நோய்க்கு மருந்துண்ணும்போது, தன்வந்திரி பகவானை மனதிலெண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகு விரைவில் நோய் குணமாகும்..
நீண்டகாலமாக பலரால் கேட்கப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அதுதான் "விதியை வெல்லமுடியுமா?' என்பது. "முடியும்' என்கிறார்கள் ஒரு சாரார். "முடியும் என்பதற்குப் பின்னால் முயற்சியும் இருக்கவேண்டும்' என்பது அவர்கள் கூற்று.
"முடியாது' என்பது இன்னொரு தரப்பினரின் வாதம். அவர்கள் ஊழ்வினை, பூர்வபுண்ணியம் என்பதை தங்கள் தரப்பு வாதத்திற்குத் துணைக்கு அழைக்கிறார் கள். "பிறப்பின்போதே அமர்ந்த கிரகங்கள்தான் ஒருவரின் வாழ்க்கையை வழி நடத்திச் செல்கின்றன. எது எப்போது நடக்கவேண்டுமென்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று' என்பது அவர்களின் வாதம்.
இவை ஒருபுறம் இருந்தாலும், கிரகப் பலன்களைச் சொல்லவந்த ஞானிகள், பரிகாரத்திற்கும் பக்கம் ஒதுக்கியதை மறுக்கமுடியாது. தொடக்கமென்று ஒன்றிருந்தால், அதற்கு எதிர்முனையில் முடிவொன்று இருக்கவேண்டுமென்பது நியதி. அந்தவகையில் நம்மையாளும் நவகிரகங்கள் நம்மை பாதிக்கும்போது, அதிலிருந்து மீள சொல்லப்பட்ட மார்க்கம்தான் பரிகாரம்.
வியாதி வருவது வி
நோய்க்கு மருந்துண்ணும்போது, தன்வந்திரி பகவானை மனதிலெண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகு விரைவில் நோய் குணமாகும்..
நீண்டகாலமாக பலரால் கேட்கப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அதுதான் "விதியை வெல்லமுடியுமா?' என்பது. "முடியும்' என்கிறார்கள் ஒரு சாரார். "முடியும் என்பதற்குப் பின்னால் முயற்சியும் இருக்கவேண்டும்' என்பது அவர்கள் கூற்று.
"முடியாது' என்பது இன்னொரு தரப்பினரின் வாதம். அவர்கள் ஊழ்வினை, பூர்வபுண்ணியம் என்பதை தங்கள் தரப்பு வாதத்திற்குத் துணைக்கு அழைக்கிறார் கள். "பிறப்பின்போதே அமர்ந்த கிரகங்கள்தான் ஒருவரின் வாழ்க்கையை வழி நடத்திச் செல்கின்றன. எது எப்போது நடக்கவேண்டுமென்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று' என்பது அவர்களின் வாதம்.
இவை ஒருபுறம் இருந்தாலும், கிரகப் பலன்களைச் சொல்லவந்த ஞானிகள், பரிகாரத்திற்கும் பக்கம் ஒதுக்கியதை மறுக்கமுடியாது. தொடக்கமென்று ஒன்றிருந்தால், அதற்கு எதிர்முனையில் முடிவொன்று இருக்கவேண்டுமென்பது நியதி. அந்தவகையில் நம்மையாளும் நவகிரகங்கள் நம்மை பாதிக்கும்போது, அதிலிருந்து மீள சொல்லப்பட்ட மார்க்கம்தான் பரிகாரம்.
வியாதி வருவது விதி என்று எடுத்துக்கொண்டால், மருந்து உண்டு நிவாரணம் தேடுவது விதியை வெல்லும் வழி. விதியை வெல்லும் வழியை இறைவழிபாட்டின்மூலமும், மருந்துகளின் துணையோடும் வெல்ல முயன்றிருக்கிறது மனித இனம்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பார்கள். மனிதனுக்குத் தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும் ஒன்று.
அதனால்தான்-
"கலையாத கல்வியும், குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும், கன்றாத வளமையுங்
குன்றாத இளமையும், கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும்...'
கேட்டு அம்பிகையிடம் வேண்டுதல் வைக்கிறார் அபிராமிபட்டர்.
அப்படி "கழுபிணி இல்லாத உடல்' என்னும் ஒன்றைத் தரவல்லவர் தன்வந்திரி பகவான். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்று சொல்வதுபோல், மருத்துவக் கடவுள் தன்வந்திரி பகவான்.
அமிர்தம் பெறுவதற்காக, தேவர் களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலி-ருந்து தோன்றியவர் தன்வந்திரி பகவான். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு அவதரித்தவர். நோய்க்கு மருந்துண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதிலெண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.
