நிண்ட ஆயுள் மற்றும் நிறைந்த செல்வம் பெற்று வாழவேண்டும் என்பதே மனிதர்களாய் பிறந்த அனைவரின் விருப்பம். பாக்கிய பலன்களை அதிகரித்து பதினாறு வகை செல்வங்களையும் அடையும் முயற்சியில் தன் வாழ்வில் பெரும் பகுதியை செலவிடுகிறார்கள்.
எல்லா பாக்கியமும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பூமியில் பிறந்த அனைவரும் பதினா றும் பெற்று பெருவாழ்வு வாழ்வதில்லை.
நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார் கள். பெரும்பாலானோருக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையே ஏற்படுகிறது. சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றமில்லை. ஆனால், சிலருக்கோ உழைக்கவோ, திட்டமிடவோ அடிப்படை தேவையை நிறைவு செய்யவோ முடியாத சூழல் நிலவும். இங்கே வறுமை என்று குறிப்பிடுவது நடுத்தர வர்கத்தினரை அல்ல. உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்வாதாரத்திற்குத் தேவையான எதை யும் பெறமுடியாமல் வாழும் அடிமட்டத்தினரே மிகுதியான வறுமையை சந்திக்கிறார் கள். ஏன் உலகில் ஒரு பிரிவினர் மிகுதியான செல்வத்துடன் வாழ்கிறார்கள்? ஒருசிலர் தன் சிறு சிறு தேவையைக்கூட சமாளிக்கமுடியாமல் வறுமையால் பிறரை நம்பி வாழ்க்கிறார்கள். இதுபோன்ற மாறுபட்ட இரண்டு நிலைகளுக்கும் காரணம் ஒருவர் பெறும் ஆசிர்வாதம், கோபம் மற்றும் சாபம். பெற்றோர்கள், பெரியோர்கள், உற்றார்கள், உறவினர் களால், நண்பர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை செழுமையாக பிறருக்கு உதவும்விதத்தில் உள்ளது.
குடும்பத்தினரால் அன்றாடம் சந்திக்கும் நபர்களின் கோபம், சாபத்திற்கு ஆளாகியவர்களின் வாழ்க்கை வறுமையுடன் பிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ளது.
பெரும்பான்மையான கர்மாக்கள் கோபத்தாலும், சாபத்தாலும் மட்டுமே விஸ்வரூபம் எடுக்கின்றன. ஒருவரின் கோபத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கூறுமிடம் எட்டாமிடம் என்றால் சாபத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கூறுமிடம் பன்னிரெண்டாமிடம்.
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை எனப்படும். ஒருவர் அறிந்தோ அரியாமலோ செய்யும் வினையின் எதிர்வினைதான் தோஷம் எனும் வினைப் பதிவு. இந்த தோஷம் உருவாகக் காரணம் பிறருடைய "கோபம்' மற்றும் "சாபம்' இதில் "கோபம்' என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை.
பலவீனத்தின் உச்சம். இதையே வேறுவிதமாக சொன்னால் ஏமாந்தவர் ஏமாற்றப்பட்டவர்மீது வெளிப்படுத்தும் உணர்வு.
"சாபம்' என்பது கோபத்தின் உச்ச கட்டமாகும். சாபம் என்பது அகங்காரத்தி னால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பதுதான் சாபம்.
அந்த கோபமோ- சாபமோ நியாயமானதாகவோ- நியாயமற்றதாகவோ இருக்கும். திரிகோண அதிபதிகளுடன் தொடர்புபெறும் கோப, சாபத்தில் பெரிய நியாயம் இருக்காது. அது ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மறைவு ஸ்தான அதிபதிகளுடன் தொடர்புபெறும் கோப, சாபத்தில் நியாயம் இருக்கும். பாதிக்கப்பட்டவரின் இயலாமையின் வெளிப்பாடு மிகுதியாக இருக்கும். இது ஜாதகாருக்கு மீளமுடியாத தாக்கத்தை உருவாக்கும்.
