ஜனனகால ஜாதகத்திலுள்ள கிரகங்களே மனிதனின் விதியைத் தீர்மானிக்கின்றன. அந்த விதிப்பயனை ஜாதகர் எப்போது அனுபவிப்பார் என்பதை தசாபுக்திகளே தீர்மானிக்கின்றன. ஒருவருக்கு ஜாதகத்திலுள்ள கிரகங்களும், பாவகங்களும் யோகம்தரும் விதத்தில் அமைந்தால் மட்டும் போதாது. ஜாதகத்தில் எத்தனை யோகங்கள், தோஷங்கள் இருந்தாலும் அந்த சாதக- பாதகங்களைத் தரும் கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெற்றால் மட்டுமே ஜாதகர் பலனை அனுபவிக்க முடியும். அவரது வாழ்நாளுக்குள் அனுபவிக்கவேண்டிய பருவத்தில் அந்த யோக கிரகங்களின் தசை வந்தால் மட்டுமே யோகப்பலனை பரிபூரணமாக அனுபவிக்க முடியும்.
உதாரணமாக, ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமைபெற்று, 25 வயதில் சுக்கிரதசை நடந்தால் சிறப் பான தொழில், தனவரவு, உரிய வயதில் திருமணம், உல்லாச வாழ்க்கை, ஆடை, ஆபரணச் சேர்க்கை, சொத்து சேர்க்கை உண்டாகும். அதுவே 70 வயதில் வந்தால் சுக்கிரனால் கிடைக்கும் சுகபோகத்தை அனுபவிக்க முடியாது. வயதிற்குப் பொருத்தமான சுபப் பலன்களை வழங்கக்கூடிய தசாபுக்திகள் தொடர்ந்து நடந்தால் மட்டுமே அனுகூல மான பலனை அனுபவிக்க முடியும். மனிதர்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டத்திற்குக் காரணம் தசாபுக்திகள் என்பதால், சங்கட காலங்களில் தசாபுக்தியை வலுப்படுத்தும் பரிகாரங்கள் செய்யும்போது பாதகங்கள் குறைந்து சாதகங்கள் உண்டாகும்.
இந்த கட்டுரையில் நவகிரகங்களின் தசாபுக்தியை வலிமைப்படுத்தும் எளிய பரிகாரங்களைக் காணலாம்.
சூரியன்
தந்தையைக் குறிக்கும் கிரகம் சூரியன். ஒருவருடைய ஜாதகத்தில் தந்தையின் நிலையை சூரியனின் பலத்தையும் ஒன்பதாம் பாவகத்தையும் கொண்டும் அறியலாம். ஜனனகால ஜாதகத்தில் சூரியன் சுப பலத்துடன் வலுவாக தசை நடத்தும்போது ஆன்மபலம் பெருகும். உடல் தேஜஸ் பெறும்; பொன்னிறமாக இருப்பார்கள். தந்தை, தந்தைவழி உறவுகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தந்தையுடனான நேரடித் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபல மனிதர்களுடன் சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சூரிய ஓரையில் நடக்கும். சிவாலய தரிசனம் கிடைக்கும்.
அரசு அதிகாரிகளுடன் தொடர்புண்டாகும். அரசு வேலை கிடைக்கும்.
சிம்ம லக்னத்தில் அல்லது சிம்ம ராசியில் பிறந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புண்டாகும். சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். சூரிய தசை, புக்தி, அந்தர காலங்களில் நன்மை மிகுதியாகும். சிவபக்தர்களின் நட்புண்டாகும். சூரியன், சிவனுடைய பெயர்கள் கொண்டவர்களுடன் நட்பு உருவாகும். சிவப்புநிற வஸ்துகளில் சேர்க்கை, சிவப்புநிற ஆடைகள் அணிவதில் விருப்பமுண்டாகும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். கண்களின் பார்வைசக்தி பிரகாசமாக இருக்கும். மலைப் பிரதேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். சமூக சேவைகளில் நாட்டம் உண்டாகும். பெயர், புகழ் பெறவேண்டுமென்ற ஆசை உண்டாகும்.
பத்தாமிடத்தில் சூரியன் சம்பந்தப்பட்டிருந்தால் அந்த ஜாதகர் தந்தையின் தொழிலைத் தந்தைக்குப்பிறகு செய்வார். ஒருவரின் ஜாதகப்படி தொழிலைத் தரக்கூடிய கிரகம் சூரியனாக இருந்தால் அரசு உத்தியோகம், அரசுபதவி கிடைக்கும். வீட்டின் கிழக்குப் பகுதியில் ஜன்னல் இருக்கும். சூரிய ஒளிக்கதிர்களால் வீட்டில் நல்ல சக்திகள் நிரம்பியிருக்கும்.
