முடக்கு ராசி - மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/rumapu-rasi-melamaruvathur-s-kalaivani

மது ஜோதிடத்தில் பற்பல சூட்சுமங்களும் ரகசியங் களும் மறைந்து இருந்தாலும், தசா, புக்தியின் துணைகொண் டும் அவற்றின் நிலைக்கேற்பவும் சில நிகழ்வுகள் சாதகமாகவும், பாதகமாகவும் நடந்துகொண்டிருப்பதை நம்மால் உணர முடியும். இருந்தாலும், இவற்றின் மூலம் மட்டுமே நமக்கு தேவையான அனைத்தையும் அடைந்துவிட முடியாது என்பதே உண்மையிலும் உண்மையாகும்.

நல்ல தசா, புக்தி நடப்பிலிருந்தும் சிலரது வாழ்வில் பல இன்னல்கள் இடம்பெறுவது ஏன்? இரண்டாம் அதிபதி நல்ல நிலையில் இருந்தும் பொருளாதாரத் தடை எதற்கு? பத்தாம் அதிபதியின் தசையில் வேலையும், ஏழு, இரண்டாம், அதிபதிகளின் தசையில் திருமணமும், நிகழாமல் காலம் தாழ்த்தப்படுவது எதனால்? என்று பார்க்கும்பொழுது இதில் முடக்கு என்ற ஒன்று பெரும் சூட்சமத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

முடக்கு என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் அறிய பயணிப்போம் வாருங்கள்.

பெயரிலேயே தெரியும், முடக்கு என்றால் முடக்கப் படுவது. அதாவது ஒரு இயல்பான இயக்கத்தை நிறுத்தி வைப்பது .

எந்த தசா , புக்தி, அந்தரங்களில், ஒரு செயல் நிகழும் என்று கணிக்கப் படுகிறதோ, அதை மறுக்கப் படும் சூழல் இந்த முடக்கி னால் உருவாகின்றது.

சரி இதை எவ்வாறு அறியலாம், இதை எப்படி சரி செய்வது, இதனால் எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்பதை பின்வருமாறு காணலாம்.

ஜாதகத்தில் முடக்கு ராசியாக வரும் பாவ

மது ஜோதிடத்தில் பற்பல சூட்சுமங்களும் ரகசியங் களும் மறைந்து இருந்தாலும், தசா, புக்தியின் துணைகொண் டும் அவற்றின் நிலைக்கேற்பவும் சில நிகழ்வுகள் சாதகமாகவும், பாதகமாகவும் நடந்துகொண்டிருப்பதை நம்மால் உணர முடியும். இருந்தாலும், இவற்றின் மூலம் மட்டுமே நமக்கு தேவையான அனைத்தையும் அடைந்துவிட முடியாது என்பதே உண்மையிலும் உண்மையாகும்.

நல்ல தசா, புக்தி நடப்பிலிருந்தும் சிலரது வாழ்வில் பல இன்னல்கள் இடம்பெறுவது ஏன்? இரண்டாம் அதிபதி நல்ல நிலையில் இருந்தும் பொருளாதாரத் தடை எதற்கு? பத்தாம் அதிபதியின் தசையில் வேலையும், ஏழு, இரண்டாம், அதிபதிகளின் தசையில் திருமணமும், நிகழாமல் காலம் தாழ்த்தப்படுவது எதனால்? என்று பார்க்கும்பொழுது இதில் முடக்கு என்ற ஒன்று பெரும் சூட்சமத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

முடக்கு என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் அறிய பயணிப்போம் வாருங்கள்.

பெயரிலேயே தெரியும், முடக்கு என்றால் முடக்கப் படுவது. அதாவது ஒரு இயல்பான இயக்கத்தை நிறுத்தி வைப்பது .

எந்த தசா , புக்தி, அந்தரங்களில், ஒரு செயல் நிகழும் என்று கணிக்கப் படுகிறதோ, அதை மறுக்கப் படும் சூழல் இந்த முடக்கி னால் உருவாகின்றது.

சரி இதை எவ்வாறு அறியலாம், இதை எப்படி சரி செய்வது, இதனால் எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்பதை பின்வருமாறு காணலாம்.

ஜாதகத்தில் முடக்கு ராசியாக வரும் பாவகம் ஏற்றுள்ள காரகம் நம் வாழ்வில் மறுக்கப்படு கின்றது. மட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் விளைவு கள் பெரிய விபரீதத்தை அளிக்கின்றது.