வாக்கு தோஷம்
ஒருவருடைய கோபமும், சாபமும் ஜாதகரின் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத் தில்தான் பதிவாகுகிறது.
ஒரு மனிதனின் வாழ்வாதாரம் தனம் எனும் பணத்தால்தான் முடிவு செய்யப்படுகிறது. உதாரணமாக பண வசதி படைத்தவன் செய்யும் தவறுகள் மறைக்கப்படுகிறது; மன்னிக்கப்படுகிறது. பொருள் குற்றம் உள்ள நபரின் தவறுகள் விமர்சிக்கப்படுகிறது. விசாரணையின்றி தண்டனை வழங்கப்படுகிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் தன ஸ்தானம் பாதிக்கப்பட்டால் பணம் தேவைக்கு கிடைக்காது. குடும்பத்தாரின் தேவையை நிறைவு செய்ய போராடும் சூழல் உண்டாகும்.
வறுமையும் வெறுமையும் ஜாதகரை வழிநடத்தும். குடும்பம் என்பது நிம்மதி, சந்தோசம் நிறைந்ததாகவும் தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்க வேண்டும். செல்வாக்கு மற்றும் சொல்வாக்கே குடும்பத்தை கோவிலாக்கும்.
இதில் குற்றம் ஏற்படும்போது குடும்பத்தில் கலகலப்பு குறைந்து சலசலப்பு மிகுதியாகும். நல்ல விவாதத்தில் நிம்மதி, நியாயம் கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயமற்ற பிரச்சினைகளால் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன் சண்டை அழுகை, கத்துதல், வீட்டைவிட்டு வெளியேறுதல்.. போன்று மோசமான சூழலை உருவாக்கும். கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்பவாழ்க்கை. குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழமுடியாது. ஆனால் வறட்டு கௌரவம், நியாயமற்ற கோபம், தரமற்ற வார்த்தைகள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தவே செய்யும்.
இதனால் பல குடும்பங்களில் ஒற்றுமை குறைவு மிகுதியாகவே இருக்கிறது. இதுவே ஒருவரின் ஜாதகத்தில் வாக்கு தோஷமாக பதிவாகி வறுமையை அதிகப்படுத்துகிறது.
அதேபோல் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்து கெட்டாலும், நீசம், அஸ்தமனமானாலும், ராகு, சனியுடன் 3 டிகிரிக்குள் கூடினாலும் சொந்தமாக முடிவெடுக்க திணறுவார்கள்.
அதுபோல் மனதை குறிக்கும் சந்திரனும் மூன்றாம் அதிபதி எனப்படும் தைரிய ஸ்தானாதிபதி கெட்டிருந்தாலும், பிறரை சார்ந்தே வாழ்க்கையை நடத்தும் அமைப்பு உண்டாகும். தன் வாழ்க்கையை தானே உயர்த்தவேண்டும் என்ற நிலை இவர்களுக்கு உறுதியாக இருக்காது. மற்றவரிடம் எளிதாக ஏமார்ந்து விடுபவர் களாகவும் இருப்பார்கள்.
கர்மவினைகளை நீங்க, சாஸ்திரங் களிலும், புராணங்களிலும் பல உபாயங்கள் பரிந்துறைக்கப்பட்டுள்ளன.
எந்தவகையான கர்மவினை பாதிப்பு ஒருவர் ஜாதகத்தில் உள்ளது, எந்தவகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை செய்துவந்தால் நலம்பெறமுடியும். எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் கிடைக்கிறது என்றால் பாக்கிய பலன்களை அடையும் நெறிமுறைகளை முழுமையாக அறிந்து செயல்படாததே அதற்கு காரணம்.
