கிரகப் பெயர்ச்சிகளில் மிக அதிகபட்ச எதிர் பார்ப்பினை உண்டாக்குவது சனிப்பெயர்ச்சியாகும்.
சனிபகவானைப் பற்றி ஆயுள்காரகன் என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட முடியுமென்றாலும், நீதி, நியாயம், நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கெல்லாம் அடிப்படையானவர் என்றும் சொல்லவேண்டும்.
ஒருவருடைய கடந்த ஜென்மத்தின் கர்ம வினைகளுக் கேற்ப அவர்களுக்குரிய பலன்களை வழங்கிடக்கூடியவர் சனிபகவான்.
ஒருவரை ஆட்சி அதிகாரத்தில் அமரவைப்பவரும் சனிபகவான்தான். சிறைவாசத்தை அடைய வைப்பவரும் சனிபகவான்தான். ஒரு ராசிக்குள் இரண்டரை ஆண்டுகள் அவர் சஞ்சரிப்பதால், அந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் அதிகபட்சமான நன்மைகளையோ அல்லது பாதகமான பலன்களையோ ஒரு ஜாதகருக்கு வழங்கக்கூடியவராக இருக்கிறார்.
எதிர்வரும் 17-1-2023 அன்று திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார்.
சனிபகவான் கும்ப ராசிக்குள் ஆட்சியாக சஞ்சாரம் செய்யவிருப்ப தன் காரணமாக மனித குலத்தில் நிறையவே மாற்றங்கள் நிகழவிருக் கிறது. நேற்றுவரை நன்றாக இருந்த வர்களுக்கு இதன்பிறகு எதிர்மறையான பலன்கள் உண்டாகலாம். நேற்றுவரை பாதகமான பலன் களை அனுபவித்து வந்தவர் களுக்கு நன்மையான பலன்கள் உண்டாகலாம்.
சனிபகவான் கொடுப் பதையும் எவராலும் தடுத்திட முடியாது; கெடுத்திட நினைத் தாலும் எவராலும் தடுத்திட முடியாது.
கிரகங்களில் அனைவரும் பயந்து வணங்கிடக்கூடியவராக இருப்பவர் சனி பகவான். அவருடைய பார்வைகள் பாதகத்தை உண்டாக்குமென்றும், அவர் சஞ்சரிக்கும் பாவகம் நன்மையடையுமென்றும் கூறப்படு கிறது. பொதுவாக, சனிபகவானின் பார்வைகளை கொடியதாகக் கணக்கிட்டுவிட முடியாது.
அதற்குக் காரணம், பொதுவாக பாவ கிரகங்கள் 3, 6, 11-ஆம் இடங்களில் அமரும்போது நன்மைகளைச் செய்வார்கள் என்பது விதி. அதே போல் ஒவ்வொரு ராசியினருக்கும் 3, 6, 11-ஆம் இடங்களைப் பார்வை யிடும்போது அந்த இடங்களுக்கும் நன்மையான பலன்கள் உண்டாகும் என்பதும் விதி. சனிபகவான் சஞ்சரிக்கும் இடத்தை வைத்தும் அவர் பார்வையிடும் இடங்களையும் சேர்த்தே நாம் பலன் களைக் காணவேண்டும். அந்த ரீதியில் எதிர்வரும் சனிப்பெயர்ச்சி பன்னிரண்டு ராசியினருக்கு எத்தகைய பலன்களை வழங்கப்போகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
மேஷம்
இதுவரையில் உங்கள் மேஷ ராசிக்கு தொழில் ஸ்தானமெனும் பத்தாம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான், அவர் அமர்ந்த இடத்திற்கு வழங்கிய நற்பலனை விட அவர் பார்த்த இடங்களுக்கு வழங்கிய பாதகமான பலன்களே அதிகம்.
உங்கள் ராசிக்கு அயன, சயன, விரய ஸ்தானத்தின்மீது அவரின் பார்வை பதிந்த தால் உறக்கம் என்பது மட்டுமல்ல; படுக்கை சுகமும் உங்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். உங்கள் ராசிக்கு சுகஸ்தானம் மற்றும் மாதுர்ஸ்தானத்தின்மீது அவருடைய பார்வை பதிந்ததால் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் அலைச்சல், சுகத்திற்குக் கேடு, தாயாரின் உடல்நிலையில் சங்கடம் என்று மன நிம்மதியை இழந்திருப்பீர்கள். ஏழாமிடமான களத்திரம் மற்றும் நட்பு ஸ்தானத்தின்மீது சனிபகவானின் பார்வை பதிந்ததால் வாழ்க்கைத் துணையுட னான நெருக்கம் இல்லாமல் போயிருக்கும். சண்டை, சச்சரவுகளும் உண்டாகியிருக்கும். நண்பர்கள் உங்களைவிட்டு விலகிச் சென்றிருப்பார்கள்.
