ப் ஆனந்தராஜ், உடையார் பாளையம்.

எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? பூர்வீக சொத்து கிடைக்குமா?

6-7-1984-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். லக்னாதிபதி புதனும், சந்திரனும் பரிவர்த்தனை. அம்சத்தில் சூரியனும் புதனும் உச்சம். இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி, 7-ஆமதிபதிக்கும் மற்றும் ராசியாதிபதி 7-ஆமதிபதிக்கும் சிறிதும் சம்பந்தம் ஏற்படவில்லை. 5-ஆமிடத்தில் உச்ச சனியும் செவ்வாயும் சேர்க்கை. இந்த சேர்க்கையானது ஜாதகருக்கு பூர்வ புண்ணிய குற்றத் தைக் காட்டுகிறது. இதனால் உங்களுக்குத் திருமணத்தடை, சொத்துப் பிரச்சினை, உறவினர் களுடன் பகையும் தகராறும் ஏற்படும். சொந்த பூமியில் இருக்க விடாது. நீங்கள் பழனி மலையேறி, முருகரையும் போகரையும் வணங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நடப்பு குரு தசை சூரிய புக்தி 2022, செப்டம்பர் வரை. இதில் பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்புள் ளது. அடுத்து வரும் சந்திர தசையில் விருப்பத் திருமணமாக அமையும்.

ப் வி. உமா, உளுந்தூர் பேட்டை.

Advertisment

இதுவரை எதிர்நீச்சல் போட்டு போராட்டமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். என கணவருக்கு மூக்கு ஆபரேஷன் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. 6-ஆமதிபதி தசை நடப்பில் மேலும் பிரச்சினை வருமா? சொந்த வீடு எப்போது அமை யும்? மனை இருந்தும் குடிபுக முடியவில்லை.

கணவர் ஆர் விஸ்வநாத் 23-5-1955-ல் பிறந்தவர். மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய் 3-ஆமிடத்தில் புதன் மற்றும் கேதுவுடன் உள்ளார். சந்திரன் உச்சம்; சனி உச்சம்; குரு உச்சம். மூன்று கிரகங்கள் உச்சமான ஜாதகர் முதல்தர கோடீஸ்வரராக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் சொந்த வீடில்லாமல் போராட்ட வாழ்க்கை வாழ்வதாக எழுதியுள்ளீர்கள். இதற்குக் காரணம் உச்ச சனி, உச்ச குருவைப் பார்த்து, ஜாதகரை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. நடப்பு புதன் தசையில் சந்திர புக்தி. இதில் மனையில் வீடுகட்டி குடிபுக முடியும். புதன் 6-ஆமிட தசைதான் என்றாலும், அவர் செவ்வாய் சாரத்திலும், செவ்வாயுடனும் இருப்பதால், 6-ஆமிட வேலை அதிகாரமற்று பலமிழக்கும். எனவே கவலை வேண்டாம். எனினும் காது, மூக்கு மட்டும் சற்று கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். உங்கள் வீடு கட்டும் பணி தடங்கலின்றி முடிய, விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் சென்று வணங்கவும். நீங்கள் (வி. உமா) 23-11-1963-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்தில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என நான்கு கிரகச் சேர்க்கை. கிரக யுத்த ஜாதகம், ஒருபடி முன்னேறினால் இருபடி பின்னேறும். எனினும் குரு பார்வை கிடைப்பதால், அதிக பாதிப்பிருக்காது. நடப்பு சனி தசை ராகு புக்தி 2022, நவம்பர்வரை. அதில் சற்று உடல்நலக்குறைவு இருக்கும். மேலும் உங்களுக்கு ஏழரைச்சனியும் உள்ளது. அடுத்து குரு புக்தி நல்லதாக அமையும். இந்த குரு புக்தியில் சொந்த வீடு கட்டிச் செல்லமுடியும். கால் மூட்டுவலி உள்ளவர்கள் திருச்சி மாவட்டம், இடையாற்று மங்கலம் கோவில்சென்று வழிபடவும்.

Advertisment

qq

ப் ஹேமா ராமன், சென்னை-11.

எனது சகோதரிகளின் மகன் மற்றும் மகளின் ஜாதகங்களை அனுப்பியுள் ளேன். மகனது பெற்றோர் காலமாகி விட்டனர். மகளது தந்தை மாரடைப்பில் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். பிள்ளைகள் இருவரின் திருமணம், எதிர்காலம் பற்றிக் கூறவும்.

