மகாவிஷ்ணுவானவர் கிருஷ்ணா வதாரத்தை, மதுராபுரி மன்னன் உக்ர சேனனின் மகளும், கம்சனின் தங்கையும், வசுதேவரின் மனைவியுமான தேவகியின் கர்ப்பத்தில் குழந்தையாகப் பிறக்கத் தீர்மானித்து நாரதரை அழைத்து, நாரதனே, நீ கம்சனிடம் சென்று, "கம்சனே' உன் சகோதரி தேவகியின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளில் ஒருவன் உன்னையும் கொன்று, அசுர "வம்சத்தையே அழிப்பான்'' என்ற தேவரகசியத்தைக் கூறும்படி சொன்னார்.
பகவான் கூறியதை நாரத முனிவர் அப்படியே கம்சனிடம் சென்று கூறினார். இதனைக்கேட்ட கம்சன் மிகவும் கோபம் கொண்டு, தன் தங்கை தேவகியையும், அவள் கணவன் வசுதேவனையும் கொல்லத் துணிந்தான். நாரதர் கம்சனைத் தடுத்து. "மன்னனே, இவர்களைக் கொல்வதால் என்ன பயன்? இவர்களுக்குப் பிறக்கும் ஒரு குழந்தையால்தானே உனக்கு மரணம் ஏற்படும்? அதனால் இவர்களை சிறையில் அடைத்து, உன் காவலில் வைத்துக்கொள். தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளை உடனே கொன்றுவிடு. அதனால் நீ மரணத்திலிருந்து தப்பிவிடலாம்'' என்று கூறினார்.
நாரதர் கூறிய யோசனையை ஏற்று, கம்சன் தனது தங்கை தேவகியையும் அவள் கணவனையும் சிறையிலடைத்து, கடுமையான காவல் திட்டம் செய்து, "தேவகிக்கு குழந்தை பிறந்தால் அதனை உடனே எனக்குச் சொல்லவேண்டும்' என்று காவலர்களுக்கு கட்டளையிட்டான்.
தேவகிக்கு மகனாகப் பிறக்கத் தீர்மானித்த பகவான் தன்னுள்ளிருக்கும் யோகமாயா நித்திரை சக்தியை அழைத்தார். அவள் அவர்முன்தோன்றி வணங்கி நின்றாள். பகவான் அவளிடம், "மாயா, இப்போது நான் பூமியில் எட்டாவது அவதாரமெடுத்து, வசுதேவனின் மனைவி தேவகியின் கர்ப்பத்தில், என்னுடைய முந்தைய ஏழு அவதாரங்களில் உண்டான கர்மவினைகளை அனுபவித்துத் தீர்க்கும் அமைப்புள்ள நாளில்- அதாவது மழைக்காலத்தில், எட்டாவது மாதமான ஆவணியில், அமரபட்சம் (தே
மகாவிஷ்ணுவானவர் கிருஷ்ணா வதாரத்தை, மதுராபுரி மன்னன் உக்ர சேனனின் மகளும், கம்சனின் தங்கையும், வசுதேவரின் மனைவியுமான தேவகியின் கர்ப்பத்தில் குழந்தையாகப் பிறக்கத் தீர்மானித்து நாரதரை அழைத்து, நாரதனே, நீ கம்சனிடம் சென்று, "கம்சனே' உன் சகோதரி தேவகியின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளில் ஒருவன் உன்னையும் கொன்று, அசுர "வம்சத்தையே அழிப்பான்'' என்ற தேவரகசியத்தைக் கூறும்படி சொன்னார்.
பகவான் கூறியதை நாரத முனிவர் அப்படியே கம்சனிடம் சென்று கூறினார். இதனைக்கேட்ட கம்சன் மிகவும் கோபம் கொண்டு, தன் தங்கை தேவகியையும், அவள் கணவன் வசுதேவனையும் கொல்லத் துணிந்தான். நாரதர் கம்சனைத் தடுத்து. "மன்னனே, இவர்களைக் கொல்வதால் என்ன பயன்? இவர்களுக்குப் பிறக்கும் ஒரு குழந்தையால்தானே உனக்கு மரணம் ஏற்படும்? அதனால் இவர்களை சிறையில் அடைத்து, உன் காவலில் வைத்துக்கொள். தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளை உடனே கொன்றுவிடு. அதனால் நீ மரணத்திலிருந்து தப்பிவிடலாம்'' என்று கூறினார்.
