ஒருவர் பிறந்த மதம், பரம்பரை, வம்சம், குலம், கோத்திரம் ஆகியவற்றைத் தெரிவிப்பது ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானமாகும்.
சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம், ஒன்பதாமதிபதி பலம்பெற்றால் ஜாதகரின் குடும்பத்திற் கென்று தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. உயர்வான உறவுகள் நிரம்பப் பெற்ற வர்கள். பங்காளிகளிலேயே இவர்கள் பலமுள்ள வராகவும், நாணயமிக்கவர்களாகவும் இருப் பார்கள். தலைமைப் பண்பான தாய்-தந்தைக்குப் பிறந்தவர்கள். தந்தைவழி உறவுகளுடன் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பார்கள். மிகுதி யான பூர்வீக சொத்து இவர்களுக்குண்டு. 9-ஆமதிபதி லக்ன சுபர்களோடு சேர்ந்து கேந்திர, திரிகோணங்களில் நின்றால் வாழ்நாள் முழுவதும் தொட்டதெல்லாம் பொன்னாகும். தந்தையின் செல்வாக்கும், சொல்வாக்கும், அரவணைப்பும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
ஆக, ஒன்பதாமிடமெனும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களுக்குப் பிறவியிலே அதிர்ஷ்டம், நிறைந்த செல்வம், தானம், தருமம் செய்யும் நற்பண்புகள், புண்ணிய காரியங்கள் ஈடுபடும் வாய்ப்பு, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, நல்ல தாய்- தந்தை அமைவது, நல்ல மனைவி, நண்பர்கள், விசுவாசமான வேலைக்காரர்கள், உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள், முன்னோர்களின் நல்லாசி, நல்ல குரு அமைவது, புனித யாத்திரை, தந்தைவழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப் பிடிப்பது, உடனிருப்பவர் களை சுகமாக வைத்துக் கொள்வது, பரம்பரை கௌரவத் தொழில், கூட்டுத் தொழில், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றம், முக்தி போன்ற புண்ணியப் பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.
மேலும் இதன்மூலம் தந்தை, பாக்கியம், மத ஆச்சாரம், குல வழக்கம், குல விருத்தி, குரு, உடனே பலம், பலன் தரும் தெய்வம் (உபாசனை தெய்வம்), மதப்பற்று, நீண்டதூரப் பயணம், தொழில் விரயம், தெய்வ வழிப்பாட்டிடம், தம்பியின் மனைவி, பணம் புரட்டுதல், ஜெபம், உயர்கல்வி, வெளிநாட்டுப் பயணம், தந்தை, தந்தைவழி உறவுகள், பூர்வீகச் சொத்துகள், தான, தர்ம குணங்கள், முயற்சியின்றி கிடைக் கக்கூடிய ஆதாயங்கள், மத நம்பிக்கை, அதிர்ஷ்டம், திறமை, நேர்மை, சமுதாய அங்கீகாரம் போன்றவற்றைப் பற்றியும் அறியலாம்.
அத்துடன் உன்னைப் பெற்ற தந்தை யார்? உன் உடம்பிலுள்ள உசஆ-வை யாரிடமிருந்து கிடைக்கப்பெற்றாய்? உன் குலம், ஜாதி, மதம் எது? புண்ணிய பலத்தால் உன்னைப் பெற்றாரா? பாவ பலத்தால் உன்னைப் பெற்றாரா? உன்னால் உன் தந்தை கௌரவம் கிடைக்கப் பெறுவாரா அல்லது உன் தந்தையால் நீ கௌரவம்பெறப் போகிறாயா? முன்னோர் களின் சொத்துகள் உழைப்பால் வந்ததா அல்லது அநீதியாக வந்ததா? அந்த சொத்து சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற வனா? உன் பிறப்பின் நோக்கம் என்ன? நான் ஏன் பிறந்தேன் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடைதரும் பாவகம்.
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானம் மூலமே உயர்வானதை அடையமுடியும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை- ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். அந்த ஒன்பதா மிடத்தில் சுய ஜாதகத்தில் நல்ல அமைப்பிருந் தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார்.
எண்ணியதை அடைந்துவிடுகிறார். ஒன்பதில் அசுப கிரகங்களின் சம்பந்தம் இருக்கப் பிறந்த வர்கள் தடுமாறுகிறார்கள்; போராடுகிறார் கள். அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார்கள். இதுதான் ஜோதிட ரகசியம்.
