ரா. இளம்பாரதி, செங்கோட்டை.
சுயமாக என்ன தொழில் செய்யலாம்? டீக்கடை வைக்க லாமா? சொந்தவீடு அமையுமா?
24-8-1984-ல் பிறந்தவர். கடக லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரனும் 12-ஆம் அதிபதி புதனும் பரிவர்த்தனை. சனி 4-ல் உச்சம். 4-ஆமிடம் என்பது நீராதாரங்களைக் குறிக்குமிடம். எனவே, நீங்கள் டீக்கடை வைப்பது மிகப்பொருத்தமானதாகவே இருக்கும். உங்களின் பணவரவு பெரும்பாலும் சமையல் சார்ந்ததாகவே அமையும். நடப்பு புதன் தசை 2025, ஆகஸ்ட் வரை. அதற்குள், உங்கள் சொந்தவீட்டுக் கனவு நிறைவேறும். சற்று பழைய வீடாக இருக்கும். சொந்த ஊரிலேயே வாழ்வு சிறக்கும். தற்போதைய புதன் தசை மற்றும் அடுத்துவரும் கேது தசையும், ஓஹோவென்று பலன்களைக் கொடுக்காவிட்டாலும், ஓரளவு நல்ல பலன்களைக் கொடுக்கும். குலதெய்வ பாக்கி செலுத்தப்படாமல் உள்ளது. நினைவுப்படுத்தி நிறைவேற்றுங்கள். தொழிலில் முன்னேற்றமடைய விரும்பு வோர், அமர்ந்த நிலையிலுள்ள பெருமாளை வணங்குவது சிறப்பு.
கி. சுப்பிரமணியம், செங்கோட்டை.
பிறந்ததிலிருந்தே கஷ்ட ஜீவனம் தான். இடுப்புவலி, மூட்டுவலியால் நடக்க முடியவில்லை. ஹோட்டல் தொழிலில்
ரா. இளம்பாரதி, செங்கோட்டை.
சுயமாக என்ன தொழில் செய்யலாம்? டீக்கடை வைக்க லாமா? சொந்தவீடு அமையுமா?
24-8-1984-ல் பிறந்தவர். கடக லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரனும் 12-ஆம் அதிபதி புதனும் பரிவர்த்தனை. சனி 4-ல் உச்சம். 4-ஆமிடம் என்பது நீராதாரங்களைக் குறிக்குமிடம். எனவே, நீங்கள் டீக்கடை வைப்பது மிகப்பொருத்தமானதாகவே இருக்கும். உங்களின் பணவரவு பெரும்பாலும் சமையல் சார்ந்ததாகவே அமையும். நடப்பு புதன் தசை 2025, ஆகஸ்ட் வரை. அதற்குள், உங்கள் சொந்தவீட்டுக் கனவு நிறைவேறும். சற்று பழைய வீடாக இருக்கும். சொந்த ஊரிலேயே வாழ்வு சிறக்கும். தற்போதைய புதன் தசை மற்றும் அடுத்துவரும் கேது தசையும், ஓஹோவென்று பலன்களைக் கொடுக்காவிட்டாலும், ஓரளவு நல்ல பலன்களைக் கொடுக்கும். குலதெய்வ பாக்கி செலுத்தப்படாமல் உள்ளது. நினைவுப்படுத்தி நிறைவேற்றுங்கள். தொழிலில் முன்னேற்றமடைய விரும்பு வோர், அமர்ந்த நிலையிலுள்ள பெருமாளை வணங்குவது சிறப்பு.
கி. சுப்பிரமணியம், செங்கோட்டை.
பிறந்ததிலிருந்தே கஷ்ட ஜீவனம் தான். இடுப்புவலி, மூட்டுவலியால் நடக்க முடியவில்லை. ஹோட்டல் தொழிலில் போதிய வருமானமில்லை. பிள்ளைகள் இல்லை. பிழைப்புக்கு என்ன தொழில் செய்யலாம்?
