வன் ஒருவனுக்கு எந்த வாக்கியம் பிரியமோ, அதுவே சாஸ்திரம் என்று கூறுவார்கள். அவரவர் மனதில் தோன்றுவதை யெல்லாம், கூறிவிட்டு, இதுவே சாஸ்திரக் கூற்று என்பார்கள். மகிரிஷிகள், மாமுனிவர்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், பஞ்ச பூதங்கள், மனிதர்கள் என இன்றும் அனைத்து அண்டங்களுக்கும், நம்பிக்கை ஆதாரமாக உள்ள, மும்மூர்த்திகள், தெய்வங்கள், முப்பது முக்கோடி தேவர்களை யும், வாணிப, வியாபார பொருளாக்கி, பணம், பொருள், சம்பாதிப்பார்கள்.

கடவுள் பக்தி, பக்தர்களின் நிலை, பணத்தின் அளவே நிர்ணயிக்கப்படும். மனிதர்கள், தங்கள் கோரிக்கை, பிரார்த்தனை, வேண்டுதல் நிறைவேற அவரவர் விருப்பம்போல் பட்டினி கிடப்பதும். பலவிதமான முறைகளில் நோன்பு, விரதமிருந்து, உடலை வருத்திக்கொள் வதும், மலை, காடு, வனங்கள் செல்வதும், பழக்க மாகக்கொள்வார்கள். இறைவனைத் தேடி அலைந்து கொண்டு இருப்பார்கள். இதனையும் பக்தி என்று கூறுவார்கள்.

கிருதாயுகம், திரோதயுகம், துவாபரயுகங்களில் ஆன்மாவை நேசித்த ஆன்மிக நெறி, கலியுகத்தில் பணம், பொருள் தேடும் ஆஸ்திக நெறியாக மாறிவிடும். மக்களை ஏமாற்றி பொருள் பறித்து வாழும் மனிதர்கள் சாது, சந்நியாசிபோல் வேஷம் தரித்து, கடவுள், பக்தியின் பெயரால், பணம், பொன், பெண்களை, சம்பாதனை செய்து சுகம் அனுபவித்து வாழ்வார்கள்.

கலியுகத்தில் பலசாலி எவனோ, அவனே நாட்டிற் கும், நாட்டு மக்களுக்கும் தலைவன் ஆவான். பணம், பொருள், சொத்துகள் உள்ளவனே பதவிகளை அடைவான். உழைப்பு, திறமை, உண்மை, நேர்மை, ஒழுக்கமான குணங்கள் உள்ளவன், பதவிகளை அடையமாட்டான்.

Advertisment

தேசத்தை ஆட்சிசெய்யும் ஆட்சியாளர்கள், மக்கள் குறை தீர்த்து, காப்பாற்றி தேச பரிபாலனம் செய்வதை முக்கியமாக எண்ணாமல், அந்த வரி, இந்த வரியென்று, பலவிதமான வரிகளை மக்கள் மீது திணித்து, எதையாவது சாக்கிட்டுக் கூறி, நாட்டுமக்களின், பொருள், சொத்துகளைப் பறித்துக் கொள்ளையடிப்பார்கள். மக்கள் தரும் வரிப்பணம் மக்கள் நலனிற்குப் பயன்படாது.

kannan

Advertisment

கலியுகத்தில், எவன் ஒருவன் பணம், பொன், பொருள் வைத்து இருப்பானோ, அவனே அரசன் ஆவான். பணம் இல்லாதவன் நல்ல குணம், ஒழுக்கம், நேர்மையானவன் சேவகன் ஆவான். ஆட்சியாளர்களும், அரசப் பிரதானிகளும், வரிப் பணம் செலுத்தச் சொல்லிகொடுக்கும் நெருக்கடி யால், மக்கள் சிரமத்தை அடைவார்கள். துன்பம் தாங்காமல், உணவிற்காக, சொந்த நாட்டைவிட்டு வேறு தேசம், வேறு நாடுகளுக்குச் செல்வார்கள்.

ஆட்சியாளர்களும், அரசனும், மக்களிடையே பிரிவினை, பேதத்தை உண்டாக்கி, பாகுபாட்டுடன் அரசு புரிவதால், மக்கள் துன்பம் அடைந்து, வேறு மதங்களுக்கு மாறி, அம்மதக் கொள்கைகளைப் பின்பற்றி வாழத் தொடங்கிவிடுவார்கள்.

கலியுகத்தில், பணம், சொத்து, பொருள்கள் உள்ளவன் வீட்டுப் பெண்களுக்கே சுலபமாக திருமணம் நடக்கும். செல்வம் இல்லாதவன் வீட்டுப் பெண்கள் திருமணம் தடை, தாமத மாகும். செல்வம் உள்ளவனே கன்னிகாதானம் செய்துவைக்கும் தகுதியுடைய தகப்பன் ஆவான்.

கலியில், பெண்கள், பணம், பொருள், இல்லாத கணவனை விட்டுவிட்டு, எவன் பணம், பொருள், சொத்துகள் உடையவனோ, அவனையே கணவனாக ஏற்றுக்கொண்டு உறவு கொள்வார்கள்.

நல்ல குணம் இல்லாத ஆண் மகனாக இருந்தாலும், அவனிடம் பணம் இருந்தால் போதும். சளுக்கனாக இருப்பவனிடம்கூட அன்பு, பிரியம் கொண்டு, உடலாலோ, மனதாலோ, விபசாரிகளாக வாழ்வார்கள்.

