கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! (4) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/remedies-shown-by-kannan-get-rid-karma-4-chithardasan-sunderji-jeevanadi

ராசர முனிவர் கிருஷ்ணரின் அவதார நிகழ்வை மைத்ரேய முனிவருக்குக் கூறி வருகிறார்.

"பராசர முனிவரே, கிருஷ்ணர் பூமியில் தான் மனிதனாகப் பிறக்கப்போகும் பருவ காலம், மாதம், நாள், நட்சத்திரம், திதி, நேரம் என அனைத்தையும் குறிப்பிட்டுக்கூறி, தன் முற்பிறவி பாவ- சாப- வினைதீர்க்கும் அமைப் புள்ள நாளில் பிறந்தார் என்று கூறினீர்கள். கிருஷ்ணரால்தான் பிறப்பு நாளை நிர்ணயித்துப் பிறக்கமுடியுமா? அல்லது மண்ணுலகில் பிறக் கும் எல்லா மனிதரும் அவரவர் பிறப்பு நாள், நேரத்தைத் தீர்மானித்துப் பிறக்கமுடியுமா?'' என மைத்ரேயர் கேட்டார்.

"மைத்ரேயரே, இந்த மண்ணுலகில் மனிதனாகப் பிறக்கும் அனைவருக்கும் இயற்கை நிர்ணயித்த பிறப்பின் விதி ஒன்றுதான். கிருஷ்ணர் எவ்வாறு தன் முற்பிறவி வினைகளைத் தீர்த்து முடிக்க தகுந்த நாள், திதி, நட்சத்திரம் தேர்ந் தெடுத்துப் பிறந்தாரோ, அதேபோன்றுதான் ஒவ்வொரு மனிதனும், தன் முற்பிறவி பாவ- புண்ணியங்களை அனுபவித்து வாழ நாள், நேரத்தைத் தீர்மானித்துதான் பிறக்கிறான். ஒரு ஆன்மா, தான் பிறக்கும் காலம், மாதம், நாள், நட்சத்திரம், நேரம் இவற்றைத் தீர்மானித்த பின்தான் அதற்குத் தகுந்த

ராசர முனிவர் கிருஷ்ணரின் அவதார நிகழ்வை மைத்ரேய முனிவருக்குக் கூறி வருகிறார்.

"பராசர முனிவரே, கிருஷ்ணர் பூமியில் தான் மனிதனாகப் பிறக்கப்போகும் பருவ காலம், மாதம், நாள், நட்சத்திரம், திதி, நேரம் என அனைத்தையும் குறிப்பிட்டுக்கூறி, தன் முற்பிறவி பாவ- சாப- வினைதீர்க்கும் அமைப் புள்ள நாளில் பிறந்தார் என்று கூறினீர்கள். கிருஷ்ணரால்தான் பிறப்பு நாளை நிர்ணயித்துப் பிறக்கமுடியுமா? அல்லது மண்ணுலகில் பிறக் கும் எல்லா மனிதரும் அவரவர் பிறப்பு நாள், நேரத்தைத் தீர்மானித்துப் பிறக்கமுடியுமா?'' என மைத்ரேயர் கேட்டார்.

"மைத்ரேயரே, இந்த மண்ணுலகில் மனிதனாகப் பிறக்கும் அனைவருக்கும் இயற்கை நிர்ணயித்த பிறப்பின் விதி ஒன்றுதான். கிருஷ்ணர் எவ்வாறு தன் முற்பிறவி வினைகளைத் தீர்த்து முடிக்க தகுந்த நாள், திதி, நட்சத்திரம் தேர்ந் தெடுத்துப் பிறந்தாரோ, அதேபோன்றுதான் ஒவ்வொரு மனிதனும், தன் முற்பிறவி பாவ- புண்ணியங்களை அனுபவித்து வாழ நாள், நேரத்தைத் தீர்மானித்துதான் பிறக்கிறான். ஒரு ஆன்மா, தான் பிறக்கும் காலம், மாதம், நாள், நட்சத்திரம், நேரம் இவற்றைத் தீர்மானித்த பின்தான் அதற்குத் தகுந்தநாளில் தாயின் கர்ப்பத்தில் கருவாகிறான்.

