விருச்சிக லக்னம் தசா புக்திப் பரிகாரங்கள்! (8) -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/scorpio-lagna-dasa-enlightenment-remedies-prasanna-astrologer-i-anandhi

தாய், தந்தையிடம் அதிக அன்புகொண்ட நீங்கள் அன்பைக்கூட கோபமாகத்தான் வெளிப்படுத்துவீர்கள். அழகான களத்திரத்திரம் அமையப் பெற்றவர்கள். ஜீவகாருண்யம் உள்ளவர். தயாள குணமுடையவர். சுக போகஙகளை அனுபவிப்பதில் ஆர்வம் மிக்கவர். கம்பீரமாக பேசக் கூடியவர். எதற்கும் அஞ்சாதவர். பேசி காரியம் சாதிப்பதில் வள்ளவர். வீடு, வாகன யோகம் அமையப்பெற்றவர். உஷண தேகம் உள்ளவர். ஆன்மிக நாட்டம் உண்டு. எப்படியெல்லாம் கோபப்படுவது என்பதையும் உங்களிடம் இருந்துதான் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டும். இனி தசா புத்திப் பலன்களைக் காணலாம்.

செவ்வாய் தசை

செவ்வாய் ராசி மற்றும் ஆறாம் அதிபதி. சுய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று தசை நடத்தினால் நல்ல உத்தியோகம் அமையும். கடன் பெற்று தொழில் துவங்குவார்கள். கடனால் முன்னேற்றம் உண்டு. கடன் வாங்கி சொத்து வாங்குவார்கள். வாங்கிய கடனை திரும்ப செலுத்துவார்கள். செவ்வாய் அசுப பலம் பெற்று தசை நடத்தி னால் வாழ்நாள் முழுவதும் தொடரும் கடன் இருக்கும். உற்றார், உறவினர், நண்பர்களே எதிரியாக இருப்பார்கள்.

ஜாமின் பெறுவதாலும், கொடுப்பதாலும் பொருளாதார பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவார்கள். நிலையான வேலை, உத்தியோகம் இருக்காது. இவருக்கு கேட்ட இடத்திலும், கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும். இவர்கள் இருக்கும் இடம் தேடி கடன் பணம் வரும். லக்னாதிபதியே ஆறாம் இடத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைக் கும் தானே காரணமாக இருப்பார்கள். தங்களுடைய நிதானமற்ற ஆசையால் கடன் வலையில் சிக்குவார்கள். அந்தஸ்து, ஆடம்பரம் என சுய செலவால் கடனை அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையை தட்டும்போது மட்டுமே கடனை பற்றிய சிறு கலக்கம் ஏற்படும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடவேண்டும்.

குரு தசை

விருச்சிகத்திற்கு குரு 2, 5-ஆம் அதிபதி. குரு சுப பலம்பெற்று தசை நடத்தி

தாய், தந்தையிடம் அதிக அன்புகொண்ட நீங்கள் அன்பைக்கூட கோபமாகத்தான் வெளிப்படுத்துவீர்கள். அழகான களத்திரத்திரம் அமையப் பெற்றவர்கள். ஜீவகாருண்யம் உள்ளவர். தயாள குணமுடையவர். சுக போகஙகளை அனுபவிப்பதில் ஆர்வம் மிக்கவர். கம்பீரமாக பேசக் கூடியவர். எதற்கும் அஞ்சாதவர். பேசி காரியம் சாதிப்பதில் வள்ளவர். வீடு, வாகன யோகம் அமையப்பெற்றவர். உஷண தேகம் உள்ளவர். ஆன்மிக நாட்டம் உண்டு. எப்படியெல்லாம் கோபப்படுவது என்பதையும் உங்களிடம் இருந்துதான் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டும். இனி தசா புத்திப் பலன்களைக் காணலாம்.

செவ்வாய் தசை

செவ்வாய் ராசி மற்றும் ஆறாம் அதிபதி. சுய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று தசை நடத்தினால் நல்ல உத்தியோகம் அமையும். கடன் பெற்று தொழில் துவங்குவார்கள். கடனால் முன்னேற்றம் உண்டு. கடன் வாங்கி சொத்து வாங்குவார்கள். வாங்கிய கடனை திரும்ப செலுத்துவார்கள். செவ்வாய் அசுப பலம் பெற்று தசை நடத்தி னால் வாழ்நாள் முழுவதும் தொடரும் கடன் இருக்கும். உற்றார், உறவினர், நண்பர்களே எதிரியாக இருப்பார்கள்.

ஜாமின் பெறுவதாலும், கொடுப்பதாலும் பொருளாதார பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவார்கள். நிலையான வேலை, உத்தியோகம் இருக்காது. இவருக்கு கேட்ட இடத்திலும், கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும். இவர்கள் இருக்கும் இடம் தேடி கடன் பணம் வரும். லக்னாதிபதியே ஆறாம் இடத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைக் கும் தானே காரணமாக இருப்பார்கள். தங்களுடைய நிதானமற்ற ஆசையால் கடன் வலையில் சிக்குவார்கள். அந்தஸ்து, ஆடம்பரம் என சுய செலவால் கடனை அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையை தட்டும்போது மட்டுமே கடனை பற்றிய சிறு கலக்கம் ஏற்படும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடவேண்டும்.

