ப் அமுதா, சென்னை-11.
என் பேத்தி விஷ்ணுப்ரியா எதற்கெடுத்தாலும் அழுகிறாள். பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள். நீங்கள்தான் ஒரு நல்லவழி கூறவேண்டும்.
விஷ்ணுப்ரியா 18-5-2015-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடப்பு. லக்னத்தில் சனி, 7-ஆமிடத்தில் சந்திரன். சனி, சந்திரன் பார்வை- அதன் தசாபுக்தியில் குழந்தை மிகவும் பிடிவாதம் பிடித்து அழுகிறாள். இது 2022- பிப்ரவரியில் சரியாகிவிடும். மேலும் குழந்தைக்கு திருஷ்டி தோஷமும் உள்ளது. இவ்விதம் பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் அடம்பிடித்து அழுதால், நல்ல ருத்ராட்சம் வாங்கி கழுத்தில் அணிவிக்கவும். மேலும் ஒரு வெள்ளெருக்கு பிள்ளையார் வாங்கி வீட்டினுள், வாசலைப் பார்த்தவாறு வைத்துக்கொள்ளவும். குழந்தைகளை குளிக்க வைப்பதற்குமுன், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து உப்புக்கல் போட்டு கரையவிட்டு, குழந்தைகளின் கை, கால், உடம்பில் ஊற்றிய பிறகு எப்போதும்போல் குளிக்க வைக்கவும். அவ்வப்போது உப்புக்கல்லை தலையைச்சுற்றி, கரைத்துவிடவும். கற்பூரத்தையும் தலையைச் சுற்றி வாசலில் எரித்துவிடவும். இதனால் குழந்தைகளை பாதிக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலகிவிடும்.
ப் தினேஷ்ராஜ் பிரசாந்த், தூத்துக்குடி.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? நல்ல வேலை அல்லது தொழில் அமையுமா?
23-11-1991-ல் பிறந்தவர். மிதுன லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு. நாகதோஷம் உள்ளது. ராசிக்கு 7-ல் ஆட்சிபெற்ற செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய் தோஷம். சுக்கிரன் நீசம். நடப்பு குரு தசை சுக்கிர புக்தி 2023, செப்டம்பர்வரை. இதற்குள் திருமணம் முடிய வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி குடும்பத்தினரின் எதிர்ப்பால் திருமணம் தடைப்பட்டிருக்கும். சனி 2-ஆமிடத்தைப் பார்ப்பதும் திருமணத் தாமதத்திற்கு ஒரு காரணம். இந்தப் பெண் உங்கள் உறவுப் பெண்ணாக அமைவார். செவ்வாய், சூரியன் ஒரே ராசியில், வெவ்வேறு நட்சத்திரங்களில் உள்ளனர். எதற்கும் திருமணத்திற்குமுன் உங்கள் குலதெய்வத்திற்கு ஒரு தாலி தான காணிக்கைச் செலுத்திவிடவும். நீங்கள் மணப்பெண்ணை தேர்ந்தெடுக்க மிகவும் குழம்புவீர்கள். தென்திருப்பேரை ஆலயம் சென்று வழிபடவும். அரசு சார்ந்த வேலைக்கு வாய்ப்புண்டு.
ப் ஆர். பெருமாள், திருக்கோவிலூர்.
என் பேரக் குழந்தைகளின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். இவர்களுடைய தந்தை 13-11-2021 அன்று சிறுநீரக பாதிப்பால் இறந்துவிட்டார். பிள்ளை களின் கல்வி, எதிர்காலம் பற்றிக் கூறவும்.
சூர்யா 13-10-2006-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு. 2-ஆமிடத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை. இதில் 9, 10-ஆம் அதிபதி களான செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தர்ம கர்மாதிபதி யோகம் தரும். எனவே, தொழில் சார்ந்த கல்வி கற்க இயலும். மேலும் சூரியன், செவ்வாய் சேர்க்கையானது மருத்துவக் கல்வி அல்லது அது சார்ந்த கல்வியைக் கொடுக்கும். மருத்துவக் கல்வி பயில ஒரு ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், மருத்துவ கிரகம் கேது, மருந்து ஸ்தானாதிபதியான 6-ஆம் அதிபதி ஆகியோர் கெட்டுப்போகாமல் சேர்வது அவசியம். நடப்பு குரு தசை- சுயசாரம், சுயபுக்தி. இந்த குரு தசை நல்ல கல்வி மேன்மை தரும். வாழ்வு முன்னேற்றம் பொருட்டு வேறிட மாற்றம் உண்டு. சூரியனும், செவ்வாயும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளனர். திருமண சமயத்தில் கவனமாக வரனைத் தேர்ந்தெடுக்கவும். மேற்கல்வி சிறக்க கடலூர் திருவஹிந்திரபுரம் சென்று ஹயக்ரீவரை வழிபடவும். சௌந்தர்யா: 16-11-2007-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். லக்னாதிபதி 8-ல் மறைவு. எனினும் செவ்வாய் 6-ஆம் அதிபதியாகி 8-ல் மறைவது நல்லதே. மேலும் புதன் 8-ஆம் அதிபதியாகி 12-ல் மறைகிறார். இதன்படி இரு விபரீத ராஜயோகம் கொண்ட ஜாதகம். இதன் தசாபுக்திக் காலங்கள் எதிர்பாராத நன்மை தரும். புதன், சுக்கிரன் பரிவர்த்தனையால், சுக்கிரனின் நீசம் நீக்கப்படுகிறது. நடப்பு செவ்வாய் தசை 8-ல் இருந்து நடத்துவதால் வீட்டில் குழப்பம், கவலை, இழப்பு ஏற்பட்டுள் ளது. அடுத்து 2025-ல் ராகு தசை ஆரம்பம். அப்போது கல்வி சம்பந்தமாக சிறுதூர மாறுதல் இருக்கும். இந்தப் பெண் கம்ப்யூட்டர் அல்லது காமர்ஸ் சம்பந்தமாகப் படிப்பாள். திருமணமானபிறகு வெளியூர், வெளிநாடு செல்வாள். செவ்வாய் தசைக்கு, துர்க்கையை செவ்வரளி அல்லது செம்பருத்தி மலர் கொண்டு வணங்கவும்.