சூரியன் பலமிழந்து தசாபுக்தி நடக்கும் காலங்களில் ஜாதகருக்கு ஆன்மபலம், மன அமைதி குறையும். தந்தை, தந்தைவழி உறவுகளின் அன்பு, ஆதரவு கிடைக்காது. சமுதாய அங்கீகாரம், அரசின் ஆதரவு, முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்காது. கடவுள் நம்பிக்கை இருக்காது. உஷ்ணநோய், கண்நோய், பித்ததோய், தலைவலி உண்டாகும். சித்து வேலைகள், ஏமாற்று வேலைகள் செய்து பிழைப்பு நடத்துவர். அரசு தண்டனை, தண்டம் கட்ட நேரும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை குறையும். பொறுப்பற்றவராக இருப்பார்கள். சூரிய ஒளி குறைவாகவுள்ள இடங்களில் வாழநேரும். வீட்டில் தீயசக்திகள் நிரம்பியிருக்கும். எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்
சூரிய தசை, புக்திக் காலங்களில் குதிரைக்கு உணவளிப்பதன்மூலம் பிரச்சினைகள் உடனே தீரும். சுய ஜாதகத்தில் சூரியன் பலம் குன்றியவர்கள் தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்யவேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வதன்மூலம் உடல் ஆரோக்கியத்தையும் பலத்தையும் பெருக்கமுடியும். அனைத்துவிதமான வெற்றிகளையும் அடையமுடியும்.
சந்திரன்
ஜனன ஜாதகத்தில் சந்திரன் பலம்பெற்று வலிமையுடன் தசை நடத்தினால் பண்பு, பாசம் , நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக் கம், அரசுவழியில் ஆதரவுகள் உண்டாகும்.
தாய், தாய்வழி உறவுகளின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
அம்மன் ஆலய தரிசனம் கிடைக்கும். அம்மன் பக்தர்களின் நட்பு கிடைக்கும். அடிக்கடி பயணம்செய்ய நேரிடும். விருந்து சாப்பாடு, பலவிதமான உணவுப் பொருட்களை சமைப்பதில்- சாப்பிடுவதில் ஆர்வம் மிகும். சந்திர தசைக் காலம் முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். கடக லக்னம், கடக ராசியில் பிறந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புண்டாகும். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் நண்பர் களாகக் கிடைப்பார்கள். சந்திரன், அம்மன் பெயர்கள் கொண்டவர்களுடன் நட்பு உருவாகும்.
சந்திர தசை, புக்தி, அந்தர காலங்களில் மிகுதியான நன்மைகள் நடக்கும்.வெள்ளை நிறப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வெள்ளைநிற ஆடைகள் அணிவதில் விருப்பம் உண்டாகும். முக்கிய நதிகள், அருவிகள், சமுத்திரங்களில் புனித நீராடும் வாய்ப்பு உருவாகும்.
சந்திரன் 4-ஆம் இடத்து டன் சம்பந்தம் பெற்றால் நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள வீட்டில் வசிப்பார்கள். பத்தாம் இடத்துடன் சம்பந் தம் பெற்றவர்களுக்கு அலைச் சல் மிகுந்த வேலை, தொழில் உண்டாகும். பெரும்பா லும் பலசரக்குக் கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், அன்றாடம் அழியக்கூடிய உணவுப் பொருட்கள், காய்கறி, பழம், பால், குளிர் பானங்கள் போன்றவற்றை விற்பார்கள்.
சந்திரன் மனோகாரகன் என்பதால், அவர் பலமிழந்திருந்து தசாபுக்தி நடந்தால் மனக் குழப்பம், மனநோய், மற்றவர்களிடம் இணக்க மாகப் போகமுடியாத நிலை, எதிலும் தோல்வி, அனுகூலமற்ற நிலை ஏற்படும். மிகுதியான கெடுபலன்கள் நடக்கத் துவங்கும். மேலும், சந்திரனுடன் இணைந்த கிரகங்களின் தசா புக்தியிலும் இந்த பாதிப்பிருக்கும். அதனால் சந்திரன் தொடர்புடைய தசாபுக்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த எளிய பரிகாரத்தைச் செய்வது நல்லது. சந்திரன் வலுவாக உள்ளவர் களும் இந்த பரிகாரத்தைச் செய்தால் சந்திரபலம் கூடும்.
பரிகாரம்
சந்திர தசை, புத்திக் காலங்களில் சந்திரனால் பாதிப்பிருந்தால் மீன், ஆமை போன்ற நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கினால் பாதிப்பு உடனே அகலும். பௌர்ணமியில் சத்திய நாராயணர் விரதமிருக்க வேண்டும்.v பச்சரிசி மாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய்தீபமேற்ற வேண்டும். நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம்செய்ய வேண்டும்.
செவ்வாய்
செவ்வாய் சகோதர காரகன். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை, செவ்வாயின் நிலையைக்கொண்டே கணிக்கப்படுகிறது. செவ்வாய் போர்குணம் கொண்ட கிரகம். மேஷத் தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் குறைந்த வேகத் தில் செய்யும். பெண்களின் ருது நிகழ செவ்வாய் மிக முக்கிய காரணகர்த்தாவாக இருக்கிறது.
செவ்வாய் பலம்பெற்று தசாபுக்தி நடத்தும் காலங் களில் மிகுதியான சுபப் பலன்கள் கிடைக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும். மேஷம், விருச்சிக ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புண்டாகும். செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டத்தில் பிறந்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். முருகனுடைய பெயர்கள் கொண்டவர்களுடன் நட்பு உருவாகும்.
