ப் ஒரு வாசகி, சென்னை.

என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். முரட்டு சுபாவம் அதிகமாக உள்ளது. அவனது தந்தை பிரிந்து சென்றுவிட்டார். எப்போது வருவார்?

மகன் அகிலேஷ் 1-5-2014-ல் பிறந்தவர். மகர லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். ஜாதகத்தில் லக்னாதிபதி சனி உச்சம். 5-ஆமதிபதி சுக்கிரன் உச்சம். 7-ஆமதிபதி சந்திரன் உச்சம். 8-ஆமதிபதி சூரியன் உச்சம். எனவே நான்கு கிரகங்கள் உச்சம்பெற்ற ஜாதக மிது. இதில் உச்ச சூரியனை, உச்ச சனி பார்க்கிறார். இதில் தந்தையின் பலன் அடிப்பட்டுப் போகிறது. மகன் பிறந்தவுடன் சூரிய தசையில் தந்தை வேறொரு இடம் பெயர்ந்து விட்டார். நடப்பு சந்திர தசை. அதில் புதன் புக்தி 2022, ஜூலை மாதம் ஆரம்பிக்கும்போது தந்தை திரும்பிவருவார். குரு, சனியைப் பார்ப்பதால் நிறை ஆயுள் உண்டு. செவ்வாய், புதன் பரிவர்த்தனை. அதனால் படிப்பு சுமாராக இருப்பினும், பிற்காலத்தில் சொந்தத் தொழில் நடத்துவார்; கவலை வேண்டாம். எந்தக் காலத்திலும் தந்தைக்கும் மகனுக்கும் ஆகவே ஆகாது. 12 வயதுவரை சற்று முரட்டுப் பிடிவாதமாக இருந்திருப்பார். நடப்பு சந்திரன் சூரிய சாரத்தில் ஓடுகிறார். எனவே மகனின் முரட்டு சுபாவம் மாறிவிடும். பௌர்ணமிதோறும் தாயார் விரதமிருக்கவேண்டும். குழந்தைகள் மிகப் பிடிவாதமாக இருப்பின், குருவாயூர் கிருஷ்ணனை வணங்க, குழந்தைகள் நல்லவிதமாக மாறுவர்.

ப் வள்ளியம்மை, திருப்பாலை, மதுரை.

Advertisment

லட்சுமி என்னும் ஜாதகிக்கு அரசு வேலை கிட்டுமா? திருமணம் எப்போது நடக்கும்? ஜாதகத்தில் துலா லக்னமா அல்லது விருச்சிக லக்னமா என குழப்ப மாக உள்ளது.

லட்சுமி 30-11-1999-ல் போர்ட் பிளேர், அந்தமானில் பிறந்தவர். ஜாதகிக்கு துலா லக்னம்தான் உள்ளது. லக்னாதிபதி சுக்கிரன் நீசம். புதன் பரிவர்த்தனையால் நீசபங்கம். சனி லக்னத்துக்கு 7-ல் நீசம். குரு சேர்க்கையால் நீசபங்கம். லக்னத்துக்கு 4-ல் செவ்வாய் உச்சம். செவ்வாய், சனி பார்வை இருந்தாலும், குரு உடனிருப்பதால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நன்கு தெரிந்த நபரை விரும்பித் திருமணம் செய்வார். வரும் சந்திர தசையில், 2026-க்குப்பிறகு செவ்வாய் புக்தியில் அரசுவேலை கிடைக்கும். நடப்பு சூரிய தசை. இதில் சுக்கிர புக்தியில் 26 வயதில் திருமணம் நடக்கும். இந்தப் பெண்ணின் 7-ஆமதிபதி உச்சம் என்பதால் வரும் கணவர் சற்று கோபக்காரராக அமைவார். இந்தப் பெண் பொறுமையைக் கடைப்பிடித்தல் நல்லது. மேற்கண்ட ஜாதகத்தில் 12-ஆமிடம் எனும் சயன ஸ்தானத்தில் சுக்கிரன் நீசம். இவ்வாறு 12-ஆமிடம் பாதிக்கப்பட்டவர்கள் குடவாசல் அருகே திருப்பெருவேளூர் என்னும் மணக்கால் ஐயம்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுண்ட நாராயண பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, 24 நெய்தீபமேற்றி வழிபட சயன தோஷ பாதிப்பு நீங்கும். திருமணமானவர்களும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் இல்லாதவர்களும் மேற்கண்ட கோவிலுக்கு ஒருமுறை சென்றுவரவும்.

ப் கே. கந்தசாமி, எடப்பாடி.

Advertisment

ஒன்பது வயதில் தாயை இழந்தேன்; 12 வயதில் தந்தையை இழந்தேன். வாழ்க்கை முழுவதும் வேதனைதான். என் அந்திமக் காலம் எப்போது?