நாரதர் கூறிய யோசனையை ஏற்று, கம்சன் தனது தங்கை தேவகியையும் அவள் கணவனையும் சிறையிலடைத்து, கடுமையான காவல் திட்டம் செய்து, "தேவகிக்கு குழந்தை பிறந்தால் அதனை உடனே எனக்குச் சொல்லவேண்டும்' என்று காவலர்களுக்கு கட்டளையிட்டான்.
தேவகிக்கு மகனாகப் பிறக்கத் தீர்மானித்த பகவான் தன்னுள்ளிருக்கும் யோகமாயா நித்திரை சக்தியை அழைத்தார். அவள் அவர்முன்தோன்றி வணங்கி நின்றாள். பகவான் அவளிடம், "மாயா, இப்போது நான் பூமியில் எட்டாவது அவதாரமெடுத்து, வசுதேவனின் மனைவி தேவகியின் கர்ப்பத்தில், என்னுடைய முந்தைய ஏழு அவதாரங்களில் உண்டான கர்மவினைகளை அனுபவித்துத் தீர்க்கும் அமைப்புள்ள நாளில்- அதாவது மழைக்காலத்தில், எட்டாவது மாதமான ஆவணியில், அமரபட்சம் (தேய்பிறை) அஷ்டமி (எட்டு) திதி, ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதி முடியும் கடைசிபாகம் நள்ளிரவு நேரத்தில், எட்டாவது குழந்தையாகப் பிறக்கத் தீர்மானித்துள்ளேன்.
மாயாசக்தியே, நரசிம்மாவதாரத்தில் என்னால் கொல்லப்பட்ட இரண்யகசிபுவின் குமாரர்கள் ஆறுபேர் இப்போது பாதள லோகத்தில் வசித்துவருகிறார்கள். அவர்கள் ஆறுபேரையும் உன் மாயாசக்தியால் முதல் ஆறு கர்ப்பங்களில் வரிசையாகக் கொண்டு சேர்த்துவிடு'' என்றார்.
மாயாவும் பகவானின் கட்டளைப்படியே, இரண்யகசிபுவின் மகன்கள் ஆறுபேரையும் ஆறு கர்ப்பங்களில் சேர்த்துப் பிறக்கவைத்தாள். இந்த ஆறு பேரையும் பிறந்தவுடனே கம்சன் கொன்றான். கம்சன் கொன்ற குழந்தைகள் அனைவரும் இரண்யகசிபுவின் குழந்தைகள்தான். இரண்யகசிபுவின் வம்சம் முற்றாக அழிக்கப் பட்டது.
அதன்பின்னர் மகாவிஷ்ணு மாயாசக்தியிடம், "யோக சக்தியே, ஏழாவது பிள்ளையாக ஆதிசேஷன் தேவகியின் வயிற்றில் கருவாக உருவாவான். வசுதேவனின் இன்னொரு மனைவியும், தேவகியின் தங்கையுமான ரோகிணி என்பவள் கோகுலத்தில் வசிக்கிறாள். இவளும் கம்சனின் தங்கைதான். தேவகி ஏழாவது கர்ப்பம் தரிக்கும் அதேநாளில் ரோகிணியும் கர்ப்பம் தரிப்பாள். ஏழாவது மாதத்தில் நீ ரோகிணியின் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு, தேவகியின் கர்ப்பத்திலிருக்கும் ஆதிசேஷனின் கருவை வாயு ரூபமாய் ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்த்துவிடு. தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதென்று மக்கள் பேசுவர்கள். கம்சனும் நம்பிவிடுவான். ஏழாவது குழந்தையான ஆதிசேஷன் கம்சனிடமிருந்து காப்பாற்றப்படுவான். (தேவகியின் வயிற்றில் உருவாகி, ரோகிணியிடம் பிறந்த ஆதிசேஷன்தான் பலராமன்.)