இந்த முடக்கை அறிவதற்கு ஆன்மகாரகன் என்றும், நவகிரக நாயகன் என்றும் பேரொளி கிரகம் என்றும் போற்றப்படும், கிரகமான சூரியனைக் கொண்டுதான் முடக்கு ராசியினை, முடக்கு நட்சத் திரத்தினை அறிய முடியும். மேலும் ஞானகாரகன் என்று போற்றப்படும் கேதுவின் நட்சத்திரமான மூலமும், சுபிக்சத்தையும் சுகத்தையும், வாரி வழங்க அனுமதிக்கப்பட்ட கிரக மான சுக்கிரனின் பூராட மும் இதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது.

சரி, ஒரு ஜாதகத்தில் எவ்வாறு முடக்கை அறியமுடியும்? உதாரணமாக சூரியன் மேஷ ராசியில் உள்ள அஸ்வினியில் அமர்ந்துள்ளார் என்று எடுத்துக் கொள் வோம், அஸ்வினியில் இருந்து கால புருஷ னுக்கு ஒன்பதாம் பாவகமான தனுசில் அமையப்பெற்ற மூல நட்சத்திரம் எத்தனை யாவது நட்சத்திரமாக வருகின்றது என்று பார்த்தோமேயானால் 19-ஆவது நட்சத் திரமாக வரும். இந்த 19 எண்ணிக்கையை மூலத்திற்கு அடுத்து அமையப்பெற்றுள்ள பூராடத்தில் இருந்து எண்ணி வரவேண்டும். இப்படி எண்ணி வந்தால் 19-வது நட்சத் திரமாக சிம்ம ராசியில் அமையப்பெற்ற பூரம் முடக்கு நட்சத்திரமாக அறியப்படு கின்றது. அப்பொழுது சிம்மம் முடக்கு ராசியாகவும் பூரம் முடக்கு நட்சத்திரமாக வும், சுக்கிரன் முடக்கு கிரகமாகவும், எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

இந்த ஜாதகர் கடக லக்னமாக இருந்தால் இவருக்கு இரண்டாம் இடம் முடக்கு ராசியாக அமையும். இவருக்கு பொருளாதார சார்ந்த பிரச்சினைகளும், குடும்பம் சார்ந்த இன்னல்களும், தவிர்க்கவே முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும்.

மேலும் பூரம் நட்சத்திரத்தில் எந்த கிரகம் அமர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகமும் மறுக்கப்படும்.

இப்படி உங்களின் நட்சத்திரத்திற்கான முடக்கு நட்சத்திரத்தை கண்டறிந்து கொள்ளலாம் மேலும் அதற்கான பரிகாரத் தலங்களுக்கு சென்றுவருவதன் மூலம் இது சார்ந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

ஒருவருக்கு லக்னமே முடக்கு ராசியாக இருந்தால் அந்த ஜாதகர் சார்ந்த தன்னிலையை பிறருக்கு உணர்த்துவதற்கு போராட வேண்டியது இருக்கும். தன் புகழ், நிலை நிறுத்திக்கொள்வது தன்னை உயர்த்திக்கொள்வது போன்ற சூழ்நிலைகள் அமையாது.

முடக்கு ராசி இரண்டாம் பாவகமாக வந்தால் பொருளாதாரத்தில் தடை, குடும்பத்தில் தடை, பேசுகின்ற வார்த்தையின் மூலம் பிரச்சினைகளை அனுபவிப்பது போன்றவை அமையும். அதோடு மட்டுமல்லாமல், அந்த முடக்கு நட்சத்திர அதிபதி எந்த பாவகத்தில் அமர்கின்றாரோ, அந்த பாவகம் சார்ந்த பிரச்சினைகளும் வந்து சாரும் முடக்கு நட்சத்திராதிபதி எட்டில் அமரும்பொழுது வாக்கினால் அவமானம் போன்ற சூழ்நிலையும் உருவாகும்.

முடக்கு ராசி மூன்றாம் பாவகமாக வந்து முடக்கு நட்சத்திராதிபதி மூன்றில் அமர்ந்தால், சிறு சிறு கண்டங்களும், தைரியக் குறைபாடும், இளைய சகோதரத்தினால் திருப்தியற்ற சூழ்நிலையும், ஒப்பந்தங்களினால் இன்னலும் அமையும்.

