கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்!(27) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்)

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-remove-karma27-chithardasan-sunderji-jeevanadi

ரு பெண் தனது முற்பிறவிகளில், தான் வாழவந்த வீட்டில் தனது மாமனர்- மாமியாரை நன்கு கவனித்துக் காப்பாற்றாமல், அவர்களை கஷ்டப்படச் செய்ததால் உண்டான பித்ரு சாபத்துடன் பிறந்துள்ள பெண்களுக்கு, இப்பிறவி வாழ்வில், தான் பிறந்த வீட்டில் தன்னைப் பெற்ற தாய்- தந்தையாலும், தந்தை வழி உறவுகளாலும் பெரிய நன்மைகளை அடையமுடியாது. இவளின் தந்தை இளம் வயதிலேயே இறந்து போகக்கூடும் அல்லது தாய்- தந்தையைப் பிரிந்து வாழநேரிடும்.

பித்ரு சாபத்துடன் பிறந்துள்ள பெண்களுக்கு, அவள் வாழவந்த கணவன் வீட்டில் மாமனார்- மாமியரால் பெரிய நன்மைகளை அடையமுடியாது. கணவன் குடும்பவழி உறவு களால் ஒதுக்கப்படுவாள். மாமனார், மாமியார் பாசம் கிடைக்காது. கூட்டுக்குடும்பாக வசிக்கமுடியாது. தன் கணவன், குழந்தையுடன், தனிக்குடித்தனம் செய்து வாழ வேண்டிய நிலை ஏதாவது ஒரு காரணத்தால் உண்டாகி விடும். மாமனாரோ அல்லது மாமியாரோ இல்லாத கணவனைத் திருமணம் புரியநேரிடும்.

dd

பித்ரு

ரு பெண் தனது முற்பிறவிகளில், தான் வாழவந்த வீட்டில் தனது மாமனர்- மாமியாரை நன்கு கவனித்துக் காப்பாற்றாமல், அவர்களை கஷ்டப்படச் செய்ததால் உண்டான பித்ரு சாபத்துடன் பிறந்துள்ள பெண்களுக்கு, இப்பிறவி வாழ்வில், தான் பிறந்த வீட்டில் தன்னைப் பெற்ற தாய்- தந்தையாலும், தந்தை வழி உறவுகளாலும் பெரிய நன்மைகளை அடையமுடியாது. இவளின் தந்தை இளம் வயதிலேயே இறந்து போகக்கூடும் அல்லது தாய்- தந்தையைப் பிரிந்து வாழநேரிடும்.

பித்ரு சாபத்துடன் பிறந்துள்ள பெண்களுக்கு, அவள் வாழவந்த கணவன் வீட்டில் மாமனார்- மாமியரால் பெரிய நன்மைகளை அடையமுடியாது. கணவன் குடும்பவழி உறவு களால் ஒதுக்கப்படுவாள். மாமனார், மாமியார் பாசம் கிடைக்காது. கூட்டுக்குடும்பாக வசிக்கமுடியாது. தன் கணவன், குழந்தையுடன், தனிக்குடித்தனம் செய்து வாழ வேண்டிய நிலை ஏதாவது ஒரு காரணத்தால் உண்டாகி விடும். மாமனாரோ அல்லது மாமியாரோ இல்லாத கணவனைத் திருமணம் புரியநேரிடும்.

dd

பித்ரு சோகத்துடன் பிறந்துள்ள பெண்கள் வாழ்வில் இவள் கணவனுக்கு முறையாகத் தரவேண்டிய பாகச் சொத்தினை, மாமனார்- மாமியார் கொடுக்க மாட்டார்கள். அல்லது காலம் கடந்து ஏதாவது கொடுப்பார்கள். பூர்வீக சொத்தில் வில்லங்கம், வியாஜ்ஜியம், பிரச்சினைகள் இருக்கும். பூர்வீக சொத்துகளில் பெரிதாக நன்மையும், விருத்தியும் இராது.

ஒருவருக்கு அவரின் வம்ச முன்னோர்கள்தான் வம்ச வாரிசுகளாக, குழந்தையாக வந்து பிறப்பார்கள். முற்பிறவி களில் இவர்களே தங்கள் மாமியார்- மாமனாருக்கு செய்த பாவத்தால், தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட பித்ரு சோகத்தால், இப்பிறவியில் வம்ச முன்னோர்கள் இவள் கர்ப்பத்தில் கருவாகி, உருவாகி, வம்ச வாரிசாகப் பிறக்க விரும்ப மாட்டார்கள். புத்திர சோகத்தைத் தந்து அனுபவிக்கச் செய்துவிடுவார்கள். இந்த தாக்கத்தால், சிலருக்கு குழந்தை பிறக்காமல் போகலாம். சிலருக்கு கர்ப்பமுண்டாகிக் கலைந்து போகலாம் அல்லது குழந்தை பிறந்து வளர்ந்து இளம் வயதிலேயே இறந்து போகலாம். சிலருக்கு ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கலாம்.

