குங்குமம் பெயரை கேட்கும் பொழுதே மனதில் இன்பம் பொங்கும் சூழல் தோன்றுகின்றது அல்லவா? மானுடம் மலர்வதற்கும், மகத்தான நிலையை எட்டுவதற்கும், பற்பல பொருட்கள் தங்களை அர்ப்பணித்தாலும், அதில் சிறப்பானதாக குங்குமம் திகழ்கின்றது.
மங்களச் சின்னமான இந்த குங்குமம் நெற்றிக்கு இட்டுக்கொள்ள மட்டும்தானா அல்லது அர்ச்சனைக் கும், தெய்வீகத்திற்கும் மட்டும்தானா? என சில ஐயங்கள் நம்முள்ளே ஊற்றெடுக்கும். அதை சார்ந்து பயணிப்போம்.
கலிகால கோலாட்டத்திலும், கலங்காமல் கரை சேர்க்கும், கரும்பு பற்றிய கரத்துடன் காஞ்சியில் களமாடும், அன்னை காமாட்சி யின் ஆலயத்தில் குங்கும பஞ்சதசி என்ற சுலோகத்தை கூறி குங்கும அர்ச்சனைச் செய்வது வழக்கம். அந்த ஸ்லோகத்தில் குங்குமம் ஆவது குறைகளைத் தீர்ப்பது எனத் தொடங்கி அஞ்சின பேருக்கு அபயம் அளிப்பது என்று தொடர்ந்து, காமாட்சியின் கஞ்சமலர் முகந்தினிலே திகழ்வதும் பஞ்ச நிதி தருவதும் குங்குமம் ஆமே என்று குங்குமத்தின்மூலம் குலம் செழிக்கசெய்யும் சூட்சுமத்தை உணர்த்தப்பட்டுள்ளது.
குங்குமம் நிறத்தால் செவ்வாய் கிரகத்தை குறிகாட்டுகின்றது என்ற பொழுதிலும், அதில் இடம்பெற்றுள்ள மஞ்சள், சுபத்தின் சுகமான குருவினையும், படிகாரமும், வெண்காரமும், சூரியனையும், நல்லெண்ணெய் சனி பகவானையும
குங்குமம் பெயரை கேட்கும் பொழுதே மனதில் இன்பம் பொங்கும் சூழல் தோன்றுகின்றது அல்லவா? மானுடம் மலர்வதற்கும், மகத்தான நிலையை எட்டுவதற்கும், பற்பல பொருட்கள் தங்களை அர்ப்பணித்தாலும், அதில் சிறப்பானதாக குங்குமம் திகழ்கின்றது.
மங்களச் சின்னமான இந்த குங்குமம் நெற்றிக்கு இட்டுக்கொள்ள மட்டும்தானா அல்லது அர்ச்சனைக் கும், தெய்வீகத்திற்கும் மட்டும்தானா? என சில ஐயங்கள் நம்முள்ளே ஊற்றெடுக்கும். அதை சார்ந்து பயணிப்போம்.
கலிகால கோலாட்டத்திலும், கலங்காமல் கரை சேர்க்கும், கரும்பு பற்றிய கரத்துடன் காஞ்சியில் களமாடும், அன்னை காமாட்சி யின் ஆலயத்தில் குங்கும பஞ்சதசி என்ற சுலோகத்தை கூறி குங்கும அர்ச்சனைச் செய்வது வழக்கம். அந்த ஸ்லோகத்தில் குங்குமம் ஆவது குறைகளைத் தீர்ப்பது எனத் தொடங்கி அஞ்சின பேருக்கு அபயம் அளிப்பது என்று தொடர்ந்து, காமாட்சியின் கஞ்சமலர் முகந்தினிலே திகழ்வதும் பஞ்ச நிதி தருவதும் குங்குமம் ஆமே என்று குங்குமத்தின்மூலம் குலம் செழிக்கசெய்யும் சூட்சுமத்தை உணர்த்தப்பட்டுள்ளது.
