5-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவராக இருப்பார். தைரியசா-யாக இருப்பார்.வாரிசுகள் குறைவாக இருப்பார்கள். புகழ் இருக்கும். நல்ல காரியங்களைச் செய்வார்.
பண வசதி இருக்கும். பலரும் அவரைப் பாராட்டுவார்கள்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், பண கஷ்டம் இருக்கும். தைரியம் குறைவாக இருக்கும்.சுப கிரகமாக இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
5-ஆம் பாவத்திற்கு
அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அனைவரிடமும் அன்புடன் பேசுவார். சகோதரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். ஜாதகர் தன் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்வார். பெயர், புகழ் இருக்கும். விருதுகள் வாங்குவார். துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் பாரம்பரிய தொழிலைச் செய்வார். தந்தையின் ஆதரவு இருக்கும். ஜாதகர் தன் அன்னையை மதிப்பார். பெயர், புகழ் இருக்கும். பாவ கிரகமாக இருந்தால், பெற்றோருடன் சண்டை போடுவார். வீணாக பேசுவார்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். நல்ல குணம் உள்ளவராக இருப்பார். புகழ் இருக்கும்.வாரிசுகளுடன் சந்தோஷமாக வாழ்வார். பெரிய மனிதர்களுடன் பழகுவார். அனைவரிடமும் நல்ல பெயர் இருக்கும். உலக அளவில் தெரிந்தவராக இருப்பார்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பெயர் கெடும்.நோய் இருக்கும். பண கஷ்டம் இருக்கும். எதிரிகளால் பிரச்சினை இருக்கும்.பாவ கிரகமாக இருந்தால், அதிக சிரமங்கள் இருக்கும்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகரின் மகன் அழகாக இருப்பான். வாரிசுகள் பிறரை மதிப்பார்கள். கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். குருநாதரை வணங்குவார்கள். அவர்களால் தந்தைக்கு பெயர், புகழ் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வரக்கூடிய மனைவிகள் நல்லவர்களாக இருப்பார்கள். ஜாதகரின் மனைவியும் நல்லவளாக இருப்பாள்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையாக பேசுவார். பேச்சில் விவேகம் இருக்காது. படிப்பு குறைவாக இருக்கும். மனைவியும் கடுமையாக பேசுவாள். குரூர குணம் உள்ளவளாக அவள் இருப்பாள். ஜாதகரின் தம்பியும் பிள்ளைகளும்கூட கடுமையாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கவிஞராகவோ இசைக் கலைஞராகவோ நாடகக் கலைஞராகவோ நிறைய படித்தவராகவோ இருப்பார்.
அரசாங்க விருதுகள் கிடைக்கும். அழகான தோற்றம் இருக்கும்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில் இருந்தால், அரசாங்க விஷயங்களில் ஆதாயம் இருக்கும். அரசியலில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கும். ஜாதகர் நல்ல செயல்களைச் செய்வார். அன்னைக்கு சந்தோஷம் கிடைக்கச் செய்வார். பலரும் ஜாதகரின் குணத்தைப் பார்த்து பாராட்டுவார்கள்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். ஜாதகர் நேர்மை குணம் கொண்டவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். இசையுடன் மேலும் பல கலைகள் அறிந்தவராக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பண வசதி இருக்கும்.
5-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத்தில் இருந்தால், அது பாவ கிரகமாக இருந்தால், பலருக்கு வாரிசுகள் இருக்காது. சுப கிரகமாக இருந்தால், வாரிசுகள் இருப்பார்கள். ஆனால், ஜாதகருக்கு பிள்ளைகளால் பயன் இருக்காது. பெரும்பாலும் பிள்ளைகள் தூர இடங்களில் இருப்பார்கள். ஜாதகர் பலருக்கும் தொல்லைகள் கொடுப்பார்.
செல்: 98401 11534