கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-get-rid-karma-chithardasan-sunderji-jeevanadi

ந்த பூமி, மற்ற உலகங்கள், கிரகங்கள், பஞ்சபூதங்கள், நட்சத்திரங்கள், உயிரினங் கள், தாவரங்கள் என அனைத் தையும் மகாவிஷ்ணுதான் படைத்தாரென்றும், இந்த பூமியில் மக்களுக்கு சிரமம் ஏற்பட்ட போதெல்லாம், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணர் என அவதாரங்கள் எடுத்து பூமியில் பிறந்து, அசுரர்களை அழித்தார் என்றும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பகவான் எடுத்த எட்டு அவதாரங்களில், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணர் ஆகிய நான்கு அவதாரங்களில் மனிதனா கப் பிறந்தார். இதில் வாமனன், பரசுராமன் ஆகிய இரண்டு அவதாரங்களில் மனைவி, குழந்தை, குடும்பம் என எதுவுமில்லாமல், ஒரு குறையுள்ள தனிமனிதனாக வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

இராமர், கிருஷ்ணர் ஆகிய இரண்டு அவதாரங்கள், மகாவிஷ்ணு பெற்றவர்களுக் குப் பிள்ளையாக, ஒரு பெண்ணிற்குக் கணவனாக, பிள்ளைகளுக்குத் தந்தையாக, வம்ச வாரிசுகளான பேரன்களுக்குப் பாட்டனாராக, இன்னும் சகோதரன், மாமன், நண்பன் என அனைத்தும் இணைந்த ஒரு குடும்பஸ்தனாக அனுபவித்து, ஒரு முழுமையான மனிதனாக வாழ்ந்த அவ தாரங்கள்.

இந்த இரண்டு அவதாரங்களிலும் ஒரு குடும்பத் தலைவனாக இருந்து, உறவு, நட்பு, பகை, எதிரி, நோய், உயர்வு, தாழ்வு, வறுமை, கஷ்டம், தடை, மகிழ்ச்சி, கோபம், துக்கம், இரக்கம், பிறரால் உதவிபெறுதல், பிறருக்கு உதவி செய்தல், உழைத்தல், முற்பிறவி பாவ- சாப- கர்மவினை, விதியின் தாக்கம் போன்ற அனைத்தையும் சராசரி மனிதனைப்போல் அனுபவித்து வாழ்ந்து இறப்பினை அடைந்த அவதாரங்கள்.

dd

இராமரும்,

ந்த பூமி, மற்ற உலகங்கள், கிரகங்கள், பஞ்சபூதங்கள், நட்சத்திரங்கள், உயிரினங் கள், தாவரங்கள் என அனைத் தையும் மகாவிஷ்ணுதான் படைத்தாரென்றும், இந்த பூமியில் மக்களுக்கு சிரமம் ஏற்பட்ட போதெல்லாம், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணர் என அவதாரங்கள் எடுத்து பூமியில் பிறந்து, அசுரர்களை அழித்தார் என்றும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பகவான் எடுத்த எட்டு அவதாரங்களில், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணர் ஆகிய நான்கு அவதாரங்களில் மனிதனா கப் பிறந்தார். இதில் வாமனன், பரசுராமன் ஆகிய இரண்டு அவதாரங்களில் மனைவி, குழந்தை, குடும்பம் என எதுவுமில்லாமல், ஒரு குறையுள்ள தனிமனிதனாக வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

இராமர், கிருஷ்ணர் ஆகிய இரண்டு அவதாரங்கள், மகாவிஷ்ணு பெற்றவர்களுக் குப் பிள்ளையாக, ஒரு பெண்ணிற்குக் கணவனாக, பிள்ளைகளுக்குத் தந்தையாக, வம்ச வாரிசுகளான பேரன்களுக்குப் பாட்டனாராக, இன்னும் சகோதரன், மாமன், நண்பன் என அனைத்தும் இணைந்த ஒரு குடும்பஸ்தனாக அனுபவித்து, ஒரு முழுமையான மனிதனாக வாழ்ந்த அவ தாரங்கள்.

இந்த இரண்டு அவதாரங்களிலும் ஒரு குடும்பத் தலைவனாக இருந்து, உறவு, நட்பு, பகை, எதிரி, நோய், உயர்வு, தாழ்வு, வறுமை, கஷ்டம், தடை, மகிழ்ச்சி, கோபம், துக்கம், இரக்கம், பிறரால் உதவிபெறுதல், பிறருக்கு உதவி செய்தல், உழைத்தல், முற்பிறவி பாவ- சாப- கர்மவினை, விதியின் தாக்கம் போன்ற அனைத்தையும் சராசரி மனிதனைப்போல் அனுபவித்து வாழ்ந்து இறப்பினை அடைந்த அவதாரங்கள்.

dd

இராமரும், கிருஷ்ணரும் தங்கள் வாழ்வில் முற்பிறவி கர்மவினைகளால் உண்டான சிரமங்களைத் தீர்த்துக் கொள்ள கடவுள் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளாமல், சராசரி மனிதனைப்போல் தங்கள் முயற்சியால் கஷ்டங்களைத் தடுத்துக்கொண்டு, மனித வாழ்வை வாழ்ந்ததால்தான் இவர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் இரு பெரும் இதிகாசக் காவியங்களாக எழுதிவைத்துள்ளார்கள்.

