கிருஷ்ணரின் வரலாற்றை பராசர முனிவர் மைத்ரேய முனிவருக்குக் கூறி வருகிறார்.

மதுராபுரி மன்னனும், கிருஷ்ணரின் தாய்மாமனு மான கம்சன், கிருஷ்ணரை யும் பலராமனையும் மதுராபுரிக்கு அழைத்துவருமாறு அக்ரூ ரரை அனுப்பிவைத்தான். அக்ரூரரும் இருவரை யும் அழைத்துவந்தார். மதுராபுரி தெருவில் சகோதரர்கள் இருவரும் நடந்துவரும் பொழுது, இளம் வயதுடைய அழகான பெண் ணொருத்தி முதுகு வளைந்த நிலையில், வாசனாதி திரவியங்களைக் கையில் எடுத்து வருவதைப் பார்த்த கண்ணன் அவளருகில் சென்று, "அழகிய மங்கையே, நீ யார்? இந்த வாசனைப் பூச்சுகளை யாருக்குக் கொண்டு செல்கிறாய்'' என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், "ஐயா, என் பெயர் நைகவக்கிரை. கம்ச மன்னனுக்கு இந்த வாசனைப் பூச்சுகளைக் கொண்டுசெல்கிறேன்'' என்றாள். அவளிடம் கண்ணன், "இந்தப் பூச்சுகளை எங்களுக்குத் தந்துவிடு. நாங்கள் எங்கள் மேனியில் பூசிக்கொள்கிறோம்'' என்றார்.

கண்ணனது கனிவான பேச்சிலும் தோற்றத்திலும் மயங்கிய அந்த கூனிப்பெண், அவர்களிடம் வாசனை திரவியங்களைத் தந்து விட்டாள். கண்ணனும் பலராமனும் அவற்றைத் தங்கள் உடலில் தடவிக்கொண்டனர்.

dd

Advertisment

கண்ணன் காடுகளில் வசித்து வர்மக்கலையை கற்றிருந்ததால், அந்தப் பெண்ணின் கூனல் முதுகை நிமிர்த்த எண்ணம்கொண்டு அவளை அழைத்து, தனது இடக்கையை அவளின் முதுகுத்தண்டிலும், சரியான நரம்பு ஓட்டத்திலும் வைத்து, தனது வலக்கையின் நடுவிரலை அவளின் மேவாயில் வைத்து, தனது கால் விரல்களால் அவளது கால்களை மிதித்துக்கொண்டு முகத்தை நிமிர்த்தினார். இதனால் சுருண்டிருந்த முதுகுத் தண்டும் நரம்புகளும் சரியாயின. அவளது கூனல் நிமிர்ந்தது. இயற்கையாகவே அழகாக இருந்த அவள் மேலும் சிறந்த அழகியானாள்.

தனது கூனலை நிமிர்த்திய கண்ணனுக்கு பலமுறை நன்றிகூறி வணங்கிச்சென்றாள்.

Advertisment

மகாவிஷ்ணு இராமனாக இருந்தபோது கூனிக்குச் செய்த பாவத்தை, கிருஷ்ணராகப் பிறந்து அவள் கூனலை நிமிர்த்தி அழகிய மங்கையாக்கி, அவள் வாழ்வை மலரச்செய்து தனது முற்பிறவி பாவத்தை நிவர்த்திசெய்தார். தனது முந்தைய அவதாரங் களில் ஏற்பட்ட அனைத்து பெண் சாபங் களையும் கிருஷ்ணர் தன் வாழ்வின் நடை முறைச் செயல்கள்மூலமே தீர்த்து முடித்தார்.

(இன்றைய மக்கள் சில உண்மைகளை அறிந்து வாழ்வது அவசியமாகும். இராமனுக்கும் சீதைக்கும், மகா தவமுனிவரான விசுவாமித்திரர் திருமணம் செய்துவைத்து, நல்வாழ்க்கை வாழ நல்லாசி வழங்கினார். ஆனால் அதன்பிறகு இராமரின் வாழ்க்கையில் பெற்றவர்கள், பிள்ளைகள், மனைவி, அரச பதவி, பட்டம் என அனைத்தையுமிழந்து, நிம்மதியின்றி வாழ்ந்து, சரயு நதியில் இறங்கி தானே மரணத்தைத் தேடிக்கொண்டு அவதாரத்தை நிறைவுசெய்தார். விசுவாமித்திரர், வசிஷ்டர் போன்ற ரிஷிகளின் அருளும் ஆசீர்வாதமும் இராமரின் வாழ்வில் நன்மையை- நிம்மதியைத் தரவில்லை; கர்மவினையைத் தீர்க்கவில்லை என்பதே நடைமுறை உண்மை. இன்று மடாதிபதிகள், யோகிகளிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றால் நன்மை கிடைக்குமென எண்ணுபவர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.)