மகரச்சனி உங்கள் முன்னேற்றத்திற்குத் தடைகளையும், உடல் உபாதைகளையும், செல்வாக்கு, கௌரவம் போன்றவற்றிற்கு பங்கத்தையும், வீட்டிலும் வெளியிலும் பிரச்சினைகளையும், பணப் பற்றாக் குறையையும், வருமானத்தில் சிரமத்தையும் வழங்கிவந்து உங்களை ஆட்டிப் படைத் திருப்பார்.
கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நீங்கள் பட்ட சங்கடங்கள் கொஞ்சமா? நஞ்சமா? உங்களைப் பாடாய்ப்படுத்திய பிரச்சினைகளையெல்லாம் எப்படி சமாளித்து வந்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் வருமானத்தில் சங்கடம், குடும்பத்தில் பிரச்சினை, உடலில் சங்கடம், மனதில் துயரம், கண்டம் என்று அவதிப்பட்ட உங்களுக்கு 17-1-2023 முதல் ராசிக்கு 11-ஆம் வீடான, லாபஸ்தானமான கும்ப ராசியில் பிரவேசம் செய்யவிருக்கிறார் சனிபகவான்.
சனிபகவான் 12 வீடுகளில் சஞ்சரித்து வரும்போது, அவர் சஞ்சரிக்கும் வீடுகளுக்கேற்ப ஒவ்வொரு ராசியினருக்கும் பலன்களை வழங்குவார் என்றா லும், எல்லா ராசியினருக்கும் 3, 6, 11-ஆம் வீடுகளில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த வீட்டிற்குடைய பலன்களை யோகப் பலன்களாக வழங்கி, வாழ்வின் மேல்மட்டத்திற்கு அந்த ராசியினரைக் கொண்டுசெல்வார் சனிபகவான்.
கிரகங்களில் குருபகவான் அமரும் வீடு பலன் தராது. அவர் பார்க்கும் வீடுகள் பலன் தரும். ஆனால், சனிபகவான் எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீட்டிற்குரிய பலன்களை அவர் நற்பலன்களாக வழங்குவார்.
அவர் பார்க்கும் வீடுகளுக்குரிய பலன்களை பாதகமான பலன்களாக வழங்குவார் என்பது பொதுவான விதி. என்றாலும், அவர் பார்க்கும் பார்வைகளில்கூட, ஒவ்வொரு ராசியினருக்கும் அவர்கள் ராசியில் இருந்து மூன்று, ஆறு, பதினொன் றாம் வீடுகளைப் பார்த்திடும்போது, அந்த வீடுகளுக்குரிய பலன்களையும் யோகப் பலன்களாகவே வழங்குவார் சனிபகவான்.
உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத் திற்கும், லாப ஸ்தானத்திற்கும் உரியவர் சனிபகவான். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்து, அவர் அமர்ந்த இடத்திற்கு வழங்கிய நற்பலன்களைவிட பார்த்த இடங்களுக்கு வழங்கிய பாதகமான பலன்களே அதிகமாகும்.
இந்த நிலையில் 17-1-2023 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகும் சனிபகவான் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கப்போகிறார். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, தொட்டவற்றில் வெற்றி, லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி, புதிய நட்புகளால் ஆனந்தம், அபிமானத்திற்குரியவரால் மகிழ்ச்சி என்ற நிலையையும்; பொன், பொருள் சேர்க்கையையும் காணப்போகிறீர்கள். திருமணமாகாதவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் தேடிவரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும். ஒருசிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் என்று வாழ்க்கையில் நல்லவிதமான மாற்றங் கள் ஏற்படும். அதனால் நன்மைகளை அடைவீர்கள். லாபமும் யோகமும்கூடி பணம், பதவி என்று உங்கள் வாழ்க்கை செழிப்பாகும்.
சனிபகவானின் 11-ஆம் இட சஞ்சாரத்தி னால் இத்தகைய சிறப்பான பலன்களை நீங்கள் காணப்போகும் நேரத்தில், உங்கள் ஜென்ம ராசியையும், பஞ்சம மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடப் போகிறார்.