திரேதாயுகம், துவாபரயுகங்கள் முடிந்து, கலியுகத்தில் வாழும் மக்களின் குணங்கள், செயல்கள், எப்படியிருக்கும்- எவ்வாறு செயல்பட்டு வாழ்வார்கள்- முற்பிறவி பாவ- சாபங்களால் உண்டாகும் நன்மை- தீமைகளை எப்படி அனுபவிப்பார்கள்- எந்தவிதமான செயல்களைச் செய்வதால் ஒருவனுக்கு பாவ- சாபப் பதிவுகள் உண்டாகும் கர்மவினைகளை எந்தவிதமான பரிகார நிவர்த்திகளைச் செய்து தீர்க்க வேண்டும் என்பது போன்ற இன்னும் பல வழிமுறைகளை, கலிகாலத்தில் மக்கள் அறிந்துகொண்டு வாழ இராமரும் கிருஷ்ணரும் தங்கள் செயல்கள்மூலம் நமக்கு வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

இராமரின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இராமாயணத்தில், ஒரு மனிதன் தன் முற்பிறவி பாவ- சாப வினைகளால், அடுத்த பிறவி வாழ்க்கையில் எந்தெந்தவிதமான கஷ்டங்களை அடைவான்- தன் வாழ்க்கை யில் என்னவிதமான செயல்களைச் செய்து பாவ- சாபங்களை அடைவான் என்று இராமனின் வாழ்க்கை நிகழ்வுகள்மூலம் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் இராமாயணத்தை பாவ- சாப காவியம் என்று கூறுவார்கள்.

கிருஷ்ணரின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் கதைகளில், ஒரு மனிதன் தனது முற்பிறவி செயல்களால், அடுத்த பிறவியில் உண்டாகும் கஷ்டங்களை தன் நடைமுறை செயல்கள்மூலமே எப்படி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்ற பரிகார நிவர்த்தி முறைகளை கிருஷ்ணர் எப்படி வாழ்ந்து காட்டினார் என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் கிருஷ்ணரின் வரலாற்றை பாவ- சாப- பரிகார நிவர்த்தி காவியம் என்று கூறுவார்கள்.

இராமரும், கிருஷ்ணரும் வெவ்வேறு யுகங்களில் பிறந்த தனித்தனி மனிதர்களல்ல. ஒரு ஆன்மாவின் முற்பிறவி, அடுத்த பிறவி என ஒரே நிலைதான். இராமரின் மறுபிறவிதான் கிருஷ்ணர். இவர்கள் இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து புத்தியால் புரிந்துகொண்டால், இதற்குள் உள்ள தொடர்புகளைத் தெரிந்துகொள்ளமுடியும்.

இராமர், கிருஷ்ணர் வரலாற்றை வெறும் கதையாக நினைத்துப் படிப்பவர், கருத்துகளைப் புரிந்துகொள்ளாதவர் காசு, பணம் செலவுசெய்து, அவர் களின் அருள்வேண்டி ஊர், ஊராக அலைந்து கொண்டிருப்பார். அதிலுள்ள கருத்துகளைப் புரிந்துகொண்டவர், தன்னுள் இருக்கும் இராமனையும், கிருஷ்ணரையும் அறிந்து கொண்டு, செயல்பட்டு தன் கர்மவினைகளைத் தீர்த்து நல்ல வாழ்வை அடைவார்.

கிருஷ்ணரின் பிறப்பு வசிட்ட முனிவரின் பேர னான, பராசரமகரிஷி, மைத்ரேய முனிவருக்கு கிருஷ்ணரின் பிறப்புமுதல் இறப்புவரை தனது முந்தைய அவதாரங்களில் செய்த பாவங்களை எப்படி அனுபவித்துத் தீர்த்தார் என்று கூறிய கண்ணன் வரலாற்றை சுருக்கமாக அறிவோம்.