dd

ஒரு மனிதன் பிறப்புக் காலத்தை தீர்மானித் துக்கொள்வது போன்றே தனது முற்பிறவிகளில் எந்த வம்சத்தில் பிறந்தானோ, அதே வம்சத்தில் எந்த தாய், தந்தைக்குப் பிறக்கவேண்டும்- யாரை கணவனாக- மனைவியாக அமைத்துக் கொள்ளவேண்டும்- என்ன தொழில் செய்து சம்பாதித்து ஜீவனம் செய்து வாழவேண்டும்- இந்தப் பிறவியில் தனது உறவுகள் யார்- இந்தப் பிறவி வாழ்வில் என்னவிதமான நன்மை- தீமைகளை அனுபவிக்கவேண்டும்- எங்கே வசிக்கவேண்டும் எந்த நாள், நேரத்தில் மரண மடைய வேண்டும். என இதுபோன்ற அனைத்தையும் அவன்தான் தீர்மானித் துப் பிறக்கிறான். பூமியில் கடவுளானா லும், மனிதனானாலும் இயற்கை நிர்ணயித்த பிறப்பின் விதி இதுதான்.

ஒரு மனிதனின் இப்பிறவி வாழ்க்கை நிலையை வேறு யாரும் தீர்மானித்து அவன் பிறப்பதில்லை என்பதைதான் கிருஷ்ணரின் பிறப்பு நிலை சூட்சுமமாகத் தெரியப்படுத்துகிறது. பிறவியென்பது பிறப்பவன் கையில்; வாழ்க்கை யென்பது வாழ்பவன் கையில்.

(இன்றையநாளில் சிலர் ஜோதிடர்களிடம், நாள், நட்சத்திரம், நேரம், கிரகநிலைகளைக் கேட்டு, குழந்தை பிறப்பதற்குமுன்பே ஜாதகம் பார்த்து, மருத்துவமனைகளில் குழந்தை களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒரு குழந்தை யின் இப்பிறவியின் விதியையும் பிறக்கும் நாள், நேரத்தையும் ஜோதிடரும், மருத்துவரும் மாற்றியமைக்க முடியாது என்பதற்கு கிருஷ்ண ரின் பிறப்பே சாட்சியாகும். இதுபோன்று நாள், நட்சத்திரம் பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளும் செயலை, இன்றையநாளில் அந் தஸ்துள்ள செல்வந்தர்களும், அதிகம் படித்தவர் களும், அதிகார வர்க்கத்தினைச் சேர்ந்த குடும்பத்தினரும்தான் அதிகம் செய்துவருகிறார் கள். எனது அனுபவத்தில், இதுபோன்று பிறந்த நிறைய குழந்தைகளின் ஜாதகத்தில், பல பாவ- சாப- தோஷ அமைப்பு உள்ளது.) மைத்ரேயரே, பிறவி பற்றி இன்னும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.''

"மகரிஷியே, முற்பிறவி, இப்பிறவி, அடுத்த பிறவி என்று கூறுகிறீர்கள். கிருஷ்ணரின் முந்தைய அவதாரங்களில் அவருடன் பிறந்த தேவர்கள் யார்? கிருஷ்ணாவதாரத்தில் யாராகப் பிறந்துள்ளார்கள் என்பதையும் கூறுங்கள்.''

மைத்ரேயனே, கிருஷ்ணர் தேவர்களிடம், தன்னுடைய முந்தைய அவதாரப் பிறவிகளில், தன்னுடன் அவதாரமெடுத்துப் பிறந்த தேவர் கள், கிரகங்கள் என அனைவரும், முற்பிறவிகளில் தாங்களே உருவாக்கிக்கொண்ட, பாவ- புண்ணியப் பதிவுகளை இப்பிறவியில் அனு பவித்து முடிக்கவேண்டுமென்று கூறினார் அல்லவா?