தனது மூன்றாம் பார்வையால் உங்கள் ஜென்ம ராசியைப் பார்க்கும் சனி பகவானால் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல், அதிகபட்ச உழைப்பு உண்டாகும். அதன்காரணமாக உடல்நலனில் சங்கடம் உண்டாகும். ஒருசிலர் பணி நிமித்தமாக குடும்பத்தைவிட்டு வெளியூர் செல்லும் நிலையும் உண்டாகலாம். தீய நண்பர்களின் சேர்க்கையும், அதனால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்கும் நிலையும் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை அவசியம்.
தனது ஏழாம் பார்வையால் உங்கள் பூர்வபுண்ணிய, புத்திர ஸ்தானத்தைப் பார்க்கும் சனிபகவானால் புத்திரர்- புத்திரி களால் வேதனைளை சந்திக்கவேண்டிய நிலையும், குடும்பத்தில் குழப்பமும், பூர்வீக சொத்துகளில் பிரச்சினையும், சண்டை, சச்சரவுகளும் உண்டாகலாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழப்பத்தில் சிக்கித் தவிப்பீர்கள். வேதனை தரும் நிகழ்ச்சிகளால் அதிர்ச்சிக்கு ஆளாகலாம்.
தனது பத்தாம் பார்வையால் உங்கள் ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கும் சனி பகவானால் உடல்நலனில் அக்கறை செலுத்தவேண்டியதாக இருக்கும். பல்வேறு இடர்ப்பாடுகளும் ஏற்படும். இவையெல்லாம் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவானின் ஸ்தானப் பலனும், பார்வைகளால் உண்டாகும் பலன்களும் ஆகும். என்றாலும், 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவானால் உங்கள் பொருளாதாரநிலை மிகவும் சிறப் பாக இருக்கும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு லாபாதிபதி என்பதால் உங்களைப் பாதுகாக்க வேண்டியவரும் அவரே; உங்களுக்கு லாபத்தை வழங்கவேண்டியவரும் அவரே ஆகிறார். அதனால், உங்கள் தலைக்கு வரும் துன்பங்களையெல்லாம் தலைப்பாகையோடு போகுமளவுக்கு செய்துவிடுவார்.
இதேநேரத்தில் மற்ற கிரகங் களின் சஞ்சார நிலைகளும், தசா புக்தியும், லக்ன பாவகங்களும் கவனிக்கப்படவேண்டும். அவற்றின் வழியாகவும் பலன்களில் நன்மையும் சங்கடமும் உண்டாக வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம்
சனிபகவானின் அருள் பரிபூரணமாகக் கிட்டுவதற்கு ஒருமுறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரை அர்ச்சித்து வணங்கிவாருங்கள். உங்கள் சங்கடங்கள் விலகும்; நன்மைகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
இதுவரையில் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமெனும் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான், அவர் அமர்ந்த இடத்துடன் பார்த்த இடங்களுக்கும் சேர்த்து நற்பலன்களையே உங்களுக்கு வழங்கிவந்தார்.
மகரச்சனிக் காலம் உங்கள் வாழ்க்கை யில் சங்கடங்களைவிட நன்மைகளுக்குரிய காலமாகவே இருந்தது. எதிர்வந்த சங்கடங்களை சமாளித்து வெற்றிபெற்று வந்தீர்கள்.
உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் அவரின் பார்வை பதிந்ததால் பிரச்சினைகளையெல்லாம் சமாளித்து உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில் லாபம் கண்டிருப்பீர்கள். எந்த இடத்திலும் அவமானப்படாத வகையில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுக்கு முன்னேற் றத்தை வழங்கியது.
உங்கள் ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானத் தின்மீது அவருடைய ஏழாம் பார்வை பதிந்ததால், கடுமையான நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து முன்னேற்றம் கண்டுவந்தீர்கள். என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சல் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும். உங்கள் செயல்கள் அனைத்திலும் தைரியமாக செயல்பட்டு வெற்றியடைந்திருப்பீர்கள்.
ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தின்மீது சனிபகவானின் பத்தாம் பார்வை பதிந்ததால் எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் சமாளித்து வந்தீர்கள், உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் அகன்று ஆரோக்கியத்துடனும் மன வலிமையுடனும் செயல்பட்டிருப்பீர்கள். வழக்குகள், வம்பு விவகாரங்கள் எல்லாவற்றிலும் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளே உண்டாகி யிருக்கும்.
