உங்கள் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தால் சில கிரகங்களின் அருகில் (வ) என்று போட்டிருக்கும். இதற்கு அந்த குறிப்பிட்ட கிரகம் வக்ரம் அடைந்துள்ளது என்று பொருள். எல்லா கிரகங்களும் வக்ரம் அடையுமா எனில், இல்லை.
சூரியன், சந்திரன், ராகு- கேது ஆகிய கிரகங்கள் வக்ரமடையமாட்டார்கள். குரு, சனி, சுக்கிரன், புதன், செவ்வாய் மட்டுமே வக்ரநிலை பெறுவர்.
வக்ரம் என்றால் என்ன?
சூரியனுக்கு, 5-ஆம் பாவம் முதல் 8-ஆம் பாவம்வரை வரும் போது மேற்கண்ட கிரகங்கள் வக்ரப்பலன் அடையும். அதாவது சூரியனுக்கு 130 டிகிரியில் வரும் போது, சற்று நின்று, பின் கடிகார எதிர்சுற்றில் செல்ல ஆரம்பிக்கும்.
வக்ரமடையும் கிரகம் என்ன பலன் தரும்? இதற்கு உத்ரகாலம்ருதம் கூறும் செய்தி, எளிமையான விளக்கமாக அமையும்.
ஒரு உச்ச கிரகம் வக்ரமானால் அது நீசப்பலனைக் கொடுக்கும்.
ஒரு நீச கிரகம் வக்ரமானால் அது உச்ச பலனைக் கொடுத்துவிடும்.
கவனியுங்கள்; ஒரு கிரகம் வக்ரமடையும் போது, அது என்ன செயலைச் செய்ய வேண்டுமோ, அதற்கு எதிரான செயலைச் செய்கிறது.
மேலும், உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்ரம் அடைந்திருந்து, கோட்சாரத்தில் அதே கிரகம் வக்ரகதிக்கு வந்தால் உயர்பலனையே கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய கோட்சாரத்தில் குரு வக்ரகதி அடையவிருக்கிறார். வாக்கியப்படி 2024, அக்டோபர் 15 முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரை வக்ரம்.
திருக்கணிதப்படி 2024, அக்டோபர் 8 முதல் 2025, பிப்ரவரி 4-ஆம் தேதிவரை வக்ரம் பெறுகிறார்.
(தற்போது, குரு ரிஷப ராசியில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.)
12 ராசிகளுக்குமான வக்ரகாலப் பலன்கள்
பிறந்த ஜாதகத்தில் வக்ர குரு இருந்து, கோட்சாரத்தில் குரு வக்ரமாகும் காலத்தில் உண்டாகும் பலன்கள்.
மேஷம்
உங்கள் பிறந்த ஜாதகத்தில் குரு வக்ரமாகி யிருந்தால் இந்த காலகட்டத்தில் மனைமூலம் பணவரவு வரும். வாகனப் பயணத்தின் போது ஏற்படவிருந்த ஒரு விபத்து தவிர்க்கப் படும். உங்கள் சொற்கள் மேன்மை தரும். குடும்பத்தில் பேசிப் பேசியே சண்டை உருவாவது, ஆரம்பத்திலேயே தடுக்கப்படும். வேலை, உயர்கல்வி சார்ந்த வெளிநாட்டுத் தடங்கல் நீங்கும். உங்கள் வாக்கு பொலிவு பெறும். இதனால் பேச்சுமூலம் பணம் சம்பாதிப்போர், வாழ்க்கையின் உயர்ச்சியை அனுபவிப்பர். இவர்கள் தங்கள் கருத்துகளைப் பிறர் புரியும்படி எளிமையாகவும், வலிமை யாகவும் கூறமுடிவதால், இவை சார்ந்த வியாபாரம் மற்றும் கல்வி நிகழ்வுகள் பிரமாதப்படும். அண்ணாமலையார் கோவில் அ
உங்கள் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தால் சில கிரகங்களின் அருகில் (வ) என்று போட்டிருக்கும். இதற்கு அந்த குறிப்பிட்ட கிரகம் வக்ரம் அடைந்துள்ளது என்று பொருள். எல்லா கிரகங்களும் வக்ரம் அடையுமா எனில், இல்லை.
சூரியன், சந்திரன், ராகு- கேது ஆகிய கிரகங்கள் வக்ரமடையமாட்டார்கள். குரு, சனி, சுக்கிரன், புதன், செவ்வாய் மட்டுமே வக்ரநிலை பெறுவர்.
வக்ரம் என்றால் என்ன?
