சிலர் மனம் நொந்து பிறர்மீது திணிக்கும் வார்த்தைகள் சாபம் எனப்படும். கோவலன் கொலையுண்டபோது. கண்ணகி இட்ட சாபம் மதுரையை நிலைகுலையச் செய்தது. அதைப் போல் பிறர் சாபம் நம்மை அண்டாதிருக்க நற்செயல் புரிவது இன்றியமையாதது. இந்த சிறு ஆய்வின்மூலம் சாபங்கள் சார்ந்த பரிகாரங்களை அறிவோம்.
சாமானிய தர்மங்களான அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், செனசம், இந்திரீய நிக்ரசம் ஆகிய ஐந்துவகை, சாஸ்திரத்தில் காணப்படுபவை. இன்றைய நாட்களில், மகான்கள் அவதரித்த இந்த பூமியில் எல்லாவற்றுக்குமே அடியோடு விடைகொடுத்துவிட்டதை நம்மால் உணரமுடியும்.
1. புத்திர தோஷமும் சாபமும்
பெற்ற தாய் இட்ட சாபம் கொடியது. தாய்தான் இந்த ஜனனத்திற்கு முழுப்பங்கிற்கும் உரியவள். அவள் சாபமிட்டால் வம்ச விருத்தி கேள்விக்குறியாகும். ஒருவர் ஜாதகத்தில் 4-ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால், புத்திரகாரகன் சனியுடன் இணைந்து 12-ஆம் வீட்டிலோ, 8-ஆம் வீட்டிலோ இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். இதுபோன்ற ஜென்ம விஷயங்கள் இந்தப் பிறவியில் நேர்ந்தவையா என்ற கேள்வி உதயமாகும். புத்திர தோஷம் என்பது, கரு உருவாகவே கால தாமதமாகும். பொதுவாக, உருவாகும் கரு பல தடைகளைக் கடந்தே கையில் தவழும். இன்று மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடப்படுவதற்கும் சாபம்தான் காரணமென்றால் மிகையல்ல. வாழ வழிதெரியாமல் குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடிவிடுவதற்கும் காரணம் ஜாதகங்களும் கிரகங்களும் தரும் பரிசுதான். பெற்ற தாயை நிந்திப்பதைக் கட்டுப்படுத்தவேண்டும். குறிப்பாக திங்கட்கிழமைகளில் தாயை கடுஞ்சொல்லால் வேதனைப் படுத்தல் கூடாது. பார்வதியின் கோபத்திற்கு உட்பட நேரிடும். சிவனை வணங்கவேண்டும். அரிசி (பச்சரிசி), வெள்ளி உலோகம் தானம் செய்யலாம். கையில் வெண்முத்து அணியலாம். பெற்ற தாய்ப் பால், வெள்ளை சர்க்கரை கலந்து அரசமர வேரில் ஊற்றி, கிளறி தில கமிடல் நல்லது.
2. தந்தை இட்ட சாபம்
பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தும், 5-ஆம் வீட்டோன் கூடியும், 1, 5, 9-ஆம் பாவங்களில் மாந்தியும் இருந்தால் தந்தை இட்ட சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படும். 5-ல் சனி காணப் பட்டு, சந்தான விருந்தி தடைப்பட்டால் 48 வயதுவரை தன் சம்பாத்தியத்தில் சொந்த வீடு கட்டாதிருப்பது நல்லது. லக்னத் தில் சனி இருந்தால் பிறர்மீது பொறாமை எண்ணம் கூடாது. வம்சவருத்தி தடை யாகும். பரிகாரம் அரசமரத்தின் கிழக்கு நோக்கிச் செல்லும் வேரில் நீர் பாயச்சல் வேண்டும். தோஷங்கள் அகலும்.
3. பெண்களின் சாபம்
வியாழன் (குரு) 6 அல்லது 8-லும், 5-ஆம் வீட்டில் பிற கிரகங்கள் அனைத்தும் காணப்பட்டால், பெண்ணைத் துன்புறத்திய தாலும், நம்பிக்கை துரோகம் செய்ததாலும் வம்ச விருத்தி வர கால தாமதமாகும். ஆண்மகன் ஜாதகத்தில் 5-ல் எந்த கிரகமும் காணப்படாமல் பெண்ணின் (மனைவி) ஜாதகத்தில் சுக்கிரன் வீட்டில் குரு காணப் பட்டால் குழந்தை பாக்கியம் கேள்விக் குறியாகும். தகுந்த பரிகாரம் செய்து கொண்டால் முற்காலம் செய்த வினைகளின் தடைகள் அகல வாய்ப்பளிக்கும். ஞாயிறன்று விரதம் கடைப்பிடிக்கவேண்டும். சூரிய ஹோரையில் செம்பு உலோகம் தானம் செய்யலாம். கிழக்கு நோக்கிய தலைவாசல் வீட்டில் குடியிருக்கவேண்டும். பதுக்கல் வியாபாரம் கூடாது. மாணிக்கக் கல் பதித்த தங்கமோதிரம் அணியவேண்டும். ஜாதகத் தில் 5-ல் சந்திரன் இருந்தால் ரகசியங்களை வெளியே சொல்வது கூடாது. வெள்ளை முயல் ஜோடியாக வளர்க்கலாம்.