குங்குமம் நிறத்தால் செவ்வாய் கிரகத்தை குறிகாட்டுகின்றது என்ற பொழுதிலும், அதில் இடம்பெற்றுள்ள மஞ்சள், சுபத்தின் சுகமான குருவினையும், படிகாரமும், வெண்காரமும், சூரியனையும், நல்லெண்ணெய் சனி பகவானையும், சேர்க்கப்படும் வாசனை சுக்கிரனையும், தொடர்புக் கொண்டு மாபெரும் சூட்சமத்தை நாம் அடைய வழிசெய்கின்றது.
ஆலயங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள, ஜீவகாந்த அலையினை, ஈர்க்கும் தன்மை பெற்ற அடங்கு பொருள்களைக்கொண்டு குங்குமம் சிலிர்த்து சிறந்து விளங்குகின்றது.
அது மட்டுமல்லாமல் யோக வழியில் உச்சமான சூரிய நமஸ்காரம் செய்யும்பொழுது, நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டால் தனித்துவமான பலன்கள் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.
காரணம் சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின்மீது படும்பொழுது குங்குமத்தின் மூலப்பொருள்களான படிகாரம், வெண்காரம், மஞ்சள், நல்லெண்ணெய், ஆகியவையின்மீது விட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் பட்டு அவை ஒன்றுசேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன. மேலும் யோக சாஸ்திரம் கூறும் வழிமுறையில் மூலாதாரம் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து உன் ஒளி கண்டத்தில் தங்குகின்றது, அவ்வொலி கபாலம் மூலம், புருவ மத்திக்கு வருகின்றது. அக ஒளி நிலைக்கும் இடங்களை பொட்டு வைத்து பலப்படுத்துவதற்காகவே, கழுத்திலும், புருவ மத்தியிலும், குங்குமம் இட்டுக்கொள்ளும் முறையினைக் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆஞணை சக்கரம் என்று அழைக்கக்கூடிய சக்கரம், புருவ மத்தியில் இருப்பதும் நாம் அறிந்த ஒன்றே. இந்த சக்கரத்தை தூண்டவும், கண்டத்தில் அமைந்த விசுத்தி சக்கரத்தை தூண்டவும், மாங்கல்யத்தில் இடுகின்ற குங்குமம் மணிபூரகம் மற்றும் நாபியில் இடையிலான சுவாதிஸ்டதானத்தில் உராயும்பொழுது இந்த சக்கரங்களும் தூண்டப்பட்டு, மனநிலையிலும், வாழ்வியலிலும், பெரும் உன்னதமான மாற்றங்களை ஏற்படுத்தி வளமாக வாழ வழிவகுக்கின்றது.
அதுமட்டுமா? நாம் அனைவரும் எதிர்பார்க்கின்ற பொருளாதாரம், அதிர்ஷ்டம், திருஷ்டி களையப்படுவது போன்றவற்றிலும் இந்த குங்குமம் பெரும் பங்குவகிக்கின்றது. எப்படி? என்ற கேள்விக்கு பதில் இதோ! வீட்டிலோ, பணியிடத்திலோ, பணம் தங்காமல் தொடர்ந்து நிதி நெருக்கடியை சந்திப்பவர்கள் குங்குமத்தை பயன்படுத்தி இந்தப் பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தினந்தோறும் உங்களின் வீடு அல்லது அலுவலகத்தின் நிலை வாயில்படியில் குங்குமத்தை பயன்படுத்தவேண்டும். வாயில்படியில் குங்குமம் வைப்பதனால் வாழ்வில் நேர்மறை ஆற்றல் வளரும் மற்றும் செழிப்பையும் சேர்த்தே கொண்டுவருமென்று நம்பப்படுவது பெரும் உண்மையாகும்.
வீட்டில் நாள்தோறும் காலையில் ஏற்றப்படும் விளக்கிற்கு, நாம் நெற்றியில் இட்டுக்கொள்ளும் குங்குமம் போன்றே ஒரு சிறு பொட்டு வைத்து விளக்கினை ஏற்றவேண்டும்.