பெண்களுக்கு கூந்தல் அதிகமாக, நீளமானதாக இருந்தால், தான் "அழகி' என்ற கர்வம் அவள் மனதில் உண்டாகிவிடும். பெண்களுக்கு பொன்னும், மணியும், நல்லவிதமான ஆடைகளும் கிடைக்காதபோது, தங்கள் கூந்தலையே, அலங்காரமாகச் செய்துகொண்டு, தன்னை அழகானவள் என்று காட்டிக் கொள்வார்கள்.

கலி வளர்ச்சி அடைய, அடைய பெண்கள் அதிக ஆசையும், குறுகிய சரீரமும் கொண்டு, உடலுக்கு நலன்தராத பலவிதமான உணவுகளை உண்டு, பல பிள்ளைகளைப்பெற்று, செல்வ மின்றி வருந்தி வாழ்வார்கள்.

பெண்கள் இரண்டு கைகளால், தலையைச் சொறிந்துகொண்டு, கணவன், மாமனார், மாமியார், முதலியோரின் கட்டளையை அலட்சியப்படுத்தி, அவர்களை அவமதித்து வாழ்வார்கள். தேக சுத்தம் இல்லாமல், தங்கள் மனவிருப்பப் படி, எதனையும் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். பெண்கள் ஈனமான குணத்துடனும், கடினமான வார்த்தைகளைக் கூறியும், அதிகம் பொய் பேசுபவர்களாக இருப்பார்கள்.

கலியுகத்தில் திருமணங்கள், நேர்மையானதாக, உள்ளன்பு, பாசம் கொண்டதாக இருக்காது.

கணவன், மனைவியிடையே ஒற்றுமை இல்லாமல் போகும்.

குலமங்கையர், ஒழுக்கங்கெட்டு, தீய குணம், தீமையான செயல்களைச் செய்பவர்களிடம் நட்புகொண்டு, தங்கள் புருஷன்களுக்கு பல வகையான தீமைகளைச் செய்து வாழ்வார்கள்.

கலியுகத்தில், பணம், பொருள், சொத்து களை வைத்திருப்பவன், எவனோ, அவனை "சுவாமி' என்று மக்கள் கொண்டாடுவார்கள். கபடமான குணம், எண்ணத்துடன், தனது சுயநலமான, வாழ்க்கை லாபத்திற்காக, மக்களுக்கு பணம், பொருள் தருபவனை, தலைவன் என்று போற்றுவார்கள். நல்லறிவு, ஞானம், புத்தியுள்ளவனை, மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி, பொது நலத்திற்காக உதவி செய்பவனை, நல்லவனை, மதிக்க மாட்டார்கள்.

ஆண்கள் பணம் சம்பாதிப்பதிலேயே, குறியாக இருப்பார்கள். தனது உறவுகள், நண்பர் கள், வேண்டிக் கேட்டாலும், எள்ளளவும் மனம் இரக்கமின்றி, மறுத்து தரமாட்டார்கள். தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்வதி லேயே குறியாகச் செயல்படுவார்கள். தங்கள் வாழ்க்கை வசதிகளையே பெரிதாக எண்ணி, அரைக்காசு பணத்திலும் ஆசைவைத்து வாழ்வார்கள்.

கலியுகத்தில், ஜனங்களுக்கு, மாமனார், மாமியார், மைத்துனர், ஆசிரியர்கள், பெண்களுக்கு கணவன்கள், ஆண்களுக்கு மனைவிகள் என அனேகம் பேர் இருப்பார்கள். "ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்' என்ற தாம்பத்திய உறவு வாழ்க்கை இருக்காது.

ஆண்கள், பெற்ற தாய், தந்தையிடம் அன்பில்லாதவர்களாகவும், மாமனார், மாமியாரை மதித்து, முக்கிய உறவாக நினைத்து இருப்பார்கள். தாய் யார்? தகப்பன் யார்? யாருக்கு யார் உறவு என்றுக் கூறுவார்கள்.

மைத்ரேயரே, கலி முற்ற, முற்ற மழை வளம் குறையும், அதனால் தேசத்தில் பசியும், பட்டினியும், அதிகமாகி மக்கள் உணவிற்காக எங்குவார்கள். பசிக்கு உணவு இல்லாததால், காய், கிழங்கு, இலைகளைப் புசித்துக்கொண்டு, பசியால் வருந்தி தற்கொலை செய்துகொண்டு மாண்டு போவார்கள்.

பூமியில், மழை இல்லாததைப் பற்றி, அச்சம் கொண்டும், பசிக்குப் பயந்தும், உடல் வலிவு குறைந்து, சோர்ந்து, மக்கள், மழை வர்ஷிக்க வேண்டி, பிரார்த்தனை செய்துகொண்டு வானத் தையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

மகா முனிவரே, மக்களிடையே நேர்மை யான, உண்மையான குணமும், சுயநலமில்லாத வாழ்க்கை முறை எத்தனைக் கெத்தனை குறைந்து, நசித்துப் போகின்றதோ, அத்தனைக் கத்தனை, கலியின் சக்தி அதிகமாகிக்கொண்டு வருகின்றது என்று அறிந்து, புத்திசாலிகள் புரிந்துகொள்வார்கள்.

(தொடரும்)

செல்: 99441 13267