5-6-1932-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னாதி பதி குரு உச்சமாகி 8-ல் மறைவு. ஒரு நல்ல விளக்கை ஏற்றி, குடத்தைப் போட்டு மூடிவிட்டால் எங்ஙனம் வெளிச்சம் வரும்? அதுபோல் உங்களுக்குத் திறமைகள் இருந்தாலும் அது வெளியே தெரியாமல் மங்கிப்போய்விட்டது. மேலும் அம்சத்தில் சனி, சந்திரன் நீசம். உங்களுக்கு இவ்வளவு காலம் நடந்த தசைகள் அனைத்துமே எட்டாமிட சாரம் பெற்று நடந்தது அல்லது 8, 6-ஆமிடத்திலுள்ள கிரக சாரத்தில் தசைக்காலம் சென்றுள்ளது. அதனால் வாழ்க்கை நிறைவாக இராமல் அல்லாட்டமாக உள்ளது. நடப்பு சுக்கிர தசை, சனி புக்தி. உடல்நிலையை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். அருகிலுள்ள கோவிலில் விளக்கேற்றி வணங்கவும். காலை எழுந்தவுடன், சூரியனைப் பார்த்து வணங்கவும். உங்கள் வயதிற்கு எல்லாரையும் மனதார ஆசிர்வாதம் செய்யுங்கள். அது போதும்.

Q&A

ப் குமார செல்வம், சிதம்பரம்.

எனது மகள் பவித்ராவின் திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிட்டுமா? பி.எச்டி முடிப்பாரா?

பவித்ரா 9-10-1996-ல் பிறந்தவர். மேஷ லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். லக்னாதி பதி செவ்வாய் 4-ல் நீசம். ராசிக்கு 2-ல் ராகு; 8-ல் கேது. நாகதோஷம் உள்ளது. ராசியில் புதன் உச்சம்; அம்சத்தில் நீசம். சனி, சூரியன் பார்வை. தந்தைக்கும் இவருக்கும் ஆகாது. இந்த ஜாதகத்தில் மாங்கல்ய அதிபதி செவ்வாய் நீசம். மேலும், களஸ்திர ஸ்தானாதிபதியும், களஸ்திரகாரகனுமாகிய சுக்கிரனும், மனோதிபதியாகிய சந்திரனும் இரு பாவர்க்கிடையே பாப கர்த்தாரி யோகம் பெற்றுள்ளனர். செவ்வாய், ராகுவுக்கிடையே சுக்கிரனும் சந்திரனும் உள்ளனர். திருமண விஷயத்தில் என்ன முடிவெடுப்பதென தெளிவில்லாமல் திணறுவார். உங்களையும் குழப்பிவிடுவார். 2023, நவம்பர் மாதத்திற்குள், ஒருவரை சுட்டிக்காட்டி "இவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்' என்பார். அதிகம் யோசிக்காமல், உடனே திருமணம் செய்துவைத்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. சந்திர தசை சூரிய புக்தியில் அரசு வேலைக்கு 50 சதவிகிதம் வாய்ப்புள்ளது. குறுக்குவழியில் முயன்றால் கிடைக்கும். பி.எச்.டி எல்லாம் நன்றாகப் படித்துவிடுவார். 8-ஆமிட செவ்வாய் நீசத்திற்கு, பழனி போகர் சந்நிதியில் சிவப்பு வஸ்திரம் அணிவித்து செவ்வாய்க்கிழமை வணங்கவும். செவ்வாய்க்கிழமைதோறும் விரதமிருப்பது, முருகனை வணங்குவதும் நல்லது.

ப் ஆர். அலமேலு, உறையூர்.

என் மகள் சுஜாதாவுக்கு அரசு வேலை (உதவிப் பேராசிரியை பணி கிடைக்குமா? அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கிறது.

18-6-1979-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி. குரு உச்சம் மற்றும் சந்திரனு டன் பரிவர்த்தனை. நடப்பு சூரிய தசை. இதில் குரு புக்தி 2023, ஏப்ரல் வரை. இதில் அரசு உத்தியோகம் இடமாற்றத்துடன், கொஞ்சம் செலவுடன் கிடைக்கும். இவரின் லக்னாதிபதி சுக்கிரனும், 7-ஆமதிபதி செவ்வாயும் லக்னத்தில் இணைந்துள்ளதால் நல்ல இணக்கத்துடன் தம்பதிகள் இருப்பர். 5-ஆமதிபதி புதன் ஆட்சி. குரு சாரத்தில் இருப்பதால், குழந்தைகள் மேன்மையாக இருப்பர். இவர் வேண்டாத கவலைகளை யோசித்து குழப்பமடைந்து, உடல்நிலையைக் கெடுத்துக் கொள்வார். அரசு வேலையை எதிர் நோக்கிக் காத்திருப் பவர்கள், திருப்புலிவனம் தட்சிணா மூர்த்தியை வணங்கவும். இவர் பௌர்ணமி தோறும் விரதமிருந்து, கிழக்கு நோக்கிய அம்மனை வழிபட, அம்மனின் அணுக்கிரகத் தால் மன அமைதியும், மேன்மையான வாழ்வும் கிடைக்கும்.

செல்: 94449 61845