வந்துவிட்ட சோதனைகளுக்கும், வரப் போகும் வினைகளுக்கும் நிவாரணம் தருவதாக உள்ளது வழிபாடு. தவறு செய்வது மனித இயல்பு. அறிந்தும், அறியாமலும் செய்த தவறுக்கு சரணாகதியடைந்து மன்னிப்பு கோர வினைகள் விலகும்.
வழிபாடு
வினையின் தாக்கத்தால் மிகுதியான வறுமையில் வாழ்பவர்கள் வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்துவர படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்
மனிதனை இயக்கும் சக்தியான நிலையான செல்வத்தை அடையும் மார்க்கத்தை நமது முன்னோர்கள் சில குறிப்பிட்ட வழிபாட்டு, விரத முறையில் அடையமுடியும் என்பதை உபதேசித்துள்ளார்கள். அத்தகைய விரதங்களில் ஒன்றுதான் ஏகாதசி விரதம்.
ஏகாதசி விரதம்
திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு. திதிகளில் மிகவும் உன்னதமானதாகவும், உயர்வானதாகவும் கருதப்படுவது ஏகாதசி திதி. ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினொன் றாம் நாள் என்று பொருள். ஏகம்+தசம் (10+1) ஏகாதசித் திதியின் அதிபதி மகா விஷ்ணு என்பதால் இந்த நாளில் அவரை வழிபடுவதால் மிகச் சிறந்த பலன்களை பெறமுடியும் என்று நம்பப்படுகிறது.
மகாவிஷ்ணுவை நினைத்து வழிபடும் விரதங்களில் முதன்மையானதாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருப்பது ஏகாதசி விரதம். மனிதப் பிறவியில் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்துவிதமான பாவங்களையும் நீக்கி, நிறைந்த செல்வம், பாக்கிய பலன் மற்றும் முக்தியைத் தரும் விரதமாகும்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்க விரும்பும் அனைத்து புண்ணியத்தையும் கொடுக்கும் விரதம். புண்ணியம் கிடைக்கவேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே இந்த விரதத்தைக் கடைபிடிப்பார்கள். இப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் "அஸ்வமேத யாகம்' செய்த பலன் கிடைக்கும். காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை, தாய்க்கு சமமான தெய்வம் இல்லை, கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதி வந்தாலும் மார்கழி மாதத்தின் வளர்பிறை வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு பெற்றது. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி மாத சுக்லபட்ச வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிக சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தநாளில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய மகாவிஷ்ணு மூன்று கோடி தேவர்களுடன் பூலோகத்தில் எழுந்தருளினார். எனவே வைகுண்ட ஏகாதசியை முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம்முதல் ஆனி மாதம்வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம்வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், தேவலோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள். இதன்படி மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் "உஷக் காலம்' என்கிறோம்.
இந்த நேரத்தில் வைகுண்ட வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சிதரும் நாள் வைகுண்ட ஏகாதசி. அன்று விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாச-ல் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி'' என்றும் அழைப்பார்கள். இத்தகைய சிறப்பு மிகுந்த வைகுண்ட ஏகாதசி திருக்கணித பஞ்சாங்கப்படி சோபகிருது வருடம் மார்கழி மாதம் 7-ஆம் நாள் (23-12-2022) அன்று பரணி நட்சத்தித்தில் சனிக்கிழமை வருகிறது.
கர்மவினை தொடர்பான தாக்கத்தி-ருந்து விடுபட சனிக்கிழமை மிக உகந்த நாள். மகாவிஷ்ணு வழிபாட்டை சனிக்கிழமை கடைபிடிக்க உன்னதமான பலன் கிடைக்கும்.
ஏகாதசியன்று உபவாசம் இருந்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றால் சுய ஜாதகத்திலுள்ள கோபமும், சாபமும் செயலற்றுப் போகும். வறுமை விலகி நிலையான- நிரந்தரமான முன்னேற்றம் கிடைக்கும். விதியை மதியால் வென்று வெற்றிபெற வாழ்த்துகள்.
செல்: 98652 20406