தேச பரிபாலனம் செய்யும் ஆட்சி யாளர்கள் தங்கள் சுகவாழ்கைக்காக பதவி, பக்தி, மதம், ஜாதி எனக் கூறும் சுயநல பாஷாண்டிகள், அரசு புரிவோர் மக்களிடையே பிரிவினை பேத கருத்துக் களைக் கூறி ஒற்றுமையைக் குலைத்து, கலவரங்களை உண்டாக்கும்போதும், இவர்கள் பேச்சை நம்பி மக்கள் செயல் படும்போதும் கலி அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம்.
கலியின் குணபாவத்தால் மக்கள் அற்ப புத்தியுடன் மனம், வாக்கு, காயம் இந்த மூன்றும் சுத்தமில்லாமல் அனுதினமும் ஏதாவது ஒருவகையில் ஏமாற்றி பாவத்தையே செய்து பணம் பறித்து வாழ்வார்கள். நேர்மையான குணமும், உண்மையான செயலும் இருக்காது. செய்யும் தவறுகளுக்கு அச்சம் இல்லாதவர்களாகவும், வெட்கம் இல்லாதவர்களாகவும் வெளிச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
பூமியில் மேகங்கள் அற்பமான மழையை வர்ஷித்து பயிர்கள் அற்பமாக பலனைத் தருகின்றதோ, விவசாயம் குறைந்து உணவுப் பொருட்கள், நோய் தீர்க்கும் மருத்துவ மூலிகைகள் அழிந்து அற்பமாகும்போதும், தானியங்கள் சிறுத்து அணுக்கள்போல் சத்துக் குறை
தேச பரிபாலனம் செய்யும் ஆட்சி யாளர்கள் தங்கள் சுகவாழ்கைக்காக பதவி, பக்தி, மதம், ஜாதி எனக் கூறும் சுயநல பாஷாண்டிகள், அரசு புரிவோர் மக்களிடையே பிரிவினை பேத கருத்துக் களைக் கூறி ஒற்றுமையைக் குலைத்து, கலவரங்களை உண்டாக்கும்போதும், இவர்கள் பேச்சை நம்பி மக்கள் செயல் படும்போதும் கலி அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம்.
கலியின் குணபாவத்தால் மக்கள் அற்ப புத்தியுடன் மனம், வாக்கு, காயம் இந்த மூன்றும் சுத்தமில்லாமல் அனுதினமும் ஏதாவது ஒருவகையில் ஏமாற்றி பாவத்தையே செய்து பணம் பறித்து வாழ்வார்கள். நேர்மையான குணமும், உண்மையான செயலும் இருக்காது. செய்யும் தவறுகளுக்கு அச்சம் இல்லாதவர்களாகவும், வெட்கம் இல்லாதவர்களாகவும் வெளிச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
பூமியில் மேகங்கள் அற்பமான மழையை வர்ஷித்து பயிர்கள் அற்பமாக பலனைத் தருகின்றதோ, விவசாயம் குறைந்து உணவுப் பொருட்கள், நோய் தீர்க்கும் மருத்துவ மூலிகைகள் அழிந்து அற்பமாகும்போதும், தானியங்கள் சிறுத்து அணுக்கள்போல் சத்துக் குறைந்து சிறிதாக இருக்கும் காலத்திலும், பசுவின் பால் நெய்போல் திடமாக மாறும்போதும், சந்தன பூச்சு மஞ்சள் நிறத்தில் இருக்காமல் கோரைக் கிழங்கு பூச்சுபோல் நிறம் மாறி கருப்பாக ஆகும் காலத்திலும் கலி புருஷனின் தாக்கம் உச்சத்தில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.
கலி முதிர்ச்சி அடைந்த காலத்தில் பெண்கள் பருவமாறி ஆறு, ஏழு வயதுக் குள்ளாகவே கர்ப்பம் அடைந்து பிள்ளை யைப் பெறுவார்கள். ஆண்கள் ஒன்பது, பத்து வயதிற்குள் ஒரு குழந்தையை உருவாக்கும் திறன் உடையவர்களாக இருப்பார்கள். 12 வயதிற்குள் நரை, திரை, மூப்பு உண்டாகும். மக்கள் 20 வயதிற்குமேல் உயிருடன் பிழைத்திருக்க மாட்டார்கள். தேச மக்கள் சுகம், உல்லாசம் இல்லாதவர்களாய், புதுப்புது நோய்களால் பாதிக்கப்பட்டும், பணம், பொருள், செல்வ வசதி குறைந்த வர்களாக, எப்போதும் எதற்கும் பற்றாகுறை, பஞ்சம் என துன்பத்திலேயே தவித்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். என் அருமை சீடனே, பொதுவாக கல்காலத்தில் மக்கள் அற்பஞானம் உள்ளவர்களாகவும் வீணான தற்பெருமைகள், தங்கள் குலப் பெருமைகளை பேசிக்கொண்டு, பக்தி, பாராயணம் என பாஷாண்ட வேஷங்களைப் பூண்டு மற்றவர்களை ஏமாற்றி பணம், பொருள் பறிக்கும் தீய குணம் கொண்டவர்களாகவே இருப் பார்கள். நடைமுறை சார்ந்த வாழ்வுதான் வாழ்வில் உயர்வைத் தரும். நம்பிக்கையை சார்ந்து செயல்பட்டு வாழ்வில் உயர்வை அடைய முடியாது. வாழ்வில் உண்டாகும் சிரமம், தடைகளை நீக்கிக்கொள்ள முடியாது என்பதை அறிந்துகொள்ளாமலே வாழ்வார்கள்.
