"ஜனனி ஜென்ம சௌக்யானம்

வர்த்தனி குல சம்பதாம்

பதவி பூர்வ புண்யணாம்

-க்யதே ஜென்ம பத்திரிகா.'

Advertisment

மனிதர்களாய்ப் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் பூர்வபுண்ணிய பலத்தின் வலிமைக்கேற்பவே அமையும். ஒரு ஜாதகத் தில் ஆண்டியையும் அரசனாக்குவது 5-ஆமிடம். இந்த இடத்தை பதவி ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவர் பெயரும் புகழுமாக இருந்தால், "புண்ணியவான்' என்று கூறுவார்கள். போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் இந்த ஜென்மத்தில் பாக்கியவானாக இருப்பார். ஒருவருக்கு வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்மவினையோ எதுவாக இருந் தாலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில்தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கவேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும்.

மிகச் சுருக்கமாக, ஜாதகர் கடந்த ஜென்மத் தில் செய்த புண்ணியப் பலன்கள் அல்லது பாவத்தின் தொகுப்பாகும். ஒருவரின் பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையை ஐந்தாமிடம், ஐந்தாமதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தா மிடத்தைப் பார்த்த கிரகம், ஐந்தாமதிபதி பெற்ற நட்சத்திர சாரம் போன்றவற்றின்மூலம் அறியலாம்.

சுய ஜாதகத்தில் 5-ஆமிடம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால்- அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் சுப வலிமை பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்னாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால் அவர் பூர்வஜென்மத்தில் மிகுதியாக புண்ணிய காரியங்கள் செய்தவர் என்று கூறலாம்.

Advertisment

அதேபோல் 5-ஆமிடத்தில் அசுப கிரகங்கள் நிற்பது, பார்ப்பது, அந்த வீட்டில் 6, 8, 12-க்குடையவன் அமர்ந்திருந்தால் பூர்வஜென்மத்தில் பாவ காரியங்கள் மிகுதியாகச் செய்தவர் என்பதை அறியலாம். அத்துடன் சுப- அசுப கிரகங்கள் கலந்து சம்பந்தம் பெற்றால் பாவம்- புண்ணியம் இரண்டிலும் சம்பந்தமுள்ளவர் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.

மேலும் ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தைக்கொண்டு புத்திர பாக்கி யம், குலதெய்வ அனுக்கிரகம், பூர்வீகம், பூர்வீகச் சொத்து, அதிர்ஷ்டம், புத்திக்கூர்மை, பதவி, புகழ், சமூக அந்தஸ்து, செயல்பாடு போன்றவற்றை அறியலாம்.

பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி 12 பாவகங்களில் நிற்பதால் ஏற்படும் பலன்களை யும், அதற்கான பரிகாரத்தையும் காணலாம்.

ஐந்தாமதிபதி ஒன்றில்

சுபகிரக சம்பந்தம் பெற்றிருந்தால் பூர்வீகத்திலேயே பிறந்து, பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி தேடிவரும். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். நிர்வாகத் திறமையுண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல் களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். புத்திரர் களால் இவர்களுக்கும், இவர்களால் புத்திரர் களுக்கும் பயனுண்டு. அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்க பலர் விரும்புவார்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார்- உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். குலதெய்வ கடாட்சம் உண்டு. குலதெய்வக் கோவில் நிர்வாகிகள். வம்சாவளியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக் கும் பாக்கியம் பெற்றவர்கள்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் பூர்வீகத்தில் வாழமுடியாது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சையுண்டு. பிள்ளைகளால் மனவேதனை மிகும். குலதெய்வ அருள் கிடைக்காது. குலதெய்வக் கோவிலுக்கு மலர்மாலைகள் வாங்கித் தரவும்.

