மனித உடலில் தோன்றும் நோய்களை, விஞ்ஞானம் தோன்று வதற்கு முன்பாகவே அதன் தன்மை களை, அவை தோன்றும் காலங் களை, நோயிலிருந்து ஒருவர் நலமடையும் காலங்களை ஜோதிடத்தின்மூலமாக கண்டறியும் சூத்திரங்களை சாஸ்திர நூல்கள் கூறியுள்ளன. அவற்றின்மூலமாக இன்றள வும் ஜோதிட விற்பனர் கள் நோயின் தன்மையைக் கண்டறிந்து வருகின்றனர். அது போன்று அந்த நோயினை குணமடையச் செய்யும் மருந்து களோடு, அவற்றின் தாக்கத்தைக் குறைக்கின்ற பரிகாரங்களையும் "சாயாநீயம்' என்னும் சாஸ்திர நூல் மற்றும் "வீரசிங்க அவலோகனம்' என்னும் நூலும் கூறுகின்றது.
இவ்வகை பரிகாரத்தின் மூலமாக ஒருவருக்கு மது மேக நோய் முற்றிலும் குணமடைந்ததாக மிகப் பெரிய ஜோதிட ஜாம்ப வான் ஒருவர் கூறக் கேட்டி ருக்கிறேன். இவ்வகையான பரிகாரங்கள் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று, நோய்களை உருவாக்கும் கிரகங்களுக்கான கிரக சாந்திகள்; மற்றொன்று, இதய நோய்க்கு பிராயச்சித்தமாச் செய்யப்படும் ரோக பிராயசித்தப் பரிகாரம்.
முதலில் நாம் இதய நோய்க்கான கிரகநிலைகளைக் காண்போம்.
பொதுவாக பன்னிரு ராசிகளில், கடக ராசியை இதயத்தைக் குறிக்கும் ராசியாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அவ்விதமே லக்னத்திலிருந்து நான்காம் வீட்டை இதய ராசியாகவும் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு கும்ப ராசிக்கு இதய வியாதி எனவும் பெயர் உள்ளது. மேலும் கோள்களில் சந்திரனை இதயத்தின் கோள் எனவும், சூரியனே இதயத்தைக் குறிக்கும் கோள் எனவும் இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. எனினும் ஜோதிட சாஸ்திர நூல்களை ஆழ்ந்து கற்கும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களும் இதயத்தைக் குறிக்கும் கோள்கள் என உணரமுடிகிறது.
கும்ப ராசியிலிருக்கும் சூரியன் இதய நோயைத் தரும் அமைப்பாக சாராவளி ஆசிரியர் கூறுகிறார். கும்ப ராசியில் சூரியன் அமரும் பலனாக அவர் கூறும்போது- "ஹிர்த் ரோஹி' என அழைக்கின்றார். சந்திரன் தனது பகைக் கோளின் ராசிகளில் அமரும்போது இதய வியாதியை உருவாக்குவதாக ஜாதக பாரிஜாத ஆசிரியர் கூறுகிறார். அவ்வாறே மகர ராசியிலிருக்கும் சுக்கிரனும் இதய வியாதி யைத் தருவதாக சாராவளியின் ஆசிரியர் கல்யாண வர்மன் கூறுகிறார். தமிழ் ஜாதக அலங்கார நூலைப் போன்று வடமொழியில் எழுதப்பட்ட மற்றொரு ஜாதக அலங்கார நூல் கீழ்வரும் கிரக அமைப்புகள் இதயநோயை உருவாக்குமென்று கூறுகிறது.
* சூரியன் மற்றும் ஆறாம் வீட்டின் அதிபதி பாவகிரகம் ஒன்றுடன் 4-ஆம் வீட்டில் அமர்வது.
* குரு அல்லது சனி, ஆறாம் வீட்டின் அதிபதி இவர்களோடு பாவகிரக சேர்க்கைப் பெற்று நான்காம் வீட்டிலிருப்பது.
* சனி, குரு, செவ்வாய் இவர்கள் நான்கில் அமர்வது. அவர்கள் நட்பு வீட்டிலிருந்தாலும் இதய வியாதியை உருவாக்கும் அமைப்பாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜாதக பாரிஜாத நூலில், வலுவற்ற லக்ன வீட்டோன் பாவ கிரகத்தின் பார்வையைப் பெற்றும், நான்காம் வீட்டில் ராகுபகவான் அமரவும் சூலை வியாதி, இதயநோய் அமைப்பு ஏற்படுமென கூறப்பட்டுள்ளது. பொதுவாக நாம் ஆய்வு செய்தோமென்றால் கடக ராசி ஆறாம் வீடாக, சுபகிரகப் பார்வையில்லாமல் பாவகிரகம் அமர்ந்திருக்க, ஆறாம் வீட்டோன் அல்லது ஆறாம் வீட்டிலிருக்கும் கோளின் தசை யில் இதய வியாதி ஏற்படும் எனக் கூறலாம்.
அவ்வாறே சுக்கிரன் ஆறாம் வீடு அல்லது நான்காம் வீட்டில், லக்னத்தில் மகர ராசியில் அமர்ந்திருக்க, பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெறும்போது, அவர் தசாபுக்திகளில் இதய வியாதி ஏற்படலாம் எனவும் கூறவேண்டும்.
இதுபோன்று எண்ணற்ற பல இதய வியாதிக்கான அமைப்புகள் உள்ளன. இவ்வாறு ஜாதகத்தில் ஒருவருக்கு இதய வியாதி ஏற்படவிருப்பதாக உணர்ந்துகொண்டோம் என்றால் அல்லது இதய வியாதி இருக்கிறதென்றால் அதற்குப் பரிகாரமாக எந்த கிரக மானது இதய வியாதியை உருவாக்குகிறதோ அந்த கிரகத்திற்கு கிரகசாந்தியை செய்ய வேண்டும். அதுபோன்று இதய வியாதிக்கு பரிகாரமாக "பிரஜாபத்யம்' என்னும் வைதீக பிராயச்சித்தம் செய்வது அல்லது "உத்யநத்யா' எனத்துவங்கும் ஸூக்த மந்திரம் ஜெபம் செய்து, எள் நெய்யால் ஹோமம் செய்வது, விஷ்ணு ஸகஸ்ரநாம ஜெபம், அச்சுதானந்த கோவிந்தா என்னும் நாம திரய மந்திர ஜெபம் போன்ற யாவும் இதய நோயைத் தடுக்கும் பரிகாரமாகும்.
வசதி படைத்தவர்கள் மேற்கண்ட பரிகாரத்துடன் சொர்ணதானம், பசு தானமும் செய்வது இதய வியாதியைத் தடுக்கும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. எனவே இதய வியாதியால் அவதிப்படுபவர்கள் இத்தகைய பரிகாரங் களைச் செய்துகொள்வது நலமாகும். வாழ்க வளமுடன்.
செல்: 97913 67954