தனுசு லக்னத்தினர் வில்லைபோல் நெளிந்து வளைந்து எத்தகைய சூழலையும் சமாளிக்கும் ஆற்றல்மிக்கவர்கள். அசைக்கமுடியாத மத நம்பிக்கை உடையவர்கள். கம்பீரமும், பிரகாசமும், நளினமான நடை, உடை பாவனை கொண்டவர்கள். உடன்பிறந்தவர்களிடம் பிரியமுடையவர்கள். சத்ருக்களை வெல்லும் தைரியம்மிக்கவர்கள். சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைகூட முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும். சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்கமுடியாது. சுறுசுறுப்பான இவர்கள் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லாருக் குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தன்மையுண்டு. ரகசியம் காக்கத் தெரியாதவர்கள். யாருக்கும்கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தும் ஆர்வம் உங்களிடம் உண்டு. மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். தர்ம சிந்தனையும் சட்டென்று எதையும் கிரகிக்கும் தன்மை உடையவர்கள். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.
குரு தசை
தனுசு லக்னத்திற்கு குரு 1, 4-ஆம் அதிபதி. லக்னாதிபதி நான்காம் அதிபதி. குரு நான்காம் அதிபதி என்பதால் குரு தசை புக்தி காலங்களில் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்பு இருக்கும். சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் காலம் தாழ்ந்து நிச்சயம் வீடு, மனை, வாகன யோகம் சித்திக்கும். ஜாதகர் நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். தாய் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். தாய்வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு
தனுசு லக்னத்தினர் வில்லைபோல் நெளிந்து வளைந்து எத்தகைய சூழலையும் சமாளிக்கும் ஆற்றல்மிக்கவர்கள். அசைக்கமுடியாத மத நம்பிக்கை உடையவர்கள். கம்பீரமும், பிரகாசமும், நளினமான நடை, உடை பாவனை கொண்டவர்கள். உடன்பிறந்தவர்களிடம் பிரியமுடையவர்கள். சத்ருக்களை வெல்லும் தைரியம்மிக்கவர்கள். சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைகூட முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும். சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்கமுடியாது. சுறுசுறுப்பான இவர்கள் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லாருக் குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தன்மையுண்டு. ரகசியம் காக்கத் தெரியாதவர்கள். யாருக்கும்கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தும் ஆர்வம் உங்களிடம் உண்டு. மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். தர்ம சிந்தனையும் சட்டென்று எதையும் கிரகிக்கும் தன்மை உடையவர்கள். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.
குரு தசை
தனுசு லக்னத்திற்கு குரு 1, 4-ஆம் அதிபதி. லக்னாதிபதி நான்காம் அதிபதி. குரு நான்காம் அதிபதி என்பதால் குரு தசை புக்தி காலங்களில் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்பு இருக்கும். சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் காலம் தாழ்ந்து நிச்சயம் வீடு, மனை, வாகன யோகம் சித்திக்கும். ஜாதகர் நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். தாய் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். தாய்வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணை உண்டு. பொன்னும் பொருளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்து இருக்கும். இவர்கள் பண்ணையாளர்களாக, விவசாயிகளாக இருப்பார்கள். தாய்வழி வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். குரு பலம் குறைந்து தசை நடத்தினால் சொத்துகளால் பயன் இருக்காது. பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் உடல்நல பாதிப்பு இருக்கும். தாய் மற்றும் தாய்வழி உறவுகளின் அனுசரணை இருக்காது. தாய் அடிக்கடி நோய்வாய்ப்படுவார். குரு கேந்திராதிபதி என்பதால் தசை புக்தி காலங்களில் தாய்வழி உறவு களுடன் தேவையற்ற மனக்கசப்பு உண்டாகும். சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும்.
பரிகாரம்
வியாழக்கிழமை சித்தர்கள் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவேண்டும்.
