ரோகிணி என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத் திலும், ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங் களில் நான்காவது நட்சத்திரமாகும். இது ரிஷப ராசியில் அமையப்பெற்ற பிரகாசம்மிக்க, உடைபடாத, நடு நட்சத்திரமாகும்.

ஜோதிடத்தில் ரோகிணியை மனோகாரகனான சந்திரன் ஆள்கிறார். இந்த நட்சத்திரம் சூரியனை விடவும் 36 மடங்கு பெரிய நட்சத்திரமாகவும், நூறு மடங்கு பிரகாச மானதாகவும் உள்ளது. இது நம் சூரிய குடும்பத்திலிருந்து 65 ஒளியாண்டுகள் தூரத்தில் அமையப்பெற்றுள்ளது என்கின்றன விஞ்ஞான விரிவாக்கங்கள். ஆனால் இந்த நட்சத்திரத்தினை நம் கண்களாலேயே காணமுடியும். அரைவட்ட வட திசையை நோக்கினால் சிவப்பு நிறமாக தன்னை வெளிக்காட்டி மின்னிக்கொண்டிருப்பது தான் ரோகிணி நட்சத்திர மாகும்.

இது 27 நட்சத்திரங் களில் சந்திரனுக்கு மிகவும் பிடித்தமான நட்சத்திர மாக அறியப்படுகிறது. இதுவொரு சிவந்த, வெட்கப்படும் மணப் பெண்ணாக சித்தரிக்கப் படும் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை பிரம்மா என்பதால், மாபெரும் படைப்பாற்றல் கொண்ட நட்சத் திரம் இது. மேலும் தன்னிலிருந்து மற்றொன்றை உருவாக்கும் வல்லமை படைத்தது.

'ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது' என்னும் ஜோதிட வழக்குள் ளது. இது கிருஷ்ணன் அவ தரித்த நட்சத்திரம் என்பதா லும், கிருஷ்ணனின் தாய் மாமனான கம்சன் வதை செய்யப்பட்டதற்காகவும் இப்படி ஒரு சொல்வழக்கு உருவானது. நிதர்சன வாழ்வி யல் நிகழ்வில் அப்படி நடப்ப தாகத் தெரியவில்லை. இது இடைக்கால செருகல்களில் ஒன்றாக இருக்கலாம் என்பது பல ஜோதிடர்களின் கருத்து.

Advertisment

மேலும் புதன் மற்றும் ஆறாமதிபதியின் நிலையைக் கொண்டு தாய்மாமனின் வாழ்வியல் நிலைகளையும், அவரது செயல்பாடுகளும் தீர்மானிக்கப்படுமே தவிர, ரோகிணி என்னும் ஒரு நட்சத்திரத்தை மட்டும் வைத்து தீர்மானிக்கமுடியாது. ரிஷப ராசியில் அமையப்பெற்ற ரோகிணி, தாய்மீது அதீத பற்றுகொண்ட நட்சத்திர மாகும். ஏனென்றால் இங்கு மனோகாரகனாக வும், மாத்ருகாரகனாகவும் பொறுப்பேற்றி ருக்கும் சந்திரன் உச்சமடைகின்றார். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு எண்ணங்கள் மிகுதியாக இருக்கும்; ஆனால் செயல் பாடுகள் குறைவாக இருக்கும்.

rr

Advertisment

ரோகிணி கிருஷ்ணன் அவதரித்த நட்சத்திரம் என்பதால், கிருஷ்ணனைப் போலவே தம் இனம் சார்ந்த, தன்னை அணுகிய, தன்பால் ஈர்க்கப்பட்டவர்களுக்காக தன்னையே தாரை வார்க்கும் குணம் படைத்த நட்சத்திரம் இதுவென்றால் மிகையல்ல. அழகியலுக்கும், அழகியல் உணர்ச்சிக்கும், கவர்ந்திழுக்கும் தன்மைக்கும் காரகமான சுக்கிரனின் வீட்டில் அமையப் பெற்ற நட்சத்திரமாக இருப்பதால்- ஆண்களாக இருந்தால் பெண்களையும், பெண்களாக இருந்தால் ஆண்களையும் ஈர்க்கும் வசீகரம் படைத்தவர்களாக, இருப்பார்கள்.

