ப் ப்ரியா, சென்னை.
என் தலையில் மிக அதிகமாக முடி கொட்டுகிறது. ஏறக்குறைய வழுக்கைபோல் தலை தெரிகிறது. இதற்கு ஜோதிடக் காரணம், பரிகாரம் கூறமுடியுமா?
ஜோதிடம், முடியைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதன் காரகராக கேதுவை சுட்டிக்காட்டுகிறது. மேலும் வழுக்கைத் தலைக்கான கிரக சேர்க்கை என குருவுக்கு 1, 5, 9-ல் அல்லது 7-ல் புதன் இருந்தா லும்; சனிக்கு 1, 5, 9-ல் அல்லது 7-ல் புதன் இருந்தாலும் தலையில் வழுக்கை உண்டாகும் என கூறப்பட் டுள்ளது. கேதுவின் சாரநாதர் கெட்டு, அவர் லக்னத்தோடு சம்பந் தம் ஏற்பட்டு, அதன் தசாபுக்திக் காலங்களில் முடி கொட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஏதேனும் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு, பின் அதனை மறந்துவிட்டாலும் முடிகொட்டும் நிலை உண்டாகும். மேலும் ராகுவும் வழுக்கைத் தலையை ஒரு நோயாக உண்டாக்குவார் என கூறப்பட்டுள்ளது. விநாயகரை வணங்குவது சிறந்த பரிகாரம். உங்கள் குலதெய்வம் அல்லது திருப்பதிக்கு பூமுடி காணிக்கை கொடுப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள். மேலும் கேதுவுக்குரிய கொள்ளு தானியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளவும். கேது எப்போதுமே அழுக்கான, இறுக்கமான, பிரிக்கும் கிரகம். எனவே தலையை சுத்தமாகப் பேணிக் காக்கவும். பெண்களுக்கு வழுக்கைபோல் தோன்றுவது சற்று தர்ம சங்கடமான நிலையல்லவா? பூமுடி காணிக்கையென்பது, தலைமுடியில் சிறிது பூ வைத்து முடியின் நுனியை மட்டும் சற்று கத்தரித்து விடுவர். நிறைய பெண்கள் இந்த பிரார்த்தனைதான்
ப் ப்ரியா, சென்னை.
என் தலையில் மிக அதிகமாக முடி கொட்டுகிறது. ஏறக்குறைய வழுக்கைபோல் தலை தெரிகிறது. இதற்கு ஜோதிடக் காரணம், பரிகாரம் கூறமுடியுமா?
ஜோதிடம், முடியைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதன் காரகராக கேதுவை சுட்டிக்காட்டுகிறது. மேலும் வழுக்கைத் தலைக்கான கிரக சேர்க்கை என குருவுக்கு 1, 5, 9-ல் அல்லது 7-ல் புதன் இருந்தா லும்; சனிக்கு 1, 5, 9-ல் அல்லது 7-ல் புதன் இருந்தாலும் தலையில் வழுக்கை உண்டாகும் என கூறப்பட் டுள்ளது. கேதுவின் சாரநாதர் கெட்டு, அவர் லக்னத்தோடு சம்பந் தம் ஏற்பட்டு, அதன் தசாபுக்திக் காலங்களில் முடி கொட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஏதேனும் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு, பின் அதனை மறந்துவிட்டாலும் முடிகொட்டும் நிலை உண்டாகும். மேலும் ராகுவும் வழுக்கைத் தலையை ஒரு நோயாக உண்டாக்குவார் என கூறப்பட்டுள்ளது. விநாயகரை வணங்குவது சிறந்த பரிகாரம். உங்கள் குலதெய்வம் அல்லது திருப்பதிக்கு பூமுடி காணிக்கை கொடுப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள். மேலும் கேதுவுக்குரிய கொள்ளு தானியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளவும். கேது எப்போதுமே அழுக்கான, இறுக்கமான, பிரிக்கும் கிரகம். எனவே தலையை சுத்தமாகப் பேணிக் காக்கவும். பெண்களுக்கு வழுக்கைபோல் தோன்றுவது சற்று தர்ம சங்கடமான நிலையல்லவா? பூமுடி காணிக்கையென்பது, தலைமுடியில் சிறிது பூ வைத்து முடியின் நுனியை மட்டும் சற்று கத்தரித்து விடுவர். நிறைய பெண்கள் இந்த பிரார்த்தனைதான் செய்துகொள்வார்கள்.