சனி தசை
சனிபகவான் தனுசு லக்னத்திற்கு 2, 3-ஆம் அதிபதி. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதி பதி, சகாய ஸ்தான அதிபதி. சனிபகவான் பலம்பெற்று தசை நடத்தினால் ஜாதகர் சுயமாக சிந்தித்து செயல்படுவார். ஜாதகர் செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர். செல்வச் சீமானாக விளங்குவார் பணக்கஷ்டம் தெரியாதவர். பேச்சுத்திறமையால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள். பேச்சுத் தொழிலை மூலதனமாக கொண்டவர்கள். பல வழி களில் வருமானம் ஈட்டும் தந்திர வாதிகள். கலகலப்பாக பேசி தன்னை சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்து காப்பாற்றுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாணய வாதிகள். பிறரை காயப்படுத்தாமல் பேசுவதில் வல்லவர்கள். வாக்கு பலிதம் உண்டு. இவர் சொல்லும் வாக்கு நிச்சயம் பலிக்கும். உண்மையை பேசுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அனுசரணையும் உண்டு. இளவயதில் திருமணம் நடக்கும். சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாது. உடன்பிறந்த சகோதர, சகோதரிகளை நம்பி பிழைப்பார்கள். அல்லது இவர்களுடைய பொருளாதாரம் உடன்பிறந்தவர்களுக்கே பயன்படும். வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். பிறரை நம்பாதவர்கள். ஞாபகசக்தி குறைவால் திறமையை வெளிப்படுத்த முடியாதவர்கள்.
பரிகாரம்
வியாழக்கிழமை கூலித்தொழிலாளி களுக்கு உணவு தானம் வழங்கவும்.
செவ்வாய் தசை
செவ்வாய் தனுசு லக்னத்திற்கு 5, 12-ஆம் அதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி விரயாதிபதி. செவ்வாய் பலம்பெற்று தசை நடத்தினால் பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி தேடிவரும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடிவரும். நிர்வாகத் திறமை உண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித்திறமையுடன் பிரகாசிப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை இவர் களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். தனது புக்தி சாதுர் யத்தால் பிறரை நல்வலிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார்- உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். குலதெய்வ கடாட்சம் உண்டு. குலதெய்வ கோவில் நிர்வாகிகள். வம்சாவழியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். செவ்வாய் அசுப பலம் பெற்று தசை நடத்தினால் வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மத வழிபாடு, முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் அதிகமாக இருக்கும். வாழ்நாளில் பெரும் பகுதியை வைத்தியத்தில் கழிப்பவர்கள். தொழிலில் பெரும் நஷ்டம், அவமானம், தலை மறைவு வாழ்க்கை உண்டு. பூர்வீகச் சொத்து பயன்படாது. கடுமையான புத்திர தோஷம் நிரம்பியவர்கள். புத்திரர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடமுடியாது.
பரிகாரம்
வியாழக்கிழமை செவ்வாய் ஓரையில் திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டும்.
சுக்கிர தசை
தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் 6, 11-ஆம் அதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி. லாபாதிபதி. உப ஜெய ஸ்தானாதிபதி என்பதால் சுக்கிரன் சுப வலுப்பெற்றால் ருணத்தால், ரோகத்தால் சில பாதிப்பு இருந்தாலும் மீண்டு வரக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். சுக்கிரன் அசுப பலம் பெற்று அசுப கிரக சம்பந்தம் பெற்று பலம் குறைந்து தசை நடத்தினால் வாழ்வில் பெறும் பகுதி கடனால், நோயால் அவதி ஏற்படும். சிலர் காதல் திருமணத்தில் வாழ்க்கை இழந்து மறு திருமணத்தில் நலம் பெறுகிறார்கள்.
பரிகாரம்
வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடவேண்டும்.