பன்னிரு பாவகங்களில் அமர்ந்த பாக்கி யாதிபதி ஏற்படுத்தும் சுப- அசுபங்களையும், அதற்கான வழிபாட்டு முறைகளையும் பார்க்கலாம்.
ஒன்பதாமதிபதி ஒன்றில்
ஜாதகர் ஆன்மிக நாட்டமுள்ளவர். கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், கல்வி நிறுவனம் நடத்துதல், தான, தர்மம் செய்தல் போன்ற பாக்கியப் பலன்கள் உண்டு. குல கௌரவம், சமுதாய அந்தஸ்து நிறைந்த வர்கள். உண்மையையும், நேர்மையையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டே இருப்பார்கள். அதிர்ஷ்டத்தாலும், யோகத் தாலும் முன்னேற்றம் அடைவார்கள். சுயமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். தந்தைவழி ஆதாயமும் அனுகூலமும், பூர்வீக சொத்தும், முன்னோர்களின் நல்லாசியும் நிரம்பப் பெற்றவர்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பமதிகம். சாதாரண குடும்பமாக இருந்தாலும் ஜாதகர் பிறந்தபிறகு தந்தை பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டிருப்பார்.
சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம்
அசுப பலம்பெற்றால் பாரம்பரியத்தைக் கடை பிடிக்கத் தவறுவார்கள். முன்னோர்களின் நல்லாசி குறைவுபடும். தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களுடன் சண்டை, சச்சரவு மிகுதியாக இருக்கும். இரண்டு திருமணம் உண்டு. சிலர் குடும்பத்தைவிட்டு குறுகிய காலம் பிரிந்து வாழ்வார்கள். அமாவாசையன்று சிவனுக்கு சிவப்புநிற மலர்கள் சாற்றி வழிபடவும்.
ஓன்பதாமதிபதி இரண்டில்
9-ஆமதிபதி 2-ல் இருந்தால் வாக்குவண்மை மிகுந்தவர்கள். வாக்குபலிதம் உண்டு. ஆன்மிக ஞானம் உள்ளவர்கள். பேச்சில் தெய்வத்தன்மை வெளிப்படும். அறுசுவை உணவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஜாதகரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள். தனவிருத்தி உண்டு. ஆசிரியர், ஜோதிடம், சட்டம், புரோகிதம், கூட்டுத் தொழில், உணவுத்தொழில், அயல்நாட்டுத் தொடர்பு போன்ற தொழில்களில் நல்ல வருமானமுண்டு. தந்தைவழிச் சொத்துகளை அனுபவிக்ககூடியவராக இருப்பார்கள். தந்தை, தந்தைவழி உறவினர்கள்மூலம் சொத்து, ஆதாயம், குலத்தொழில் வருமானம் உண்டு. வீட்டில் அழகு, ஆடம்பரப் பொருட்கள் இருக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தந்தை குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க மாட்டார். தந்தையால் எவ்வித பலனையையும் எதிர்பார்க்க முடியாது. தந்தைவழிச் சொத்து இருக்காது அல்லது அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும். சம்பாதிக்கின்ற பணம் தவறான வழிகளில் செலவாகிவிடும். வாக்கில் நிதானம் இருக்காது. பொய், பித்தலாட்டம்மூலம் சம்பாதிப்பார்கள். கண் பாதிப்பிருக்கும். உணவுப் பற்றாக்குறை உண்டு. குடும்பத்தில் கலப்புத் திருமணம், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு. அமாவாசையன்று ஆதரவற்றவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.
ஒன்பதாமதிபதி மூன்றில்
தைரியம், வீரம் மிகுந்தவர்கள். எந்த செயலிலும் திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பார்கள். அடிக்கடி பயணம், இடமாற்றம் ஏற்படும். கமிஷன், தரகு, தொலைதொடர்பு, டிராவல்ஸ், ஏஜென்ஸி நல்ல பலன் தரும். மனவுறுதி, நல்லொழுக்கம், ஆன்மபலம், மதப்பற்று உள்ளவராக இருப்பார்கள். சமயச் சடங்குகள், சம்பிரதாயங்களில் நம்பிக்கையுண்டு. தன் இன உறவுகளின்மீது மட்டும் அன்பும் பிரியமும் உள்ளவராக இருப்பார்கள். புகழ்ச்சியை விரும்பக்கூடியவராக இருப்பார்கள். தந்தை தன் சுய முயற்சியில் முன்னேறியவராக இருப்பார். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தன் முயற்சியால் மேம்பட்ட நிலை செல்ல நினைத்தாலும் அவற்றில் முழுமைபெற இயலாது. மத நம்பிக்கை குறைவுபடும். ஆரம்பத்தில் ஆன்மிகவாதி; பின் நாத்திகவாதி. எந்த முயற்சியிலும் வம்பு வழக்குகளை எதிர்கொள்பவர். சுயநலம், கஞ்சத்தனம் உள்ளவராக இருப்பார்கள். ஞாபகசக்தி குறையும். பாகப் பிரிவினை சுமுகமாக இருக்காது. ஜாதகரின் முயற்சியின்றி பூர்வீக சொத்து கிடைக்காது. அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாடு சிறப்பு தரும்.