மகரச்சனி உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கியதென்றே சொல்லவேண்டும்.
இதற்கெல்லாம் மேலாகவும் நன்மைகள் நடந்திருக்குமென்றால் அது உங்கள் பூர்வபுண்ணியத்தால் உண்டானதென்றே சொல்லவேண்டும். அல்லது உங்கள் தசாபுக்தி நன்றாக இருந்திருக்கவேண்டும்.
சனிபகவான் உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவர் என்பதுடன், உங்களுக்கு அவரே பாக்கியாதிபதியும், தொழில் மற்றும் ஜீவனத் திற்கு அதிபதியுமாவார்.
இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கத் தின்படி 17-1-2023 அன்று உங்கள் ராசிக்கு 10-ஆம் வீடான கும்ப ராசியில், உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் ஜீவன ஸ்தானத்தில் பிரவேசம் செய்யவிருக்கிறார் சனிபகவான்.
ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்து உயர்வை உண்டாக்கி கௌரவத்தைப் பாதுகாத்த சனிபகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது என்ன செய்வார்?
வாழ்க்கையில் எல்லா காலங்களும் ஒன்றுபோல் இருப்பதில்லையே. ஒரு நேரம் நமக்கு சாதகமாக இருக்கிறதென்றால் அது எப்போதும் நிலைப்பதில்லை. அதன்பின் சில சங்கடங்களையும் நாம் சந்தித்துதான் ஆகவேண்டும்.
பத்தாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு எத்தகைய நிலை உண்டாகும் என்பதை- "பத்திலே சனியும் நிற்கிற் பதிகுலைந் தலையச் செய்யும்; செத்திடும் ஆடுமாடு சிலுகுடன் மனிதர் சாவாம்; நத்திய பொருளுஞ் சேதம் நற்பயிர் விளைவு குன்றும்; பத்திய சோகை சோம்பல் பலனில்லை பயமுண்டாமே...' என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
மேலே உள்ள பாடல் பொதுவானதுதான். ஒவ்வொருவரின் சுய ஜாதகம், தற்போது நடந்துவரும் தசாபுக்தி, சனிபகவான் பிறப்பு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் நிலை, மற்ற கிரகங்களின் அமர்வுகளை வைத்து மேலே கூறப்பட்டுள்ள பத்தாமிட சனியின் பலன்கள் மாறுபடும்.
அனைத்திற்கும் மேலாக சனிபகவான், தான் சஞ்சரிக்கும் இடத்திற்கு நன்மையான பலன்களை வழங்கிட வேண்டியவர் என்பதால், இனி உங்கள் உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். வியாபாரத்திலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் அகலும். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான, ஜீவனத்திற்குத் தேவையான வருவாய் இனி வரத்தொடங்கும். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். வியாபாரத்தையும், தொழிலையும் விரிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு விரும்பிய இடமாற்றம் ஏற்படும். வேலையில்லாமல் சங்கடப்பட்டு வந்தவர் களுக்கு அவரவர் திறமைக்கேற்ற வேலைகள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரித்து அந்த ஸ்தானத்தை வலுவாக்கப் போகும் சனிபகவான் அங்கிருந்து உங்கள் ராசிக்கு 12-ஆமிடமான விரய ஸ்தானத் தையும், 4-ஆமிடமான சுக ஸ்தானத்தையும், 7-ஆமிடமான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடப் போகிறார்.
தன்னுடைய 7-ஆம் பார்வையால் உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்க்கும் சனிபகவானால் வீண் அலைச்சல், அதிகபட்சமான உழைப்பு, செயலில் இடையூறுகள், அலைக்கழிப்புகள், குடும்பத்தில் வீண் விரோதம், தாயின் உடல்நிலையில் பாதிப்பு, தாய்வழி உறவுகளுடன் விரோதம், எதிர்பார்க்கும் சந்தோஷத்திற்கு இடையூறு, தடை, வாகனத்தால் சங்கடம், வீடு வகையில் பிரச்சினை, கல்வியில் தடை, உற்றார்- உறவினர்களின் பகை, டென்ஷன், ஆரோக்கியத்தில் சோதனை என்ற நிலை ஏற்படலாம்.
