ஒரு மனிதனை முழுமை யடையச் செய்வது திருமண பந்தம். வாழ்நாளில் பெரும்பகுதியை மனிதன் வாழ்க்கைத் துணையுடன்தான் கழிக்கிறான். நல்ல வாழ்க்கைத் துணையே ஒருவருக்கு வரப்பிரசாதம். ஆணோ பெண்ணோ- வாழ்க்கைத் துணையே வாழ்நாளின் அச்சாணி.
இத்தகைய திருமண பந்தம் சிலருக்கு பல்வேறுவிதமான காரணங்களால் தடைப்படுகிறது. மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் சுப- அசுப நிகழ்வுகளை மூன்றுவிதமான காரணிகளே தீர்மானம் செய்கின்றன. அவை-
* லக்னரீதியான காரணி
* தசாரீதியான காரணி
* கோட்சாரரீதியான காரணி
இந்த மூன்றுவிதமான நிலைகளிலும் பெரிய பாதிப்பில்லாதபோது வாழ்க்கைச் சக்கரம் இயல்பாக சுழலும். இதில் சில குறைபாடுகள் இருந்தால் அவற்றைக் களைய பரிகாரம் அவசியமாகிறது.
திருமணம் தொடர்பான பாவகங் களான 1, 2, 5, 7, 8, 12-ஆமிடங்களுடன் சம்பந்தம்பெறும் கிரகங்களுக்கேற்பவே திருமண பந்தம் அமைகிறதென்றாலும், இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத் தையும், ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தையும் வலுப்படுத்தும்போது எளிதாகத் திருமணத்தடை அகலும். இனி 12 லக்னங்களுக்கும் திருமணத்தடை நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ லக்னத்திற்கு 2, 7-ஆமதிபதி சுக்கிரன் என்பதால், ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஸ்ரீவில்-புத்தூர் சென்று ஆண்டாள் வழிபாடு செய்வது சிறப்பு. தொடர்ந்து 27 வெள்ளிக் கிழமைகள் பசுவுக்கு உணவு தந்து பூஜிக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்திற்கு 2-ஆமதிபதி புதன், 7-ஆமதிபதி செவ்வாய் என்பதால், ஒரு செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் பழநிமலை சென்று முருகனை வழிபட வேண்டும். தொடர்ந்து 27 புதன்கிழமைகள் பட்சிகளுக்கு உணவிடவேண்டும்.
மிதுனம்
மிதுன லக்னத்திற்கு 2-ஆமதிபதி சந்திரன், 7-ஆமதிபதி குரு என்பதால், ஒரு வியாழக் கிழமை குரு ஓரையில் சீரடி சாய்பாபா அல்லது ஸ்ரீராகவேந்திரரை வழிபடவேண்டும். 27 திங்கட் கிழமைகள் சிவபுராணம் படிக்கவேண்டும்.
கடகம்
கடக லக்னத்திற்கு 2-ஆமதிபதி சூரியன், 7-ஆமதிபதி சனி என்பதால், ஒன்பது சனிக் கிழமைகள் சனி ஓரையில் முன்னோர் வழிபாடு தவறாமல் செய்யவேண்டும். 27 வாரம் பசுவுக்கு கோதுமை மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து உணவுகொடுப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு 2-ஆமதிபதி புதன், 7-ஆமதிபதி சனி என்பதால், காரியசித்தி உண்டாகும்வரை சனிக்கிழமைகளில் திருநள்ளாறு பச்சைப் பதிகம் படிக்கவேண்டும். பிரதோஷ நாட்களில் பச்சைப் பயறு சுண்டல் படைத்து சிவனையும், நந்திகேஸ்வரரையும் வழிபடவேண்டும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு 2-ஆமதிபதி சுக்கிரன், 7-ஆமதிபதி குரு. எனவே வியாழக்கிழமை குரு ஓரையில் விரும்பிய சித்தர்கள் ஜீவசமாதியில் 16 நெய் தீபமேற்றி வழிபடவேண்டும். ஒன்பது வெள்ளிக்கிழமை மூன்று சுமங்க-ப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் தானம் வழங்கி ஆசி பெறவேண்டும்.
துலாம்
துலா லக்னத்திற்கு 2, 7-ஆமதிபதி செவ்வாய். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் செவ்வரளி சாற்றி 27 வாரம் முருகனை வழிபடவேண்டும். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் துவரம் பருப்பு சாம்பார் சாதம் செய்து அன்னதானம் வழங்கவேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்திற்கு 2-ஆமதிபதி குரு, 7-ஆமதிபதி சுக்கிரன். வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச் சனை செய்து வழிபடவேண்டும். பிரதோஷ நாட்களில் கொண்டைக் கடலை சுண்டல் படைத்து சிவனையும், நந்தியையும் வழிபடவேண்டும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு 2-ஆமதிபதி சனி, 7-ஆமதிபதி புதன். 27 புதன்கிழமைகள் மகாவிஷ்ணுவுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடவேண்டும். சனிக்கிழமைகளில் வயது முதிர்ந்தவர்களுக்கு தண்ணீருடன் உணவு தானம் வழங்கவேண்டும். தலா இரண்டு நபருக்கு 27 வாரங்கள்.
மகரம்
மகர லக்னத்திற்கு 2-ஆமதிபதி சனி, 7-ஆமதிபதி சந்திரன் என்பதால், ஒரு திங்கட்கிழமை திருப்பதி சென்று வேங்கடாசலபதியை வழிபடவேண்டும். பிரதோஷ காலத்தில் கரும்புச்சாறு அபிஷேகம் செய்து ஈஸ்வரனையும், நந்தியையும் வழிபடவேண்டும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு 2-ஆமதிபதி குரு, 7-ஆமதிபதி சந்திரன். ஞாயிற்றுக்கிழமை ஒருமுறையேனும் சூரியனார் கோவில்சென்று வழிபடவேண்டும். வியாழக்கிழமை குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
மீனம்
மீன லக்னத்திற்கு 2-ஆமதிபதி செவ்வாய், 7-ஆமதிபதி புதன். 27 புதன்கிழமைகள் சக்கரத்தாழ்வாரை துளசிமாலை சாற்றி வழிபட வேண்டும். காரியசித்தி உண்டாகும்வரை செவ் வாய்க்கிழமை கந்தசஷ்டி கவசம் படிக்கவேண்டும்.
செல்: 98652 20406