ஒன்பதாமதிபதி நான்கில்
ஜாதகர் தாயிற் சிறந்த கோவில் இல்லையென்று தாயை தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பார். தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டு. தாயும் தந்தையும் உறவில் திருமணம் செய்தவர்களாக இருப்பார்கள். தாய்- தந்தைவழி உறவுகள்மூலம் சொத்து உண்டு. பண்ணைத் தொழில், ரியல் எஸ்டேட் மூலம் நல்ல வருமானமுண்டு. நண்பர்கள் வட்டாரம் அதிகமிருக்கும். அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகசாலியாக இருப்பார்கள். வீடு, வாகன வசதிகளை நன்கு அனுபவிப் பார்கள். தன்னுடைய சுய சம்பாத்தியத்தைவிட தந்தைவழி சம்பாத்தியத்தையும், சுகபோகத் தையும் அனுபவித்து சுகவாசியாக இருப்பார் கள். ஒரு டிகிரி படித்தபிறகு உயர்கல்விக்கு வெளியூர், வெளிநாடு செல்வார்கள். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தாய்- தந்தை மற்றும் தாய்- தந்தைவழி உறவுகளின் ஆதரவு குறைவுபடும். பள்ளி, கல்லூரிப் படிப்பில் தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். சுய ஒழுக்கம் குறையும். குடும்ப கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவார்கள். அமாவாசையன்று கோபூஜை செய்யவும்.
ஒன்பதாமதிபதி ஐந்தில்
சிறந்த நுண்ணறிவு உடையவர்கள். தன் திறமையால்- அறிவால் அனைவரையும் கவரும் திறன் படைத்தவர்கள். தெய்வ நம்பிக்கை மிக்கவராக இருப்பார்கள். குலப்பெருமையைக் காப்பார்கள். உயர்கல்வி விருத்தி, சந்ததி விருத்தி, ஆண்வாரிசு உண்டு. குளம் வெட்டுதல், நீர்நிலைகள் அமைத்துக் கொடுத்தல், மரம் நடுதல் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல் என பொதுவான செயல்கள் அனைத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். மகான்கள், ஞானிகள் மற்றும் பெரியோர்களின்மீது மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவராக இருப்பார்கள். நேர்மையான தன்னுடைய குலப் பெருமையை காக்கக்கூடிய புத்திரர்களைப் பெறுவார்கள். புத்திரர்களால் பெயரும் புகழும் அடைவார்கள். ஜாதகரின் தந்தை புகழ், செல்வம், யோகம் போன்றவற்றை அடைந்தவராக இருப்பார். கலைத்துறையில் வெற்றியுண்டு. உறவில் திருமணம் நடக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் குல கௌரவம் கெடும். காதல், கலப்புத் திருமணம் நடக்கும். கற்றல் ஞானம் குறைவுபடும். குழந்தைகளால் நிம்மதி குறையும். கடவுள் நம்பிக்கை குறையும். மதம் மாறுவார்கள். தந்தை இருப்பார்; நல்லவராக இருப்பார். ஆனால் தந்தைமூலமாக பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது. பௌர்ணமி திதியில் குலதெய்வத்தை வழிபடவும். அமாவாசை திதியில் முன்னோர் களை வழிபடவும்.