புதன்
புதன் தனுசு லக்னத்திற்கு 7, 10-ஆம் அதிபதி. களத்திர ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, பாதகாதிபதி. கேந்திராதிபத்திய பாதிப்பு உண்டு. உபய லக்னம். இந்த லக்னத்தவரின் ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம்பெற்றால் பாதகத்தை செய்வார். குருவிற்கு புதன் சம கிரகம். ஆனால் புதனுக்கு குரு பகை கிரகம் என்பதால் குருவின் 5, 9-ஆம் சிறப்பு பார்வைகள் புதனுக்கு இருந்தால் பாதகம் பாதிக்காது. குரு, புதன் சம சபதம பார்வை இருந்தாலும், புதனுக்கு அஷ்டமாதிபதி சந்திரனின் சம்பந்தம் இருந்தாலும், புதனுக்கு ராகு- கேதுக்கள் சம்பந்தம் இருந்தாலும் புதன் தசை காலத்தில் பாதகம் ஜாதகரை பதம் பார்க்கும். புதன் ஆட்சி, உச்சம்பெற்றால் ஏழாம் அதிபதி ஆட்சி, உச்சம் சுப பலன் என்றே பலர் பலன் கூறுகிறார்கள். பாதகாதிபதி ஆட்சி, உச்சம்பெற்ற பலர் புதன் தசை காலத்தில் மீளமுடியாத பாதகத்தை மாரகத்தை சந்திக்கிறார்கள். உபய லக்னத்தினருக்கு பாதகாதிபதிகள் வலுப்பெறக்கூடாது. புதன் ஆட்சி, உச்சம்பெற்ற மிதுன லக்னத் தினர் திருமணத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இன்றி வரன் பார்த்தால் திருமணம் சுலபமாக நடைபெறும். திருமணத்திற்கு பிறகும் தம்பதிகள் அனுசரித்து விட்டுக்கொடுத்துச் சென்றால் வாழ்நாள் இனிமையாகும். புதன் சந்திரன் சம்பந்தம் இருக்கும் பல தனுசு லக்னத் தினர் நரம்பு சம்பந்தப்பட்ட நோய், மனநோய் மற்றும் சரும நோயையும் சந்திக்கிறார் கள். புதன் நீசம், அஸ்தமனம் பெற்ற தனுசு லக்னத்தினர் கமிஷன் அடிப்படையிலான சொந்தத் தொழில் செய்வது சிறப்பான பலன் தரும்.
பரிகாரம்
வியாழக்கிழமையும் பிரதோஷமும் இணைந்தநாளில் பச்சைப் பயிறு சுண்டல் தானம் வழங்கவேண்டும்.
சந்திர தசை
சந்திரன் தனுசு லக்னத்திற்கு அஷ்ட மாதிபதி என்பதால் சுப வலுப்பெற்றால் பலர் குறுக்குவழியில் விபரீத ராஜ யோகத்தை அனுபவிக்கிறார்கள். பூர்வீகத்தைவிட்டு வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. பூர்வீகத்தில் வாழ்பவர்களுக்கு வேற்று மதம், இனம், மொழி நாட்டைச் சார்ந்தவர்களால் லாபம் உண்டாகும். பெரும்பாலும் இவர்களுக்கு சந்திரன் சுப பலனைத் தரும் வாய்ப்பு குறைவு. இவர்கள் அடிமைகளாக, தனிமை விரும்பிகளாக வாழ்கிறார்கள் படு கஞ்சராக மாறலாம். சரியாக உண்ண முடியாத, தூங்கமுடியாத நோய் பாதிப்பு ஏற்படலாம். தாம்பத்திய வாழ்வில் சிக்கல் வரலாம். ஆனால் ஆயுள் குறைவு, வழக்குகளில் தோல்வி வரலாம்.
பரிகாரம்
வியாழக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட வேண்டும்.
சூரிய தசை
சூரியன் தனுசு லக்னத்திற்கு பாக்கியாதிபதி. பாக்கியாதிபதி பலம்பெற்று தசை நடத்தினால் நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து. சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கௌரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் பண்ணை யாளர்களாக இருப்பார்கள். தாய்வழி வழிப் பூர்வீகச்சொத்து கிடைக்கும். சுய உழைப் பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்த லாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத் துவார்கள். தாயும், தந்தையும் பாக்கியவான் களாக உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணை உண்டு. சூரியன் அசுப பலம்பெற்று தசை நடத்தினால் வெளிநாடு சென்று திரும்ப முடியாத நிலை ஏற்படும். குலம் மாறிய திருமணம் அதிகமாக இருக்கும். பண வசதி மிகுதியாக இருக்கும். மன நிம்மதி இருக்காது. குலதெய்வ வழிபாட்டை, முன்னோர்கள் வழிபாட்டை மறந்ததால் சாபம் நிரம்பப்பெற்றவர்கள்.
பரிகாரம்
மூன்று தலை முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணம் தரவேண்டும். ராகு தசை நடப்பவர்கள் தஷண காளியை வழிபட வேண்டும். கேது தசை நடப்பவர்கள் உச்சிஷ்ட மகா கணபதியை வழிபடவேண்டும்.
தொடரும்....
செல்: 98652 20406