4. பித்ருக்கள் இட்ட சாபம்
பிதிர் காலம்- சிரார்த்த புண்ணிய காலம். பிதிர் திதி- அமாவாசை. நம்மைவிட்டுப் பிரிந்த மூதாதையர் சாபம் இல்லாவிட் டாலும், அவர்கள் செய்த பாவங்களால் பிறர் இட்ட சாபமும் சந்ததிகளையே சாரும். அதனைத் தவிர்க்க இயலாது. ஒரு உதாரணத் தைப் பார்ப்போம். இப்படியும் உண்டா என கேள்வி எழும். என்னைப் பார்த்து வாழ்வின் தன்மை தனை அறிய ஒரு பார்வையில்லா மாற்றுத்திறனாளி வந்தார். அரசில் வேலை பார்ப்பவர். (லிப்ட் ஆபரேட்டர்). உள்ளங்கை ரேகைகள் இரண்டுமே படு ஜோர். ஏன் இந்த பின்விளைவு என்றறிய முற்பட்டபோது, அவர் கூறிய தகவல்: அவருடைய தாத்தா 40 மாடுகளுக்குமேல் வைத்து பண்ணை நடத்தியதாகவும், "மாடுகள்' இவர்கட்டுக்குள் அடங்கவில்லை யென்றால் ஊசிகளால் மாட்டின் இமை களில் குத்துவதும் வாடிக்கையாம். அதன் சாபத்தைப் பேரன் அனுபவிக்கும் சூழ்நிலை தான் இன்று நடக்கிறது. எனவே பித்ருக்கள் செய்த தேவையற்ற செயல்கள் நம்மை பாதிக் கும். அவரவர் தங்கள் ஜாதகத்தை ஆய்வு செய்து, உரிய பரிகாரம் செய்வது சிறப் பானது.
5. தெய்வம் இட்ட சாபம்
பொதுவாக தெய்வம் தந்த சாபம் நிவர்த்தி யாவதில்லை. ஒருவரது ஜனன ஜாதகத்தில் 1, 2, 4, 7, 9, 10, 11-ஆம் பாவங்களில் ஏதேனும் ஒன்றில் குரு இருந்து, பாவர்களால் பார்க்கப் பட்டால். அப்படிப்பட்ட அமைப்பு புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். கைரேகை சாஸ்திரத்தில் ஒருவர் சுண்டுவிரலின் முதல் அங்குலாஸ்தியில் கரும்புள்ளி காணப் பட்டால் தெய்வமிட்ட சாபம் என கருத வேண்டும். அதன் விளைவு தம்பதிகள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 5-ல் ராகு அல்லது கேது, சனி போன்ற வீரிய கிரகநாதர்கள் இருப்பார்கள். கருவுற்ற தாய்மார்களுக்கு பிரசவ காலங்களில் உதவிகள் செய்தால், தோஷம் அகலும், திருச்சடையூர் சென்று மார்க்கண்டேயரை வணங்குதல் வேண்டும்.
6. சத்ரு சாபம்
ஒருவருடைய ஜாதகநிலையில் 5-ஆம் வீட்டோன் அல்லது 6-ஆம் வீட்டோன் செவ்வாயுடன் கூடியிருந்தாலும் அல்லது 5-ஆம் வீட்டோன் 6-ஆம் வீட்டில் நின்று விட்டாலும். சத்ரு (எதிரி) சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படும். ஜாதக ஆய்வுசெய்து உரிய பரிகாரம் செய்துகொள்ளவேண்டும்.