முடக்கு ராசி நான்காம் பாவகமாக வரும் பொழுது இவர்களுக்கு வீடு, மனை, வாகனம், தாயார், உயர்கல்வி, சுகம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகின்றது.

ss

முடக்கு ராசி ஐந்தாம் பாவகமாக வரும் பொழுது குலதெய்வம் மறுக்கப்படு வது, குலதெய்வம் மறைக்கப்படுவது, பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இருப்பது, குழந்தைகள் மூலம் விருத்தி , குழந்தைகளினால் விருத்தியற்ற சூழ்நிலை போன்றவை உருவாகும். மேலும் எண்ணங் கள் ஈடேறாத தன்மையை உருவாக்கிவிடும்.

ஆறாம் பாவகம் முடக்காக வரும் பொழுது இவர்களுக்கு கடன் சார்ந்த பிரச் சினைகளும், உழைப்பு சார்ந்த பிரச்சினை களும், போட்டிகளில் தேர்ச்சி பெற முடியாத நிலையினையும், உருவாக்கிவிடும்.

ஏழாம் பாவகம் முடக்காக அமைந்தால் கூட்டாளிகள், களத்திரம், சமூகம், நட்பு போன்ற சூழ்நிலைகளில் பெரும் பாதிப்பை உருவாக்கிவிடும்.

அதேபோல் முடக்கு நட்சத்திராதிபதி ஏழில் அமர்ந்த ஜாதகங்கள் திருமண வாழ்வில் பெரும் சிறப்பை எட்டாததை கண்கூடாகக் காணமுடிகின்றது.

எட்டாம் பாவகம் முடக்காக அமை யும் பொழுது திடீர் கண்டங்களும், திடீர் அவமானங்களும் ஏற்படும். மேலும் இவர் கள் காப்பீடு போன்ற துறைகளில் இருந் தால் அது சார்ந்த பிரச்சினைகளை அனு பவிப்பார்கள். காப்பீடுகளால் கிடைக்கும் நன்மைகளை பெரும்பாலும் இவர்கள் பெறுவதில்லை. ஒன்பதாம் பாவகம் முடக்கு ராசியாக அமரும்பொழுது அனைத்து பாக்கியங்களிலும் பெரும் தடையினை உருவாக்கி விடுகின்றது. இது பெண்களின் ஜாதகத்தில் புத்திர தடை, தந்தைவழி இணக்க மற்ற சூழ்நிலையையும் உருவாக்கும்.

பத்தாம் பாவகம் முடக்கில் அமரும் பொழுது தொழில், பிள்ளைகள் வழி யில் தொந்தரவு, மாமியார் உறவில் விரிசல் போன்ற சூழ்நிலையை உருவாக்கும். அதோடு மட்டு மல்லாமல் சமூகத்தில் இவர்களுக்கான புகழ் குறைபாடு ஏற்படும்.

பதினோராம் பாவகம் முடக்காக அமரும் பொழுது பெரும் நெருடலை இவர்கள் சந்திக்க வேண்டியது இருக்கும். ஏனென்றால் உப ஜெயஸ்தானங்களில் பெரிதாக போற்றப்படக்கூடிய 11 ஆம் பாவகம் தங்களின் ஆசை, கனவு, போன்ற சூழ்நிலையில் கை வைத்து விடும். இவர்களுக்கு சேமிப்பு என்ற விஷயத்தில் பெரும் தடையை உருவாக்கி விடும்.

பன்னிரண்டாம் பாவகத்தில் முடக்கு தென்படும்பொழுது தூக்கம், சார்ந்த விஷ யங்களிலும், போகம் சார்ந்த விஷ யங்களிலும், பிரச்னைகளை உரு வாக்கும் .மேலும் 12ஆம் இடம் சிகிச்சைக்கு உரிய இடமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய சிகிச்சை மறுக் கப்படும் சூழ்நிலையும் உருவாக்கலாம்.

இந்த சூழ்நிலையை சாதகமாக மாற்றிக் கொள்ள, அமைக்கப் பட்ட முடக்கு கோவில் களில் சரணடைந்தால் பிரச்னைகள் தீர்க்கப் பட்டு வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

செல்: 8056379988

bala151223
இதையும் படியுங்கள்
Subscribe