ஐந்தாமதிபதி இரண்டில்

இது மிகப்பெரிய அதிர்ஷ்ட அமைப்பு. குலதெய்வக் கோவிலில் வாக்கு சொல்பவர்கள். குலதெய்வம் இவர்கள் நாவில் வந்து பேசும். வாக்குபலிதம் உண்டு. பஞ்சாயத்திற்கு நியாயத் தீர்ப்பு வழங்குபவர்கள். அன்னதானம் வழங்கும், வழங்கிய கௌரவப் பரம்பரையில் பிறந்தவர்கள். முதல் குழந்தை பிறந்தபிறகு அதிர்ஷ்டம் பன்மடங்காகும். பிள்ளைகள்மூலம் வருமானமுண்டு. உழைப்பில்லாத செல்வம், வாய்ஜா லம், வார்த்தை ஜாலத்தால் பொருளீட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம், ஜோதிடம், புரோகிதம் போன்ற துறைகளின்மூலம் வருமானமுண்டு. சிலர் திட்டங்கள் தீட்டிக்கொடுத்து சம்பாதிப்பார்கள் அல்லது யோசனை சொல்லி செல்வம் திரட்டுவார்கள். பூர்வீகத்திலேயே சுயதொழில், குலத்தொழில் நடத்துவார்கள். சிறிய உழைப்பில் பெரும் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து, தாத்தாவழி உயில் சொத்தை முழுமையாக அனுபவிப்பவர்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள்.

இதற்கு அசுப கிரக சம்பந்த மிருந்தால் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். நம்பிக்கை துரோகிகள். நிலையற்ற வருமானம், வறுமையுண்டு. குடும்பத்தில் மதிப்பு, மரியாதை இருக்காது. தீய சகவாசத்தால் குலகௌரவத்தைக் காற்றில் பறக்கவிடுபவர்கள். பிள்ளை களால் இவர்களுக்கும், இவர்களால் பிள்ளைகளுக்கும் பயன் கிடையாது. குலதெய்வக் கோவிலுக்கு அன்னதானத் திற்குத் தேவையான உதவிகளை வழங்கவும்.

dd

ஐந்தாமதிபதி மூன்றில்

தைரியம், தன்னம்பிக்கை மிகுந்த வர்கள். திட்டமிடுதலில் வல்லவர்கள். பின்னால் நடக்கப்போவதை முன்னரே அறியக்கூடிய உள்ளு ணர்வு மிகுந்தவர்கள். உடன்பிறந்தவர்களுடன் ஐக்கியமாக வாழ்வார்கள். தினமும் சொந்த ஊரைவிட்டு தொழில் அல்லது உத்தியோகத்திற் காக வெளியூர் சென்றுவருவார்கள். அல்லது நினைத்தவுடன் பூர்வீகத்திற்கு வந்துபோகும் தூரத்தில் இருப்பார்கள். பிள்ளைகளும் பூர்வீகத்திற்கு அருகிலேயே வாழ்வார்கள். அண்டை அயலாருடன் நட்பு பாராட்டி வாழ்வார்கள். பூர்வீகச் சொத்தை இவர்களுடைய சகோதர- சகோதரிகள் பயன்படுத்துவார்கள். அல்லது உடன்பிறந்தவர்களுக்கு பூர்வீகச் சொத்தை தாரைவார்ப்பார்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான முறையான ஆவணங்கள் உண்டு. சுமூகமான பாகப் பிரிவினை உண்டு. சிலர் குலதெய்வக் கோவில் பிடிமண் எடுத்துவந்து பிறந்த ஊருக்கருகில் கோவில்கட்டிக் கும்பிடுவார்கள். அல்லது பூர்வீகத்திற்கு அருகில் குலதெய்வக் கோவில் இருக்கும்.

இதற்கு அசுப கிரகச் சேர்க்கை இருந்தால் இடம்மாறிய குலதெய்வத்தை வழிபடுவார்கள். அதாவது பிறரின் குலதெய்வத்தைத் தமது குலதெய்வமென்று கூறுவார்கள். அல்லது ஒரு தெய்வத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவார்கள். பூர்வீகச் சொத்திற்கு முறையான ஆவணங்கள் இருக்காது. அல்லது பாகப் பிரிவினையில் பிரச்சினை இருக்கும் அல்லது அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறு உண்டு. உடன்பிறந்தவர்களுடன் பூர்வீகச் சொத்தில் வம்பு, வழக்குண்டு. குலதெய்வக் கோவிலுக்கு மணி வாங்கி வைக்கவும்.