7. சர்ப்பம் இட்ட சாபம்
நாகப்பாம்பைக் கொன்றாலும், பாம்புப் புற்றை நாசம் செய்தாலும், சர்ப்ப சாபம் பொல்லாத விளைவுகளை ஏற்படுத்தும். ஒருவடைய ஜாதகத்தில் லக்னத்தில் சனியும் 5-ஆம் வீட்டில் சூரியனும், லக்னம் அல்லது 5-ஆம் வீட்டில் ராகுவும் இருந்தால் ஜாதகனுக்கு சர்ப்பம் (பாம்பு) தந்த சாபத்தினால் புத்திர தோஷம் உண்டாகுமென்பது சாஸ்திர உண்மை. ஆலமரத்தின் தென்திசை நோக்கிப் போகும் வேரில் பாலை ஊற்றி, மண்ணைக்கிளறி எடுத்துவந்து திலகமிட சர்ப்பதோஷம் அகலும். 5-ல் சனியும் ராகுவும் இருந் தாலும், முன்னோர் செய்த நற்செய்கை யால் புத்திர பாக்கியம் வருவதுண்டு. அப்படிப்பட்டோர், பிரசவ நேரத்தில் மருத்துவமனை செல்லும்போது, பாலும் சர்க்கரையும் கொண்டுசென்று, குழந்தை பிறந்து தாயும் சேயும் ஓய்வறை வந்ததும். பாலையும், சர்க்கரையை யும் திருஷ்டி சுற்றி அரசமர வேரில் ஊற்றவேண்டும்.
8. புரோகிதர்கள், நல்லோர் இட்ட சாபம்
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் அல்லது 9-ஆம் வீட்டில் அல்லது 10-ஆம் வீட்டில் வியாழன் மாந்தியுடன் கூடியிருக்க, 6-ஆம் வீட்டோன் சேர்க்கை அல்லது பார்வை பெற்று பாவர்கள் இருக்கப் பிறந்தோருக்கு புரோகிதர் அல்லது நேர்மையானோர் இட்ட சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு பாவகிரகங்கள் மத்தியிலும், புத்திரகாரகன் பலனின்றியும் சுபரகள் சேராமலும் பார்க்காமலும் இருக்கப் பிறந்த ஜாதகர்களுக்கும் மக்கட்பேறு கிடையாது. எனவே ஜனன ஜாதகத்தில் கொடிய சூழ்நிலை தென்பட்டால் உரிய பரிகாரம் செய்வது நன்று. தடைகள் விலகும். சிவனையும் பார்வதியையும் மானசீகமாக வணங்கினால் கேடுகள் மறையும்.
9. மாற்றுத்திறனாளிகள் சாபம்
காது கேளாதோர், பார்வையற்றோர் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்குத் துன்பங்கள் தரும்போது அவர்கள் இடும் சாபத்தால் சுப யோகங்களின் பலன்கள் கிடைக்காமலும் போய் விடுமாம். கிரகங்கள் நீசநிலை பெற்றிருப்பது கிரக யுத்தத்தில் தோல்வியைத் தருமாம். பாவகிரகங்களால் பார்க்கப்படுமாம். சூரியன் அஸ்தங்கமாய் இருப்பது, ராகுவுடன் கூடியிருப்பது, பாவ சந்தியில் இருப்பது, பலமிழந்த தன்மையுடன் காட்சிதருவது, துர்ஸ்தானங்களுக்கு அதிபதியாயிருப்பது 6, 8, 12-ஆம் வீட்டிற்கு அதிபதியாயிருந்து கேந்திரம் மற்றும் திரிகோண சஞ்சாரத்தில் காட்சிதருவது போன்ற பல காரணங்களால் ஜாதகம் பலன் தராமல் செய்துவிடும் என்கிறது காளிதாசரின் உத்தரகாலாமிர்தம். பிறர் இட்ட சாபம், மாற்றுத்திறனாளி மனம் நொந்து கூறும் சாபம் மிக வலிமை யானது. இதற்குப் பெற்ற தாய் செய்யும் பரிகாரம் முதல் தன்மை வகிக்கும். பின்பு காலபைரவரை வணங்கவேண்டும். பெற்ற தாய்- பல ஆண்டுகள் வளர்ந்த அரசமர வேரில், காய்ச்சாத பசும்பாலுடன் வெண் சர்க்கரை கலந்து தெற்கு நோக்கிச் செல்லும் வேர் மண்ணில் ஊற்றிக் கிளறி, அந்த மண்ணை சிறு கிண்ணத்தில் எடுத்துவந்து நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்ளவேண்டும். மண் தீரும்வரை கடைப்பிடித்தால் அவள் ஈன்ற குழந்தைகளின் ஜாதகம் சமநிலை அடையும். சாபத்தின் தன்மை மெல்லமெல்ல மறையும். அது மட்டுமல்ல; இரண்டு எலுமிச்சைக்கனி, கொஞ்சம் முந்திரிப்பருப்பை காலபைரவர் பாதத்தில் வைத்து மனக்குறைகளைக் கூறி வணங்கினால், பைரவர் ஜாதகத்தின் கெடுதலை அகற்றுவார். எலுமிச்சையை சாறெடுத்துப் பருகவேண்டும். முந்திரிப் பருப்பை உண்ண உண்ண, சாப விமோசனம் கிடைக்கப்பெறும்.
செல்: 93801 73464