ஒன்பதாமதிபதி ஆறில்
பூர்வீகம் சிறப்பல்ல. வெளியூர் அல்லது வெளி நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படும். தந்தை நோயாளி அல்லது கடனாளி. தந்தையின் கடனை சுமக்கும் மகனாக இருப்பார். பூர்வீகச் சொத்தை கடனுக்காக இழக்க நேரும். தந்தையின் சொத்துகளை ஜாதகர் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும். தந்தையைப் பிரிந்து வாழநேரும். ஜாதகர் பிறரிடம் பகையையும், விரோதத்தையும் சம் பாதிப்பார். தந்தை- மகன் உறவு சரியாக இருக் காது. தந்தையும் மகனும் எதிரிகளாக இருப் பார்கள். எளிமையாக முடிக்கவேண்டிய வேலை கள்கூட கடுமையானதாக மாறி மனக்கசப் பைத் தரும். கல்விக்கடன் உண்டு. அமாவாசை திதியில் இயன்ற உணவு தானம் தரவும்.
ஒன்பதாமதிபதி ஏழில்
ஆசிர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை. ஈருடல்; ஒருயிராக ஆதர்சன தம்பதி களாக வாழ்வார்கள். நல்ல பக்தி நிறைந்த வாழ்க்கைத்துணை அமையும். வாழ்க்கைத் துணைவழி ஆதாயம், அனுகூலம், செல்வத்தை அனுபவிக்கக்கூடியவராக இருப்பார்கள். தம்பதிகள் கௌரவமான, ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்கள். திருமணத்திற்குப்பின் முன்னேற்றமும், யோகமும் உண்டாகும். தந்தையுடன் உறவும் நட்பும் நண்பனைப்போல் இருக்கும். எல்லா வகையான யோகங்களையும் அனுபவிப்பர். மாமனாரின்மீது மதிப்பும் மரியாதையும் இருக்கும். சிலர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பார்கள். தம்பதி சமேதராக தீர்த்த யாத்திரைகள் செல்பவர்கள். கூட்டுத் தொழில், வெளிநாட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். சிறிய வயது முதல் முதுமை வயதுவரை நட்பு பாராட்டும் நண்பர்கள் உண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் குல கௌரவத்திற்குத் தகுந்த வாழ்க்கைத்துணை அமையாது. பேராட்டமான திருமண வாழ்க்கையுண்டு. நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாழ்க்கைத் துணையால் அனுகூலமற்ற பலனுண்டு. அமாவாசையன்று புனித நீர்நிலைகளில் நீராடவும்.
ஒன்பதாமதிபதி எட்டில்
வாழ்வில் முன்னேற்றமிருக்காது. தந்தையால் ஜாதகருக்கு யோகமிருக்காது. ஜாதகருக்கு தந்தையால் அவச்சொல், அவமான முண்டு. அதிர்ஷ்டம் குறைவுபடும்.
தந்தையைவிட்டுப் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும் .பூர்வீகத்தைவிட்டு வெளியே வசிக்கக்கூடியவராக இருப் பார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். நாத்திகம் பேசுவார். பூர்வீக சொத்தின்மீது நீதிமன்ற வழக்குண்டு. பாக்கியக் குறைவால் வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டே இருப்பார்கள். குடும்பத்தில் துர்மரணம் இருக்கும். ஜாதகரும் தந்தையும் பிறர் வெறுக்கும்படி நடந்துகொள்வார்கள். ஆயுள், ஆரோக்கியும் குறைவுபடும். பித்ரு தோஷம் மிகுதியாக இருக்கும்.
அமாவாசையன்று வயது முதிர்ந்த வர்களுக்கு வேண்டிய பொருட்களை தானம் வழங்கவும்.
ஒன்பதாமதிபதி ஒன்பதில்
பூர்வபுண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் வலிமை பெற்றவர்கள். குரு தீட்சை பெற்றவர்கள். தந்தை, தந்தைவழி முன்னோர்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவராக இருப்பர். கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தவர்கள்; செய்பவர்கள். கோவில் சார்ந்த திருப்பணி வேலைகளுக்கு தான, தர்மம் வழங்கி முன்னின்று செயல்படுவார்கள். கல்லூரிகள் நடத்துவார்கள். உயர்கல்வி வெளியூர் அல்லது வெளிநாட்டில் படிப்பார்கள். நல்ல ஒழுக்க மும், சமயோசித புத்தியும் உள்ளவராக இருப்பர். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உள்ளவராக இருப்பர். தந்தைவழி யோகத்தை முழுமையாக அனுபவிப் பார்கள். தான் வசிக்கும் ஊரில் மதிப்பும் மரியாதையும் மிக்கவராகவும் குலத்தொழில் புரிபவர்களாகவும் இருப்பார்கள். சிறிய உழைப்பில் பெரிய வருமானமுண்டு இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் முன்னோர் களின் ஒட்டுமொத்த கர்மாவையும் அனு பவிக்கப் பிறந்தவர்கள்.
