ப் டி. பவானி, செங்கல்பட்டு.

குடும்பம் மிக சிரமத்தில் உள்ளது. உடல் நிலையும் மிக மோசமாக உள்ளது எப்பொழுது சரியாகும்?

கன்னி லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். 8-4-1977-ல் பிறந்தவர். லக்னாதிபதி புதன் 8-ல் கேதுவுடன் மறைவு. உங்களுக்கு ஞாபக சக்தி குறைபாடு இருக்கும். 2-ல் ராகு; 8-ல் கேது. 2-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம். கூடவே விரயாதி பதி சூரியனும். எனவே, பணம் வருவதற்கு முன்னேயே செலவுகள் வரிசைகட்டி நிற்கும். குரு, சனி, செவ்வாய் என மூன்று கிரகப் பார்வைகளையும் லக்னம் வாங்கி நிற்கிறது. இதனால் வாழ்வில் ஓரடி முன்னே போனால், நான்கடி பின்னே வரும்படி ஆகும். சனி, 5, 6-ன் அதிபதியாகி 5-ஆமிடத்தைப் பார்ப்பதால், அவ்வப்போது நரம்புத் தளர்ச்சியால் கஷ்டப்பட நேரிடும். எனினும் சனி எட்டா மிடத்தைப் பார்ப்ப தால் ஆயுளுக்கு பாதிப் பில்லை. நடப்பு சந்திர தசை நீசபங்க தசை. சந்திர தசையில் சனி புக்தி 2021, அக்டோபர் முதல் 2023 மேவரை. இந்த காலகட்டத்தில் மனம் ஒருநிலையில் இருக்காது. ஆயிரம் யோசனைகள் வந்துபோகும். அருகிலுள்ள சிவன் கோவி-ல் திங்கட் கிழமைதோறும் பாலா பிஷேகம் செய்யவேண்டும். சந்திர தசையில் சனி புக்தி நடக்கும் காலத்தில் இழப்பு கள், பொருட்சேதம் ஏற்பட வாய்ப் புண்டு. அதனால் சனி புக்தி முடியும்வரை 19 மிளகை துணியில் முடிந்து, அகல்விளக்கில் நல்லெண் ணெய் ஊற்றித் திரியிட்டு 19 சனிக் கிழமைகள் பைரவருக்கு தீபமேற்றி வழிபடவும். கண்டிப்பாக இதனைச் செய்யவேண்டும். மேலும் உங்கள் குலதெய்வத் தையும் இஷ்டதெய்வத் தையும் வேண்டிக் கொள்ளவும்.

ப் ஜி. செல்வம், தஞ்சாவூர்.

Advertisment

உடல்நிலை, ஆயுள், தொழில், சொந்தவீடு, எதிர் காலம் பற்றிக் கூறவும்.

கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். 3-1-1968-ல் பிறந்தவர். லக்னாதிபதி சந்திரன் 8-ல் மறைவு. 5-ஆம் அதிபதி செவ்வாயும் 8-ல் மறைவு. அதாவது லக்னாதிபதியும், பூர்வபுண்ணியாதிபதியும் மறைவு. இதனால் வாழ்க்கை பிரகாசமில்லா மல் செல்லும். 8-ஆமிடத்தை குரு பார்ப்பதால் நல்ல ஆயுள் பலமுண்டு. குரு, சூரியன் பரிவர்த்தனை. எனவே, உங்களுக்கு மாத சம்பள வேலை தான் சரிப்பட்டு வரும். 4-ஆமிட அதிபதி சுக்கிரன் அம்சத்தில் நீசம். அதனால் வீடு உங்கள் பெயரில் அமைவது சற்றே கடினம் தான். நீங்கள் யாரை சந்தித்தாலும் அல்லது பேசிக் கொண்டாலும் ஏனோ ஒரு சண்டை வந்துவிடும். இதனால் உங்களுக்கு உதவ நினைப்பவர்களும் உங்களைவிட்டு விலகிவிடுவர். இதன்காரணமாக வாழ்வின் முன்னேற்றம் சீராக இராது. கும்ப ராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு சனி தசை 36 வயதி-ருந்து 55 வயதுவரை. தற்போது சனி தசையில் குரு புக்தி நடப்பு. ஓரளவு நன்மை ஏற்படும். 2023, ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு புதன் தசை ஆரம்பம். அது 17 வருடங்கள் நடக்கும். அதில் உங்களுக்கு அரசு சம்பந்த ஒப்பந்த குத்தகை கிடைக்கும். அதன்பின் வாழ்வுநிலை மேம்படும். நீங்கள் பேசினாலே நடக்கும் விஷயங்களும் நடக்காமல் போய் விடும். அதனால் கூடியமட்டும் பேசுவதைக் குறையுங்கள். வாழ்க்கை முன்னேறும். நடப்பு ஏழரைச்சனிக்கு சனீஸ்வர பகவானை வழிபடவும். ஒருமுறை இராமேஸ்வரம் சென்று வணங்கிவரவும். அவ்வப்போது திருப்பதி சென்றுவந்தால் லக்ன மறைவு தோஷம் நீங்கும். வீட்டில் திருச்செந்தூர் முருகனின் படம் வைத்து வணங்கவும். பணவரவு சரளமாக அமையும்.