மகன் அரவிந்த் 28-7-1993-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன் 12-ல். 12-ஆமதிபதி சந்திரன் நீசம். கூடவே ராகுவும் உள்ளார். ராசிக்கு சர்ப்பதோஷம் உள்ளது. நடப்பு புதன் தசையில், குருபுக்தி 2023 வரை. எனவே அதற்குள் திருமணம் நடந்துவிடும். சனி, செவ்வாய் பார்வை இருப்பதால், விருப்பத் திருமணத்திற்கு இடமுண்டு. லக்னாதிபதி 12-ல் மறைந்து, லக்னதோஷம் உள்ளவர்கள், சிதம்பரம் கோவிலுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று வணங்கவும். இந்த ஜாதகருக்கு 7-ல் சனியும், அவரை செவ்வாய் பார்வையிடுவதாகவும் உள்ளது. இதற்கு திருப்பைஞ்ஞீலி சென்று வணங்கவும். அடுத்துவரும் கேது தசையில், ஜாதகர் சொந்த இடத்தைவிட்டு வேறு ஊர், வெளிநாடு சென்று வாழ்வார். மகள் வந்தனா 5-11-1998-ல் பிறந்தவர். மேஷ லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். லக்னத்தில் சனி நீசம். அவரை 7-ல் உள்ள நீச சூரியன், நீசபங்கமாகிப் பார்க்கிறார். சூரியனை குரு பார்ப்பதாலும், உடன் சுக்கிரன் ஆட்சியாலும் சூரியன் நீசபங்கமாகி விடுகிறார். இப்போது சனியும், சூரியனும் நீசம். நீசனை நீசன் பார்க்க உச்சமாகும் என்பது ஜோதிட விதி. ஆனால் இந்த விதி இங்கு முழுமையான பலன் தராமல், பாதி பலனையே தர இயலும். மேலும் சனி, சூரியன் பார்வை தந்தையுடன் தோழமையாக இருக்க விடாது. ராசிக்கு 4-ல் செவ்வாய், ராகு, எனவே செவ்வாய் தோஷம் உள்ள பையனாகப் பார்க்கவேண்டும். சனியின் பார்வை 7-ஆம் வீட்டிற்கு விழுவதால், திருமணம் சற்று தாமதமாக நடக்கும். நடப்பு ராகு தசை. இதில் சுக்கிர புக்தியில்தான்- 29 வயதில்தான் திருமணம் நடக்கும். பூர்வபுண்ணிய தோஷம் பலமாக உள்ளதால் அமாவாசையன்று இராமேஸ்வரம் சென்று முன்னோர்களை நினைத்து வழிபடவும். பூர்வபுண்ணியக் குற்றமே இந்தப் பெண்ணின் தந்தையை ராகு தசை, சனி புக்தி, சனி அந்தரத்தில் திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் இறக்கச் செய்துள்ளது. ராகு தசை முடியும்வரை துர்க்கையை வணங்கவேண்டும். வயதனா வருக்கு உணவு வழங்கச் செய்யவும். காதல், கலப்புத் திருமணமாக அமையும்.

ப் க. பாலகிருஷ்ணன், சுரண்டை.

இவர்களுக்குத் திருமணமாகி குழந்தைகள் இல்லை. தற்சமயம் விவாகரத்து வழக்கு நடக்கிறது. இருவரும் இணைந்து வாழ வழியுண்டா? அல்லது விவாகரத்து கிடைத்து, பெண்ணுக்கு மறுமணம் நடக்க வாய்ப்புள்ளதா?

கே.ஏ. விஜய பார்த்தசாரதி 6-3-1987-ல் பிறந்த வர். துலா லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். 7-ல் செவ்வாய் ஆட்சி. பரிகார செவ்வாய் தோஷம். நடப்பு ராகு தசை சுக்கிர புக்தி. ராகு 6-ஆமிடத்தில் இருந்து தசை நடத்துகிறார். சுக்கிரன் லக்ன, 8-ஆம் அதிபதி. 6-ஆமிட தசையில் 8-ஆமிட புக்தி. அதனால் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. பா. இராமலட்சுமி 25-9-1989-ல் பிறந்த வர். மகர லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். இவருக்கு லக்னத்தில் ராகு; அதற்கு 7-ல் ராசியில் கேது. லக்னம், ராசி இரண்டின்படியும் நாகதோஷம் உள்ளது. 7-ஆம் அதிபதி அம்சத்தில் நீசம். மேலும் இவருக்கு சூரியனும் செவ்வாயும் ஒரே ராசியில், ஒரே நட்சத்திரத்தில் நிற்கின்றனர். நடப்பு சுக்கிர தசை ராகு புக்தி. பையனுக்கு தோஷமில்லை. பெண்ணுக்கு தோஷமுள்ள ஜாதகம். அதனால் தற்போது விவாகரத்து வழக்கு நடக்கிறது. பெண்ணின் ஜாதகப்படி பிரிவு ஏற்பட்டுள்ளது. இவருக்கு சுக்கிர தசையில் ராகு புக்தி 2025 மே வரை நடக்கும். அதற்குள் இந்த திருமணத்திலிருந்து மணவிலக்கு கிடைத்து மறுமணம் செய்யும் வாய்ப்பும் ஏற்படும். மறுமணம் செய்ய விரும்புபவர்கள் மயிலாடுதுறை, மாப்படி சுமங்கலி காளியை பௌர்ணமி, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வணங்கினால், இரண்டாவது திருமணம் நல்லபடியாக நடக்கும். அதில் நிலைத்து வாழலாம்.

செல்: 94449 61845