சூரியனுக்கு, 5-ஆம் பாவம் முதல் 8-ஆம் பாவம்வரை வரும் போது மேற்கண்ட கிரகங்கள் வக்ரப்பலன் அடையும். அதாவது சூரியனுக்கு 130 டிகிரியில் வரும் போது, சற்று நின்று, பின் கடிகார எதிர்சுற்றில் செல்ல ஆரம்பிக்கும்.
வக்ரமடையும் கிரகம் என்ன பலன் தரும்? இதற்கு உத்ரகாலம்ருதம் கூறும் செய்தி, எளிமையான விளக்கமாக அமையும்.
ஒரு உச்ச கிரகம் வக்ரமானால் அது நீசப்பலனைக் கொடுக்கும்.
ஒரு நீச கிரகம் வக்ரமானால் அது உச்ச பலனைக் கொடுத்துவிடும்.
கவனியுங்கள்; ஒரு கிரகம் வக்ரமடையும் போது, அது என்ன செயலைச் செய்ய வேண்டுமோ, அதற்கு எதிரான செயலைச் செய்கிறது.
மேலும், உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்ரம் அடைந்திருந்து, கோட்சாரத்தில் அதே கிரகம் வக்ரகதிக்கு வந்தால் உயர்பலனையே கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய கோட்சாரத்தில் குரு வக்ரகதி அடையவிருக்கிறார். வாக்கியப்படி 2024, அக்டோபர் 15 முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரை வக்ரம்.
திருக்கணிதப்படி 2024, அக்டோபர் 8 முதல் 2025, பிப்ரவரி 4-ஆம் தேதிவரை வக்ரம் பெறுகிறார்.
(தற்போது, குரு ரிஷப ராசியில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.)
12 ராசிகளுக்குமான வக்ரகாலப் பலன்கள்
பிறந்த ஜாதகத்தில் வக்ர குரு இருந்து, கோட்சாரத்தில் குரு வக்ரமாகும் காலத்தில் உண்டாகும் பலன்கள்.
மேஷம்
உங்கள் பிறந்த ஜாதகத்தில் குரு வக்ரமாகி யிருந்தால் இந்த காலகட்டத்தில் மனைமூலம் பணவரவு வரும். வாகனப் பயணத்தின் போது ஏற்படவிருந்த ஒரு விபத்து தவிர்க்கப் படும். உங்கள் சொற்கள் மேன்மை தரும். குடும்பத்தில் பேசிப் பேசியே சண்டை உருவாவது, ஆரம்பத்திலேயே தடுக்கப்படும். வேலை, உயர்கல்வி சார்ந்த வெளிநாட்டுத் தடங்கல் நீங்கும். உங்கள் வாக்கு பொலிவு பெறும். இதனால் பேச்சுமூலம் பணம் சம்பாதிப்போர், வாழ்க்கையின் உயர்ச்சியை அனுபவிப்பர். இவர்கள் தங்கள் கருத்துகளைப் பிறர் புரியும்படி எளிமையாகவும், வலிமை யாகவும் கூறமுடிவதால், இவை சார்ந்த வியாபாரம் மற்றும் கல்வி நிகழ்வுகள் பிரமாதப்படும். அண்ணாமலையார் கோவில் அல்லது சாது மடங்களுக்கு முழு மட்டைத் தேங்காய் தானம் தருவது நல்லது. மூக்குத்தி, நெற்றிச்சுட்டி வாங்குவீர்கள்.
ரிஷபம்
உங்கள் பிறப்பு ஜாதகத்தில் வக்ர குரு இருப்பின், தற்போதைய கோட்சார குரு காலகட்டத்தில் உங்களின் எண்ணம் நிறைவேறும். நிறைய லாப நுகர்ச்சி பெறுவீர்கள். "திருமணம் கூடிவரவே மாடடேன்கிறதே' என வாடுபவர்களுக்கு சட்டென்று திருமணம் நடந்துவிடும். இதேபோல் மறுமணமும் நடக்கும். திரவ சம்பந்த குத்தகை எடுத்தவர் கள் அதனை நல்லவிதமாக நடத்துவர். உங்கள் இளைய சகோதரி சம்பந்தமான ஒரு பிரச்சினை தீர்வு காணும். உங்கள் மூத்த சகோதரர் அல்லது நண்பர்களுடனான மனக் கசப்பு மறைந்துவிடும். அரசியல்வாதிகளுக்கு, இதுவரையில் மக்களை சந்திக்க இயலாத சூழ்நிலை மாறி, பொதுமக்களோடு இயைந்து பணியாற்றலாம். தட்சிணாமூர்த்திக்கு ஊறவைத்த வெள்ளை கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கவும். சிவன் சந்நிதியில் சுண்டல் பிரசாதத்துடன் வணங்க நலம் கிட்டும். கம்மல் வாங்குவீர்கள்.
