இந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு, பாவ- சாப- தோஷம் பற்றிப் பலன்களை எழுதும் நீங்கள், அவை தீர்வதற்குப் பரிகாரங்களை எழுதுவதில்லையே- ஏன்?
முற்பிறவி பாவ- சாப- தோஷங்களைத் தீர்க்க சரியான வழிமுறைகள் என்ன?
பித்ரு தோஷம், புத்திர சாபம், சகோதர சாபம், தாய் சாபம், களத்திர தோஷம் போன்ற இன்னும் பல தோஷங்கள் ஆண்களுக்கு மட்டும்தான் பாதிப்பைத் தருமா என இதுபோன்று இன்னும் பல கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். மிகமிக சுருக்கமாகக் கூறுகிறேன்.
உங்கள் சுய அறிவால் சிந்தித்து தெளிவாகிக் கொள்ளுங்கள். ஒருவர் செய்யும் செயல்களையும், காலங்காலமாக கடைப் பிடித்து வரும் பழக்க வழக்கங்கங்களையும், சாஸ்திர செயல்களையும் தவறெனக் கூறுபவர்கள் அவ்வாறு கூறுவதற்குரிய உண்மையான காரணத்தைக் கூறவேண்டும் என்பதை உணர்ந்து, உங்கள் கேள்விகளுக்கான பதிலைக் கூறுகிறேன்.
ஒரு மனிதன் தன் முற்பிறவி பாவ- சாப- தோஷங்களை, ஆஸ்திக முறைப் பரிகாரங்கள், ஆன்மிகப் பரிகார நிவர்த்திகள், நாஸ்திக வாழ்வியல் நடைமுறை செயல்கள் என மூன்றுவழிகளில் கடைப்பிடித்து வாழ்ந்துவருகிறான்.
முதலில் ஆஸ்திகப் பரிகார முறை பற்றி அறிவோம்.
"ஆஸ்திகம்' என்ற சொல்லைப் பிரித்தால் ஆஸ்தி+ அகம் என்ற பொருள் வரும். ஆஸ்தி என்பது பணம், பொருள், நிலம் சொத்துகளைக் குறிப்பது! தன்னிடமுள்ள ஆஸ்திகளால், பணத்தால் பரிகாரங்களைச் செய்து அனைத்து பாவங்களை யும் தீர்த்துக்கொள்ளலாம் என சொல்வது ஆஸ்திகப் பரிகாரமுறை. இதில் பணம், சொத்து கள் மட்டுமே முக்கியமானவை.
ஆஸ்திகப் பரிகாரங்கள் வேதமுறையில் கூறப் பட்டுள்ள வழியாகும். பொருட்களை ஹோமம், யாகங்களில் நெருப்பிலிட்டு அழிப்பது. கோவில் வழிபாடு, புண்ணியத்தலம், தீர்த்தயாத்திரை போவது, திருக்கல்யாணம், திருவிளக்குப் பூஜை, உற்சவம், தேர்த்திருவிழா, பலவிதமான பண்டிகைகள், வேத மந்திரம் ஜெபித்தல், உயிர்களை பலியிடுதல், பணம், நிலம், பசு, தங்கம், வெள்ளி, ஆடைகள், அன்னம் போன்றவற்றை பிறருக்கு தானம் செய்தல், விரதம், வேண்டுதல், மடாதிபதிகள், பீடாதிபதிகள் போன்றவர்களைத் தேடி சென்று, தட்சணை கொடுத்து ஆசிபெறுதல் போன்றவற்றை தங்களிடம் உள்ள பணம், பொருட்களைச் செலவிட்டுச் செய்வது ஆஸ்திகப் பரிகார முறைகளாகும்.
ஆஸ்திகப் பரிகாரங்கள், கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளை அடிப்படையாகக் கொண்டவை. கடவுள் பற்றிக் கதைகள் சொல்வோர், பக்திப் பாடல்களைப் பாடுபவர், மடாதிபதிகள், பீடாதிபதி கள், வேதமந்திரம் கூறுவோர், ஆச்சாரி யர்கள் தங்களை ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொள்வார்கள். இவர்களும் பணம்பெற்றுக்கொண்டு பரிகாரம் கூறுவார்கள்.
