நான் பாத்துட்டுவர
பொண்ணுகளுக்கு எல்லாம்
கல்யாணம் ஆகுது..
எனக்கு மட்டும் ஏன்
கல்யாணமே ஆக மாட்டேங்குது?...!
நேற்று பிறந்தவன் எல்லாம்
கல்யாணம் பண்ணி
என் கண் முன்னாடி போய்
வயித்தெரிச்சல உண்டாக்குறானே?..
நான் என்ன பாவம் செஞ்சேன்
எனக்கு ஏன் இந்த கதி?...!
எனக்கு சுத்த ஜாதகம்
எந்த தோஷமும் இல்லைனு
ஏகப்பட்ட ஜோசியர்
சொல்றாங்க..
ஆனாலும் எனக்கு மட்டும்
இந்தக் கல்யாணம்
நடக்க மாட்டேங்குது?...!
பரிகாரம் பண்ணி பண்ணி
பரிகாசத்துக்கு ஆளாகி..
பொலம்பி பொலம்பி நான்
எக்ஸ்பரி ஆயிடுவேன்போல தெரியுதே..
அப்படி என்ன பாவம் செஞ்சேன்
நையாண்டி சித்தரே
எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்க!..
ஏகத்துக்கு நொந்து போயி
ஏக்கத்துல தவிக்கும்
ஏழாம் இடம் கெட்டுப்போன ஏகாந்த வாசி..
உண்மைகளைச் சொல்றேன்
கொஞ்சம் ஒக்காந்து கேளய்யா..
கல்யாணம் தாம
நான் பாத்துட்டுவர
பொண்ணுகளுக்கு எல்லாம்
கல்யாணம் ஆகுது..
எனக்கு மட்டும் ஏன்
கல்யாணமே ஆக மாட்டேங்குது?...!
நேற்று பிறந்தவன் எல்லாம்
கல்யாணம் பண்ணி
என் கண் முன்னாடி போய்
வயித்தெரிச்சல உண்டாக்குறானே?..
நான் என்ன பாவம் செஞ்சேன்
எனக்கு ஏன் இந்த கதி?...!
எனக்கு சுத்த ஜாதகம்
எந்த தோஷமும் இல்லைனு
ஏகப்பட்ட ஜோசியர்
சொல்றாங்க..
ஆனாலும் எனக்கு மட்டும்
இந்தக் கல்யாணம்
நடக்க மாட்டேங்குது?...!
பரிகாரம் பண்ணி பண்ணி
பரிகாசத்துக்கு ஆளாகி..
பொலம்பி பொலம்பி நான்
எக்ஸ்பரி ஆயிடுவேன்போல தெரியுதே..
அப்படி என்ன பாவம் செஞ்சேன்
நையாண்டி சித்தரே
எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்க!..
ஏகத்துக்கு நொந்து போயி
ஏக்கத்துல தவிக்கும்
ஏழாம் இடம் கெட்டுப்போன ஏகாந்த வாசி..
உண்மைகளைச் சொல்றேன்
கொஞ்சம் ஒக்காந்து கேளய்யா..
கல்யாணம் தாமதமாகுதுன்னாலே
கட்டாயம் ஜாதகத்துல தோஷம் இருக்கு..
தோஷம்னு சொன்னதும்
பெரிய வியாதி வந்ததுபோல
நீ பேந்தப் பேந்த விழிப்பதாலதான்
ஜோசியர் எல்லாரும் பயந்து
நீ விரக்தியாக கூடாதுன்னு
சுத்த ஜாதகம்ன்னு சொல்லியிருப்பாங்க..
லக்னத்துக்கோ, ராசிக்கோ
செவ்வாய் 2,4,7,8-ல
உட்கார்ந்து உக்கிரமானால்
உனக்குக் கல்யாணம் தாமதம் தானப்பா..
எதுக்கெடுத்தாலும் கோவம் வரும்
புரியறதுக்கு நாளாகும்..
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு
உனக்கு அவசரமா கல்யாணம் பண்ணிவச்சா
அந்தப் புள்ள வாழ்க்கை அம்புட்டுதான்..
பொறுமை இல்லனா
இல்லறம் நடத்த முடியாதப்பா..
செவ்வாய் தோஷம்ன்னு
ஒன்னு இல்லவே இல்லன்னு
தத்துவம் பேசக்கூடாது...
இரண்டுல செவ்வாய்
இருக்கிறவங்கள கட்டினா
வாதாடி வாதாடி ஓஞ்சு போயிருவோம்..
நாலுல செவ்வாய்ன்னா
நல்லநாள் பொழுதுன்னு
சந்தோஷமில்லாம போயிடும்..