அதற்காக தினமும் விளக்கை கழுவி சுத்தம் செய்யவேண்டியது இல்லை.வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தால் போதுமானது.
விளக்கிற்கு குங்குமம் வைத்து விளக்கேற்றிய கையோடு நிலை வாசலுக்கு ஒரு குங்கும பொட்டுவைத்து தூபம் ஏற்றி வழிபட வாயில் கதவுகள் வழியே வசந்தத்தையும், வாய்ப்புகளையும், மகாலட்சுமியுடன் குபேரனும், உங்களின் இஷ்டதெய்வமும், குலதெய்வமும் சேர்ந்தே சேர்க்கும் என்பது திண்ணம்.
மேலும் வீட்டு வாசல்படியின் இரு பக்கங்களிலும் எலுமிச்சம் பழத்தை சமமாக வெட்டி அதில் குங்குமம் தடவிவைப்பது திருஷ்டி தோஷத்தை அழிக்கும் ஆற்றல் பெற்றது.
வீட்டில் சூழல் சரிவராமல் நோய் சார்ந்த தாக்கத்தில் இருக்கும் சூழல் இருந்தால் துமட்டி காயை இரண்டாகப் பிளந்து அதில் குங்குமத்தை தடவி வைக்க சுபிட்சமான சூழல் ஏற்படும். அதேபோன்று வாசல் கதவுகளில் சூலம் சின்னமும் ஸ்வஸ்திக் சின்னத்தையும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரைந்து வைக்க நேர்மறை ஆற்றல் ஊற்றெடுக்கும்.
பயன்படுத்தப்படும் குங்குமத்தை கடைகளில் வாங்கி அப்படியே பயன்படுத்தக்கூடாது. வியாழக்கிழமை அல்லது குரு ஓரையில் குங்குமத்தை வாங்கிக் கொள்ளவும். வாங்கிய குங்குமத்தை அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச்சென்று அங்கு ஒரு நாழிகை என்று அழைக்கப்படும் 24 நிமிடங்கள் வைத்தபிறகு அதை வீட்டிற்கு எடுத்துச்சென்று பயன்படுத்தவேண்டும்.
பெண்கள் மாங்கல்யம், கழுத்து என்கின்ற கண்டம், புருவமத்தி மற்றும் வகிடு ஆகிய இடங்களில் குங்குமத்தை இட்டுக்கொள்ள வேண்டும். இந்த குங்குமத்தை வகிடில் இடும்பொழுது சீமந்த ரேகை என்று சொல்லக்கூடிய ரேகை தூண்டப்பட்டு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளும் குணமாக்கப்படுகின்றது.
இதன்பொருட்டே திருமணமான பெண்கள் வயிற்றில் குங்குமம் இடும் சூழ்நிலையை நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்தார்கள்.
இது சாஸ்திரம் சார்ந்து மட்டுமல்லாமல் அறிவியல் சார்ந்தும் நேர்மறை சக்தியினை உருவாக்கும் ஆற்றல் படைத்தது.
இந்த மகத்துவமான குங்குமம் பெண் சக்தியின் பேராற்றலான பராசக்தியின் அம்சம்கொண்டது என்பதனால் மனரீதியாகவும் மகத்தான ஆற்றலை உடையது.
இதை உணர்ந்தவர்களே சற்று காலங்களுக்குமுன்பு குங்குமத்தை இரண்டு புருவங்கள் தொடும்வரை அடர்த்தியாக பூசி வளம் வந்தவர்களை நாம் கண்டிருப்போம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் வருமான ரீதியாகவும், செழிப்புரீதியாகவும், செல்வவளரீதியாகவும், தண்ணிரைவு பெற்றவர்களாக இருந்திருப்பதை நம்மால் உணரமுடியும்.
இந்த அற்புத ஆற்றல் படைத்த குங்குமத்தின் துணைக்கொண்டு நம் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இன்னலைக் களைந்து வாழ்வில் வசந்தம் பெறலாம் வாருங்கள்.
-ஆஸ்ட்ரோ எஸ். கலைவாணி