ப் எம். திருவேங்கடம், சென்னை-11.
எனது மகன், மருமகள் ஜாதகம் அனுப்பியுள் ளேன். பலன் கூறவும்.
மருமகள் பி. காயத்ரி 29-4-1981-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கும்ப ராசி. 8-ஆமிடத்தில் குரு, சனி சேர்க்கை. பிரம்மஹத்தி தோஷம் உள்ளது. மேலும் சனி அம்சத்தில் நீசம். இவரின் 3-ஆமிடத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை. நடப்பு சனி தசை- எட்டாமிடத்தில் இருந்து தசை நடத்துகிறார். சந்திர சாரம் வாங்கியுள்ளார். ஜாதகி இனம்புரியாத பயத்தில் அவதிப்படுகிறார். இவர் உடம்பிற்கு எந்த நோயும் இல்லாவிட்டாலும், பெரிய வியாதி இருப்பதுபோலவும், தான் மரணமடைய நேரிடும் எனும் கற்பனையிலும் அவதிப்படுகிறார். அதிலும் தற்போது புதன் புக்தி வேறு நடக்கிறது. எனவே பாதிப்பு அதிகமாகவுள்ளது. இவ்விதம் கற்பனையான மரணபயம் உள்ளவர்கள், மக நட்சத்திரத்தன்று எருமை மாட்டுக்கு அகத்திக் கீரை வழங்கி வழிபடவேண்டும். மேலும் நல்ல மனோ தத்துவ மருத்துவரை அணுகவும். மகன் டி. பாலசுப்பிரமணியன் 3-6-1977-ல் பிறந்தவர். மீன லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு. இவரின் 7-ஆமதிபதியான புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் உள்ளார். நடப்பு செவ்வாய் தசை சனியின் பார்வையில் நடக்கிறது. தற்போது சனி புக்தி முடிந்து புதன் புக்தி ஆரம்பம். சனி புக்தியில் மனைவியின்மூலம் ஆரோக் கிய செலவு அதிகரித்திருக்கும். இந்த புதன் புக்தி 2023, மே வரை நடக்கும். இதில் மனைவியை விட்டுப் பிரிந்துவிடுவோமா என எண்ணுமளவு செயல்கள் நடக்கும். குரு பார்வை 7-ஆமிடத்திற்குக் கிடைப்பதால் அஞ்சவேண்டாம். ஒரு கோவிலுக்குச் சென்று தம்பதிகள் புதுத்தா- கட்டிக்கொள்ளவும். கணவனுக்கு நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. மனைவிக்கு சுத்த ஜாதகம். இவ்வாறு இணைக்கும்போது, மனைவியின் மாங்கல்ய ஸ்தானத்தி-ருந்து சனி தசை நடத்தும்போது, இவ்வித இடைஞ்சல் ஏற்படுகிறது. ஒருமுறை திருக்கடையூர் சென்று வரவும். இது தம்பதிகளின் மண வாழ்க்கைக்கும், மனைவியின் பயத்தைப் போக்குவதற்குமான பரிகாரமாகும். இருவருக்கும் ஆயுள் பலம் நன்றாக உள்ளது.
ப் எல். பிரபு, சென்னை-21.
எனக்குத் திருமணம் தாமதமாகிறது. நான் பிறக்கும்போது அறுவை சிகிச்சை காரணமாக இடக்கை ஊனமாகிவிட் டது. இதற்குக் காரணமென்ன? என் எதிர் காலம் எப்படியிருக்கும்?
10-1-1988-ல் பிறந்தவர். கடக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். ராசிக்கு நாகதோஷம் உள்ளது. உங்களுடைய 7-ஆம் வீட்டில், விரயாதிபதி அமர்ந்துள்ளதும், களஸ்திர காரகன் சுக்கிரனை செவ்வாய், சனி பார்ப்பதும், 7-ஆமதிபதி சனி 7-ல் உள்ள புதன், என இரு கிரகங்களும் அம்சத்தில் நீசம் ஆகியிருப்பதும், உங்கள் திருமணத் தாமதத்திற்குக் காரணம். இப்போது ராகு தசை நடப்பு. இதில் 2023 ஜூலை மாதத்திற்குமுன் சந்திர புக்தி நடப்பு. இதில் திருமணம் நடக்கும். அடுத்துவரும் குரு தசை. நன்மைகளையும் அலைச்சலையும் தரும். நீங்கள் பிறக்கும்போது சூரிய தசை உங்கள் ஜாதகத்தில் சூரியன், சனியுடன் 6-ல் இருப்பதாலும், உங்கள் சந்திரன், கேது வுடன் 3-ஆமிடம் எனும் கைகளைக் குறிக்கு மிடத்தில் இருப்பதாலும் கை ஊனம் ஏற்பட்டிருக்கலாம். திருமணத் தடையுள்ள ஆண்கள்- பெண்கள் மாமல்லபுரம் வழியிலுள்ள திருவிடந்தை கோவில்சென்று பரிகாரம் செய்யவும்.