இன்றையநாளில் பல ஜோதிடர் கள், பூசாரிகள் இந்த ஆஸ்திகப் பரிகாரங் களை செய்யச் சொல்வார்கள். கோவிலில் கூடும் மக்கள் கூட்டம். கடவுள் பக்தியால் கூடுவதில்லை. கடவுள் காப்பாற்றுவார்; பிரச்சினை, தடைகளை தீர்ப்பார் என்று பிறர் கூறுவதை நம்பி, பிரார்த்தனைகளை செய்துகொள்ளவே செல்கிறார் கள் என்பதே நடைமுறை உண்மை. பல இடங்களுக்குச் சென்று, பணம் செலவுசெய்து செய்யும் ஆஸ்திகப் பரிகாரங்களால் பாவ- சாபம் தீர்ந்ததா? தடைகள் விலகிப் பலன் கிடைத்ததா என்பது அவரவர்க்கே தெரியும்.
இனி ஆன்மிகப் பரிகார நிவர்த்தி பற்றி அறிவோம்.
"ஆன்மிகம்' என்ற சொல்லைப் பிரித்தால், ஆன்மா+அகம் என்ற பொருள் தரும். ஒரு மனிதனின் நன்மை- தீமை செயல்கள் அனைத்தும், அவனின் ஆன்மா, மனம், எண்ணங்களால் உருவாகி செயலாகிறது. பாவ- சாப- தோஷப்பதிவுகள் ஒருவரின் மனம், வாக்கு, உடலால் செயல் படுத்துப்படுகிறது. முற்பிறவிகளில் தனது குடும்ப உறவுகளான தந்தை- தாய், சகோதரன், மனைவி, குழந்தைகள் என்ற இந்த ஐந்து உறவுகளுக்குச் செய்யும் கொடுமைகள், துரோகங்களே பஞ்சமா பாவங்கள் என்று கூறப்படுகின்றன.
இந்த பாவங்களே பித்ரு தோஷம், புத்திர சாபம், தாய் சாபம், சகோதர சாபம், களத்திர தோஷம் என்ற நிலையில் அடுத்தடுத்த பிறவி வாழ்வில் சிரமமடையச் செய்கிறது. முற்பிறவிகளில் எந்த உறவுகளுக்கு என்னவிதமான பாவத்தைச் செய்தோமோ, அதனையறிந்து, இப்பிறவி குடும்ப வாழ்வில் அந்த உறவுகளுக்கு, மனம், வாக்கு, உடலால் நன்மைகளைச் செய்து, அந்த உறவுகளின் ஆன்மாவை அமைதியடையச் செய்வது ஆன்மிகப் பரிகாரம் ஆகும். யாருக்குப் பாவம் செய்து யாரிடம் சாபம் பெற்றோமோ, அவர்களுக்கு சரியான பரிகாரம் செய்து சாபநிவர்த்தி பெறவேண்டும். சாபம் கொடுத்தவர்தான் சாபநிவர்த்தி தரமுடியும் என்பதே உண்மை.
ஆன்மிகப் பரிகாரங்கள் இல்லறவாசிகள் கடைப்பிடித்து பாவ- சாபம் நிவர்த்திபெறும் வழிமுறையாகும். இந்த ஆன்மிகப் பரிகாரத் திற்கு பணம் செலவுசெய்யத் தேவையில்லை. ஆன்மிகப் பரிகாரம்மூலம் பித்ரு சாபம், புத்திர தோஷம், தாய் சாபம், சகோதர சாபம், களத்திர தோஷம் என்ற பஞ்சமா பாவங்களையும் முழுமையாகத் தீர்த்து நன்மை தருமென்பது நடைமுறை உண்மை.