15-5-1943-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். லக்னாதி பதி சுக்கிரன், சனி மற்றும் ராகு என இரண்டு பெரிய பாவரிடையே அகப் பட்டுக்கொண்டு பாபகர்த்தாரி யோகம் பெற்றுள்ளார். சுக்கிரனுடன் சேர்ந்த குருவும் இதே பாபகர்த்தாரி யோகம் பெற்றுள்ளார். பிறந்ததுமுதல் இப்போதுவரை கஷ்ட ஜீவனம் என கூறியுள்ளீர்கள். நடப்பு புதன் தசை. இது விரயாதிபதி தசை. எனவே, உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளால் அல்லல் ஏற்படும். புதன் உங்களுக்கு 2, 5-ன் அதிபதி. ஹோட்டல் தொழிலை சற்று மாறுபாடாக நடத்த ஆரம்பிக்கவும். உங்கள் ஹோட்டலில், பழமையான- ஆரோக்கிய மேம்பாட்டிற்கான உணவை மட்டும் விற்கவும். ஒருமுறை திருவெண்காடு சென்று புதன் பகவானை வழிபடவும். உங்கள் ஊரிலுள்ள கோவில்களில், புதன்கிழமைதோறும் புதனுக்கு நெய்விளக்கேற்றி வழிபடவும். நரம்பு சம்பந்தமான நோய்க்குத் தீர்வு கிடைக்கும். ப்இரா. விசுவநாதன், உளுந்தூர்பேட்டை. ஏழு மாதங்களாக மூக்கடைப்பு, தும்மல் போன்றவற்றால் அவதிப்பட்டு வருகிறேன். எந்த விசேஷங்களுக்கும் போகமுடியவில்லை. தூக்கமும் வருவதில்லை. எப்போது தீர்வு கிட்டும்? 23-5-1955-ல் பிறந்தவர். மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். தங்களுக்கு தற்போது 6-ஆமிட புதன் தசை நடப்பு. புதன், செவ்வாய் சாரம் வாங்கி 3-ஆமிடத்தில் உள்ளார். உடன் செவ்வாயும் கேதுவும். செவ்வாய் லக்னம் மற்றும் 8-ஆமதிபதி. இவர்கள் அமர்ந்திருக்கும் 3-ஆமிடம் என்பது, 4-ஆமிடம் எனும் சுகஸ்தானத்தின் 12-ஆமிடம்; சுகத்திற்கு விரயம் தருமிடம். மேலும் தசாநாதர் புதன்- செவ்வாய், கேதுவுடன் சேர்க்கை. எப்போதும் 6, 8-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை அல்லது மறைவு ஸ்தானத்தில் அமர்வதே நல்லது. ஆனால் உங்களுக்கு இரண்டு பேரும் சேர்ந்திருக்கிறார் கள். உங்களுக்கு புதன் தசை ஆரம்பித்ததிலிருந்தே உடல்நிலை சீராக இருந்திருக்காது. இப்போது புதன் தசையில் சூரிய புக்தி மிகவும் தொல்லை கொடுக்கிறது. உங்கள் நோயின் மூலகாரணம் உஷ்ணம்தான். கூடியமட்டும் சித்த வைத்தியத்தைக் கைக்கொள்ளுங் கள். எப்படியிருப் பினும் 2022, மே மாதம்வரை சற்று பிரச்சினை இருக்கத்தான் செய்யும். பின் மெதுவாக சுகம் கிடைக்கும். பொதுவாக 6-ஆமிட தசை கடன், நோய், எதிரி ஆகிய வற்றைத் தரும். புதன் ஆட்சியாக இருப்பதால் நோய்த் தொல்லையைக் கொடுத்திருக்கிறது. நோய் குணமாக புதுச்சேரி அருகே, சிங்கர்குடி (சிங்கிரி குடி) என்னும் கோவிலில் எழுந்தருளி யிருக்கும் 16 திருக்கரங்களுடன்கூடிய நரசிம்மரை வணங்கவேண்டும். மேலும் பழனி சென்று, தண்டாயுதபாணி தெய்வத்தையும் வணங்கவும். உங்களால் முடிந்த அளவு ஞானதானம் செய்யுங்கள். புதனின் 6-ஆமிடக் கோளாறுக்கு அதுவே மிகச்சிறந்த பரிகாரமாகும்.
பாரிஜாதம், சென்னை.
என் உடல்நிலை, ஆயுள் பற்றிக் கூறவும்.
உங்களுக்கு தற்போது 85 வயதாகிறது. பிறந்த தேதி மட்டும் ஓரளவு சொல்லியிருக்கிறீர்கள். பிறந்த நேரம் பற்றிய குழப்பம் சற்று உள்ளது. 2-ல் கேது, 8-ல் ராகு இருக்கிறது என்று மட்டும் கூறியுள்ளீர்கள். அதனை வைத்துக்கொண்டு கணினியில் கணக்கீடு செய்ததில் ரிஷப லக்னம், ரிஷப ராசியாக வந்துள்ளது. 8-ஆம் அதிபதி, குருவை சனி பார்ப்பதால் தீர்க்காயுள் ஜாதகமாக உள்ளது. அனேகமாக நடப்பு கேது தசை முடிவாக இருக்கும். அல்லது சுக்கிர தசை ஆரம்பமாக அமையும். எது எப்படியிருப்பினும், ஜாதகத்திலுள்ள கும்பச் சனியை, கோட்சார குரு கடந்துகொண்டுள்ளார். கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டிய நேரமாகும். முடிந்தால் திருக்கடையூர் சென்று வணங்குவது நன்று. அல்லது பணம் அனுப்பி உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
மீனாட்சி, திருச்சி.
உடல்நிலை மிகவும் சிரமம் தருகிறது. என்ன பரிகாரம்?
13-2-1944-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். நடப்பு புதன் தசை. உங்களுக்கு புதன் 5, 8-ன் அதிபதி. அவர் 12-ல் மறைவு. உடன் கேது. புதன் தசையில் குரு புக்தி. குரு 6-ல் உச்சம். எனவே, நரம்புப் பிரச்சினை மற்றும் பாதப் பிரச்சினைகளால் மிகவும் சிரமப்பட்டு, தற்போது நடக்க இயலாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டீர்கள். 2022, ஜூன் மாதம்வரை, இப்படியே ஓடும். அடுத்துவரும் சனி புக்திக் காலத்தில் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் சார்பில், குடும்பத்தினர், திருச்சி அருகிலுள்ள திருப்பைஞ்ஞீ- சென்று, அங்கு அதிகார வல்லவர் எனும் திருநாமத்தோடு உள்ள சிவனை வணங்கவேண்டும்.
வாசகர்கள் தங்கள் கேள்விகளை ஜாதக நகலுடன் அனுப்பவும். தசாபுக்தி விவரமும் தேவை. முகவரி:
கேள்வி- பதில் பகுதி,
பாலஜோதிடம், 76,
14-ஆவது தெரு,
அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு, சென்னை-58.