ஐந்தாமதிபதி நான்கில்

சொந்த மண்ணைவிட்டுச் சென்று வெளியூர், வெளிநாட்டில் பிழைப்பு நடத்துவார்கள். பள்ளி, கல்லூரிப் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்வார்கள். குலதெய்வம் பிறந்த ஊரிலிருக்கும். பண்ணைத் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பதில் ஆர்வமதிகம். ஆடம்பரமான வீடு, சொகுசு வாகன வசதியுண்டு. சுகமான இல்வாழ்க்கை உண்டு. அரசாங்கப் பணியுண்டு. அரசியலில் புகழ், பெயர், கௌரவம் உண்டு. பரம்பரை யாக அரசுவேலை அல்லது அரசுப் பதவியில் இருப்பார்கள். முன்னோர்கள் கல்வி நிறுவனம் நடத்தியவர்கள் அல்லது ஜாதகர் கல்வி நிறுவனங்கள் நடத்துவார். தாயின் ஆதரவுண்டு. தாய்வழி பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் பள்ளி, கல்லூரிப் படிப்பில் தடையுண்டாகும். அரசியல் வாழ்க்கையில் மிகுதியான தொல்லைகள் உண்டாகும். முன்னோர் களின் பரம்பரை நோய்த் தாக்கம் இருக்கும். தாயின் ஆரோக்கியம் கெடும். தாய்வழி உறவுகளின் ஆதரவு குறையும். குலதெய்வத்திற்குப் பசும்பால் அபிஷேகம் செய்யவும். வசதியிருப்பவர்கள் கோதானம் செய்யலாம்.

ஐந்தாமதிபதி ஐந்தில்

பூர்வபுண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ், அந்தஸ்து உடன்வரும். தாத்தாவின் தொழிலைச் செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். குலதெய்வமே குழந்தையாகப் பிறக்கும். பிள்ளைகள் குலகௌரவத்தைக் காப்பாற்றுவார்கள். அறிவாளியாக, புத்திக்கூர்மையுடன் இருப்பார்கள். குலதெய்வ அருளுண்டு. குலதெய்வக் கோவில் நிர்வாகிகள் அல்லது கௌரவப் பதவியில் இருப்பார்கள். அரசாங்கப் பதவி, அரசு உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் அதிர்ஷ்டம் குறைவுபடும். புத்திக்கூர்மை குறைவுபடும். புத்திர தோஷம் உண்டாகும். சிலருக்கு வம்சம் தழைக்காது. சிலருக்கு வாரிசுகளால் குடும்ப கௌரவம் கெடும். புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும். குலதெய்வ அருள் கிடைக்காது. குலதெய்வக் கோவில் அல்லது சிவன் கோவிலில் ஆலமரம், அரசமரங்களை நட்டு வளர்க்கவும்.

ஐந்தாமதிபதி ஆறில்

உள்ளூரில் கடனாளியாக வாழும் நிலை ஏற்படும். இவர்களுடைய குழந்தைகள் வெளிநாட்டில் வாழ்வார்கள். பூர்வீக சொத்தில் வம்பு வழக்குண்டு. அல்லது சொத்துகளைக் கடனுக்காக இழக்கநேரும். அல்லது குழந்தைகளுக்கான வைத்தியச் செலவு அதிகரிக்கும். முன்னோர்கள் குலதெய்வக் கோவில் வரவு- செலவில் குளறுபடி செய்தவர்கள். அல்லது குலதெய்வச் சொத்தை கொள்ளையடித்தவர்கள். அல்லது வேண்டுதல்களை நிவர்த்தி செய்யாதவர்கள். வெகுசிலர் அதீத பக்தியால் கடன்பெற்று கோவில், ஆன்மிக காரியத்திற்கு செலவு செய்து கடனாளியாவார்கள். இந்த அமைப்பு வாரிசுகளை வாழ, வளரவிடாது. அல்லது வாரிசுகளே உருவாகாது. அல்லது நன்றியில்லாத- பெற்றவர்களின் நிம்மதியைக் குலைக்கும் குழந்தைகளே பிறக் கும். தாய்மாமன் உறவில் விரிசலுண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தலைமுறையினருக்குத் தீராத கடன், நோய், வறுமை இருக்கும். அல்லது கடன்பட்டு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவர நேரும். அல்லது சாமி கும்பிடும்போது பங்காளிகளுடன் சண்டை ஏற்படும். சிலருக்கு குலதெய்வத்தை வழிபடும் வாய்ப்பே கிடைக்காது. அல்லது குலதெய்வமே தெரியாது. குலதெய்வத்தை ஆத்மார்த்தமாக சரணடைந்து வழிபடவேண்டும்.