இனி நாஸ்திகப் பரிகார முறைகளைப் பற்றி அறிவோம் "நாஸ்திகம்' என்ற சொல்லைப் பிரித்தால், நாஸ்தி+அகம் என்ற பொருள் தரும். நாஸ்தி என்றால் அழிப்பது என்றும், அகம் என்பது மனம், எண்ணங்களையும் குறிக்கும்.
ஒருவன் தன் மனதிலுள்ள அனைத்து ஆசைகளையும், கடவுள், சாதி, மதம், இனம், மதக்கொள்கைகள், மாயாவாதக் கொள்கைகள், உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற பாகுபாடு நீக்கி, பிறரை ஏமாற்றுதல், பொருள் அபகரித்தல், திருடுதல், பாசம், பற்று, கோபம், பொறாமை போன்ற குணங்களை நீக்கி, சுயநலமின்றி அனைத்து உயிரினங் களையும், ஆன்மாக்களையும் சமமாக பாவித்து, நேசித்து, அனைத்தும் சமம், அனைவரும் சமம் என்ற கொள்கையைத் தவறா மல் கடைப்பிடித்து வாழ்வது நாஸ்திகப் பரிகாரமாகும்.
இந்த பூமியில் வாழும் உயிரினங்களின் உடல், உயிர் ஆன்மா ஆகிய மூன்றையும் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும், பாவ- சாபங்களைத் தடுத்து நிவர்த்தி செய்து நல்வாழ்வை அமைத்துக் கொள்ளும் வழிகளையும், இந்த பூமியில் இல்லாத சக்திகளைக் கூறி மக்களை ஏமாற்றி பொருள் பறித்து வாழும் மனிதர் களையும், அவர்கள் கூறும் மூடநம்பிக்கை கருத்துகளை மக்கள் நம்பி வாழாமல், தன்னையறிந்து, உழைத்து வாழச் சொல்பவர்கள் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கூறும் வாழ்வியல் முறைக் கருத்துகள் நாஸ்திகப் பரிகாரங்கள் ஆகும்.
அகத்தியர் முதலான 18 சித்தர்கள், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், பட்டினத்தார் போன்ற இன்னும் ஏராளமான ஞானிகள், இந்த நாஸ்திகக் கருத்து, கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து, மக்களுக்கு வழிகாட்டினர் கள் மனிதனின் பிறப்பு நிலை, காரணம், ஆன்மாவைப் பற்றிய தெளிவு, மூடநம்பிக்கை மறுப்பு, தன்னையறிந்து வாழ்தல், மனிதனின் சக்திநிலை என அனைத்தையும் கூறியவர்கள். நாஸ்திக ஞானிகளும் மகான்களும் தமிழ் நாட்டில் மட்டுமே அதிகமாக பிறந்து வாழ்ந்துள்ளனர். இவர்கள் வடபுலத்து வேதக்கருத்துகளை மறுத்து, சித்தர்களின் சித்தாந்த கருத்துகளை மக்களுக்கு போதித்து. வாழச் செய்தனர்.
முற்பிறவி பாவ சாபங்களைத் தீர்த்து நல்வாழ்வை அடையச் செய்வது, பணம், பொருள், சொத்துகளை அழித்து செய்யும் ஆஸ்திகப் பரிகாரங்களா?
முற்பிறவிகளில் தனது குடும்ப உறவு களுக்குச் செய்த பஞ்சமா பாவங்களை, இப்பிறவி வாழ்வில் அந்த உறவுகளுக்கு நன்மைகளைச் செய்து, பாவ- சாப நிவர்த்திபெறும் ஆன்மிகப் பரிகாரங்களா? தன்னையறிந்து, சுய அறிவால் வாழ்ந்து, வாழ்வில் உயர்வுபெற வழிகாட்டும் நாஸ்தி கப் பரிகாரமுறையா? எதனைக் கடைப் பிடித்து வாழவேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
(தொடரும்)
செல்: 99441 13267