aaa

Advertisment

ப் எஸ். தாமரைக்கண்ணன், அருப்புக்கோட்டை.

கடந்த பத்து ஆண்டுகளாக தொழில் நலிவடைந்து மிகவும் கடன்பட்டு விட்டேன். வட்டிக்கு வட்டி கட்டி, நகை அடமானம் வைத்து மீட்கமுடியாமல், வேறு தொழிலும் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். மனைவி, மகன்களின் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. எப்போது விடிவு காலம்?

27-3-1967-ல் பிறந்தவர். கடக லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில், கடக லக்னத்தில் குரு உச்சமாகி உள்ளார். ஆனால் அவர் வக்ரகதியில் இருப்ப தால், நீசத்தன்மை அடைந்துவிட்டார். எடுத்து வைத்தும் கொடுத்து வைக்காத கதையாகிவிட்டது உங்கள் வாழ்க்கை. பூர்வ புண்ணியாதிபதி கேதுவுடன் இருக்கிறார். எனவே கடந்த ஜென்ம குற்றமும் சேர்ந்து உங்களைப் பாடாய்ப்படுத்துகிறது. 9-ல் அமர்ந்த சூரியன் நல்ல மேற்கல்வியையும் உத்தியோகத்தையும் கொடுத்தும், உடனிருக் கும் சனிபகவான் அதனை அனுபவிக்க விடாமல் கெடுத்துள்ளார். 22 வயதிற்குப் பிறகு குரு தசை. அது நீசமாகிவிட்டதால், உங்களால் நல்ல வேலைசுகத்தை அனுபவிக்க முடியாமல் தடுத்துவிட்டது. 38 வயதிற்கு மேல் வந்த சனி தசை, அவருடைய குரு சாரத் தன்மையால் நன்மையளிக்க இயலவில்லை. அடுத்து 2024-ல் புதன் தசை ஆரம்பம். அவர்மூலம் நீங்கள் வாழ்க்கையில் விட்ட தைப் பிடிக்கமுடியும். புதன் உங்களின் 12-ஆம் அதிபதியாகி, 8-ல் மறைவதால் உண்டாகும் விபரீத ராஜயோகம், உங்களுக்கு அளப்பரிய நன்மைகளைத் தரும். நீங்கள் வெளியூர், வெளிநாடு சென்று தொழில் செய்ய இயலும். புதன் தசையில் உங்கள் ஊரைவிட்டு, வெளியிடமாவது சென்று விடுங்கள். நடப்பு சனி தசையில் ராகு புக்தி 2022, பிப்ரவரி வரை. இந்த காலத்தில் வெளியூர் சென்று வேலைசெய்யும் வாய்ப்பும் உண்டு. உங்கள் ஜாதகத்தில் குரு வக்ரம் பெற்றதால், திருவக்கரை வக்ரகாளியை வணங்கவும். சூரியன், சனி சேர்க்கை உள்ளதால், குடும்ப சுபிட்சமின்றி உள்ளது. இதற்கு சுவாமிமலை அருகிலுள்ள திருவலஞ்சுழி சடைமுடிநாதர் சந்நிதியின் வெளிப்புறமுள்ள சூரியன், சனிபகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்யவும்.

ப் ஐஸ்வர்யா.