மிதுனம்
உங்கள் பிறந்த ஜாதகத்தில் வக்ரகுரு இருப்பின், இதுவரையில் சம்பாதித்த பணம் முழுவதும் கடலில் கரைத்த பெருங்காயமாக இருந்திருக்கும். தற்போதைய வக்ர குரு காலத்தில் உங்கள் சம்பாத்தியம் கையில் சேர்ந்து நல்ல முதலீடாக மாறும். முதலீடு சம்பந்த அலைச்சல் நன்மைதரும்விதமாக அமையும். தொழில் சார்ந்து, நிறைய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைத்து, அது சம்பந்தமான வேலைகள் துரிதப்படும். சமையல் கலைஞர்கள், வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பும் ஏற்படும். நிறைய பரபரப்பான நன்மைகள் கிடைக்கும். சிவன் கோவிலில் நடக்கும் யாகங்களுக்கு, நிறைய மூலிகை, வேர்கள் வாங்கிக்கொடுங்கள். நிறைய பழங்கள் காணிக்கை செலுத்தவும். வளையல் வாங்குவீர்கள்.
கடகம்
உங்கள் பிறப்பு ஜாதகத்தில் வக்ர குரு இருந்து, தற்போதைய குரு வக்ரமாகப் பயணிக்கும் காலத்தில் நீங்கள் நினைத்தது நடக்க, அதன் முனைப்பாக வெகு பிரயாசைப் பட்டு உழைப்பீர்கள். ஓரிடத்தில் உட்காராமல் ஓடிக்கொண்டே இருப்பீர்கள். உழைப்பில் அறிவின் பயன்பாடும் அதிகமிருக்கும். சிலர் வெகுவாக முயற்சிசெய்து, நல்ல மருமகளை வீட்டிற்கு அழைத்துவருவீர்கள். வெளிநாட்டு வேலை அல்லது உயர்கல்வி பொருட்டு, முயன்று வெற்றிகாண்பீர்கள். அரசியல்வாதிகள், அதிர்ஷ்டமான புதிய பதவி கிடைப்பதால் தங்களது முழு உழைப்பை யும் திறமையையும் அதில் வெளிப்படுத்துவர். ஆக, இந்த வக்ர குரு காலத்திலும் மிக சுறுசுறுப் பாக செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்தபோல் வேலை கிடைக்கும். சிலர் வேலையில் பதவி உயர்வும் பெறுவர். உங்களை நீங்களே மிகப் பிரகாசமாக வெளிப்படுத்திக் கொள்வீர்கள். திருச்செந்தூர் முருகனுக்கு சிறு வேல் வாங்கி உண்டியலில் செலுத்துங்கள். அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு செப்புப் பாத்திரம் வாங்கிக்கொடுங்கள் நெக்லஸ் வாங்கக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியினரின் பிறந்த ஜாதகத்தில் குரு வக்ரமாக இருந்து, தற்போதைய கோட்சார குரு வக்ரகாலத்தில் தொழிலில் நேர்மறை- எதிர்மறை முதலீடுகள் அதிகமாகும். எனவே அது சார்ந்த அலைச்சலும் பரபரப்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நிறைய கிளைகள் திறக்கும் வாய்ப்புள்ளது. வீடு விஷயம் நல்ல யோகம் தரும். மனை விஷயம் லாபம் கொண்டுவரும். அரசியல்வாதியாக இருந்தால், பிறந்த இடத்தில் ஒரு பதவி கிடைத்து மிக மகிழ்வீர்கள். உயர்கல்வி யோகமுண்டு. சில தம்பதிகள் வாரிசு யோகம் பெறுவர். இதனையெல்லாம் கண்டு, "சிம்ம ராசியா கொக்கா' என உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வீர்கள். இந்த ராசிக் குழந்தைகளின் பெற்றோர், புது வியாபாரம் தொடங்குவர். கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலய சிவனை வணங்கலாம். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு மஞ்சள், மஞ்சள் பொடி கொடுத்து வணங்குவது உயர்வு தரும். இடுப்பு சங்கிலி வாங்கக்கூடும்.