மாயாசக்தியே, இன்னும் ஒரு செயலை நீ கவனமாகச் செய்யவேண்டும். பலராமன் பிறந்தபிறகு, தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் நான் பிரவேசிப்பேன். அதே நேரத்தில் நீயும், கோகுலத்தில் வசிக்கும் நந்தகோபன் மனைவி யசோதையின் கர்ப்பத்தில் பிரவேசிக்கவேண்டும். இந்த யசோதா தேவி, பலகாலமாக நான் அவளுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்துவருகிறாள்.
எனது இந்த எட்டாவது அவதாரத்திற்குப்பிறகு பூமியில் கலிபகவான் ஆதிக்கம் உண்டாகி விடும். அதனால் நான் எந்த அவதாரமும் எடுத்துப் பிறக்க இயலாது. எட்டாவது பிறப்பிற்குப் பிறகு எனது பூமியின் தொடர்பு அறுந்துவிடும். இன்னுமுள்ள தெய்வங்கள், தேவர்களின் சக்திகள் பூமியில் செயல்படாது. கலிபகவான் சக்திதான் செயல்படும் என்பதால், என் சக்திகளில் ஒன்றான மாயா, நீ யசோதையின் கர்ப்பத்தில் சேர்ந்து வளரவேண்டும்.
நான் ஆவணி மாதம், அஷ்டமி திதி முடியும் நள்ளிரவு நேரத்தில் தேவகியிடம் பிறப்பேன். மாயா, நான் பிறந்தபின்பு அதே நள்ளிரவில், அஷ்டமி திதி முடிந்து நவமி திதி ஆரம்பித்த முதல் நாழிகையில், யசோதையின் வயிற்றில் நீ பெண் குழந்தையாகப் பிறக்கவேண்டும்.
சிறைச்சாலையில் நான் பிறந்த பிறகு, அசரீரி வாக்கினால், வசு தேவனுக்குக் கூறப்பட்டு, அவன் உடனே என்னைத் தூக்கிக்கொண்டு, வந்து அந்த நள்ளிரவில், கோகுலத் திலுள்ள யசோதையின் அருகில் வைத்துவிட்டு, உன்னை எடுத்துப் போய் தேவகியின் அருகில் வைத்து விடுவான். இவையெல்லாம் நடந்து முடியும்வரை, தேவகியும் யசோதையும் சிறைக்காவலர்களும் உன் சக்தியால் மயக்கத்தில் இருக்கும்படி செய்துவிடு. குழந்தை பிறந்த செய்திகேட்டு, கம்சன் உன்னைப் பாறையில் போட்டு வெட்ட முயல்வான். உடனே நீ வானில் எழும்பி மறைந்துவிடு. இந்த நிகழ்வுகள் எல்லாம் என் திட்டப்படி சரியாக நடக்கவேண்டும்'' என்று மாயாவிடம் கிருஷ்ணர் தன் பிறப்பின் முறையைக் கூறினார். கிருஷ்ணரின் பிறப்பு திட்டமிட்டப்படியே நடந்துமுடிந்தது.
பராசர முனிவர், கிருஷ்ணரின் அவதார நிகழ்வைக் கூறியதைக்கேட்ட மைத்ரேயர், "முனிவரே, தாங்கள் கூறியதில் சில சந்தேகங்கள் எனக்குள்ளது. அவற்றைத் தெளிவுபடுத்துங்கள்.
கண்ணனும் மற்ற தேவர்களும் பூமியில் தங்களின் இயல்பான தெய்வ சக்தியைக்கொண்டு செயல்பட முடியாதென்று கண்ணன் கூறியதன் உண்மை என்ன? பூமியில் தெய்வசக்தி செயல்படாதென்றால் எந்த சக்தி மனிதனைக் காப்பாற்றும்?''
"மைத்ரேயனே, நீ இரண்டு கேள்விகளைக் கேட்டாய். ஆனால் பதில் ஒன்றுதான். இந்த பிரபஞ்ச அண்ட வெளியில் பூமி எவ்வாறு தனிலோகமாக உள்ளதோ, நாகலோகம், பாதாள லோகம், எம லோகம், சொர்க்க லோகம் என இன்னும் பல உலகங்கள் உண்டு. அங்கும் உயிரினங்கள் உள்ளன என்று பெரியோர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த அனைத்து லோகங்களில் வசிப்பவர்கள் தங்கள் சக்தியை முழுமையாகத் தாங்கள் வாழும் லோகத்தில் பயன்படுத்திக் கொள்ளமுடியும். சிவலோகத்தில் வசிக்கும் சிவபெருமான், விஷ்ணு லோகத்திற்குச் சென்றால், சிவனின் சக்தி செயல்படாது. விஷ்ணுவின் சக்திதான் செயல்படும். அதேபோல் விஷ்ணுவோ பிரம்மனோ சிவலோகத்திற்குச் சென்றால், அங்கு இவர்கள் சக்தி செயல்படாது. சிவனின் சக்திதான் செயல்படும்.