குரு தசை

விருச்சிகத்திற்கு குரு 2, 5-ஆம் அதிபதி. குரு சுப பலம்பெற்று தசை நடத்தினால் எவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பவர்களும் நல்ல முன்னேற்றமான பலன்களை அனுபவிப்பார்கள். இது மிகப்பெரிய அதிர்ஷ்ட அமைப்பு. மத்திம வயதில் குரு தசை வந்தால் பாக்கியவான்கள். வாழ்வின் இறுதிவரை செட்டிலாகத் தேவையான வருமானம் உண்டாகும். உழைப்பில்லாத செல்வம், வெறும் வாய் ஜாலம், வார்த்தை ஜாலத்தால் பொருள் ஈட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம், ஜோதிடம், புரோகிதம், ஆசிரியர், கணக்களார், வங்கிபணி போன்ற துறையில் தனி முத்திரை பதிப்பார்கள். நல்ல குடும்பம், பொருளாதார வளர்ச்சி, பிள்ளைகளால் மகிழ்ச்சியடையும் சம்பவம் என வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குலதெய்வக் கோவிலில் வாக்கு சொல்பவர்கள். குலதெய்வம் இவர்கள் நாவில் வந்து பேசும். வாக்கு பலிதம் உண்டு. பஞ்சாயத்திற்கு நியாயத் தீர்ப்பு வழங்குபவர்கள். அன்னதானம் வழங்கும், வழங்கிய கௌரவப் பரம்பரையில் பிறந்தவர்கள். முதல் குழந்தை பிறந்தபிறகு அதிர்ஷ்டம் பன்மடங்காகும். பூர்வீகத்திலேயே சுயதொழில், குலத்தொழில் நடத்துவார்கள். சிறிய உழைப்பில் பெரும் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து, தாத்தாவழி உயில் சொத்தை முழுமையாக அனுபவிப்பவர்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். குரு அசுப பலம்பெற்று தசை நடத்தினால் பிறரை ஏமாற்றி பிழைப்பவர்கள். நம்பிக்கை துரோகிகள். நிலையற்ற வருமானம்.

வறுமை உண்டு. குடும்பத்தில் மதிப்பு, மரியாதை இருக்காது. தீய சாகவாசத்தால் குலகௌரவத்தை காற்றில் பறக்க விடுபவர்கள். கெட்ட எண்ணம் மிகுந்தவர்கள். பிள்ளைகளால் இவர்களுக்கும் இவர்களால் பிள்ளைகளுக்கும் பயன் கிடையாது.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமையும் ஏகாதசி திதியும் இணைந்த நாளில் மகா விஷ்ணுவை வழிபடவேண்டும்.

ff

சனி தசை

சனி விருச்சிகத்திற்கு 3, 4-ஆம் அதிபதி. முயற்சிஸ்தான அதிபதி, உப ஜெய ஸ்தான அதிபதி. சகாய ஸ்தான அதிபதி. சுக ஸ்தான அதிபதி. சனி சுப பலம்பெற்று தசை நடத்தினால் வாழ்வியல் மாற்றம், முன்னேற்றம் தரும் இடப்பெயர்ச்சி நடக்கும். முறையான பாகப்பிரிவினை, உடன்பிறந்தவர்கள் அனுசரனை இருக்கும். தாய், தாய்வழி உறவுகளால் சகாயமான பலன் உண்டு. ஆரோக்கியத் தொல்லைகள் சீராகும். முயற்சியால் உழைப்பால் உயர்ந்த நிலையை அடைவார்கள். ஜாதகர் தைரியமானவர். பலசாலி. வீரியம் உடையவர். தெய்வ நம்பிக்கை நிறைந்தவர். சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பொருட்கள் சேர்க்கை, போக சுகம் உண்டு. லக்ன பாவத்தின் பாவத் பாவம் என்பதால் தொட்டது துலங்கும். சனி அசுப பலம்பெற்று தசை நடத்தினால் சகோதரர்கள் உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். வீரியம் குறைவு, செவித்திறன் குறைவு உண்டு. எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்வார்கள். அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். பாகப்பிரிவினை மற்றும் ஆவணங்கள் தொடர்பான மன உளைச்சல் இருக்கும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் சிவப்பு திரியில் நெய்தீபம் ஏற்றி முருகனை வழிபடவும்.

சுக்கிர தசை

சுக்கிரன் விருச்சிக லக்னத்திற்கு 7, 12-ஆம் அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி மற்றும் விரயாதிபதி. சுக்கிரன் பலம்பெற்று தசை நடத்தினால் உரிய வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளால் சுப பலன் உண்டு. சமுதாய அந்தஸ்து நிறைந்த இடத்தில் சம்பந்தம் அமையும். சுக்கிரன் அசுப பலம்பெற்று தசை நடத்தினால் ஜாதகர் நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாழ்க்கைத் துணையால் நிறைய விரயங்களை சந்திப்பார். வரவுக்கு மீறி செலவு செய்வார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள். கடுமையான திருமணத் தடையை ஏற்படுத்தும். பலருக்கு திருமணம் நடப்பதில்லை. திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனமாக வாழ்க்கைத் துணையை நம்பியே பிழைக்கிறார்கள். சம்பந்திகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள். பல இடங்களில் சம்பந்திகள் சண்டை தம்பதிகளை பிரித்துவிடுகிறது. இல்லற இன்பம் குறையும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை சுக்கிர ஓரையில் விநாயகரை வழிபடவேண்டும்.