ப் மு. சண்முகம், திருவாரூர்.
என் இரு மகன்களின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்போது திருமணம் நடக்கும்?
மூத்த மகன் செந்தில் குமார் 13-4-1972-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னத் தில் சுக்கிரன், செவ்வாய், சனி. 11-ல் சூரியன், சந்திரன், நீச புதன். பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி யும், 7-ஆமதிபதியும் எவ்விதத் திலாவது சேர்ந்தால், கண்டிப்பாகத் திரும ணம் நடக்கும் என்பது ஜோதிட விதி. இவரு டைய ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்க்கை. இதில் சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களும் ரோகிணி நட்சத்திரத்தில் நிற்கிறார்கள். இது கிரக யுத்தமாகும். இதில் கவனிக்கவேண்டியது, சாரம் வாங்கிய சந்திரன் 11 எனும் மறுமண இடத்தில் நிற்கிறார். எனவே, இந்த ஜாத கருக்கு முதல் மண வாய்ப்பில்லை. மறு மணப் பெண்தான் அமைவாள். அதிலும் சற்று உடல் குறைபாடுடைய பெண் அமைவாள். இவ்வாறு பெண் அமைந்தால் மட்டுமே இவருக்குத் திருமணம் நடக்கும். இல்லை யெனில் திருமணம் என்பதே இந்த ஜாதகருக்கு நடக்காது. இவருக்கு 5-ஆமதிபதி புதன் நீசம். இது பூர்வபுண்ணியக் குற்றமாக இருப்பதால், முன்ஜென்மப் பயன் இவ்விதம் ஆகிறது. நடப்பு சந்திர தசை, குருபுக்தி 2022, ஆகஸ்டுக் குள் திருமணம் நடந்துவிடும். குணசீலன் 27-3-1976-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னத்துக்கு 7-ல் செவ்வாய், சனி உள்ள னர். 7-ஆமதிபதி புதன் நீசம், 5-ல் குருவும் கேதுவும். உடல்நலக்குறைவுண்டு. இவருக்கும் வேலை செய்யுமிடத்தில் மறுமணப் பெண் ணோடு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. நடப்பு சனி தசை, ராகு புக்தி 2023, பிப்ரவரி வரை. அதற்குள் பிற மத, இனப் பெண்ணு டன் மறுமணம் நடந்துவிடும். இந்த இரு சகோதரர்களின் ஜாதக அமைப்பு, இவர்களின் வெகு முன்னோர்கள் தங்களிடம் வேலை செய்த தம்பதிகளை சற்று கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள். அதுவே இவர்களைத் தம்பதியாகவிடாமல் தடுக்கிறது. இவ்வித முன்னோர் சாபம் உள்ளவர்கள் காசி, கயாவிற்குச் சென்று பரிகாரம் செய்வது நன்று. மற்றும் செங்கல்பட்டு திருக்கழுகுன்றம், நென்மே- ஆலயத்தில் பரிகாரம் செய்யலாம். இந்த சகோதரர்கள் நிறைய பரிகாரம் ஏற்கெனவே செய்துள்ளனர். அதனால் கூ- வேலை செய்யும் ஒரு முதிய தம்பதிக்கு வேட்டி, புடவை, தாம்பூலம், இனிப்பு கொடுங்கள்; அதுவே போதும். பின்குறிப்பு: முதல் மணமகன்களுக்கு மறுமணப் பெண்களை சிபாரிசு செய்கிறீர் களே என யோசிக்கவேண்டாம். அவ்வாறு இல்லாவிடின், திருமணம் என்ற ஒன்று நடக்காமலே போய்விடும் வாய்ப்புள்ளது. செல்: 94449 61845