உதாரணமாக ஒருமனிதன், தான் வசிக்கும் சொந்த ஊரில் எவ்வளவு பெரிய பலவானாக, சக்திமிக்கவனாக இருந்தாலும், அடுத்த ஊரில் அவன் அதிகார பலத்தைத் காட்டி எதையும் செய்யமுடியாது. ஒரு நாட்டின் அரசன் அவன் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்சி அதிகாரம் செய்யலாம். ஆனால் அடுத்த தேசத்தில் அதிகாரம் செலுத்தமுடியாது.
ஒரு மனிதன் தனது சொந்த வீட்டில், தனது அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி, அனைத்து செயல்களையும் முழு உரிமையுடன், தன் விருப்பம்போல் செய்யலாம். ஆனால் அடுத்தவர் வீட்டில் தன் ஆதிக்க உரிமையை செயல்படுத்தமுடியாது. இதுபோன்றுதான் ஒரு லோகத்தில் வசிப்பவர்கள் அடுத்த லோகத்தில் தன் சக்திகளைப் பயன்படுத்தமுடியாது.
மைத்ரேயனே, தேவலி மானிடர் வேறுபாட்டு நிலைகளையும் கூறுகின் றேன். தேவலோகத்தில் வாழ்பவர்கள் அமிர்தம் குடித்ததால், பூலோகத்தில் வாழும் மனிதர்களைப்போல் கண்களை சிமிட்டுதல், உணவுண்பது, கருவில் உருவாகி கர்ப்பத்தில் வளர்ந்து பிறப்பது, உடல் தளர்ச்சி, பிணி, மூப்பு, மரணமடைவது போன்ற எந்தச் செயலும் இல்லாதவர்கள். பூலோக மனிதர்கள் வாழ்க்கைக்கும், மற்ற லோகங்களில் வசிப்பவர்களுக்கும் பிறப்பு நிலை, வாழ்க்கைநிலை அனைத்திலும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
பூலோகம், காற்றினால் உயிர்பெற்று இயங்கும் லோகமாகும். ஒவ்வொரு உலகத்திற்கும், மற்ற லோகத்திற்கும் ஒரு எல்லையுண்டு. அவரவர்கள் தன் சுய சரீரத்துடன் மற்ற உலகில் சென்று வாழமுடியாது. பூமியில் சரீரமில்லாமல் ஒரு உயிர் வாழமுடியாது. மும்மூர்த்திகளும், தேவர்களும் பூமியில் வந்து தங்கள் சக்தியைப் பயன்படுத்தி எதனையும் செய்யமுடியாது. பூமியில் கடவுள் சக்தி செயல்படாது. மனித சக்தியைக் கொண்டுதான் எதனையும் செய்து, தான் விரும்பியதை அடைந்து வாழமுடியும் என ரிஷிகள், முனிவர்கள் கூறியுள்ளார்கள்.
அசுரர்களை அழிக்க எண்ணம் கொண்ட மகாவிஷ்ணு, அசுரர்கள் மனித சக்தியுடன் பிறந்திருப்பதால், தேவர்களும் மனித சக்தியுடன்தான் செயல்பட்டு, போராடமுடியும். மேலும் பூமிக்கு உண்டான இயற்கை நியதியைப் புரிந்து, இராமனாகவும், கிருஷ்ணராகவும் சாதாரண மனிதர்களைப்போல், ஒரு தாயின் கர்ப்பத் தில் வாசம்செய்து, ஒரு குழந்தையாகப் பிறந்தார். சுய உழைப்பு, அறிவு, முயற்சி, விருத்தி, நிவர்த்தி, நீக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து செயல்பட்டு வாழ்ந்தார்.''
(தொடரும்)
செல்: 99441 13267