ஐந்தாமதிபதி ஏழில்

நெருங்கிய உறவில் அல்லது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கும். ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்வார்கள். மனைவிமூலம் குடும்பத்திற்கு அதிக பொருளாதாரம் உண்டு. இரண்டாவது குழந்தை பிறந்தபின் பொருளாதார வளர்ச்சியுண்டு. அதன்பிறகு பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். ஒரு குலதெய்வத் திற்கு இரண்டு கோவில் கட்டுவார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் பூர்வீகத்தைவிட்டு படிப்பிற்காக வெளியூர் சென்று, அங்கேயே காதல், கலப்புத் திருமணமாகி தங்கிவிடுவார்கள். மனைவியின் குலதெய்வத்தைக் கும்பிடுபவர்கள். புத்திரர்களால் மதிப்பு, மரியாதை குறையும். தம்பதிகளுக்குள் மிகுதியான கருத்து வேறுபாடு அல்லது விவாகரத்து நடக்கும். வாழ்ந்து கெட்ட குடும்பமாகும். குலதெய்வத்தின் கோவிலில் வில்வமரம், தென்னங்கன்று நட்டு வளர்க்கவும்.

ஐந்தாமதிபதி எட்டில்

பூர்வீகத்தைவிட்டு மனக் கஷ்டத்துடன் வெளிமாநிலம், வெளிநாடு செல்வார்கள். கடைசிக் காலத்தில் பூர்வீகம் திரும்ப விரும்புவார்கள். குலதெய்வக் கோபமுண்டு. கோவிலுக்குச் செல்லும்போது விபத்து, கண்டம் ஏற்படும். பல வருடங்களாகப் பூட்டிவைத்த குலதெய்வம் அல்லது மறைந்து போன குலதெய்வக் கோபத்தால் வாழ்நாள் முழுவதும் துன்பம் இருந்துகொண்டே இருக்கும். காலதாமதமாக கடுமையான வைத்தியத்திற்குப்பிறகு குழந்தை பிறக்கும். அல்லது தத்துக் குழந்தை கிடைக்கும். வெகுசிலருக்கு அதிர்ஷ்டமாக வாரிசில்லாத உயில் சொத்து, பினாமி சொத்து கிடைக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் குழந்தைகளுக்கு தீராத நோய் அல்லது அங்கக் குறைபாடிருக்கும். சிலர் பூர்வீகத்திற்கு மீண்டும் திரும்பமுடியாது. குலதெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்திற்கு சந்தனக் காப்பு வைத்து வழிபடவும்.

ஐந்தாமதிபதி ஒன்பதில்

வாழ்ந்து மறைந்த முன்னோர்களே தங்கள் குடும்பத்தில் மீண்டும் வாரிசுகளாகப் பிறப்பார்கள். மறைந்த முன்னோர்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் உருவ ஒற்றுமை, செயல்பாடுகளில் ஒற்றுமை இருக்கும். நல்ல சிந்தனை, ஆத்மஞானம் நிறைந்த பிள்ளைகள் பிறப்பார்கள். பெரும்பாலும் முதலில் ஆண் குழந்தைதான் பிறக்கும். புத்திரர்கள் புகழுக்குப் புகழ்சேர்ப்பார்கள். பரம்பரையாக அரசாங்கத்தில் உயர்பதவி பெறுவார்கள். நீதி, நேர்மை, நியாயம், தர்மம் ஆகியவற்றை முறையாகக் கடைப் பிடிப்பவர்கள். அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துவார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதுபவர்கள். பூர்வபுண்ணிய பலம், குலதெய்வ அருள் நிரம்பியவர்கள். குலதெய்வக் கோவில் வாழும் இடத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கும். குலத்தினர் ஒற்றுமையாக இணைந்து குலதெய்வத்தைக் கும்பிடுவார்கள். குடும்பம் வாழையடி வாழையாகத் தழைக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் வெளியூர், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை செய்வர். அங்கேயே குடியுரிமைபெற்று வாழவிரும்புவார்கள். பல தலைமுறையினர் சுகமாக வாழத் தேவையான சொத்து இருக்கும். ஆனால் சொத்தை அனுபவிக்க வாரிசு இருக்காது. பாக்கியப் பலன்கள் முழுமையாக வலிமையிழந்து காணப்படும். பௌர்ணமி திதியில் குலதெய்வத்தை வழிபடவும். சனிக்கிழமை விரதமிருந்து முன்னோர்களை வழிபடவும்.