இராமர் எப்போதும் வில், அம்புகளைக் கையில் வைத்திருந்தார். ஆனால் கிருஷ்ணர் புல்லாங்குழலை மட்டுமே வைத்திருந்தார். இதன்மூலம் ஒரு சூட்சும ரகசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார். ஒருவன் கையிலுள்ள ஆயுதமோ, ஒரு பொருளோ அவன் குணத்தையும், குணத்தால் உண்டாகும் எண்ணத்தையும், அந்த எண்ணத்தால் செய்யும் செயல்களையும் உருவாக்கும். இராமரின் கையிலிருந்த ஆயுதங்கள் அவரை எதிர்ப்பவர்கள்மீது கோபத்தை உருவாக்கி, அவர்களைக் கொல்லச்செய்தது. இதனால் அவர் கொலைபாவத்தை அதிகமாகத் தேடிக்கொண்டார்.

அரசகுலத்தில் பிறந்து, நியாயம் தவறாமல் அரச நீதியைக் கடைப்பிடித்து வாழவேண்டிய இராமர் முனிவர்கள், ரிஷிகளின் பேச்சைக்கேட்டு, தனக்கு சம்பந்தமில்லாதவர்களைக் கொலை செய்ததால் பாவம் கூடிக்கொண்டே போனது. இதன்பயனாக இராமர் தன் பின்வயதில் மனைவி, குழந்தை, குடும்பம் என அனைத் தையும் இழந்து தனிமை வாழ்வை அடைந்தார். அரச சுகபோகத்தை அனுபவிக்காமலேயே வாழ்ந்தார். எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத நிலையை அடைந்தார். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும், பதவிபலம், பண பலத்தால் பாவங்கள் செய்து வாழ்பவர்களின் பின்வயதில் எல்லாராலும் ஒதுக்கப்படுவார் அல்லது ஒதுங்கி வாழ்வார். கோபமும் மூர்க்கமும் இறுதியில் குறைவைத்தான் பலனாகத் தரும்.

கிருஷ்ணரின் வாழ்வில் அரச சபையில், மன்னர்களும் கௌரவர்களும், அவர் களுடனிருந்த ஆச்சாரியார் களும் கிருஷ்ணரை இடையன், மாடு மேய்ப்பவன், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், செல்வம் படைத்தவர்களுக்கு சேவகம் செய்யும் இனத் தைச் சேர்ந்தவன் என்று கீழ்த்தரமாகப் பேசினர்.

தனக்கு அவமானம் நேரும் போதெல்லாம் கிருஷ்ணர் அமைதியாகவே இருந்தார். இந்த அமைதிக்குக் காரணம் அவர் கையில் வைத்திருந்த புல்லாங்குழல்தான்.

கிருஷ்ணர் தனிமையில் இருக்கும்போது வாசிக்கும் குழலோசை அவருள்ளே இசையிடும். அதனால் அவரது கோபம், வேகம் கட்டுப்படும். மனம் அமைதியடையும். எதுவும் பெரிதாகத் தெரியாது.

இசையால் மனம் அமைதியடையும். அமைதி யான நிலையில் அறிவு தெளிவாக இருக்கும். அறிவு தெளிவான நிலையில் நாம் ஒன்றைப் பற்றி சிந்திக் கும்போது பிரச்சினையைத் தீர்க்க தெளிவான யோசனை நமக்குள் உதிக்கும். அந்த யுக்திகளை செயல்படுத்தும் போது எதிலும் வெற்றி உண்டாகும். கிருஷ்ணர் தன்னை அவமானப்படுத்தி யவர்கள் அனைவரையும் தன் சுய அறிவு என்னும் ஆயுதத் தால் சம்ஹாரம் செய்தார்.

அறிவின் துணையால் அனைத்து பாவ- தோஷங் களையும் நிவர்த்திசெய்தார்.

(தொடரும்)

செல்: 99441 13267