அதுமட்டுமல்ல; மருந்துண்பதற்கு நேரமும் இருக்கிறது. மனித இனத் திற்கு மகான்கள் கொடுத்த மகத்தான கொடைதான் பஞ்சாங்கம். அது நல்லநேரம், கெட்ட நேரத்தைச் சொல்வதோடு நின்றுவிடவில்லை. இந்த காலக் கணிதத்தின் வாயிலாக சகலமும் அறியலாம்.
பஞ்சாங்கம் என்ற ஆழ்கடலி-ருந்து, நாம் எடுக்க நினைக்கும் முத்துதான், அமிர்த கடிகை அல்லது அமிர்த நாழிகை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், வியாதிக்கு மருந் துண்ணும் நேரம்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள். பொதுவாக நாளொன்றுக்கு ஒரு நட்சத்திரம்வீதம் உதயமாகிறது. ஒரு நட்சத்திரம் ஒரு நாளில் தோராயமாக 60 நாழிகைக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ நடப்பிலிருக்கும். ஒரு நாழிகையென்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின் தொடக்கம் சூரிய உதயத்திலிருந்து தொடங்குகிறது.
அந்தவகையில் அமிர்த நாழிகை யைக் கணக்கிட அன்றைய சூரிய உதயம் தெரிந்திருக்கவேண்டும். அதிலிருந்து அமிர்த நாழிகை தொடங்கும் நேரத்தை, மணிக்கணக்காக மாற்றி அதைப் பின்பற்றவேண்டும்.
அவ்வாறு சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடையமுடியும் என்பது கவி காளிதாசர் எழுதிய "உத்திர காலாமிர்தம்' என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.
மருந்துண்ணும் நேரம் பெரும்பாலும் நான்கு நாழிகைக்குக் குறைவில்லாமல் இருக்கிறது. எனவே அமிர்த நாழிகை தொடக்கம் முதல் முடிவுவரை ஒன்றரை மணிநேரம் இருக்கிறது. முன்பின் சூரிய உதயத்தை ஒதுக்கிவிட்டால்கூட, அதன் மத்திம நேரத்தில் மருந்துண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத் தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவசரகால நிவாரணத்திற்கு இது பொருந்தாது.
ஒரு பாம்பு தீண்டிவிட்டது. அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக்காகக் காத்திருக்க முடியாது. அதேபோல் இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் மருந்து எடுத்துக்கொள்ளும் வழக்கமிருக் கிறது. இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்துண்டால் அந்த நோய் பூரணமாக குணமாகும்.
மருந்துண்ணும் நேரம்
நோய்கள் குணமாக மருந்துண்ண வேண்டிய அமிர்த நாழிகை நேரம் வருமாறு:
அஸ்வினி: 21 முதல் 25 நாழிகைக்குள்.
பரணி: 30 முதல் 34 நாழிகைக்குள்.
கார்த்திகை: 50 முதல் 54 நாழிகைக்குள்.
ரோகிணி: 15 முதல் 18 நாழிகைக்குள்.
மிருகசீரிடம்: 30 முதல் 34 நாழிகைக்குள்.
திருவாதிரை: 40 முதல் 44 நாழிகைக்குள்.
புனர்பூசம்: 14 முதல் 18 நாழிகைக்குள்.
பூசம்: 16 முதல் 20 நாழிகைக்குள்.
ஆயில்யம்: 40 முதல் 44 நாழிகைக்குள்.
மகம்: 20 முதல் 24 நாழிகைக்குள்.
பூரம்: 30 முதல் 34 நாழிகைக்குள்.
உத்திரம்: 33 முதல் 37 நாழிகைக்குள்.
ஹஸ்தம்: 7 முதல் 11 நாழிகைக்குள்.
சித்திரை: 16 முதல் 24 நாழிகைக்குள்.
சுவாதி: 22 முதல் 26 நாழிகைக்குள்.
விசாகம்: 20 முதல் 24 நாழிகைக்குள்.
அனுஷம்: 14 முதல் 18 நாழிகைக்குள்.
கேட்டை: 31 முதல் 35 நாழிகைக்குள்.
மூலம்: 14 முதல் 18 நாழிகைக்குள்.
பூராடம்: 10 முதல் 14 நாழிகைக்குள்.
உத்திராடம்: 14 முதல் 18 நாழிகைக்குள்.
திருவோணம்: 20 முதல் 24 நாழிகைக்குள்.
அவிட்டம்: 14 முதல் 18 நாழிகைக்குள்.
சதயம்: 20 முதல் 24 நாழிகைக்குள்.
பூரட்டாதி: 10 முதல் 14 நாழிகைக்குள்.
உத்திரட்டாதி: 18 முதல் 22 நாழிகைக்குள்.
ரேவதி: 12 முதல் 16 நாழிகைக்குள்.
இந்த காலநேரத்தில் மருந்துண்டால், நோய்கள் விரைவில் பூரண குணமடையும் என்பது நமது சித்தர்கள் கண்ட ராஜ வைத்தியமாகும்.
செல்: 98425 50844