மகாவிஷ்ணு தனது ஏழாவது அவதார மான இராமாவதாரத்தில், அயோத்தி மன்னன் தசரதனுக்கும், கோசலைக்கும் இராமன் என்ற பெயரில் மகனாகப் பிறந்தார். கிருஷ்ணாவதாரத்தில் அவரே வசுதேவருக்கும், தேவகிக்கும் கிருஷ்ணர் என்ற பெயரில் மகனா கப் பிறந்து, கோகுலத்தில், ஆயர்பாடியில் நந்தகோபன் மனைவி யசோதையால் வளர்க்கப்பட்டார்.

இராமாவதாரத்தில் ஆதிகேஷனின் அம்சமாக, இராமருக்குத் தம்பியாக லட்சு மணன் பிறந்தார். கிருஷ்ணாவதாரத்தில் ஆதிசேஷன் வசுதேவருக்கும் அவரின் மற்றொரு மனைவியான ரோகிணிக்கும் பலராமன் என்ற பெயரில் கிருஷ்ணனுக்கு அண்ணனாக கோகுலத்தில் பிறந்தார்.

இராமாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் மனைவியருள் ஒருத்தியான பூமாதேவி, மிதிலை மன்னன் ஜனகனுக்கு மகளாக வளர்ந்தாள். இராமனை மணந்து ஏகபத்தினியாக இருந்தாள். கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி (சீதை) சத்திராஜிதன் என்ற மன்னனுக்கு மகளாக சத்யபாமா என்ற பெயரில் பிறந்து, கிருஷ்ணனை மணம்புரிந்து மனைவியானாள்.

இராமாவதாரத்தில் கூனி (மந்தரை) என்ற பெயரில், கைகேயியின் பணிப்பெண்ணாக இருந்தவள், கிருஷ்ணாவதாரத்திலும் அதே கூனல் முதுகுடன் "நைவக்கிரை' என்ற பெயரில், மதுராபுரி மன்னன் அரண்மனையில், மன்னனுக்கு வாசனை திரவியங்கள் அரைத்துக்கொடுக்கும் பணிப்பெண்ணாக வேலை பார்த்தாள்.

இராமாவதாரத்தில் இந்திரனின் அம்சமாக வானர மன்னன் வாலி பிறந்தான். அவனே கிருஷ்ணாவதாரத்தில் பாண்டுமன்னன் மனைவி குந்திதேவிக்கும், இந்திரனுக்கும் அர்ஜுனன் என்ற பெயரில் பிறந்தான்.

இராமாவதாரத்தில் சூரியனின் அம்சமாக வானர அரசன் சுக்ரீவன் பிறந் தான். கிருஷ்ணாவதாரத்தில் பாண்டு மன்னன் மனைவி குந்திதேவிக்கும், சூரியனுக்கும் கர்ணன் என்ற பெயருடன் பிறந்தான்.

இராமாவதாரத்தில் வாலி அண்ணணாக வும் சுக்ரீவன் தம்பியாகவும் ஒரே தாய்க்குப் பிறந்தார்கள். கிருஷ்ணாவதாரத்தில் வாலி (அர்ஜுனன்) தம்பியாகவும், கர்ணன் (சுக்ரீவன்) அண்ணணாகவும் ஒரே தாய்க்குப் பிறந்தார்.

இராமாவதாரத்தில் வானரங்களாகப் பிறந்த வர்கள் அனைவரும் கிருஷ்ணாவதாரத்தில் ஆயர்பாடியில் யாதவகுல மக்களாகப் பிறந் தார்கள். இதுபோன்று, மகாவிஷ்ணுவின் முந்தைய அவதாரங்களில் பிறந்த தேவர்கள் அனைவரும் கிருஷ்ணாவதாரத்தில் பிறந் தார்கள்.

(தொடரும்)

செல்: 99441 13267

bala071022
இதையும் படியுங்கள்
Subscribe