மேலதிகாரியின் தொல்லையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். வேறுவேலை எப்போது கிட்டும்? வெளிநாடு செல்ல இயலுமா? நானும் என் கணவரும் சேர்ந்து வீடு வாங்கியுள்ளோம். அது நிலைக்குமா? எங்களுக்குப் பொருத்தம் உண்டா?

ஐஸ்வர்யா 4-1-1991-ல் பிறந்தவர். மகர லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். லக்னத்தில் சுக்கிரன், சனி, ராகு. இதுவொரு கிரகயுத்த ஜாதகம். நீங்கள் எப்போதும் குழம்பி, மற்றவரையும் குழப்பிவிடுவீர்கள். உங்கள் சந்திரன் லக்னத்துக்கு 8-ல் மறைவதால், உறுதியான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். 18-5-2021 அன்று சந்திரதசை ஆரம்பம். சந்திரதசை சந்திர புக்தியில் வேலையிடத்தில் சண்டையிட்டு வெளிவந்துவிட்டீர்கள். உங்கள் 4-ஆம் அதிபதி செவ்வாய், சூரிய சாரம் வாங்கி, அவரும் விரயத்தில் இருப்பதால், உங்களுக்கு வீடு நிலைப்பது கடினம்தான்.

6-ஆம் அதிபதி பாதகஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், அம்சத்தில் அவர் நீசமாவதும் குற்றமாகும். அதனால் வேலை கிடைத்தால், சற்று பேச்சைக்குறைத்து, அதனைக் காப்பாற்றிக்கொள்ளவும். உங்கள் 2-ஆம் அதிபதி சனி மற்றும் சுக்கிரன், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் விரயத்திலுள்ள சூரிய சாரம் பெற்றுள்ளன. எனவே நீங்கள் வாயைத் திறந்தாலே சண்டையிட்டு அங்கிருந்து விலகும்படியாகும்; கவனம் தேவை. சந்திரன் ராசி சக்கரத்தில் 8-லும், அம்சத்தில் உச்சமும் பெற்றுள்ளதால், வரும் அவமானங்களே ஒரு நன்மையை யும் கொண்டுவரும். அடுத்துவரும் செவ்வாய் புக்தியில் வெளிநாடு செல்ல இயலும். நீங்கள் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடவும். மறைவிட சந்திரன் உடையவர்கள் வளர்பிறை திரிதியை மாலையில், நவகிரக சந்திரனுக்கு தீப மேற்றி வழிபடவும். திங்கட்கிழமை தோறும் சிவன் அபிஷேகத்திற்குப் பால் வாங்கிக்கொடுக்கவும். சந்திர தசையில் கணவருடன் விட்டுக்கொடுத்து நடந்துக்கொள்ளவும். இல்லையெனில் பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு; கவனம் தேவை.

கணவர் கே. பிரதிப்குமார் 11-11-1990-ல் பிறந்தவர். தனுசு லக்னம். 2-ல் ராகு, 8-ல் கேது. லக்னாதிபதி குரு உச்சம். எனினும் 8-ஆமிடத்தில் குரு உச்சமாகி, உடன் கேதுவும் உள்ளார். இவரின் அதிர்ஷ்ட அதிபதி சூரியன் நீசபங்கம். 8-ஆம் அதிபதி சந்திரன் 9-ல். நன்மையான விஷயங்கள் நிறைய "ப்ரேக்' எடுத்து நிதானமாகத்தான் வந்துசேரும். இவருடைய 4-ஆம் அதிபதி குரு 8-ல் இருந்து புதன் சாரம் வாங்கி அவர் விரயத்தில் இருப்பதால், வீடுவாங்கி விற்கவேண்டி இருக்கும்.

நடப்பு சந்திர தசை, சனி புக்தி. அடுத்துவரும் புதன் புக்தியில் இவர் வெளிநாடு செல்லக்கூடும். புதனுக்கு குரு பார்வை இருப்பதால் நன்மையே நடக்கும். இதில் வேலை மாற்றம் உண்டு. திருமணம் முடிந்தபிறகு பொருத்தம் பார்க்கச் சொல்வது சரியில்லை அம்மா! உங்கள் கணவர் ஏதாவது சித்திரை வணங்குவது சிறப்பு.