சுக்கிரன்

சுக்கிரன் 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் நிற்பானா கில் ஓயாத மனக்கவலை உண்டாக்குவார்.

அவமானம் வருவிப்பார். எல்லா இடத்திலும் பகையை உருவாக்குவார். இருக்குமிடம் விட்டு வேறிடம் போகவைப்பார்.

6-ல் சுக்கிரன்: வெள்ளைநிறப் பசுவுக்கு உணவூட்டல் கூடாது. கல்வியில் தடைவரும். எப்போதும் வெள்ளி உலோக உருண்டை பர்சில் இருக்கவேண்டும். மனைவியின் ஆரோக்கியத்தில் கெடுதல் ஏற்பட்டால், வெள்ளைநிற சந்தனக்கட்டையை வெள்ளிக்கிழமை திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடவேண்டும். பெண்கள் சமையல் கூடத்தில் பாதம்படாமல் சாக்ஸ் அல்லது ரப்பர் காலணி அணிதல் நல்ல பரிகாரம்.

Advertisment

8-ல் சுக்கிரன்: இரண்டாமிடம் சுத்தமாகவுள்ள ஜாதகர் 25 வயதுக்கு மேல் திருமணம் செய்தல் நன்று. திருமணம் தடைப்பட்டால் பசுவை தானமாக ஆலயத்திற்குத் தருதல்வேண்டும். கருப்புநிறப் பசுவுக்கு 800 கிராம் கேரட் கொடுப்பது நல்லது. பணப்பற்றாக்குறை தொடர்ந்தால் செம்பு நாணயத்துடன் நீலநிறப்பூவை திருஷ்டி சுற்றி குளத்தில் போடலாம். 43 நாட்கள் தொடர்ந்து செய்தல் மிக நன்று. கருப்புநிறப் பசுவுக்கு இனிப்பு கலந்த உணவு கொடுப்பது கெடுதலைப் போக்கும். இறைவனுக்குப் படைத்த பண்டங்கள் இலவசமாகத் தந்தால் வாங்கி சாப்பிடக்கூடாது.

10-ல் சுக்கிரன்: 9, 11-ல் சனி இருந்தால் தென்னந்தோப்பு, மாந்தோப்பு நல்ல வருமானத்தைத் தரும். 2, 4, 7-ல் சந்திரன் இருந்தால் வயோதிகம் மனநிறைவாக இருக்கும். வீட்டின் மேற்குச் சுவரில் சிறு களிமண் உருண்டை இருக்கச் செய்தால் வாஸ்து தோஷம் போகும். புலால் உணவு, மீன் போன்றவற்றை வெள்ளிக்கிழமை தவிர்க்கவேண்டும்.

12-ல் சுக்கிரன்: சுக்கிரன் 12-ல், 6-ல் புதன் இருக்கப்பெற்றால் தொடர்ந்து வாழ்க்கை சீராகவும் செழிப்பாகவும் அமையும். வெள்ளிக்கிழமை மாலைநேரம் கோவிலுக்குச் சென்று வெண்தாமரை மலர்சாற்றி சுக்கிரனை வணங்குதல் சிறப்பானது. கனகதாரா ஸ்தோத்திரம், அன்னபூரணி ஸ்தோத்திரம் கூறுவது போதுமானது.

Advertisment

பொதுப் பரிகாரம்: சுக்கிர ஹோரையில் பால் அருந்துவது நன்று. வெள்ளிக் கிழமை பசு கன்றை ஈன்றால், அதுவும் ஆண் கன்று என் றால், அதனைப் பேணுவதால் நல்லவை நடக்கும்; குடும்பம் தழைக்கும்.

bb

சனி

சனி 2, 4, 8 ஆகிய இடங் களில் நின்றால் பில்லி, சூனியம், பிசாசு, பயம், ஏவல் போன்றவற்றைச் செய்வார். அநியாயமான பகையுண்டாக்குவார். வியாதி காணும். அலைச்சல் படுத்தி அனாதையாக்குவார். தனியாக தேசாந்திரம் ஓட வைப்பார்.

2-ல் சனி: நல்ல ஆரோக் கியம் இருக்கும். தெய்வ நம்பிக்கை இருக்காது. பெரிய குடும்பத்தில் வாழ லாம். குரு 4-ல் இருந்தால் பக்திமான். பெண் குழந்தை யின் ஜாதகத்தில் சனி 2-ல், புதன் 12-ல் இருந்தால் பண நெருக்கடி வரும். சொந்தத் தில் மணம் முடித்தால் வாழ்வு செழிக்கும். 43 நாட்கள் ஆலயம் சென்று சனிபகவானை வணங்கவேண்டும். நெற்றியில் எண்ணெய் பூசுவது கூடாது. பாம்புப் புற்றில் பால் ஊற்றலாம். பாதத்தில் செருப்பணியாமல் சனி பகவான் ஆலயம் சென்று வழிபடவேண்டும். எருமைக் கடாவுக்கு புல் தருதல் நன்று.