ஜாதகரின் சகோதரர்கள் உயர்ந்தநிலை யில், ஆரோக்கியமானவர்களாக இருப்பார் கள். சகோதரர்களுடன் நட்புறவு ஏற்படும்.
ஜாதகர் பெண்ணானால் கணவர் உயர்ந்த நிலையிலிருப்பார். பூர்வீகச் சொத்தைப் பயன்படும் யோகம் உண்டாகும். காவல்துறை, இராணுவம், விளையாட்டுத் துறைகளில் வேலை கிடைக்கும்.
முருக வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிவப்புநிற ஆடைகள் அணிய ஆர்வம் ஏற்படும். முக்கிய நிகழ்வுகளெல்லாம் செவ்வாய் ஓரையில் நடக்கும். அசைவ உணவு வகைமீது அதிக நாட்டமுண்டாகும். மலைப் பிரதேசங்களுக்குச் சென்றுவர வாய்ப்புக் கிடைக்கும்.
ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்து தசை நடத்தினால், சகோதரர்கள் தாழ்ந்த நிலையில் சலனபுத்தி உடையவராக இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் செவ்வாய் பலம்குறைந்தால் கணவருக்கு முன்னேற்றக் குறைவு ஏற்படும். மாதவிடாய்க் கோளாறு இருக்கும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் பலம்குறைந்தால் தைரியமற்றவர்களாக- விவேகமின்றி இருப்பார்கள்.
வீடு, வாகன யோகம் குறைவுபடும். அரசுப் பணி, அரசு ஆதரவில் தடை, தாமதம் ஏற்படும். கலகம் செய்வதில் விருப்பமுண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் இருக்கும்.
பரிகாரம்
செவ்வாய் தசை, புக்தி, அந்தர காலங்களில் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன்மூலம் கெட்ட வினைகள் குறையும். மேலும், குரங்குகளுக்கும் தானியங் களைத் தரலாம். திருமணத்தடையும் அகலும்.
செவ்வாய்க்கிழமை சிவப்புநிற ஆடை அணிந்து விரதமிருந்து, மலைமீதுள்ள முருகனை வழிபடுவது நல்ல பலன் தரும்.
தினமும் கந்தர் சஷ்டிக் கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். செவ்வாய் தசைக் காலங்களில் சிரமம் மிகுதியாக இருந்தால் ரத்த தானம் செய்யவேண்டும். பூமி, உடன்பிறந்தவர்கள் மூலம் எழும் பிரச்சினைக்கு சிவப்புநிறப் பசுவை தானம்செய்ய வேண்டும்.
புதன்
புதன் என்றால் புத்தி. ஒரு மனிதனின் ஞானத் திற்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் வித்யா காரகன் எனப்படும் புதன். புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலிகளாக இருப்பார்கள். ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள் இளமைப் பொலிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
பாவ கிரகங்களுடன் சேராமலிருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவுக்கு நிகரான சக்தி யுண்டு. அதேநேரத்தில் புதன் இரட்டைத் தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத் திற்கு, இடத்திற்குத் தக்கவாறு, பார்க்கும் கிரகத் திற்குத் தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார்.
புதன் வலுப்பெற்று தசாபுக்தி நடத்தினால், எந்த சூழ்நிலையிலும் தன் அறிவின்மூலம் வாழ்க்கையில் முன்னேறிவிடுவர். இளம் வயதினருடன் நட்பு உருவாகும். தாய்மாமனின் அன்பு, ஆதரவு பெற்றவர்கள். முக்கிய நிகழ்வு கள் எல்லாம் புதன் ஓரையில் நடக்கும். புதன் தசை, புக்தி, அந்தரத்தில் மிகுதியான நல்லபலன்கள் உண்டாகும். மிதுனம், கன்னி லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுடன் நட்பு ஏற்படும். புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் பிறந்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். விஷ்ணு வழிபாட்டில் ஆர்வம் மிகும். விஷ்ணுவின் பெயர்களைக்கொண்ட மனிதர்களுடன் தொடர்புண்டாகும். பச்சைநிற ஆடைகள் அணிவதில் விருப்பமுண்டாகும். உல்லாசப் பயணங்கள் செய்வதில் விருப்பமுண்டாகும். பசுமையான பிரதேசங்களைக் காணும் வாய்ப்புண்டாகும்.
ஜனன ஜாதகத்தில் புதன் பலம்குறைந்து தசை நடத்தினால், ஒரே வேலையை இரண்டு முறை செய்வார்கள். கடன், நோய், எதிரித் தாக்கம் மிகுதியாகும். சொந்தத் தொழில் செய்பவராக இருந்தால் தொழில் தந்திரமற்றவராக இருப்பர். தாய்மாமன் ஆதரவு குறையும்.
பரிகாரம்
புதன் தசையால் பிரச்சினையை சந்திப்பவர் கள் கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. மற்ற பட்சிகளுக்கும் உணவு, தண்ணீர் வைக்க லாம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவேண்டும் அல்லது கேட்க வேண்டும்.மதுரை மீனாட்சியம்மனை புதன்கிழமை வழிபடவேண்டும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...