கிருஷ்ணர் தன் முற்பிறவி பாவ- சாப- தோஷம் அனைத்தையும் அனுபவித்துத் தீர்த்தார். மாடு மேய்க்கும் சிறுவனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கிருஷ்ணர், தன் அறிவால், யுக்தியால், உடல்பலத்தால், வாழ்வின் இறுதியில் துவாரகை நகரை நிர்மானித்து மன்னர் நிலையை அடைந்தார். பாவ- சாபங்களை அறிந்து தீர்க்கத் தீர்க்க, கிருஷ்ணரின் வாழ்க்கை உயர்ந்த நிலைக்கு அவரைக் கொண்டுசென்றது.

முற்பிறவி பாவ- சாபங்களை கிருஷ்ணர் ரிஷிகள், குருமார்களின் ஆசியால், அருளால் தீர்க்கவில்லை. ஏன்? அவர்களைத் தன் பக்கம் நெருங்கக் கூட விடவில்லை. எந்தவொரு பூஜை, யாகம், ஹோமம் இறைவழிபாடு, மந்திர- தந்திர வேலை என பரிகார பூஜைகள் எதனையும் செய்து தீர்க்கவில்லை. இதுபோன்ற செயல்களாலும், கடவுள் சக்தியாலும், கடவுள் அருளாலும், பூமியில் தங்கள் கர்மவினைப் பதிவுகளைத் தீர்க்கமுடியாது; தீராது என்ற உண்மையைக் கிருஷ்ணர் அறிந்திருந்தார். கலியுகத்தில் வாழும் மக்களையும் அறிந்துகொள்ள உணர்த்தினார்.

dsd

Advertisment

இன்றையநாளில், பாவ- சாபம் தீர்க்க பலர் கூறும் வழிமுறைகளைக்கேட்டு, ஹோமம், யாகம், புண்ணிய தலங்கள், புண்ணியத் தீர்த்தம், பரிகாரங்கள், ஆடு, கோழி, உயிர்பலிகள், மந்திரம், தந்திரம் என மக்கள் பணம் செலவுசெய்து அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சிலர் மடாதிபதிகள், குருமார்கள், ஜீவபீடங்களுக்குச் சென்றால் பாவம் தீருமென்று சென்றுகொண்டிருகிறார்கள். இதுபோன்ற செயல்களால் பாவம், சாபம் தீருமா என்றால், தீராதென்று கிருஷ்ணர் மக்களுக்கு புரிந்துகொள்ளச் செய்துள்ளார்.

இராமரின் வாழ்க்கை, ஒரு மனிதனின் செயல்கள்மூலம் அவனுக்கு எப்படியெல்லாம் பாவ- சாபங்கள் உண்டாகுமென கூறுவது. கிருஷ்ணரின் வாழ்க்கை, முற்பிறவி பாவ- சாப வினைகளை எப்படித் தீர்க்கவேண்டுமென்று வழிகாட்டுவது. இராமரின் வாழ்க்கை வடதுருவ வாழ்க்கை முறை என்றால், கிருஷ்ணரின் வாழ்க்கை தென்துருவ வாழ்க்கை முறையாகும். இருவரின் குணம், செயல்கள் நேர் எதிரெதிரானவை.

ஒவ்வொரு மனிதனும், தன் சுயபுத்தியால் சிந்தித்து செயல்படச் சொன்னவன் கண்ணை. அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி வாழச் சொன்னான். உழைத்து வாழச் சொன்னவன் கண்ணன். உழைப்பால் வாழ்வில் உயர்வடையலாமென்று வாழ்ந்து காட்டியவன் கண்ணன். இந்த பூமியில் உழைத்து வாழ்பவன் உயர்ந்த சாதி; உழைக்காமல், பிறர் உழைப்பை சுரண்டி, ஏமாற்றி வாழ்பவன் தாழ்ந்த சாதி என்று கூறியவன் கண்ணன்.

(தொடரும்)

செல்: 99441 13267