4-ல் சனி: 10-ல் சந்திரன் இருந்தால் பெற்ற தாய்க்கு ஆகாது. சனிக்கிழமை கிணற்றில் அரிசி, பால் ஊற்றவேண்டும். கருப்பு உளுந்து, எள், நல்லெண்ணெய் கலந்து மண் சட்டியில் வைத்து திருஷ்டி சுற்றி ஆற்றில் போடவேண்டும். பச்சைநிற ஆடையைத் தவிர்க்கவேண்டும். சனிக்கிழமை இரண்டு லிட்டர் நல்லெண்ணெய் சனீஸ்வரர் ஆலயத்திற்குத் தருதல்வேண்டும்.

8-ல் சனி: பர்சில் ஒருசிறு வெள்ளி உலோக உருண்டை வைத்திருத்தல் நல்லது. திருமண வாழ்க்கை அல்லலுக்கு உட்படும். 12-ஆமிடம் சுத்தமாகக் காணப்பட்டால் வாழ்நாள் முழுவதும் பின்னடைவுதான். சனி தனித்துக் காணப்பட்டால் கெடுதல் வராது. ஒரு மர ஸ்டூலில் உட்கார்ந்து நல்லெண்ணயைத் தலையில் பூசி நீராடவேண்டும். தண்ணீர் கீழே வழியும்போது பாதம் தரையில் படக்கூடாது.

பொதுப் பரிகாரம்: சனிபகவானுக்கு ப்ரீதியாக உளுந்து, நல்லெண்ணெய், சுத்தமான நீல ரத்தினங்கள், எள், கொள். பூமி, இரும்பு போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். எருமை தானமும் சிறப்பான பலனைத் தரும். சனிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் காட்டவேண்டும்.

ராகு- கேது

ராகு- கேது 4, 5, 8, 9, 10 ஆகிய இடங்களில் நின்றால் பொருள் விரயமாகி அழியும். பேயனைப்போல் அலையச் செய்வார்கள். மனம்போனபடியெல்லாம் பேசித்திரிய வைப்பார்கள். நீதியான மொழியைப் பிசகு செய்வார்கள் என மேலோர் கூறுகின்றனர்.

4-ல் ராகு: குடும்பத்தில் நிகழும் கேடுகள் சீரடைய, தும்பிக்கையை உயரே வைத்திருக்கும் கஜேந்திரனின் வெள்ளியிலான பொம்மை இருப்பது நன்று. ஹரித்துவார் நதியில் குளிப்பது மேன்மை தரும்.

5-ல் ராகு: இருதார அமைப்பைத் தவிர்க்க, முதல் மனைவிக்கு இருமுறை தாலி (திருமண நாளில்) கட்டவேண்டும். கர்ப்பிணிகள் கருவுற்றிருக்கும்போது வெள்ளித் தட்டில் உணவருந்தல்வேண்டும். மனைவிக்கு தேகநிலை சீராக, இரவு படுக்கும்போது தலையணைப் பக்கம் மூன்று சிவப்பு முள்ளங்கியை வைத்து, தூங்கி எழுந்தபின் மறுநாள் அதனை மாட்டுக்குத் தருதல் நன்று.

8-ல் ராகு: சிறு விபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். பர்ஸ் அல்லது பாக்கெட்டில் ஒரு சிறு சமச்சதுர வெள்ளித்தகடு வைத்துக்கொள்ளவேண்டும். எட்டு ஒரு ரூபாய் நாணயங்களை திருஷ்டி சுற்றி ராகு காலத்தில் நீர்நிலையில் போடவேண்டும். கோமியத்தில் பார்லியை ஊறவைத்து தம் கையால் நீர்நிலையில் போடவேண்டும்.

9-ல் ராகு: கூட்டுக் குடும்பத்தில் வாழ்வது நன்று. தூங்கும்போது வீட்டின் பக்கத்திலிருக்கும் ஆலயத்தை நோக்கித் தலைவைத்துத் தூங்கவேண்டும். வீட்டில் நாய் வளர்ப்பது நல்லது.

10-ல் ராகு: தலையில் டர்பன் அல்லது எம்.ஜி.ஆர்போல் தொப்பி அணிதல் நல்லது. 38 வயதுக்குமேல் பிறரிடம் கண்ணியமாக நடத்தல்வேண்டும். நான்கு நீறநிற ஊமத்தங்காயை சனிக்கிழமை ராகு காலத்தில் மேற்குநோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போட்டால் தாயாரின் உடல்நிலை சீரடைவதை உணரலாம். விதவைகளுக்கு உதவிபுரிவதும் நற்பலனைத் தரும்.

பொதுப் பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் (நல்லெண்ணெய், இலுப்பையெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நெய்) அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் காலத்தி னால் செய்த தீர்க்கமுடியாத தொல்லை அகலும். கருநொச்சி இலையை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரால் குளிப்பது போதுமானது.

கேதுவுக்கும் இது பொருந்தும்.

செல்: 93801 73464