இவர்களின் கண்கள் மிகவும் ஒளி பொருந் தியதாக அமைந்திருக்கும். இவர்கள் யாரிடமும் கைகட்டி வேலைசெய்ய விரும்பு வது அரிது. அனைத்துத் துறைகளைப் பற்றிய ஞானமும் இவர்களுக்கிருக்கும்.

இவர்கள் மற்றவர்களிலிருந்து வேறு பட்டு, மற்றவர்களை வழிநடத்தும் சாதுரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். ரோகிணியில் பிறந்தவர்களை ஆசனாகக் கொண்டவர்கள் பாக்கியசாலிகள் என்றே கூறலாம். ரோகிணி நட்சத்திரம் சுமை நிரப்பப்படும் வண்டிகளின் காரகமாக அமையப்பெற்றுள்ளது. தேர், போருக்குச் செல்லும் வண்டி போன்றவை இதில் அடங்கும்.

ரோகிணி மனுஷ கண நட்சத்திரம் என்பதால், இவர்கள் தேவ கணத்தை ஒத்த கருணையும், ராட்சச கனத்தை ஒத்த ஆர்ப்பரிப்பும் ஒருங்கே அமையப்பெற்றவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் படித்த கல்விக்கு சம்பந்தமில்லாத தொழிலில் இருப்பார்கள். மேலும் காதல் அல்லது கலப்புத் திருமணத்தைக் கடந்துவந்தவர்கள் இந்த நட்சத்திரத்தில் அதிகமாகக் காணப் படுவார்கள். அல்லது இவர்களின் வம்சாவளி களில் யாரேனும் காதல் அல்லது கலப்புத் திருமணத்தில் பயணித்தவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரை கணவனாகவோ அல்லது மனைவியாகவோ அமையப்பெற்றவர்கள் பெரும்பாலும் தொழிலின் காரணமாகவோ அல்லது வேறு சில நிகழ்வின் காரணமாகவோ தனித் தனியே பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இவர்களுக்கு ராசிநாதனாக சுக்கிரனும், நட்சத்திரநாதனாக சந்திரனும், நவாம்ச நாதர் களாக ரோகிணி- 1 என்றால் செவ்வாயும், ரோகிணி-2 என்றால் சுக்கிரனும், ரோகிணி-3 என்றால் புதனும், ரோகிணி நான்காம் பாத மென்றால் சந்திரனும் அமையப்பெறுவார் கள். இவர்களுக்கு 2, 5-க்குரியவரான புதன் பாவத்தைத் தருவார்கள் என்கின்ற அடிப்படையில், வித்தைக்காரகனான புதன் கெடுவதால் வித்தைகளைக் கற்பதில் தடையும் தாமதங்களும் ஏற்படும்.

இவர்களுக்கு பிடிவாத குணமென்பது மிக அதிகமாக இருக்கும். இவர்கள் கற்பனை யின்மூலமாகவே அதீத மகிழ்ச்சியையும், சுகத்தையும் அனுபவிப்பவர்களாக இருப் பார்கள். பலர் கலைத்துறையில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில் நாட்டமுடையவர்களாக இருப்பார்கள்.

ரோகிணி ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு சந்திரன் நவாம்சத்தில் ரிஷபத்திற்கு விரய ஸ்தானமான மேஷத்தில் அமையப்பெறும். இந்த அமைப்பால் விளை யாட்டு விஷயத்தில் அதீத கவனத்தோடும், கல்வி விஷயத்தில் சற்று விளையாட்டாகவும் இருப்பார்கள். விரய ஸ்தானத்தில் அமையப்பெற்ற சந்திரன் மனப் போராட்டம், மன உளைச்சல் போன்றவற்றை உண்டாக்கலாம். வாழ்க்கைத் துணையின் வழியில் கண்டிப்பாக ஒரு மனக்கசப்பு இருக்கும். அதையும்மீறி ஒரு ஒற்றுமையான மனநிலையைப் பின்வயதில் கொண்டுவந்து விடுவார்கள். பெரும்பாலும் ராகு தசை நடக்கும்பொழுது இதுபோன்ற ஏற்ற- இறக் கங்கள் இருக்கும்.

தொழில்துறையைப் பொருத்தவரை, முன்னேற்றத்திற்காக கடும் உழைப்பினை வெளிப்படுத்தும் அவசியம் இருக்கும். இவர் களுக்கு பேங்கிங் செக்டார், நிதி நிறுவனம், நிதிசார்ந்த அதிகாரம்மிக்க துறை, விளை யாட்டு போன்ற துறைகளில் சிறப்பினை அடையலாம். மேலும் இரண்டாமிடம் புதனின் வீடு என்பதால், கமிஷன், கதை, கட்டுரை, அச்சகம், பேக்கரி, டீ ஸ்டால் போன்ற தொழில்களும் அமையும்.

ரோகிணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

நவாம்சத்தில் சந்திரன் ரிஷபத்திலேயே இருக்கப் பெறுவார். சந்திரன் வர்க்கோத்தமம் அடையும். இங்கு சந்திரன் மிக வலிமை பெறுவ தால், பார்த்ததுமே மற்றவர்களை வசீகரிக்கும் அழகிய தோற்றத்துடனும் பாவனைகளுடனும் இருப்பார்கள். தாயின்மேல் அதீத பாசம், தன் குழந்தைகள்மேல் அதிக அக்கறை போன்ற குண நலன்களை இயல் பாகவே பெற்றிருப்பார்கள்.இவர்கள் கலை, நாடகம், சினிமா போன்ற துறைகளில் பிர காசிப்பார்கள். மேலும் பயணம் மற்றும் சுற்றுலாத் துறை, கற்பனை- அதாவது கதை, காவியம் போன்றவற்றில் ஈடுபடுவதன்மூலம் தன்னை உலகறியச் செய்வார்கள். பியூட்டி பார்லர், அழகியல் சார்ந்த கல்விகள்மூலம் தன்னை முன்னிலைப்படுத்தி சிறப்படை வார்கள்.

ரோகிணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

நவாம்சத்தில் சந்திரன் புதனின் வீடான மிதுனத்தில் அமையப் பெறுவார். இதனால் மகிழ்ச்சியான- துள்ளலான ஒரு மனோ நிலையை இவர்கள் பெறுவார்கள். சுகபோக மாக வாழும் சிந்தனை மேலோங்கியவர்கள். மற்றவர்களை வழிநடத்தும் சூப்பர்வைசர், மேனேஜர் போன்ற பதவிகளில் முன்னிலை வகிப்பார்கள். புதனின் வீடு என்பதால் வெளித் தொடர்புகளின் மூலமும், கான்ட் ராக்ட் மூலமாகவும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அடைவார்கள். கமிஷன் மூலமாகவும் உயர்வடைவார்கள்.

ரோகிணி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

நவாம்சத்தில் சந்திரன் ஆட்சிவீடான கடகத்தில் அமையப்பெறுவார். இவர்களுக்கு சந்திரன் அதீத பலம்பொருந்திய ஆதி பத்தியத்தைக் கொடுக்கும். வீடு, வாசல், பூமி போன்றவற்றின்மூலம் லாபமும் வருமானமும் அடைவார்கள். மேலும் பயணத்தின் மூலமாகவும், டிராவல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் உயர்வடையும் யோகயதையைப் பெறுவார்கள். இவர்களுக்கு விவசாயம், விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்புகளும் தொழிலும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை வழங்கும்.

ரோகிணி நட்சத்திரத்தின் சின்னம் தேர், வண்டி, கோவில், சக்கரம், ஆலமரம் போன்றவையாக அமைகின்றது. எனவே இந்தப் படங்களைத் தங்களின் தொழிற்கூடங்களில் வைப்பதன்மூலமும், 'லோகோ'வாக வைப்ப தன் மூலமாகவும் தொழில் மற்றும் வருமான வகையில் மிகப்பெரிய உயர்வை அடையலாம்.

மேலும் இதன் மிருகம் பாம்பு என்பதால், பாம்பை அடிப்பதைத் தவிர்த்தால் மிகப் பெரிய வளர்ச்சியை வழங்கும்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஸ்ரீ கிருஷ்ணர், வேங்கடேசப் பெருமாள்.

அணியவேண்டிய ரத்தினம்: முத்து.

வழிபடவேண்டிய தலம்: திங்களூர், திருப்பதி.

விருட்சம்: நாவல் மரம்.

சிறப்புத் தகவல்: காஞ்சிபுரம் பாண்டவர் தூதப் பெருமாள் கோவிலில் புதன், சனிக் கிழமைகளிலும், அஷ்டமி திதிகளிலும், 8, 17, 26-ஆம் தேதிகளிலும் சென்று வழிபட மென்மேலும் சிறப்பினை அடைய முடியும்.

(அடுத்த இதழில் மிருகசீரிடம்)

செல்: 80563 79988