களத்திர ஸ்தானமெனும் ஏழாம் இடத்தின்மீது சனிபகவானின் 10-ஆம் பார்வை பதிவதால், கணவன்- மனைவியரிடையே கருத்து வேறுபாடு, சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அதனால் ஒருசிலருக்கு தற்காலிகப் பிரிவும்கூட ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டு விலகியிருக்கவேண்டிய சூழ்நிலை வரும். நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்களிடமும் கருத்து வேறுபாடு, பிரச்சினைகி உருவாகி நட்பில் விரிசலும் ஏற்படலாம்.
விரய ஸ்தானமெனும் 12-ஆம் இடத்தின்மீது சனிபகவானின் மூன்றாம் பார்வை பதிவதால் வீண் அலைச்சல், காரியங்கள் கைகூடாமல் மன உளைச்சல், பொருள் இழப்பு, எதிரிகளால் இடையூறு, தொழிலில் நஷ்டம், உத்தியோகத்தில் சங்கடம், உறக்கமில்லாமல் குழப்பம், எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.
சனிபகவானின் இரண்டரை ஆண்டுகால பொதுவான சஞ்சாரப் பலன்கள்தான் இவை. இதே காலத்தில் ஒரு ஆண்டிற்கு சுமார் நான்கு மாதங்கள் அவர் வக்ரகதிக்கு ஆளாவார் என்பதால், அக்காலத்தில் இப்பலன்கள் மாறுபடும். சுய ஜாதகத்தின் தசாபுகதிக்கேற்பவும் பத்தாமிட சனியின் பார்வைகளால் உண்டாகும் பாதகப் பலன்கள் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தாது.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானை நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டுவாருங்கள். முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் அன்னதானம், வஸ்திரதானம் செய்யுங்கள்; சங்கடங்கள் நீங்கும்.
மிதுனம்
இதுவரையில் உங்கள் மிதுன ராசிக்கு ஆயுள் ஸ்தானமெனும் எட்டாம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான், பல்வேறு இடர்ப் பாடுகளை உங்களுக்கு உண்டாக்கி வந்தார். ஒருசிலர் மரணத்தின் எல்லை யைக்கூட தொட்டுவிட்டு வந்திருப் பீர்கள்.
உங்கள் ராசிக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் அவரின் பார்வை பதிந்ததால் குடும்பத்தில் குழப்பம், வருமானத்தில் தடை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலை, உறவுகளிடம் சண்டை, சச்சரவு, கடன்களால் தொல்லை, பொருளிழப்பு, போட்ட முதலீடு திரும்ப வராத நிலை என்றெல்லாம் சங்கடங்கள் உண்டாகியிருக்கும்.
உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய, புத்திர ஸ்தானத்தின்மீது அவருடைய பார்வை பதிந்ததால் பூர்வீக சொத்துகளில் பிரச்சினை, பெற்றோர்கள்வழியில் சங்கடம், பிள்ளைகளால் மன சங்கடம், உறவு களிடம் பகை, குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடமுடியாத நிலை, தேவையற்ற செலவு கள் என்று நெருக்கடிக்கு ஆளாகியிருப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு பத்தாமிடமான தொழில் மற்றும் ஜீவன ஸ்தானத்தின்மீது சனிபகவானின் பார்வை பதிந்ததால் தொழிலில் போட்டி, வியாபாரத்தில் நஷ்டம், வருமானத்தில் தடை, முயற்சிகள் பலனளிக்காத நிலை என்று சங்கடப்பட்டி ருப்பீர்கள்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் மகரச்சனிக் காலம் உங்கள் வாழ்க்கையில் போர்க்காலம் என்றே சொல்லவேண்டும். நீங்கள் அனுபவித்த வேதனைகளை அளவிட்டுக் கூறமுடியாத அளவுக்கு எல்லாவிதமான சங்கடங்களையும் அனுபவித்திருப்பீர்கள். விபத்து, நோய் என்று உடல்நிலையும், மனநிலையும் கெட்டு வாழ்க்கையின் கடைசி எல்லைக்கே சென்றுவந்திருப்பீர்கள்.
கடந்த இரண்டரை வருடத்தில் நன்மைகள் என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லாத அளவுக்கு தீமைகளையே சந்தித்திருப்பீர்கள் என்றாலும், அவையெல்லாவற்றையும் உங்களின் பூர்வபுண்ணிய பலத்தால் சமாளித்து வந்தீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த நிலையில் 17-1லி2023 அன்று திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி உங்கள் ராசிக்கு 9-ஆம் வீடான- பாக்கிய ஸ்தானமான கும்ப ராசிக்குள் பிரவேசம் செய்யும் சனிபகவான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கிடப் போகிறார்.