புதன் தசை

புதன் விருச்சிகத்திற்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதி. புதன் சுபபலம் பெற்று தசை நடத்தினால் விபரீத ராஜ யோகம் உண்டாகும். எட்டாமிடம் என்பதால் மறைமுக பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல் என பல வகைகளில் பொருள் குவியும். செல்வம் பல வகைகளில் சேரும். பெரும்பாலானோருக்கு மனைவிமூலம் சொத்து, சம்பாத்தியம் கிடைத்து யோகம் உண்டாகும். மனைவி மூலம் சொத்து என்றால் மாமனார் மூலம் உதவி, சொத்து பாகப்பிரிவினை, உயில், தொழில், வியாபாரம் என்று பணம் சேரும். மேலும் தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, வட்டி, வரவு, செலவு, ஷேர் மார்க்கெட், கட்டட வாடகைகள், புரோக்கர், கமிஷன் ஏஜென்சி என்று எத்தனையோ நூற்றுக்கணக்கான வகையில் தன வரவு உண்டாகும். உபரியாகப் பணம் சேமிப்பு உருவாகும். வழக்கு வெற்றி மறுதிருமண யோகம் ஏற்படும். அஷ்டமாதிபதி அசுப பலம்பெற்றால் கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் இருப்பு இல்லாத நிலை ஏற்படும். சிலருக்கு தீராத நோய், விபத்து, கண்டம், சர்ஜரி போன்ற பாதிப்பும் ஏற்படும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் வில்ல மாலை அணிவித்து சிவனை வழிபடவேண்டும்.

சந்திர தசை

சந்திரன் விருச்சிகத்திற்கு 9-ஆம் அதிபதி. பாக்கியாதிபதியே பாதகாதிபதி என்ப தால் சந்திர தசை புக்தி காலங்களில் சுபமும் அசுபமும் கலந்தே நடக்கும். லக்னாதிபதி செவ்வாயின் நீச வீடு கடகம் என்பதால் சந்திரன் தன் தசை புக்தி காலங்களில் விருச்சிகத்திற்கு கடுமையான பாதகத்தை தருகிறது. ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி காலங்களில் சந்திர தசை நடக்கும் விருச்சிக லக்னத்தினர் மிகுதியான கர்ம வினைப் பதிவை அனுபவிக்கிறார்கள். ஏழில் சந்திரன் உச்சம்பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில் திருமண வாழ்க்கை இருக்கிறது. பாக்கிய ஸ்தானம் வலிமை இழப்பதால் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குறைவு படும். சந்திர தசை காலங்களில் விருச்சிக லகனத்தவரின் தாய், தந்தையின் ஆரோக்கியம் பாதிகப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது.

பரிகாரம்

சந்திர தசையால் பாதகத்தை அனுபவிப்பவர்கள் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியை வழிபட மாற்றமும் ஏற்றமும் உண்டு.

சூரிய தசை

சூரியன் விருச்சிகத்திற்கு பத்தாம் அதிபதி. தொழில் ஸ்தான அதிபதி. சூரியன் சுப பலன்பெற்று தசை நடத்தினால் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டகரமான தொழில் அமையும். நிர்வாகத் திறன், தலைமை தாங்கும் பண்பு உயரும். தொழில் நுட்பம் அறிந்து தன் கையே தனக்கு உதவி என பிறரை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேறுவார்கள். தொழிலில் அதீத மேன்மை உண்டு.

அரசாளும் யோகம், அரசு உத்தியோகம் உண்டு. பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில் தான் தனித்து இயங்கி பலருக்கு வேலை தரும் இயல்பில் இருப்பார்கள். நீடித்த வருமானமும், தொழில் செய்யும் இடங்களில் நல்ல மரியாதையும் கௌரவமும் ஜாதகருக்கு கிடைக்கும். சூரியன் அசுப பலம்பெற்று தசை நடத்தினால் ஜாதகர் சொந்த தொழில் செய்தாலும் தொழில் முன்னேற்றம் பிறரது மரியாதை பெறுவது கடினமானதாக அமையும், உழைப்பு முதலீட்டிற்கு ஏற்ற வருமானத்தை பெற்றுத்தராது. நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகம் அமையாது.

பரிகாரம்

தினமும் காலை 6-7 மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவேண்டும். ராகு தசை நடப்பவர்கள் பிரம்ம துர்க்கையை வழிபடவேண்டும்.கேது தசை நடப்பவர்கள் பஞ்சமுக விநாயகரை வழிபட வேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406

bala040823
இதையும் படியுங்கள்
Subscribe