இந்தப் பெண்ணுக்குப் பிறந்தவீட்டு ஆதரவும் பெரிதாகக் கிடைக்காது; கணவன் வீட்டு ஆதரவும் கிடைக்காது; பெற்ற பிள்ளைகளாலும் பெரிதாக சுகத்தை அனுபவிக்கமுடியாது. இவள் கணவனும், இவளும் மட்டுமே உழைத்து சம்பாதித்து, சந்நியாசி போன்று தனிமையில் வாழ நேரிட்டுவிடும்.

பித்ரு துவேஷத்துடன் பிறந்த பெண்கள் கணவன் வீட்டில் அடிமைபோல், ஒரு வேலைக் காரியைப்போல் வாழநேரிடும். கணவனும், கணவன் வீட்டாரும் மதிக்கமாட்டார்கள். சுதந்திரமாக, இயல்பாக வாழமுடியாது. கணவன் வீட்டார் பாசம் கிடைக்காது. இவளை அலட்சியப்படுத்துவார்கள். எதிரியைப்போல் பாவிப்பார்கள். கணவன், மனைவி பாசத்திற்கு கணவன் வீட்டாரே தடையாக இருப்பார்கள். வாழவந்த வீடு சிறை வாழ்க்கைபோல் அமைந்துவிடும். இவள் பெற்ற பிள்ளைகளும் மதிக்கமாட்டார்கள். பிள்ளைகளாலும் நன்மை கிடைக்காது. பித்ரு துவேஷத்துடன் பிறந்த பெண்கள் தங்கள் இறுதிக் காலத்தில் பிள்ளைகளின் பராமரிப்பு, கவனிப்பில்லாமல் கைவிடப்படுவார்கள். அல்லது அனாதைபோல் முதியோர் இல்லத்தில், வாழ்ந்து மடிய நேரிட்டுவிடும். இறுதி காலத்தில் சிறுசிறு உதவிகள் கிடைத்தாலும் உறவுகளின் பாசம் கிடைக்காமல் போய்விடும்.

பித்ரு பாவ- சாப- தோஷ- துவேஷ பாதிப்புகள், உள்ளதை பெண்களின் ஜாதகத்தில் சூரியன், சனி, ராகு- கேது கிரகங்களின் சேர்க்கை நிலையை ஊழ்வினை ஆய்வின் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

இந்த சாபங்களை ஹோமம், யாகம், புண்ணியஸ்தல வழிபாடு, புண்ணிய தீர்த்த யாத்திரை, தர்ப்பணம், அமாவாசை திதி, மடாதிபதி, பீடாதிபதி, குரு, மகான் ஆசீர்வாதம், விரதம், பூஜை, தானம், தர்மம் போன்ற பணம் செலவு செய்து செய்யும் ஆஸ்திக பரிகாரங்கள்மூலம் தீர்த்துக்கொள்ளமுடியாது. தீரவும் தீராது. ஆஸ்திதான் அழியும்.

ஒரு பெண், தனது முற்பிறவிகளில், தனது மாமனார்- மாமியாருக்கு பித்ரு சாபம், பித்ரு தோஷம், பித்ரு சோகம், பித்ரு துவேஷம் என எந்த பாவச் செயலைச் செய்து பாதிப்பை அடையச் செய்தோம் என்பதை அறிந்து, அந்த பாவம் தீர, சித்தர்கள் கூறிய ஆன்மிக பரிகாரங்களைச் செய்தால், ஓரளவு பாவ- சாப- தோஷத்தைத் தடுத்து நன்மைகளை அடையமுடியும்.

மனிதன் வாழ்க்கையில் பஞ்சமா பாவங்கள் ஒவ்வொன்றும், நான்கு விதமான நிலையில் பிரிந்து நின்று பாதிப்பைத் தருமென்பதால், எந்த பிரிவு சாபம் தாக்கியது என்று அறிந்து பரிகாரம் சொல்லவேண்டும். அதனால் தான் பொதுவான ஒரு பரிகாரத்தை நான் எழுதுவதில்லை. நோய்க்குத் தகுந்த சரியான மருந்து சாப்பிட்டால்தான் நோய்தீரும், அதுபோல் சாபத்தின் நிலையறிந்து சரியான பரிகாரத்தை செய்தால்தான் சாப- தோஷத்தைத் தடுத்துக்கொள்ளமுடியும்.

பெண்களுக்குப் போன்றே, ஆண்களுக்கும், மனைவியின் தாய்- தந்தையான அவனின் மாமனார்- மாமியார் விட்ட சாபமும் பித்ரு சாபத்தை உண்டாக்கி சிரமம் தரும். அதைப் பற்றியும் சுருக்கமாக அறிவோம்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala310323
இதையும் படியுங்கள்
Subscribe