கன்னி
பிறப்பு ஜாதகத்தில் குரு வக்ரமடைந்து, தற்போதைய கோட்சாரத்தில் குரு வக்ர மடையும் நிலையில், உங்கள் மூத்த சகோதரிக்கு ஏற்படவிருந்த ஒரு கெடுநிலை மறையும். உங்கள் தாய்- தந்தையர், நினைத்தது நல்விதமாக நடைபெறக் காண்பர். வாழ்க்கைத் துணை ஒரு, வாகனம் வாங்குவார். உங்கள் திருமணம் நிச்சயமாகும். தாயார் ஆன்மிக விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவார். இளைய சகோதரம் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். உங்கள் மாமனார் அல்லது இளைய சகோதரர் நல்லதைக் கூறி கெட்ட பெயர் வாங்குவர். வீடு மாற்றுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் அதிர்ஷ்டம் பெறுவர். சங்கரன்கோவில் சென்று சங்கர நாராயணரை தரிசிக்கலாம். அருகிலுள்ள சிவனை பழங் களுடன் வணங்கவும். இடுப்புச் சங்கலி வாங்கக் கூடும்.
துலாம்
துலா ராசியாரின் பிறந்த ஜாதகத்தில் வக்ர குரு இருந்து, தற்போதைய கோட்சாரத்தில் குரு வக்ரமடையும்போது, சில இழப்புகள் தவிர்க்கப்படும். சில திருட்டுகள் தடுக்கப் படும். தொழில் செய்யுமிடத்தில், பணியாளர் கள் தொல்லை நீங்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு வரவிருந்த ஒரு பெரிய இன்னல் தவிர்க்கப்பட்டுவிடும். பணவரவுத் தடைகள் நீங்கி, பணப்புழக்கம் சரளமாகும். திருமணம் சிக்கலின்றி நடக்கும். இத்திருமணம்மூலம் பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்ந்துவிடுவர். இளைய சகோதரன்மூலம் உண்டான சிக்கல் தீரும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கலாம். அருகிலுள்ள சிவனை வில்வ தளம் கொண்டு வணங்கவும். அட்டிகை வாங்குவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியாரின் பிறந்த ஜாதகத்தில் குரு வக்ரமடைந்து, தற்போதைய வக்ர குரு கோட்சாரத்தில், சீருடைப்பணி கிடைத் தாலும், அதில் சேர்வதற்கு சில தடைகள் ஏற்படும். காதல் கசக்கும். உங்கள் தந்தை அல்லது இளைய சகோதரரின் மனைவிக்கு ஏற்படும் ஒரு அபாயம், தெய்வ அருளால் தடுக் கப்படும். உங்களுக்கு எதிரிகள் மற்றும் நோயால் ஏற்படவிருந்த ஒரு தீவினை தடுக்கப் படும். பூர்வீக மனையை விற்று, தற்போதைய கடனை அடைப்பீர்கள். வாரிசுகளின் உயர் கல்வி அல்லது வேலை ஒரு தடையை எதிர் கொண்டு பின் நீங்கும். காதல் திருமணத்தை சற்று மன இடர்ப்பாட்டுடன் நடத்துவீர்கள். உங்கள் வியாபாரப் பங்குதாரர் அல்லது முதலாளி பற்றிய ஒரு விஷயம் தெரியவரும். சினிமா கலைஞர்கள் தங்களுடன் வேலை செய்பவருடன் சிறிது மனத்தாங்கலை சந்திப்பர். திருவொற்றியூர் சென்று சிவனையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்கவும். அருகிலுள்ள சிவனை முல்லை மலர்ச்சரம் கொண்டு வணங்கவும். இடுப்புச்சங்கிலி வாங்கக்கூடும்.
தனுசு
இவர்களின் பிறந்த ஜாதகத்தில் குரு வக்ரமடைந்து, தற்போதைய குரு வக்ர கோட்சாரத்தில், வேலை அதிகரிக்கும். அது வீடு கட்டும் வேலை, அடுக்குமாடி வீட்டைப் பதிவு செய்வது, ஆரோக்கிய சம்பந்த உடற் பயிற்சி அல்லது யோகா பயிற்சி, பூர்வீக நிலத்தை செப்பனிடுவது அல்லது விற்க ஏற்பாடு செய்வது, இன்ஷூரன்ஸ் விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவை நடக்கும். சில சினிமா கலைஞர்கள், மருத்துவர்கள் தங்கள்மீதுள்ள கறையைக் கரைக்க ஆவன செய்வீர்கள். அதற்கான செலவும் அலைச்சலும் உண்டு. உடல்நல மேன்மையின் பொருட்டு வெளிநாடு, வெளிமாநிலம் செல்வீர்கள். வீடு, வாகனப் பழுதுநீக்கும் வேலையும், செலவும் உண்டு. சிலர் காவல்துறை வேலைக்கான பயிற்சியில் சேர்வீர்கள். சிலர் கோமடம் சம்பந்த செலவு செய்வீர்கள். ஆலங்குடி சென்று வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவில் பசுமடத்திற்கு உதவவும். கோசாலைக்கு முடிந்தளவு உதவிசெய்யவும். ஒட்டியாணம் வாங்கக்கூடும்.
