விநாயகர் நான்மணி மாலை, விநாயகர் வெற்றிமாலை போன்ற சிறப்புடைய அருட்பாக்கள் உள்ளன. இதே வரிசையில், அவரது தம்பிக்கு "கந்த சஷ்டிக் கவசம்' இருப்பதுபோல, மக்களைக் காக்கும் சக்தி வாய்ந்த கவசமாக "பிள்ளையார் பிரசன்னம்' என்னும் துதி ஒன்று உள்ளது பலருக்கும் தெரியாத ரகசியம்.

pillaiyar

பிள்ளையார் பிரசன்னம் என்பது...

பிரசன்னமாதல் எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டதுதான் பிரசன் னம் என்னும் சிறப்புச் சொல். பிரசன்னம் என்றால் இறைவனை வெளிப்படுத்த பாடப்படும் பாடல் என்று பொருள். அதாவது இந்தப் பாடலைப் பாடினால் இறைவன் வெளிப்பட்டு நமது தலையாய பிரச்சினைகளுக்குத் தீர்வுதருவார் என்னும் நம்பிக்கை நிலவுகிறது.

பெருமாளைத் துயிலெழுப்புவதற்காக ஆழ்வார்கள் திருப்பள்ளி எழுச்சி பாடினார் கள். அதன்பிறகு அனைத்து பக்தர்களுக் கும் எழுந்தருளினார் என்பது வரலாறு. மாணிக்கவாசகர் அதிகாலையில் எம்பெருமானை "பள்ளி எழுந்தருளாயே' என்று பாடினார். அதேபோல தும்பிக்கை யானிடம் நம்பிக்கை வைத்து, நமக்கு ஏற்பட்ட கடன் மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க எழுந்தருளும்படி வேண்டுதல் செய்வதே ஆன்மிக மகத்துவம் வாய்ந்த பிள்ளையார் பிரசன்னம். இந்த துதியில் அந்த தெய்வத்திற்குரிய குணாதிசயங்கள், அவருடைய வடிவம், அருள் தரும் சக்தி ஆகியவையும், பாதிக்கப்பட்டோரின் துன்பநிலை, அதற்குத் தீர்வு போன்றவையும் தத்ரூபமாக வருகின்றன. இந்த தோத்திரப் பெருமையைக் காணும்போது, பிள்ளையார் அலங்கரிக்கப்பட்ட தோரணவாயில் முன்பாக அமர்ந்து அனைவருக்கும் அருள்தருவதால், இதில் வரும் பிள்ளையாரின் திருநாமம் தோரணப் பிள்ளையார் என்று வழக்கத்தில் உள்ளது.

க்ஷேத்திரப் பெருமை

இறைவனை தரிசிக்க தலங்களுக்குச் செல்லும் முன்னர் அத்தலத்தில் பெருமை யைக் கேட்டுக்கொள்வது நல்லது. அதன்படி இந்தப் பிள்ளையார் அமர்ந்திருக்கும் ஊரும், இறைவனே ஒரு இறைக்கவிக்கு முதல் சொல்லை எடுத்துக்கொடுத்த ஊர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. சேக்கிழார் பெருமான் 11-ஆம் நூற்றாண்டில் திருத் தொண்டர் புராணத்தைப் பாடத் தொடங்கும்முன்பு, எவ்வாறு தொடங்கலாம் என்று யோசித்தபோது சிவபெருமானே "உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தார். அத்தகைய பெருமை வாய்ந்த தலத்திலிலிருந்து வந்த சக்திவாய்ந்த பிள்ளையார் பிரசன்னத்தை நாமும் துதித்து, நம்மை எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். இது எளிமையான ஆறு துதிகளைக்கொண்டது.

"சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்

முக்தியின் பொருள்சொன்ன மூத்தக் கரிமுகவாய்

காரணமே புகழ்ப் பொருளே கடன்தீர் வீரனே

தோரண கணபதியே தோன்றுக என் முன்னே.' (1)

பொருள்: அகிலத்தை ஆட்சிசெய்யும் அந்த ஆதிபராசக்தியின் முதல் மகனாக அவதரித்து, வணங்குவோர் வாழ்வில் பல வெற்றிகளை வழங்கிடும் பிள்ளையாரே! மனிதர்கள் வாழ்க்கையில் இறைசக்தியின் பயன்களையும் ரகசியங்களையும் எடுத்துரைத்த மூத்த பிள்ளையே! யானையின் முகத்தைக் கொண்டிருக்கும் யோக வடிவினனே! தோரணவாயிலில் விற்றிருக்கும் பிள்ளையே! எங்கள் துன்பங்கள் அனைத் தையும் தீர்க்க எழுந்தருளவேண்டும்.

"திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்

திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளியின்றி நிற்கின்றோம்

கடன்பட்டு கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே

உடன்வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்.' (2)

பொருள்: வைகுண்ட வாசனின் இதயத்தில் அமர்ந்தவளாம் மகாலட்சுமி தேவியின் அருட்பார்வை கிடைத்துவிட்டபோதிலும், திரவியங்கள் என்று போற்றப்படும் செல்வங்கள் பதினாறும் எங்களைவிட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கின்றன. திருவாகிய தெய்வ அருளிருந்தும் எங்கள் வாழ்க்கை களையிழந்த நிலையில் உள்ளது. பலரிடம் பெற்ற கடன்களைத் தீர்க்க இயலாமல் துன்பங்களுக்கு ஆளாகி கலக்கத்தில் வாழ்கிறோம். எங்களைத் தங்கள் கனிவான பார்வையால் காத்தருள்வதோடு, உறுதுணை யாக இருந்து அதற்கான தீர்வுகளைக்கூறிட வேண்டுகிறோம்.

"பொருள்பெற்ற நேசர்களும் தனம்பெற்ற மாந்தர்களும்

கருணை சொல்தவிர்த்து கடுஞ்சொல் உதிர்க்கையிலே

கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்

விரயங்கள் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக.' (3)

பொருள்: இந்த கலிலியுகத்தில் எங்களுடன் நட்பு பாராட்டிப் பழகும் நண்பர்கள் பலரும், பணம், பொருளைப் பெற்றுக்கொண்ட மனிதர்கள் பலரும், அவற்றைப் பெறும்போது அன்புடன் பேசியவர்கள் திரும்பக் கேட்கும் போது கடுமையான சொற்களால் வசைபாடு கிறார்கள். யானை முகத்துடன் விளங்கும் பெருமானே! இந்த சமயத்தில் கண்மூடி தியானத்தில் இருக்காமல், தங்கள் கண்களைத் திறந்து இதற்குத் தீர்வு கூறவேண்டும். எங்கள் வாழ்வில் பொருள் நஷ்டங்கள் ஏற்பட்டுவிடாமல், கைதவறிச் சென்ற பொருட்களையும் எங்களிடம் கொண்டுவந்து சேர்த்திடவேண்டும்.

"மாதுளை மாங்கனியும் கோவை என ஐங்கனியும்

காதினிலே சேதி சொல்லிலி செவ்வாய் மதி சதுர்த்தியிலும்

சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்

தோரணனே செவ்வேளின் மூத்தவனே செவி சாய்ப்பாய்.' (4)

பொருள்: உமக்குப் பிடித்தமான மாதுளம் பழம், மாம்பழம், கோவைப்பழம், நாரங்கம் எனும் சாத்துக்குடிப் பழம், திராட்சைக் கொத்து ஆகியவற்றை உமக்கு முன்பாகப் படைத்து, உங்கள் காதுகளுக்குக் கேட்கும் படியாக எங்கள் துன்பங்களை, இடர்களைச் சொல்லிலி செவ்வாய்க்கிழமை, மதிசதுர்த்தி என்னும் வளர்பிறை சதுர்த்தி நாளிலும், இரவி காலம் என்னும் ஞாயிற்றுக்கிழமையிலும் உமது திருச்சந்நிதியில் பல்வேறு மலர் களைத் தூவி, மூன்று தீபங்கள் ஏற்றி வணங்குகிறோம். தோரணவாயிலில் அமர்ந்த பிள்ளையே! முருகப்பெருமானுக்குமுன் தோன்றியவரே! தாங்கள் காதுகொடுத்து எங்கள் துன்பங்களைக் கேட்டு அவற்றை அகற்றுவீராக.

"பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா

தோரண வாயிலமர்ந்து துவள்வோரைக் காப்பவரே

சக்தியின் மேகலையில் புத்திதரும் புகழ் மகவே

எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே.' (5)

பொருள்: பக்தர்களின் பசியாற உணவளிக்கும் அன்னபூரணி தேவியின் திருமகனாக இந்த பூவுலகில், அந்த சிவனாரின் குடும்பத்தின் பெருமையைப் பறைசாற்ற தோன்றியிருக்கும் பிள்ளையாரே! தோரணவாயிலிலின்முன் அமர்ந்துகொண்டு, மனம் சங்கடப்பட்டு, கடனை நினைத்து துவண்ட மனதோடு வருகின்ற பக்தர்களை அழைத்துக் காக்கும் குணமுடைய பிள்ளை யாரே! அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் விளங்குகிற பராசக்தியின் ஆலய முகப்பின் மடிப்பான மேகலையில், தாமரை பீடத்தில் அமர்ந்தபடி எங்களுக்கு சிறப்பான வாழ்வுதர அறிவுரை சொல்லும் புகழ்பெற்ற பிள்ளையாரே! கலிலியுகத்தில் ஏற்படும் வாழ்க்கைச் சூழலால் எட்டு திசை களிலும் கடன்களைப் பெற்றும், உதவிகள் பலவாகக் கொடுத்தும் அதைப் பெறமுடியாமல் தவிப்போர் தங்கள் திருமுன் நின்றுகொண்டிருக்கிறோம். எங்கள் பிரார்த் தனையை ஏற்று சரியான தீர்வு தரவேண்டும்.