ஐந்தாமதிபதி பத்தில்

அரசு உத்தியோகம், கௌரவப் பதவி யுண்டு. சமுதாய அங்கீகாரம் நிறைந்தவர்கள். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப் பார்கள். சிலர் உள்ளூரில் வீட்டுக்கு அருகில் குலத்தொழில் செய்வர். குலதெய்வத்தின் பெயரில் தொழில் இருக்கும். குலதெய்வத்திற்கு தொழில் லாபத்தில் பங்கு கொடுப்பவர்கள் அல்லது குலதெய்வத்திற்கு அதிக தானம், தர்மம் செய்பவர்கள். அசுப கிரக சம்பந்தமிருந்தால் நிலையான பதவி, புகழ் இருக்காது. ஆன்மிக நாட்டம் குறையும். குலதெய்வத்திற்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

ஐந்தாமதிபதி பதினொன்றில்

எடுத்த காரியத்தில் வெற்றிமேல் வெற்றியுண்டு. பலவழிகளில் வருமானமுண்டு. தலைமுறையில் பலருக்கு இரண்டு திருமணம் நடக்கும். ஆண்- பெண் பிள்ளைகள் சமவிகிதத்தில் இருக்கும். பரிபூரண குலதெய்வக் கடாட்சம் உண்டு. குலதெய்வக் கோவில் நிர்வாகப் பொறுப்பு இவர்களிடம் இருக்கும். கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவுமுண்டு. பூர்வீகத்தைவிட்டு வெளியேறுவதை விரும்பாதவர்கள். ஈரேழு தலைமுறைக்கும் சொத்துசேர்த்து வைப்பார்கள். குடும்பம் மூத்த சகோதரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். சுயநலம் இல்லாதவர்கள். அரசாங்க உயர்பணி, அரசியல் ஆதாயம் உண்டு. தாய்மாமன் ஆதரவுண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் இவர்களுடைய பூர்வீகச் சொத்தை மூத்த சகோதரர் அனுபவிப்பார். வெள்ளிக்கிழமை குலதெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடவும்.

ஐந்தாமதிபதி பன்னிரண்டில்

கடுமையான புத்திர தோஷம் நிரம்பியவர்கள். புத்திரர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடமுடியாது. வேற்று மத வழிபாடு, வெளிநாட்டு கலாச்சாரத்தில் ஆர்வம் அதிகம். முன்னோர் களின் பரம்பரை வியாதிகள் அதிகமாக இருக்கும். வாழ்நாளில் பெரும் பகுதியை வைத்தியத்தில் கழிப்பவர்கள். தொழிலில் பெரும் நஷ்டம், அவமானம், தலைமறைவு வாழ்க்கையுண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் வெளிநாடு சென்று திரும்பமுடியாத நிலை ஏற்படும். குலம்மாறிய திருமணம் அதிகமாக இருக்கும். பணவசதி மிகுதியாக இருக்கும். மனநிம்மதி இருக்காது. குலதெய்வ வழிபாட்டை மறந்ததால் சாபம் நிரம்பப் பெற்றவர்கள். குழந்தையின்மை, குழந்தைகளால் நிம்மதியின்மை நீடிக்கும். குலதெய்வக் கோவிலுக்கு மின்சாதனப் பொருட்கள் தானம் தரவும். பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெற்றால் தனப்பிராப்தி, சொத்து சேர்தல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம் போன்றவை கிடைக்கும். தனம் எனும் பணம் கொட்டும். எந்த ஜாதகமாக இருந்தாலும் ஏதாவதொரு வகையில் யோகமிருக்கும். ஆனால் அந்த யோகம் என்ன தன்மையில் உள்ளது- எந்த அளவில் உள்ளது என்பதில்தான் விஷயம் உள்ளது. இதில் அளவென்பது நாம் வாங்கிவந்த வரம், கொடுப்பினை, அம்சம். எனவே பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமையிழந்தவர்கள் குல, இஷ்ட, காவல் தெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம் தரவேண்டும்.

செல்: 98652 20406