மகரம்
பிறந்த ஜாதகத்தில் வக்ர குரு இருந்து, தற்போதைய கோட்சாரத்தில் குரு வக்ரமாகும் காலகட்டத்தில் மருமகள் வருவாள் உங்கள் வாரிசுகளின் கல்வி மேன்மை சம்பந்த அலைச்சல் உண்டு. உங்களின் பல நாள் காதல், இளைய சகோதரன்மூலம் தெரியவரும். தாய் வகையில் புகழும் மேன்மையும் கிடைக்கும். சொந்தவீடு, எதிர்பாராமல் கிடைக்கும். பங்கு வர்த்தகம் மேன்மைபெறும். பூர்வீக வீட்டின் மூலம் சிலபல நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மாமனார்மூலம் ஏதோ வொருவகையில் நன்மை கிடைக்கப்பெறுவீர் கள். வேலையில் பதவி உயர்வு கண்டிப்பாகக் கிடைக்கும். கூடவே சில இடமாறுதலும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை இட மாறுதல் கிடைக்கப்பெறுவார். திருவானைக் காவல் சென்று வழிபடுவது நல்லது. அருகிலுள்ள சிவனை, முழு மட்டைத் தேங்காய் சமர்ப்பித்து வணங்கவும். கொலுசு வாங்குவீர்கள்.
கும்பம்
பிறந்த ஜாதகத்தில் வக்ர குரு இருந்து, தற்போதைய கோட்சார குரு வக்ரகாலத்தில், உங்கள் பெற்றோர், அவர்களின் வீடு, தோட்டம், வயல், பண்ணை என இதில் ஏதோ வொன்றை விற்று, அந்தப் பணத்தை உங்கள் கையில் கொடுப்பர். அதனைக்கொண்டு, உங்கள் வீட்டுக் கடனைக் கட்டிமுடித்து விடுவீர்கள். சில இளைஞர்கள் உங்கள் தொழிலில் பணிபுரிய வருவர். இதனால் வேலை சுறுசுறுப்பாகி, நல்ல லாபம் பெறுவீர்கள். வீடு வாங்கி விற்கும் தொழில் சார்ந்தவர் கள் நல்ல மேன்மை பெறுவர். அதுபோல் உங்களில் சிலர் ஒரு வீட்டை விற்று, வேறு வீடு வாங்க திட்டமிருந்தால், அது இக்காலத் தில் நிறைவேறும். உங்களில் சிலரின் இளைய சகோதரன் வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டு. திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரரை வணங்கலாம். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு வெட்டி வேர் போன்ற வேர் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். கொலுசு வாங்குவீர்கள்.
மீனம்
இவர்களின் பிறந்த ஜாதகத்தில் குரு வக்ரமாகியிருந்து, தற்போதைய கோட்சார வக்ர குரு காலத்தில், உங்கள் தொழிலில் பழைய நல்ல பணியாளர்கள் திரும்ப வந்துசேர்வர். பங்குப் பத்திரம் பற்றிய நல்ல செய்தி கைபேசியில் வரும். பெண் கலைஞர்கள் புகழ்பெறுவர். உங்கள் தந்தை, உங்களுக்கும், உங்கள் இளைய சகோதரத்துக்கும் மனையைப் பிரித்துக் கொடுப்பார். உங்களின் சில ஒப்பந்தங் கள் அதிர்ஷ்டம் தரும். வாக்கின்மூலம் புகழடைவீர்கள். பத்திரிகைத் துறையில் உள்ளவர்கள் நல்லயோகம் கிடைக்கப் பெறுவர். சீருடைப் பணிபுரிபவர்கள் மிக வீரதீரச் செயலைச் செய்து பேர், புகழ் பெறுவர். இராமேஸ்வரம் இராமநாத சுவாமியை வழிபடலாம். அருகிலுள்ள சிவன் கோவில் தளிகைக்குத் தேவையான உணவு தானியம் வழங்குவது நன்று. மெட்டி வாங்குவீர்கள்.
செல்: 94449 61845