ஏழுல செவ்வாய்ன்னா
இன்னொரு களத்திர தேடல் வருமப்பா..
எட்டுல செவ்வாய் நின்னா
களத்திர நஷ்டம் உண்டு..
12-ல் செவ்வாய் வாழ்க்கையே
பதட்டமாக்கும்..
செவ்வாய் தோஷம்ன்னு
சொல்லி சொல்லி
எங்களுக்கு பிடிச்ச
நல்ல வரன் போகுதுன்னு
நீங்க ஒப்பாரி வச்சு வச்சு,
ஜோசியக்காரன கடுப்பாக்கினதால..
"எப்படியோ போய் தொலை'ன்னு
"செவ்வாய் தோஷம் பொய்'யுன்னு
ஔர ஆரம்பிச்சுட்டாங்க..
பொண்ணு கிடச்சா போதுங்கிறவன்
எதுக்குடா தோஷம் பாக்க போகிறாய்?...!
ஜோசியரை கெடுக்கிற சுத்த ஜாதகக்காரா..
தயவுசெஞ்சு ஜோசியம் பாக்க வராதீங்கங்க..
விதிப்படி நடக்கும்ன்னு
பொண்ணு கிடச்சதும் தாலிய கட்டி
வாழ வழிய பாருடா...
ராசிக்கோ, லக்னத்திற்கோ ராகு- கேது
2, 4, 7, 8, 12-ல் இருந்தால் நாக தோஷம்..
சூரியன் 2, 7, 8-ல் இருந்தால் பிதுர் தோஷம்..
சுக்கிரன் 7-ல் இருந்தால் களத்திர தோஷம்..
ஏழாமிடத்தில், லக்னத்திற்கு பாவர்
இருந்தாலும், பார்த்தாலும்
திருமணத்தில் தோஷமுண்டு..
ஜாதகத்துல ஏழாமிடம் கெட்டு போயிருந்தா..
காஞ்சமாடு கம்புல விழுந்தமாதிரி
அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டு
ஆம்புலன்ஸ் ல போறதும்
போலீஸ் ஸ்டேஷன்,
கோர்ட் வாசல்ல போயி நிற்கிறதும்
உன் தலையில எழுதியிருதான்னப்பா..
இதுல எந்த ஜோசியக்காரனையும்
குத்தம் சொல்லி ஏது பயன்?...!
நிம்மதியா போற வாழ்க்கைய
நிலை குலைய வைப்பது
புருஷன் பொண்டாட்டி
கையிலதான் இருக்குதப்பா..
எத்தனை பிரச்சினை வந்தாலும்
என் புருஷன் எனக்குதான்னு
வாழ்ந்தாதான் நிம்மதி..
ஊரான் பேச்ச கேட்டு
ஒரு நிமிஷம் சபலப்பட்டாலும்
இந்த ஜென்மம் வீணா போகுமம்மா..
இருபாலருக்கும் சொல்வதெல்லாம்
தாமதமாக திருமணம் பண்ணாலும்
கிடைச்சத வச்சு திருப்தி பட்டாதான்
நிம்மதி நிலைக்குமப்பா..
தோஷம் இருந்தால் பொறுத்திரு...
தோஷம் இல்லன்னு சொன்னா
அதவிட பொறுமையா இரு..
பரிகாரம் வேணுமின்னா
பாதிக்கப்பட்ட கிரகத்தை வழிபடு..
பாவகிரகம் பார்த்தாலும் சேர்ந்தாலும்
பவித்திரமான காதலும் பாதிக்குமடா..
பத்திரமா வாழ கோட்சார கிரகம் பார்த்து
பக்குவமாய் வாழடா..
ஜோசியம் மூடநம்பிக்கைன்னு சொல்ற
முட்டா பய பேச்சைக் கேட்டு
ஏழரைச்சனியில பணத்தை கொடுத்து
ஏமாந்துடாத..
பணம் இருந்தாதான் கட்டுனவகூட மதிப்பா..
கூடா நட்பு கேடா முடியும் கெட்ட நேரத்துல
இஷ்ட தெய்வத்தை கெட்டியா புடுச்சுக்கடா..
"ஓம் ஆதித்யாய சோமாய
மங்களாய புதாய
குரு சுக்ர சனிப்பயச்ச
ராகுவே கேதுவே நம'' என
நவகிரக மந்திரத்தை
குளிச்சு முடிச்சதும் கிழக்கு பார்த்து
ஒன்பது முறை சொல்லிவர
சொல்லொணா துயரம்கூட
தூரம் போய்விடும்...
செல்: 96003 53748