மனிதர்கள் நேர்மை, உண்மை, ஒற்றுமை கொண்டு, இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாட்டில் இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் வாழலாம்- எதையும் எப்படியும் செய்யலாமென்று கூறிக்கொண்டு செயல்பட்டு வாழ்வார்கள். எந்த பாவத்தைச் செய்தாலும் பக்தியாலும் பணத்தாலும் பரிகார நிவர்த்திகளைச் செய்தால் தீர்ந்துவிடுமென்ற நம்பிக்கையில் செயல்பட்டு மேலும் மேலும் பாவங்களைச் செய்து பாவிகளாகவே வாழ்வார்கள்.
கலியுகத்தில் மக்கள் சுவாசித்து வெளியே விடும் மூச்சுக்காற்று ஆலகால விஷம் போன்று சக்தி பெற்றதாக இருக்கும். இந்த மூச்சுக்காற்று மேகமண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் விஷமாக்கி வைத்திருக்கும். இதனால் மக்கள் புதிய புதிய காரணம் தெரியாத வியாதிகளால் பாதிக்கப்பட்டு மடிவார்கள். மண், நீர், தீ, காற்று, ஆகாயம் இந்த ஐந்து சக்திகளின் செயல் பாட்டையே இயற்கையின் செயல் என்று மகரிஷிகள், முனிவர்கள் கூறியுள்ளார்கள். இந்த பஞ்சபூதங்கள் பாதிப்படையும்போது இயற்கை பாதிப்படையும். இயற்கையை அசுத்தமாக்கும் மக்களை இயற்கையே கலிகாலத்தில் அழிக்கும்.
முனிவரே, கலி காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பூமியில் பல பாவங்களைச் செய்து பணம் பதவிகளை அடைபவன் செய்த பாவங்களைத் தீர்க்க இன்னும் பல பிறவிகள் பிறக்க நேரிடும் என்பதை அறிந்து எவன் ஒருவன், என் வாழ்வில் இதுபோன்று பாவங்களை இனி செய்ய மாட்டேன் என்று சங்கல்பம் செய்து உறுதி பூண்டு அதை அப்படியே கடைப்பிடித்து வாழ்கின்றானோ அவனுக்கு பாவ சாபப் பதிவுகள் பற்றாது தீர்ந்துவிடும்.
கண்ணன் தன் வாழ்க்கையில் சிசுபாலனுக்கு பாவம், தவறுகள் செய்ய 100 முறை மன்னிப்பு கொடுத்திருந்தார். சிசுபாலன் மேலும் மேலும் தவறுகள் செய்ததால் விதிப்படி நூறு தவறுகளை செய்துமுடித்தவுடன் கிருஷ்ணன் சிசுபாலனைக் கொன்றார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பாவங்கள் செய்து பாதிப்படையாமல் இருக்க பாவக்கணக்குண்டு. அதனால் பாவம் செய்தவன் திருந்தி வாழ வேண்டுமே தவிர பாவமன்னிப்பு கேட்டு தேடி அலையக்கூடாது. ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு பாவமன்னிப்பு தர முடியாது. கலியுகத்தில் எவன் ஒருவன் கண்ணனைப் போன்று தனது முற்பிறவி கர்ம வினைகள் தீர்க்கும் பரிகார பிரார்த்தனை முறைகளை தன் நடைமுறை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்து நிவர்த்தி செய்து முடிக்கிறானோ, அவன் துவாபர யுகத்தில் பெருந்தவம் செய்து எவ்வளவு புண்ணியத்தை அடைவானோ அவ்வளவு புண்ணியத்தை எளிதில் அடைந்து பூமியில் பிறப்பினைத் தடுத்து கண்ணனைப் போல் மோட்சம் அடைவான். கண்ணன் பிறவியில்லாத வரத்தையும் அருள்வான்.
கலியுகத்தில் மக்கள் சாபம், பாவம் தீரச் செய்யும் தானம், தர்மம், தவம், பக்தி, பாராய ணம் என எதுவும் பலன் தராது. மைத்ரேயா, இதுதான் கலிகால மக்கள் வாழ்நிலை. அறிந்து கொள்.
(முற்றும்)
செல்: 99441 13267