பூமியில் அசுரர்களின் அழிவுச்செயல்கள் அதிகமானபோது பிரம்மனும், இந்திரன் முதலான தேவர்களும் வைகுந்தம் சென்று மகாவிஷ்ணுவிடம், "அனந்த சயனா, ஆபத்பாந்தவா! அசுரர்கள் அனைவரும் மிக பலம் பொருந்தியவர்களாக பூமியில் பிறந்து, மூவுலகில் வாழும் தேவர்களுக்கும், ரிஷி முனிவர்களுக்கும், தாங்கவொண்ணாத துன்பம் தந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள்தான் அவர்களை அழித்து, அசுரர் களின் தொல்லைகளிலிருந்து அனைவரையும் காப்பாற்றவேண்டும்' என்று பிரார்த்தனைசெய்து வணங்கி நின்றார்கள்.

அதேசமயத்தில் பூமாதேவியும் நாராயணணை வணங்கி, "பெருமாளே, பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுக்கதிமாகி பூமி பாரம் கூடிவிட்டது. அதன் சுமையைத் தாங்கமுடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். பூமியின் பாரத்தைக் குறைத்து என் கஷ்டத்தைத் தீர்க்கவேண்டும்'' என்று விண்ணப்பம் செய்தாள்.

பிரம்மாதி தேவர்களும், பூமாதேவியும் கூறியதைக்கேட்ட பகவான், அவர் களிடம், "இப்போது நான் எட்டாவது அவதாரம் எடுத்து பூமியில் பிறந்து, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன். எனது முந்தைய அவதாரப் பிறவிகளில் நான் மற்றவர்களுக்கு எனது மனதாலும், வாக்காலும், உடம்பாலும் செய்த பாவ- சாப செயல்களுக்கும், நான் இதுவரை அவதாரமெடுத்துப் பிறந்த வம்சகளின், முன்னோர்களின் கர்மவினைகளையும் தீர்த்து, இந்த அவதாரத்தில் அசுரவம்சத்தை முற்றாக அழித்து, பூமியின் பாரத்தைக் குறைத்து, எனது அவதாரக் கணக்குத் தொடர்ச்சியை முடித்து, இந்த பூலோகத்தில் இனி பிறவியில்லாத நிலையில் பூமித் தொடர்பைத் துண்டித்து, மோட்சமடைய தீர்மானித்துள்ளேன்.

இராமாவதாரத்திலும், அதற்கு முந்தைய என்னுடைய பிறப்புகளிலும் என்னுடன் அவதாரமெடுத்து பூமியில் பிறந்த அனைத்து தெய்வங்களும் தேவர்களும், கிரகங்களும், பஞ்சபூதங்களும், இப்போது என்னுடன் பூமியில் அவதாரம் செய்து, உங்களின் முன் அவதாரங்களில், நீங்கள் செய்த பாவ- சாப- கர்மவினைகளையும் நிவர்த்திசெய்து, பூமியில் இனி பிறப்பில்லா நிலையை நீங்களும் அடைந்து, பூமியின் தொடர்பைத் துண்டித்துக்கொள்ளுங்கள்.

மும்மூர்த்திகளும், தேவர்களும், கிரகங்களும், அவரவர் லோகத்தில் தெய்வ சக்தி பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறந்துவிட்டால், உங்கள் தெய்வ சக்தி செயலற்றுவிடும். தெய்வ சக்தி அனைத் தையும் இழந்துவிடுவீர்கள். கிரகங்களின் சக்தி மானிடர்களை பாதிக்காது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். பூமியில் புத்திசக்தி, உடல்சக்தி, பொருள் சக்தி, உழைப்பு சக்தி ஆகியவற்றைப் பயன் படுத்திதான் அசுரர்களை அழிக்கமுடியும்'' என்று கூறி தேவர்களை அனுப்பி வைத்தார்.

எட்டாவது அவதாரமான இந்த பிறப் பில் தனது தெய்வ சக்தியால் எதனையும் செய்யமுடியாது என்பதால், பூமியில் மனிதர்களின் சக்தியான புக்தி, யுக்தி, உடல் பலத்தால்தான் அனைத்து செயல்களையும் செய்து அசுரர்ளை அழித்து வாழவேண்டும்; பெருமளவு மனிதர்களை அழித்து பூமி பாரத்தைக் குறைக்கவேண்டும்; அதேசமயம் தனது முந்தைய அவதாரங்களில், தனக்கு உண்டான பாவ- சாபங்களையும் நிவர்த்தி செய்யவேண்டும். இவையனைத்தையும் செய்துமுடிக்கத் தக்கவகையில் திட்டம் போட்டு செயல்படத் தொடங்கினார்.

கிருஷ்ணாவதாரத்தை எங்கே எந்த காலத்தில் யாரிடம் பிறப்பது என்பதைத் தீர்மானித்து, அவதாரமெடுப்பதற்குமுன்பே, பூமியில் அசுரர்களை அழிப்பதற்கான செயலைத் தொடங்கினார்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala160922
இதையும் படியுங்கள்
Subscribe