"சந்திரன் ஒளிகரைத்து சரித்திரம் படைத்ததுபோல்

இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே

குன்றத்தூர் சக்தி பீடமதில் கடன்தீர கணநாதனாய்க்

கன்றுமுன் பசுவைப்போல் கனிமுகம் காட்டி நிற்பாய்.' (6)

பொருள்: கலைகளின் நாயகன் என போற்றப்படுபவரும், உலகைச் சுற்றி வருபவருமான சந்திரனுடைய ஒளியை தேய்ந்துபோகச்செய்து, அங்கே ஒரு புகழ் வரலாறு படைத்து நீதி உணர்த்தியவரே! தங்களை வழிபடாமல் ஆணவத்துடன் சென்ற தேவேந்திரனது தேர் அச்சை முறித்து அவனுக்கு புத்தி புகட்டி வழிபாட்டின் தத்துவம் சொன்ன முதற்கடவுளே! பிள்ளை யார் பெருமானே! செல்வமலிலி குன்றத்தூரில் அமைந்த புகழ்பெற்ற பராசக்தி பீடத்தில் எண்வகை திருமகளோடு தாமரைபீடத்தில், நான்கு வேதங்களே தூண்களாக அமையப் பெற்ற மகாமண்டபத்தில், பக்தர்களின் கடன்களைத் தீர்த்துவிடும் சக்திபெற்றவராக கோவில் கொண்டிருக்கிறாய். தங்களை நாடி பிரார்த்தனை செய்ய வந்திருக்கும் எங்கள்முன் தோன்றி, பசுவானது தான் ஈன்றெடுத்த கன்றைத் கண்டவுடன் எவ்வாறு மகிழ்ச்சியடைந்து கனிவான இன்முகம் காட்டிப் பாலூட்டுகிறதோ அதைப்போல தாங்களும் எங்களுக்கு மனநிறைவான தீர்வு தந்தருள வேண்டுகிறோம். அதற்காக தோரண கணேசரே, எங்கள் முன்பாக காலம் தாழ்த்தாமல் தோன்றியருள வேண்டுகிறோம்.

ஓடிடுமே ஊழ்வினைகள்...

"கணபதி பூஜை கைமேல் பலன்' என்று அவ்வை பிராட்டியார் அருளியிருக்கிறார்.

அவர் வாக்கின்படி, எளிமையான வழிபாடு களை ஏற்றுக்கொண்டு, தன்னை வந்து வழிபடுபவர்களுக்கு சுற்றி நிற்கும் வினைகளைக் களைந்துவிடுகிறார் விநாயகர். வினைகள் பற்றிக்கொண்டால், அவை பூவுலகில் வாழும்போது கடன்களாகவும், எதிரி களாகவும், சகோதர- சகோதரிகள், உறவினர் கள்கூட அன்பு பாராட்டாமல் நடப்பவர் களாகவும் மாறுகின்றன நிலை உருவாகி விடுகிறது.

காட்டு வழியே சென்றுகொண்டிருக்கும் ஒருவனை, கடுமையான பசியுடன் காத்துக்கொண்டிருந்த விலங்கு ஒன்று துரத்துகிறது. அவன் எதிரே காட்டு யானை வர, அதைக்கண்டு மிரண்டு விலகுகிறது துரத்தி வந்த விலங்கு. அங்கே விலங்கால் தான் கடுமையான இடர்களை விலக்க முடியுமென்று உணர்ந்துகொள்ளலாம். அதேபோல்தான் விலங்கு வடிவமாகவும் பிரணவ ரூபமாகவும் காட்சிதரும் பிள்ளை யாரின் கருணையால் நம் வாழ்க்கையில் உண்டாகும் கடன் பிரச்சினைகள் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளும் நம்மைவிட்டு விலகி ஓடிவிடும். அந்தப் பிள்ளையார் நம்முன் பிரசன்னமாக பிள்ளையார் பிரசன்னப் பாடல்களைப் படித்து நலம் பெறுவோம்.

செல்: 95511 84326

bala300421
இதையும் படியுங்கள்
Subscribe