சனிபகவான் அசுபர் என்றாலும் நியாயவாதி, தர்மவான், ஒரு நீதிபதியைப் போன்றவர். யாராக இருந்தாலும் அவருடைய பணியில் நியாயம் தவறமாட்டார். கடந்த ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவ- புண்ணியங்களைக் கணக்கிட்டு பலாபலன்களை வழங்குபவர் சனிபகவான் என்றாலும், ஒன்பதாமிடத்தில் அவர் சஞ்சரிக்கும் காலத்தில் கடந்த ஆண்டுகளில் அவர் கொடுத்த சங்கடங்களையெல்லாம் நிவர்த்திசெய்வார். தொழிலில் இருந்த தடைகள் அகலும். முயற்சிகளில் உண்டான தோல்விகள் விலகும். வருமானம் தடைப்பட்டிருந்த நிலை மாறும், பகைவர்களின் தொல்லைகள் அகலும். அவர்களை வெற்றிகொள்ளும் நிலை உண்டாகும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் உண்டாகியிருந்த மனக் கசப்பு நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். ஒருசிலர் தந்தையின் தொழிலை மேற்கொண்டு ஆதாயமடையும் நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். இவையெல்லாம் மிதுன ராசியினருக்கு ஒன்பதாமிட சனிபகவானால் உண்டாகப்போகும் பொதுப் பலன் களாகும்.
பொதுவாக அசுபர் 3, 6, 11-ல் அமர்வதும், அந்த இடங்களைப் பார்ப்பதும் நன்மையாகும். சனிபகவானுக்கும் இதுவே நீதியாகும். இந்த விதியில் 3, 6, 11-ஆம் இடங்களில் அவருடைய பார்வைகள் படும்போது அந்த இடங்கள் நன்மையடையும். சுய ஜாதகம் பலம்பெற்றவர்களுக்கும், நட்பான தசாபுக்தி நடப்பவர்களுக்கும் சனிபகவான் வழங்கும் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்; கெடுபலன்கள் குறையும் என்பதுடன், மற்ற கிரகங்களின் பார்வைகளாலும் சேர்க்கைகளாலும் பலன்கள் மாறும்.
உங்களுக்கு அஷ்டமாதிபதியும் பாக்கியாதிபதியுமான சனிபகவான் உங்கள் ராசிக்கு 9-ஆமிடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, அங்கிருந்து தனது 3, 7, 10-ஆம் பார்வைகளால் உங்கள் சகோதர ஸ்தானத்தையும், சத்துரு ஸ்தானத் தையும், லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் சகோதர, தைரிய, வீரிய ஸ்தானத்தில் பதிவதால் இனி துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சகோதரர்கள் வகையில் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும்.
சனிபகவானின் 10-ஆம் பார்வை உங்களின் ருண, ரோக, சத்துரு ஸ்தானத் தில் பதிவதால் உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். மறைமுகமாக சதிசெய்து வந்தவர்கள் பலமிழந்து போவார்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத் ததை முடிப்பீர்கள்.
சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் மாற்றம், இட மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழ்ந்தாலும் அவற்றினால் நன்மையே உண்டாகும். பணவரவு பலவழிகளில் வரத்தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நட்பினால் மகிழ்ச்சியடைவீர்கள்.
இவையெல்லாம் ஒன்பதாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்திற்குரிய பொதுப் பலன் களாகும்.
2023-ஆம் ஆண்டில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியில் ஸ்தானப் பலன் மற்றும் பார்வை களால் பலன் என்று அதிகபட்சமான நன்மைகளை அடையப் போகிறவர்கள் மிதுன ராசியினரான நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
பரிகாரம்
திருவாரூர் அருகேயுள்ள திருக் கொள்ளிக்காடு சென்று, அங்கு பொங்கு சனியாகக் காட்சிதரும் சனிபகவானையும் திருக்கொள்ளிக்காடரையும் அர்ச்சனைசெய்து வணங்கிவாருங்கள். காக்கைகளுக்கு எள்கலந்த தயிர்சாதம் வழங்குங்கள். முதியோர்களுக்கு உணவு, உடை தானமளித்து அவர்களுடைய வாழ்த்துகளைப் பெறுங்கள்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 94443 93717