பெயரும் புகழும் அசுபத் தன்மையாகப் பரவும். அமாவாசையன்று அந்தணர் களுக்கு தான, தர்மம் செய்யவும்.
ஒன்பதாமதிபதி பத்தில்
இது தர்மகர்மாதிபதி யோகமாகும். தயாள குணம் கொண்டவர்கள். தந்தைவழி குலத்தொழிலைத் தொடர்ந்து செய்பவர்களாக இருப்பார்கள். பூர்வீக சொத்து, தொழில்மூலம் வருமானமுண்டு. தொழிலில் நேர்மை, நாணயமிருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
அரசாங்கத்தால் பாராட்டும் புகழும் பெறக் கூடியவராக இருப்பர். அரசாங்கத்தில் உயர்பதவி உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபாடுள்ளவர்களாக இருப்பார்கள். எதிர்பார்ப்பின்றி சேவை செய்பவர்கள். செய்யும் தொழிலே தெய்வமென்று எண்ணக்கூடியவர்களாக இருப்பார்கள். மொத்தில் சமுதாயத்தில் பாக்கியவான்களாக வலம்வருவார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் பொதுச் சொத்துகளை, கோவில் சொத்து களை, வருமானத்தை அனுபவித்து தன் சந்ததிகளுக்கு பாவம் சேர்த்துவைப்பார்கள். இவர்களின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் சம்பந்தமிருக்கும். அமாவாசையன்று விரதமிருந்து சிவனடியார்களுக்கு தொண்டுசெய்யவும்.
ஒன்பதாமதிபதி பதினொன்றில்
பெரும் பாக்கியவான்கள். புதையல் யோகமுண்டு. ஆன்மிகம் மற்றும் சமயப்பற் றால் எதையும் வெற்றிகொள்பவர். ஆன்மிக, இன்ப சுற்றுலா நிறுவனம் நடத்தி அதன் வழியில் ஆதாயம் பெறுபவர்கள். ஊருக்குள் பெயர் சொன்னால் தெரியும்வகையில் குலத்தொழில்மூலம் புகழ்பெறுவார்கள். அயல்நாட்டு வாணிகம்மூலம் நல்ல லாபமுண்டு. நேர்மையாக நடந்து கொள்வார்கள். தந்தை வழியாக முன்னேற் றம் உண்டாகும். ஜாதகரின் தந்தை செல்வச் செழிப்பாக இருப்பார். தந்தையின் சொத்து களை காப்பவராக இருப்பார். தந்தையின் சொத்துகளை ஜாதகர் மேலும் விருத்திசெய் வார். இவர்கள் பரம்பரையில் இரண்டு திருமணம் செய்தவர்கள் உண்டு. குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்திருக்கும். ஜாதகர் உயர் ஆராய்ச்சிக் கல்வி பயில்வார். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுபப் பலன்கள் தொடரும். அமாவாசையன்று 21 பேருக்கு உணவு தானம் வழங்கவும்.
ஒன்பதாமதிபதி பன்னிரன்டில்
ஜாதகருக்கு தான, தர்ம குணங்கள் இருக்காது. ஜாதகர் தந்தை மற்றும் தந்தைவழி சொத்துகளை விரயம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருப்பார். கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும் உள்ளவராக இருப்பார். பூர்வீகத்தில் வசித்தால் மேன்மை இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும். ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. நிம்மதியான உறக்கம் இருக்காது. பெற்றோர் களுக்கு அவப்பெயரைத் தேடிவைப்பவர். குல கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவர். ஜாதகரின் பெற்றோர்கள் தங்கள் இறுதிக் காலம்வரை பெற்ற பாவத்திற்காக படியளப் பார்கள். பெற்றவர்களுக்கு அவரால் எந்தப் பயனும் இருக்காது. அமாவாசையன்று சித்தர்கள் ஜீவசமாதியில் வழிபடவும். ஒன்பதாம் பாவகமென்பது, ஏற்கெனவே சேர்த்த கர்மாவின் பலன்களை பாக்கியமாக அனுபவிக்கிறோம் என்பதால், ஒன்பதாமிடம் சுபத்தன்மை பெற்றிருக்கவேண்டும். ஒன்பதாமிடம் அசுபத்தன்மை, பகை, நீசம், அஸ்தங்கம், வக்ரம் பெற்றவர்கள் முன்னோர் களை முறையாக வழிபடவேண்டும்.
செல்: 98652 20406