ப் ரவிக்குமார், திருவண்ணாமலை.
எனக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. இதுவரை யாருக்கும் திருமணமாக வில்லை. நிலையான வேலையோ வருமானமோ இல்லை. வாழ்க்கை மிகவும் போராட்டமாக இருக்கிறது. தாயாருக்கும் உடல்நலமில்லை. ஒரு நல்ல வழிகூறவும்.
3-1-1982-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஏகப்பட்ட துயரங்கள். மூத்த சகோதரருக்கும் திருமண மாகவில்லை. உங்கள் ஜாதகம் நட்சத்திர சந்தி, செவ்வாய் தோஷம், கிர கண தோஷம், புனர்பூ தோஷம், நாகதோஷம் என தோஷங் கள் உடைய ஜாதகம். மேலும் சந்திரனும் குரு வும் 9, 5-ன் அதிபதிகளாகி, 8-ஆமிட புதன் சாரம். அம்சத் தில் குரு நீசம். மேலும் சனி, செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் பெறுகின்றனர். எனவே உங்கள் குடும்பத்தில் முன்னேற்றமில்லாமல் உள்ளது. நடப்பு சந்திர தசை. இதில் மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளாகியுள்ளீர்கள். உங்களுக்கும் சகோதரர்களுக்கும், சைவக் குடும்பங்களில் சற்று வேறு ஜாதியானா லும் பெண் பார்ப்பது நல்ல பலனைத் தரும். நீங்கள் திருவண்ணாமலையில் வசிப்பதால், தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்வது சிறப்பு. பசுக்களுக்கு தீவனம் கொடுப்பது அதனினும் சிறப்பு. உழவார- தூர்வாரும் பணி எதனையும்விட சிறப்பு. இந்த எளிய- ஆனால் வலிமையான பரிகாரங்கள் மிகுந்த பலனைத் தரும். நடப்பு சந்திர தசையில் புதன் புக்தி 2023, ஜூலை வரை. இதற்குள் உங்கள் மூத்த சகோதரர்கள் மற்றும் உங்களுக்கும், ஏற்கெனவே மணவாழ்வில் துன்பம் கொண்டு விலகி வந்தவர்களுடன் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். ஒருமுறை திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளை சேவிக்கவும்.
ப் ஏ. அசோக், திருநெல்வேலி.
நான் சித்தர் வழிபாடு செய்யலாமா அல்லது ஏதேனும் தெய்வ உபாசனை செய்யலாமா? நல்ல குரு கிடைக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும்? என் உடல் பிரச்சினை எப்போது தீரும்?
22-2-1983-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். ராசியில் சனி, சுக்கிரன் உச்சம். 2-ல் கேது; 8-ல் ராகு. ஆன்மிகம் எனும்போது 9-ஆம் அதிபதியை கவனிக்கவேண்டும். உங்களின் 9-ஆம் அதிபதி சந்திரன் 8-ல் ராகு சாரத்தில் ராகுவுடன் உள்ளார். இதில் ஆன்மிக குரு எப்போது கிடைப்பார்- சித்தர் வழிபாடு செய்யலாமா- தெய்வத்தை உபாசனை செய்யலாமா என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். சாமி கும்பிடுவதற்கெல்லாம் ஜோதிடரிடம் கேட்கவேண்டுமா? எந்த தெய்வம் பிடிக்கி றதோ அதை வணங்கலாமே! மேலும் 5-ஆம் அதிபதி சனி, கேது எனும் இரு பாவர்களுக்கு நடுவில் உள்ளார். 5-ஆமிடத்தில் 7-ஆம் அதி பதி சுக்கிரன் உச்சம். உங்கள் ஜாதகத்துக்கும், கேட்ட கேள்விக்கும் சம்பந்தமேயில்லை. ஒருவேளை நித்யானந்தா ஆசிரமத்துக்கு முகவரி கேட்கிறீர்களோ என்னவோ. அந்த முகவரி "பாலஜோதிட'த்தில் கிடைக்காது. உங்களுக்கு குடல்வால் நோய் அல்லது சிறுநீரகக் கோளாறுக்கு வாய்ப்புள்ளது. நடப்பு சனி தசையில் சுக்கிர புக்தி. தசாநாதர், புக்திநாதர் இருவரும் உச்சம். உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சையெடுப்பார் என்பது விதி. இந்தக் காலகட்டத்தில் ஒன்று யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடுவீர்கள். அல்லது குருவைத் தேடுகிறேன் என இருள் மாயைக் குள் சிக்கிக்கொள்வீர்கள். நீங்கள் கண்டிப் பாக பட்டீஸ்வரம் துர்க்கையையும், உங்கள் ஊரிலுள்ள துர்க்கையையும் வணங்க வேண்டும்.
செல்: 94449 61845